நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ ராஜினாமா ,நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக

பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன

பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

நிலையமைப்பு 130(3) இன் கீழ் தேர்வுக் குழுவால் நேற்று இந்த நியமனம் செய்யப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

ராஜபக்ஷவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறது.

இதற்கிடையில், செப்டம்பர் 24, 2025 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் நடத்தை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் வட்டகல

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க

அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.

இந்தக் குழு துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி தலைமையில் செயல்படும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உபாலி பன்னிலகே மற்றும்

ஆர்.எம்.ஆர். மத்தும பண்டார ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு சம்பவத்தை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ
Posted in இலங்கை செய்திகள்

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ

வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ ,அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு

பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் திங்கட்கிழமை (31) தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் புத்தள கண்காட்சி மைதானத்தில் நடைபெற்ற

மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ, எரிந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று கூறிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நிலப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும், வீட்டுப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், இழப்பீட்டைப் பெற்றவர் ஒரு ராஜபக்ஷ என்று ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய அறிக்கை சமீபத்தில் தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

யோஷித ராஜபக்ஷ கைது
Posted in இலங்கை செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ கைது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா ,ஸ்ரீலங்கா பெருமனவின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகளில் பல மாற்றங்களும் போட்டிகளும் இடம் பெற்று வருகின்றன.

அவ்வாறான மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அறிவித்துள்ளது சரசரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு இன்னும் 50 நாட்கள் காணப்படுகின்ற இந்த வேளையில், இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இவர் சர்வதேச ரீதியில் என்னதான் செய்தார் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச மக்கள் மத்தியிலும் அதனுடைய மக்களுடைய என்ன கருத்துக்களும் இவர் சரியாக உள்வாங்கு இருந்தால் ,இன்று இவர்களது கட்சி உரிய முறையில் வழிநடத்தப்பட்டு தங்களது இலக்கு நோக்கி பயணத்திற்கு முடியும்.

தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அங்கு அடக்குமுறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை எதிர் நோக்கியும் அதனை வென்றுவிட பல கட்சிகள் பல்வேறுப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வருகின்ற நிலையிலும் அதில் ஒரு சூழ்ச்சியின் தன்மையாகவே நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.