Posted in இலங்கை செய்திகள்

நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில்

(IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை

அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்துகளில் நின்று பயணித்தால்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான

பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து

பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும்

கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் குறிப்பிட்டார்.

    தயா மாஸ்டர்
    Posted in இலங்கை செய்திகள்

    தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

    தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து

    விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.

    இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

    குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

    2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப்

    புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

    வழக்கில் தயாமாஸ்டர் மற்றும் அவர் சார்பாக சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

    குறித்த வழக்கில் தயாமாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

    அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

      Posted in இலங்கை செய்திகள்

      மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

      மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

      இலங்கை கோமகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 23 ஊழியர்களுக்கு பரவி வரும்


      கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இதனால் அந்த வைத்தியசாலையில் பர பரப்பு ஏற்பட்டுள்ளதுடன் ,பணியாளர்களுக்கும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

      தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரிப்பு வேகமாக பரவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

        இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

        இலங்கையில் திடிரென எலி காய்ச்சலினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது


        கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல்

        வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

          கஞ்சா
          Posted in இலங்கை செய்திகள்

          சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

          சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

          இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்

          பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

          இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக

          விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

          கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

          போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த

          நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..

            Posted in இலங்கை செய்திகள்

            நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

            நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

            2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

            இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

            இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

            இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

            இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

            அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

            இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு

            ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற

            ரீதியில் இழப்பீடு தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்

              Posted in இலங்கை செய்திகள்

              மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

              மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

              முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு

              வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

              மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக

              மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

              குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை

                ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை

                பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரை தன் வலைக்குள் வீழ்த்திய கர்ப்பிணி பெண்ணொருவர், அந்த முதியவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட உடமைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.

                பணம், கையடக்கதொலைபேசி, வங்கி அட்டை, உள்ளிட்டவற்றை அப்பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளார். அப்பெண்ணுக்கு உதவியதாகக் கூறப்படும், அப்பெண்ணின் முன்னாள் காதலன், கர்ப்பிணிப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                இந்த சம்பவம், பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களனிப் பிரதேசத்தில் வைத்தே, அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                கைது செய்யப்படும் போது, அவ்விருவரிடமிருந்தும் 10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

                பொருட்களை இழந்த முதியவர், பெலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                பாலியல் தேவைகளைப் பூர்த்திச்செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண், அந்த முதியவரிடம்

                விருப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், அம்முதியவருடன் செல்வதற்கு இன்றைக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர், அப்பெண் இணங்கியுள்ளார்.

                தன்னுடைய கணவனுக்கு களவாக இந்த வேலையைச் செய்வதாக தெரிவித்துள்ள அந்த கர்ப்பிணி

                பெண், தூர இடங்களுக்குச் செல்லமுடியாது. அருகிலேயே செல்வோமென முதியவரை அழைத்துக்கொண்டு பேலியகொட, மேவெல்ல, ஆற்றுக்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.

                அப்போது அங்கு வந்திருந்த நபரொருவர் தன்னுடைய மனைவியுடன் இருந்ததாகக் கூறி,

                முதியவரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி, மேலே குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளார். அவ்விளைஞனுடன் அப்பெண்ணும் சென்றுவிட்டார்.

                பொலிஸ் விசாரணைகளில் அவ்விளைஞன், அப்பெண்ணின் முன்னாள் காதலன் என கண்டறியப்பட்டுள்ளது. இவிருவரும் போதைப்​பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

                இளைஞனிடமிருந்து 5230 மில்லிகிராம் ஹெரோய்னும், கர்ப்பிணி பெண்ணிடமிருந்து 5195 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் முதியவரிடமிருந்து

                கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டை ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

                பல்வேறான கொள்ளைகளுடன் தொடர்புடைய இவ்விருவருக்கு எதிராக, புதுக்கடை, மஹர ஆகிய நீதிமன்றங்களில் திறந்த

                பிடிவிறாந்துகள் பிறக்கப்பட்டுள்ளன. ​கர்ப்பிணிப் பெண்ணுக்கு எதிராக ஐந்து பிடிவிறாந்துகளும், இளைஞனுக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                  இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                  இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட

                  இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்

                  மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த

                  விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

                    தீயில் எரிந்த வீடு
                    Posted in இலங்கை செய்திகள்

                    தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்

                    தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்

                    இலங்கை தயக்கமா பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டம் ஒன்றில் உள்ள வீடொன்றில் திடீரென தீ

                    பற்றியது ,இதில் அந்த வீடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது

                    இதன் போது அந்த வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன

                    ,எனினும் அங்கிருந்த ஐவர் தப்பித்துள்ளனர் ,மேற்படி தீ விபத்து தொடபிள் விசாரணைகள்

                    ஆரம்பிக்க பட்டுள்ளன

                      Posted in இலங்கை செய்திகள்

                      நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை

                      நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை

                      இலங்கை வெலிகம பகுதியில் உள்ள பீச்சில் நீராடிய நான்கு இளம் பெண்களில் இருவர் மீட்க

                      பட்டுள்ளனர்
                      மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்

                      நீரில் அடித்து செல்ல பட்ட இருவரையும் தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

                      சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

                      உலகில் சுற்றுலாப் பயணங்களைமேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

                      தற்போது சுற்றுலாப் பயணிகளின்வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர்பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

                      இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும். தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும்முன்னணியில் காணப்படுகின்றது.

                      பின்னடைவு கண்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில்அனைத்துக் கட்சிகளினதும்

                      ஒத்துழைப்பை அதிகரிப்பதன் தேவையையும் அமைச்சர் பிரசன்னரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

                        பிரான்ஸ் இராணுவ முகாம்
                        Posted in Uncategorized

                        பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                        பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                        மாலியில் அமைந்துள்ள பிரான்ஸ் இராணுவ முகம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில்


                        சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

                        மேலும் அங்கிருந்த கூட்டு படைகளை சேர்ந்த இருபது இத்தாலிய இராணுவத்தினர்

                        காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

                        எனினும் இழப்பு இதைவிட பலமடங்கு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                          வெடித்து சிதறும் அமெரிக்கா
                          Posted in Uncategorized

                          வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

                          வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

                          வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – போராளிகள்

                          ஈராக் பப்பில் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வண்டிகளை


                          இலக்கு வைத்து போராளிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அழிந்துள்ளது

                          இதில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

                          ,பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என


                          ஈரான் அறிவித்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

                            பேரூந்து டிப்பர் மோதல்
                            Posted in இலங்கை செய்திகள்

                            பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்

                            பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்

                            இலங்கை அரச பேரூந்து ஒன்று குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது


                            மேற்படி பேரூந்து டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார்
                            மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


                            குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              Posted in இலங்கை செய்திகள்

                              இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு

                              இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு

                              இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதான

                              இந்திய மீனவர்கள் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்தது

                              மேற்படி படகுகளை வரும் திங்களில் ஏலம்விட உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை

                              ஏற்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                காதல் தகராறு – கழுத்து வெட்டி நபர் கொலை

                                காதல் தகராறு – கழுத்து வெட்டி கொலை

                                இலங்கை கடவத்த பகுதியில் 19 வயதுடைய நபர் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

                                இருவருக்கு இடையில் எழுந்த காதல் தகராரே இந்த கொலையில் முடிந்துள்ளது

                                குறித்த நபரின் கழுத்தை வெட்டிய நபர் கைது செய்ய பட்டுள்ளார்

                                இறந்த நபரது சடலம் ராகம வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் வேகமாக பரவும் புதிய வைரஸ்

                                  இலங்கையில் வேகமாக பரவும் புதிய வைரஸ்

                                  இலங்கையில் கடந்த தினங்களில் மட்டும் 78 பேர் புதிய ஓமிக்கிறோன் நோயினால் பாதிக்க பட்ட

                                  நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்

                                  இவ்வாறு கணபட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருவதக தெரிவிக்க படுகிறது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு

                                    தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு

                                    இலங்கையில் அரச அனுசரணையுடன் இயங்கி வரும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும்

                                    ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசு தீர்மானித்துள்ளது

                                    இவை எதிர்வ்ரும் நாட்களில் வழங்க படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது அந்த ஊழியர்களுக்கு


                                    மகிழ்ச்சியை தருவித்துள்ளது