1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

Spread the love

1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது

மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.

4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *