Posted in Uncategorized இலங்கை செய்திகள்

அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

அவுஸ்ரேலியா நாட்டில் வசித்து வந்த ஜானேஷ் பிரசாத் என்பவர் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்ற பொழுது சீரற்ற கால நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார்

டீசல் மெக்கானிக்கராக பணி பிரிந்து வந்த அவர் அன்று பணியில் ,இயந்திரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளார்

தனது கணவர் இன்று சீரற்ற காலநிலையால் வேலைக்கு சென்றதன் விளைவால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்

15 வருடகால திருமண வாழ்வு இந்த திடீர் கணவர் மரணத்தால் பறிபோயுள்ளது ,கலகலப்பாக

பேசும் இவர் ,கடின உழைப்பாளி அவ்வாறான ஒருவரை இழந்து தாம் வேதனையில் தவிப்பதாக பாரியார் தெரிவித்துளளார்

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

    இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

    கடன் அட்டைகள் தொடர்பான பண மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சந்தேக நபர்களினால் போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி ஒன்லைன் ஊடாக

    பல்வேறு பொருட்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

    ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சுமார் ரூ.7 இலட்சத்து 87 ஆயிரம் நிதி மோசடி இடம்பெற்றமை

    தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

      திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

      திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

      சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால்

      வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

      இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா

      பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

      எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

      இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

      இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

      இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

        வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

        இலங்கையில் தற்போது வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை

        மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளது

        இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது


        பொதுவில் முதல் மன்னார் வரையான பகுதிகள் பாதிக்க படும் வலையங்களாக அறிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது

          பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது

          இலங்கையில்; இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது கண்காணிப்பு பணி தீவிரமாக்க பட்டுள்ளது

          இவ்வேளை நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் எந்த குற்ற சாட்டில் கடந்த தினம்

          மட்டும் 1,281 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்

          இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
          கடந்த தினம் மட்டும் ஐம்பத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்

          பலத்த கட்டுப்பாடுகள் ,பயண முடக்கம் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் இழப்பை தடுக்க முடியாது இலங்கை திணறி வருகிரது

            Posted in Uncategorized

            இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

            இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

            இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

            இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

            மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை

            நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

            மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

            Posted in இலங்கை செய்திகள்

            பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

            பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

            இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த

            குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது

            Posted in Uncategorized

            இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

            இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

            இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது

            ,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்

            இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
            கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை

            இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை

            இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தமது நாட்டு

            மக்களை செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது

            இதே போன்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட

            தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

              பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

              பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது.

              கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

              நாளை எதுவித பயணிகள் போக்குவரத்து ரயிலும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே

              திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

              எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.

                Posted in Uncategorized

                யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்

                யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்

                யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் இனம் கணப்பட்டுள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பணம்

                தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                யாழ்ப்பாணத்தில் மட்டும் 95 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

                அதேபோல கிளிநொச்சியில் 31 பேர் ,வவுனியா 7 ,மொத்தமாக வடபகுதியில் ஒரே நாளில் 137 பேர்

                பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  லண்டன் பாராளுமன்றம் -லீவர் பூல் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே


                  லண்டன் பாராளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே

                  இன்று 18-05-2021 மதியம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், லீவர் பூல் லைம் ஸ்ட்ரீட் முன்பாகவும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள்

                  என்ற அமைப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்தினர் ,மதியம் ஒருமணி முதல் இரண்டு மணிவரை இந்த நிகழ்வு இடம்பெற்றது

                  இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாக்க படும் தமிழர்களுக்கான விடுதலை ,காணாமல் போனவர்கள்

                  விடுதலை ,மற்றும் முள்ளி வாய்க்காலில் சிங்கள இன படுகொலைக்கு நீதி என்பனவற்றை வேண்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

                  காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                  உலகம் தழுவிய நிலையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய பட்ட அப்பாவி மக்கள் நினைவுகூற படுகின்றனர் .12 ஆண்டுகளை கடந்த பொழுதும் இதுவரை இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையாகிறது

                    Posted in Uncategorized

                    தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது

                    தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு

                    மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது

                    செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

                      இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

                      இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை “நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு” என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.

                      பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத்

                      தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.

                      மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம்

                      மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.

                      இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின்

                      போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

                      அத்துடன் இந்த புதிய பிரிவை அமைச்சர் சரத் வீரசேகர திறந்துவைத்தார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்

                        மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மாகாணங்களுக்கு இடையில்

                        மக்கள் போக்குவரத்தை கட்டு படுத்தும் ,தடை நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

                        இவை விரைவில் விரைந்த்து ஆரம்பிக்க படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

                        Posted in Uncategorized

                        யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

                        யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

                        யாழ்ப்பாணத்தில் கொட்டலில் பணி புரிந்த்து வந்த சமையல் நிபுணர் ஒருவர் பெரும் கறி

                        சாட்டிக்குள் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

                        இவர் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய்யப் பட்டாரா அல்லது கொரனோ பாதிப்பல்

                        பாதிக்க பட்ட நிலையில் இவ்விதம் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          Posted in இலங்கை செய்திகள்

                          தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்

                          தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்

                          இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரனோ பரவலை அடுத்து ஐந்து மாவட்டங்களில்

                          உள்ள மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                          இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உட் செல்லவோ ,வெளியேறவோ

                          முடியாதபடி இராணுவம் காவல்துறையினர் காவல் புரிகின்ற்னர்

                          இந்த செயல் பாட்டால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது

                            கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது

                            இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 238 பேர் காவல் துறையினரால் கைது செய்ய

                            பட்டுள்ளனர்


                            கைதானவர்களில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த

                            பட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

                              தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ

                              தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ

                              தமிழகத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாம் தமிழர் காட்சி ஆசனங்களை பெறாது போதும் ,வாக்கு

                              வீதத்தில் அந்த கட்சி மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்துள்ளது

                              இது அடுத்து வரும் தேர்தலில் சீமானுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என எதிர்பார்க்க படுவதால்

                              ,நாம் தமிழர் காட்சிக்குள் உடைவுகளை ஏற்படுத்தும் நகர்வுகள் ,கைதுகள் என்பன எதிர் காலத்தில்

                              ஆளும் புதிய முதல்வரினால் தொடுக்க பட கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன