22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
Spread the love

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது கந்தானை-கந்தேவத்த பகுதியில் நேற்று (02) மாலை திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.

இதன்போது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள்

தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, புத்தளம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்