Posted in Uncategorized

உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி


வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய

புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,


அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized உலக செய்திகள்

    இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

    இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

    உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

    முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

    தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


    உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


    ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

      1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

      சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

      மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது

      மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

      இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.

      4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

      இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

      சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

      சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

      அவ்வாறானவர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடத்தில் கோரியுள்ளனர்.

      இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும்.

      எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

        சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

        மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிசாரினால் நேற்று (21) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

        இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.

        இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

          நாட்டில் ‘ஒமிக்ரோன் வைரஸ் திரிபு’ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில்

          பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான

          விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹோரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்

          மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

            கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

            இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

            அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

            2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

            மழை நிலைமை:

            பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

            கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            காற்று :

            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,

            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்

            காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடல் நிலை:

            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

            இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

              Posted in இலங்கை செய்திகள்

              கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

              கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

              பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை

              பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

              அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற

              நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

              நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை

              நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

              318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார

              வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

                Posted in Uncategorized

                யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

                யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

                இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்வானிலைமற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                2021 ஒக்டோபர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                மழை நிலைமை:

                காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                காற்று :

                நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                கடல் நிலை:

                மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

                  Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                  ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                  ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                  பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                  காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

                  இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை

                  பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை

                  பிரிட்டனில் எதிர்வரும் குளிர் காலத்தில் மட்டும் சுமார் அறுபதாயிரம் மக்கள் மரணிப்பர் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்

                  மூன்றாம் கொரனோ அலையின் தாக்குதலாக இது அமைய பெறும் என எச்சரிக்க பட்டுள்ளதுடன் ,இவ்வேளை மருத்துவ

                  மனைகளினால் மக்களை கட்டு படுத்த முடியாத ,பராமரிக்க முடியாத நிலை நீடிக்கும் எனவும் அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர்

                  மேற்படி தகவலை அடுத்து மீள கொரனோ தடைகள் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

                    உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

                    =மழை நிலைமை:

                    கொழும்பிலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையானகடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                    காற்று :
                    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து

                    ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

                    அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                    கடல் நிலை:
                    காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்

                    காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                      இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                      இஸ்ரேல் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ மோதல்களை அடுத்து , மக்களை

                      வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ,பாதுகாப்பான இடத்தில தங்கி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                      மேலும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                      ,தொடர்ந்து ஹிஸ்புல்லா மாற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வரும்

                      நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                      இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                      இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
                      தற்போது சிவப்பு

                      எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
                      கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்

                      தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                        மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                        இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                        பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்

                        இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                        பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை

                          Posted in Uncategorized

                          இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை

                          இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்

                          நில நடுக்கம்

                          உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
                          என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,

                          ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                          எச்சரிக்கை

                          எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்

                          குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

                          Posted in மருத்துவம்

                          சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ..?

                          நாம் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பாவித்தால் அதனால் உடலுக்கு ஏன்னா தீங்கு நடக்கும் தெரியுமா

                          கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை

                          சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால்

                          கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற

                          வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரும்பிய விளையாட்டு

                          டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில்

                          விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.

                          முள்ளி வாய்க்கால் மண்ணில்

                          அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும்

                          பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

                          அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய்

                            எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.

                            அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த

                            பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்

                            யாழில் நினைவுத்தூபி அழிப்பு – கோட்டா அரசுக்கு எச்சரிக்கை கண்டனம்

                            எச்சரிக்கை
                            எச்சரிக்கை
                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            எச்சரிக்கை ….!

                            எச்சரிக்கை ….!

                            சேனை படை கொண்டு
                            செந் தமிழ் நாட்டுக்குள்
                            வந்தவரை தமிழ் என்ன
                            வழி தொழவோ …?

                            முற் புதருக்குள்
                            முன் வர பயந்தவர்கள்
                            நெஞ்சிடித்து இன்றென்ன
                            நெருக்கும் உரசல் …?

                            கந்தக ஒலியில்
                            காட் சட்டை நனையும்
                            கோமாளிகள் இன்றென்ன
                            கோமகனோ …?

                            கோவண கயிற்றிலே
                            கொடி பிடிக்கும் தலைகளை
                            காப்பாற்ற முடியா
                            காலம் எழும்

                            குமுறும் ஏரி மலை
                            குன்று வெடிக்கும்
                            நஞ்சு கட்டியே
                            நாடு கொதிக்கும்

                            பஞ்சில் தீ
                            பற்றி பிடிக்கும்
                            கறுப்பு முகங்கள்
                            கருகி மிதக்கும்

                            உலக விதியில்
                            உழலும் பிழையில்
                            திருத்தி எழுத
                            திருப்பம் நடக்கும்

                            வன்னி மைந்தன் (ஜெகன் )
                            ஆக்கம் 11-06-2020

                            Posted in இலங்கை செய்திகள்

                            மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                            மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                            மழை நிலைமை:
                            கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதுடன் அது

                            மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக

                            அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
                            புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில்

                            நாட்டிற்கு கிழக்காக மற்றும் வடகிழக்காக உள்ள கடற்பரப்புகளில்சில இடங்களில் பலத்த மழையோ அல்லது

                            இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                            காற்று :
                            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது

                            தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                            கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

                            கடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

                            கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                            கடல் நிலை:
                            கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

                            கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

                            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                            இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)

                            பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                            கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.