Tag: இலங்கை
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது
,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்
இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது
இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தமது நாட்டு
மக்களை செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது
இதே போன்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட
தக்கது
பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது
பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது
பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாளை எதுவித பயணிகள் போக்குவரத்து ரயிலும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே
திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் இனம் கணப்பட்டுள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பணம்
தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
யாழ்ப்பாணத்தில் மட்டும் 95 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதேபோல கிளிநொச்சியில் 31 பேர் ,வவுனியா 7 ,மொத்தமாக வடபகுதியில் ஒரே நாளில் 137 பேர்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
லண்டன் பாராளுமன்றம் -லீவர் பூல் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே
லண்டன் பாராளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே
இன்று 18-05-2021 மதியம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், லீவர் பூல் லைம் ஸ்ட்ரீட் முன்பாகவும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள்
என்ற அமைப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்தினர் ,மதியம் ஒருமணி முதல் இரண்டு மணிவரை இந்த நிகழ்வு இடம்பெற்றது
இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாக்க படும் தமிழர்களுக்கான விடுதலை ,காணாமல் போனவர்கள்
விடுதலை ,மற்றும் முள்ளி வாய்க்காலில் சிங்கள இன படுகொலைக்கு நீதி என்பனவற்றை வேண்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது
காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது
உலகம் தழுவிய நிலையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய பட்ட அப்பாவி மக்கள் நினைவுகூற படுகின்றனர் .12 ஆண்டுகளை கடந்த பொழுதும் இதுவரை இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையாகிறது

















தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்
இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது
செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்
இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை “நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு” என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.
பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத்
தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.
மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம்
மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.
இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின்
போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.
அத்துடன் இந்த புதிய பிரிவை அமைச்சர் சரத் வீரசேகர திறந்துவைத்தார்.
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மாகாணங்களுக்கு இடையில்
மக்கள் போக்குவரத்தை கட்டு படுத்தும் ,தடை நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
இவை விரைவில் விரைந்த்து ஆரம்பிக்க படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்
யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்
யாழ்ப்பாணத்தில் கொட்டலில் பணி புரிந்த்து வந்த சமையல் நிபுணர் ஒருவர் பெரும் கறி
சாட்டிக்குள் வீழ்ந்து மரணமாகியுள்ளார்
இவர் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய்யப் பட்டாரா அல்லது கொரனோ பாதிப்பல்
பாதிக்க பட்ட நிலையில் இவ்விதம் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்
தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரனோ பரவலை அடுத்து ஐந்து மாவட்டங்களில்
உள்ள மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உட் செல்லவோ ,வெளியேறவோ
முடியாதபடி இராணுவம் காவல்துறையினர் காவல் புரிகின்ற்னர்
இந்த செயல் பாட்டால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 238 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
கைதானவர்களில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த
பட்டுள்ளனர்
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தமிழகத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாம் தமிழர் காட்சி ஆசனங்களை பெறாது போதும் ,வாக்கு
வீதத்தில் அந்த கட்சி மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்துள்ளது
இது அடுத்து வரும் தேர்தலில் சீமானுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என எதிர்பார்க்க படுவதால்
,நாம் தமிழர் காட்சிக்குள் உடைவுகளை ஏற்படுத்தும் நகர்வுகள் ,கைதுகள் என்பன எதிர் காலத்தில்
ஆளும் புதிய முதல்வரினால் தொடுக்க பட கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணாமாக
இதுவரை நூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடித்து மூடப்பட்டுள்ளன ,இராணுவம் போலீசார் இங்கு பாதுகாப்பபில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
முற்றாக தனிமை படுத்த பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டுள்ளது
மேற்படி நோயானது கர்ப்பிணிகளை மிக வேகமாக தாக்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் சந்தியில் சிங்கள இராணுவத்தினர் பயணித்த டிரக்
வாகனமும் ,டிப்பர் லொறி ஒன்றுடன் நேரெதிர் மோதியதில் 13 இராணுவத்தினர் உள்ளிட்ட 14 பேர்
படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்
நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய அவை தலைவர் திருமதி சர்வேஸ்வரி தேவராஜா அவர்கள் 21 ஆம் திகதி இயற்கை எய்தியுள்ளார்
இவரது இந்த துயர் செய்தி கேட்டு நாம் மிகவும் மன துயர் அடைகின்றோம்,தமிழ் கூறும் நல்லுலகம் இன்று 2010 இல் உருவாக்க பட்டதன் பின்பு அதன் அவை தலைவராக தற்போது
பணியாற்றி கொண்டிருந்த இவர் காலமான செய்தி தமிழீழ மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழ் தேசியத்திற்காகவும் ,தமிழ் மகளிற்காகவும் குரல் கொடுத்து ,தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தில் அங்கத்தவராக இனைத்து
,அவைத் தலைவராகி பெரும் சாதனைகளை நிகழ்த்தி ,தன் அறப்பணியை நிலைநாட்டி அறம் வெல்ல துணை நின்ற இவரை இழந்து தமிழர் தேசமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேதனையில் துடிக்கிறது
இவரது ஆறா துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்
தகவல் – சமூக போராளி – நாகலிங்கம் -பாலச்சந்திரன் ( பிரான்ஸ் )

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழ்ப்பாண பல் கலைக் கழகத்தில் அமைக்க பட்டு இருந்த முள்ளி வாய்க்கால் நினைவு தூபி
விஷமிகளினால் இடித்து அழிக்க பட்டது
அவ்விதமான அந்த தூபி முற்றாக அழிக்க பட்டு புதிதாக அமைக்க பட்டுள்ளது
சிங்கள ஆளும் பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சிலை உடைப்பு
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து
வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு
கும்பல் ஒன்றினை
போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட
பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் ! photo
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் !
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில்,
அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற
சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.
இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை இந்த lifttheban.uk இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின்
இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றதென குறிப்பிடுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில்,
பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும்
தமது விருப்பினை இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின்
செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.




யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி
கொண்டிருந்த கும்பல் ஒன்றை கண்ணுற்ற இராணுவம் ,அந்த உளவு இயந்திரத்தின் மீது துப்பக்கி சூடு நடத்தியுள்ளது
இந்த தாக்குதலை அடுத்து மணல் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்
உழவு இயந்திரத்தின் டயர்கள் காற்று போன நிலையில் பொலிஸாரினால் மீட்க பட்டுள்ளது
தப்பி ஓடிய மூவைரையும் கைது செய்யும் நகர்வில்க் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி சுமார் 75 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர் ,சாலை விதிகளை கடைபிடிக்காது சாரதிகள்
செல்வதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது












