Tag: தீயில்
தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை ,மகாரகமவில் சந்தேகத்திற்கிடமான தீ வைப்புத் தாக்குதலில் தாயும் மகளும் பலி
மகாரகமவில் உள்ள இரு மாடிக் குடியிருப்பு
மகாரகமவில் உள்ள இரு மாடிக் குடியிருப்பு ஒன்றில் நடந்த சந்தேகத்திற்கிடமான தீ வைப்புத் தாக்குதலில் தாயும்
அவரது பதின்வயது மகளும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பலியானவர்கள், பமுனுவ வீதி, எக்சத் சுபசதக மாவத்த, இரண்டாம் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாடகை
அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுப் பெண்ணும் அவரது 16 வயது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் வீட்டின் 76 வயது உரிமையாளர் ஆகிய இரண்டு ஆண்களும் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அறைக்குள் தாய் மற்றும் மகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
அதனைத் தொடர்ந்து வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு அறைக்குள் தாய் மற்றும் மகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் பெட்ரோல் வாசனை கடுமையாக வீசியதாகவும், தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டதால் இரட்டைக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை, மேலும் மகாரகம காவல்துறை இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

வண்டி தீயில் எரிந்தது
வண்டி தீயில் எரிந்தது
வண்டி தீயில் எரிந்தது ,ஒரு குடும்பத்த பகுதியில் ஒரு கொள்கலன் நொறுக்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தில் சிக்கியதில் அங்கு பாரிய தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்த நிலையில் ,கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டதனால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட வாகனங்கள் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு அவை வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த வீதி மூலமும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் விபத்துகளினால் ஏழு பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றனர் .
ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள்
ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கதே.
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பத்து கப்பல்கள் தீயில் கருகின
கப்பல்கள் தீயில் கருகின
பத்து கப்பல்கள் தீயில் கருகின ,தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பத்து கப்பல்கள் தீயில் கருகின.
தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் அமைந்துள்ள பார்சியன் கவுண்டியின் புஸ்டானோ கிராமத்தில் உள்ள ஜாவத் அல்-ஏமே
கப்பல்துறையில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து பத்து வணிகக் கப்பல்களை சூழ்ந்ததால், ஒரு பெரிய அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹார்மோஸ்கானில் உள்ள நெருக்கடி மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ரதாத் ஹசன்-சாதே, சம்பவத்தை உறுதிப்படுத்தினார், உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் தீ விபத்து தொடங்கியதாகக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஃபார்ஸ் மற்றும் புஷேர் உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலிருந்து தீயணைப்பு மற்றும் அவசரகால குழுக்கள் அனுப்பப்பட்டன. லாமெர்ட் மற்றும் அசலுயேவிலிருந்து தீயணைப்பு
வாகனங்கள், புஷேர் மற்றும் ஷாஹித் ராஜீ துறைமுகத்திலிருந்து தீயணைப்பு படகுகள், பாஸ்தாக், பந்தர் லெங்கேவிலிருந்து மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் பார்சியன் படைகள் தீயைக் கட்டுப்படுத்த அணிதிரட்டப்பட்டன.
தீயை கட்டுப்படுத்தவும், அது பரவாமல் தடுக்கவும் மாகாணத்தின் அனைத்து தளவாடத் திறன்களும் திரட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி ஓகே அப்பகுதியில் இடம் பெற்ற திடீர் தீ விபத்தில் குதிரை பண்ணையில் இருந்த 44 குதிரைகள் சம்பவ இடத்தில் தீயில் கருகி மூச்சுத்திணறி பலியாகி உள்ளன.
தீப்பாற்றிய பொழுது அந்த கூடாரத்தில் 85க்கு மேற்பட்ட குதிரைகள் இருந்ததாகவும் அதில் 44 குதிரைகள் தற்போது பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தீயானது எப்படி இங்கு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீப்பரவல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது 44 குதிரைகள் எரிந்தும் மூச்சு திணறியும் அங்கு பலியாகி சடலங்கலாக காணப்பட்டன.
ஏனைய குதிரைகள் தீயணை காயங்களுடனும் மூச்சுத் திணறலுடன் மீட்க கப்பட்டு அவற்றிற்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது .
இந்த தீ விபத்து மின்சார கோளாறு காரணமாக அல்லது மின்சார ஒழுக்க காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த தீ விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த தீ விபத்தினால் குதிரைகள் பலியான சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
தீயில் எரிந்த மருத்துவமனையில் நோயாளர்கள் சிதறி ஓடிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது .
இந்த தீயானது வேகமாக பரவி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது .
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரிவிக்க படவில்லை .
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எனினும் மக்கள் உயிர்களுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
- ஈரான் மீதான புதிய வியூகம்
by நிருபர் காவலன் - தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
by நிருபர் காவலன் - ரசியா டிரம்ப் பேச்சு
by நிருபர் காவலன் - பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது
by நிருபர் காவலன் - மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
by நிருபர் காவலன்
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை
மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தீயில் எரிந்து நபர் மரணம்
தீயில் எரிந்து நபர் மரணம்
லிந்துலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அந்த
சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுளளார்
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடரால் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தீயில் எரிந்து சிறுமி மரணம்
தீயில் எரிந்து சிறுமி மரணம்
இலங்கை வெலிகம பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி
இறந்துள்ளார்
இந்த வீடு தீ பற்றல் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடபில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
நாடெங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
ஈரான் எல்லையில் -தீயில் எரிந்த எண்ணெய் டாங்கி
ஈரான் எல்லையில் -தீயில் எரிந்த எண்ணெய் டாங்கி
ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் எரிபொருள் தாங்கிய படி பயணித்த எண்ணெய் தாங்கி ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது
இதனால் அந்த வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது
இது விபத்தா அல்லது திட்டமிடப் பட்ட சதியா என்பது தொடர்பில்,
தெரியவரவில்லை ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தீயில் எரிந்த 12 வீடுகள்
தீயில் எரிந்த 12 வீடுகள்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, பெக்டரி டிவிசனில்
லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயிப்பரவல் காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு அயலவர்கள் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவல் காரணமாக குடியிருப்பாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகிய அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.















