Tag: இலங்கை
முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்
முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நேற்று (19) இரவு வீதியில் படுகாயமடைந்த
நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ஹட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த 36 அகவையுடைய நல்லு சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.
இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னிலையில் நேற்று தண்ணீரூற்று பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்
இவரை அவசர நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு
10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நீண்ட கொண்டனர் ஒன்றுக்குள் இருந்து தேயிலை தூள்
கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஏற்றுமதிக்கு உகந்த முறையற்ற தேயிலை தூள்களை ஏற்றுமதி செய்ய முற்பட்ட வேளையே இந்த
முற்றுகை இடம்பெற்றுள்ளது
மேற்படி கொள்கலன் தொடர்பில் சுங்க பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு
பைஷல் இஸ்மாயில் –
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலானோர் 18 வயதுக்கு
குறைந்தவர்களாகும். இந்நிலைமை இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது
என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.
நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறித்த சுற்றறிக்கை இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு
ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? பள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி
எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம்
சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா? அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு
மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு
அலரி மாளிகையில் மகிந்த நடத்திய கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்
இவர்களே மகிந்தவின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர்கள் என்பதும் தற்போது அவர்களே
அந்த கட்சிக்குள் மோதலில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்த பட வேண்டும் என இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது
இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த முனைந்து
வருகிறது இதன் ஊடாக அம் பலமாகியுளளது
நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும்
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனை நடைபெறவுள்ளது.
இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக
அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின்
அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது
அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகிறது. இந்த ஆபத்துகள் இன்று எம் கண் முன்னே தெரிகின்றன.
ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும். அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல்
முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.
இரண்டாவது, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும்.
இந்நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகையில் 50 விகிதமும், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையில் 65 விகிதமும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, தென்னிலங்கையில்
வாழ்கிறார்கள். இப்படி பரவி, விரவி வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஒழிக்கும் புதிய தேர்தல் முறைமையை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கொண்டு வர முயல்கிறது.
அதிஷ்டவசமாக, இன்று அரசின் உள்ளே இருக்கும் பங்காளி சிறுகட்சிகளின் இருப்பையும் இந்த புதிய தேர்தல் முறை யோசனைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகவே அரசுக்கு உள்ளே
இருக்கும், சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் சிறு பங்காளி கட்சிகள் இதை அரசுக்கு உள்ளேயே இருந்து எதிர்க்கின்றன. நாளை இந்த கட்சிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுகின்றன.
ஆனால், அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்பீக்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.
இன்று இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள், அமைச்சர்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடு இருக்கும். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழத்தான் போகிறார்கள். இந்த உத்தேச தேர்தல்முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. எமது மக்களின் இருப்பை இந்நாட்டில் இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்டது.
ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் சட்டமூலங்களுக்கு முட்டாள்தனமாக கையை தூக்கி, வரலாற்றின் சாபத்துக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாக வேண்டாம் என சம்பந்தபட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.
கடந்த அரசில் பங்காளி கட்சி அமைச்சர்களாக நாம் இருக்கும் போது, நமது மக்களின் இருப்புக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உரக்க குரல் கொடுத்து அரசுக்கு உள்ளேயே சண்டையிட்டு, எமது இருப்பை உறுதி செய்தோம் என்பதையும் இங்கே நான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெருமையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அதேபோல், அடுத்த தேசிய ஆபத்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைக்கின்ற தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும். இதற்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகி விட்டது.
நாளை பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டத்தில், இது தொடர்பில் பேசப்படும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் இந்த சட்டமூலம் பாராளுமன்றம் வருமா, இல்லையா, வருமானால், வரும் திகதி என்பவை மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம்.
இந்நிலையில், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக
நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், துறைமுக நகரை சீனாவுக்கு தாரை வார்க்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், தாம் இன்று அங்கம் வகிக்கும் அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் என நான் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்
இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்
துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காயத்துடன் கூடிய சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு
எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
32 வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த குறித்த நபரின் சடலம் நேற்று (18) மாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
மியன்மார் கடல் படையினரால் கைது செய்ய பட இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் அந்த கடல்
படையினரால் இப்பொழுது விடுதலை செய்ய பட்டுள்ளனர்
மாசி மாதம் அவர்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய
பட்ட இவர்களை விடுதலை செய்துள்ளமை குறிப்பிட தக்கது
மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி photo
மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி
கிரிகெட் சுற்று போட்டி
“ஒற்றுமையே எமது பலம்”
இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன
இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே எமது பலம் என்று கூறுகின்றார் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்கள்
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்து 11 பேர் கொண்ட 16 அணிகள் உறுவாக்கபட்டு குறித்த அணிகளுக்கு இடையில் கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். கவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்போட்டியை கடந்த 16.04.2021 ஆம் திகதி கிராமிய
வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.
இன்று நம் நாட்டில் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இனம் மதம் மொழி சாதி அரசியல் தோட்டம் ஊர் ரீதயாக பிரிக்கபட்டே இருக்கின்றோம். இது இந்த நாட்டுக்கும் எமக்கும் எமது சமூகத்திற்கும் உகந்த ஒன்று அல்ல நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் ஒன்றுமையாக இருந்து எமது
சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்த கிரிகெட் போட்டி ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் எப்படி ஒன்றுமையாக இருக்கின்றோமோ அதேபோல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் இங்கு கட்சி அரசியல் ரீதியாக வரவில்லை. உங்களில் ஒருவனாகவே
வந்திருக்கின்றேன். ஒற்றுமையே எமது பலம். இந்த பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஊடாக புணர்நிர்மானம் செய்ய இரண்டு
மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். தொடர்ந்து இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் உங்களுடன் தோல் நிற்பேன் என்று கூறினார்
.
இந் நிகழ்வில் சமய பெரியார்கள் கல்வி அதிகாரிகள் பிரஜாசத்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த கிரிகெட் சுற்றுபோட்டி 17.04.2021 மாலை முடிவுற்றது. இந்த போட்டியின் முதலாவது வெற்றி கின்ணத்தையும் பணப்பரிசையும் 2014 ஆம் கல்வி பயின்ற
பழைய மாணவர் அணி வெற்றிக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2009 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் மூன்றாம் இடத்தை 2010 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் பெற்றுக் கொண்டது

கிரிகெட் சுற்று போட்டி

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்
இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இதுவரை ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சியமும் ,வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறியதன் காரணமாக இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளன
பல்லாயிரம் போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த மனித உயிர் பலிகளை தடுக்க முடியாது போலீசார் திணறி வருகின்றனர்
இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு
இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு
இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால்
பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள்
இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அப்பகுதியில் நிலத்தை அகழ்ந்து தேடுதல் மேற்கொள்ளவும் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
இலங்கை யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இந்தியாவில்
ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டவர்களுடன் இவர்கள் நேரடி உரையாடலில் இருந்தமையால் இந்த கைது இடம்பெற்றுள்ளது
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லைதீவு நீராவிப்[பிட்டி பகுதியில் நபர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த கத்தி குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில்
அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்
வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது
இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்
- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்
- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்
- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது
- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்
- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
இலங்கை வேலி ஓயா பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற நால்வர் நீரில் மூழ்கினர்
,இதில் இருவர் காப்பாற்ற பட்டனர் ,ஆனால் தந்தை ,மகன் நீரில் டித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்கள் சடலங்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது ,இதுவரை சடலங்கள் கண்டு பிடிக்க படவில்லை
தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்
இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
இலங்கை இராணுவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 1.600 பேர் இராணுவத்தில்
இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
தமிழர்கள் சிங்கள இராணுவத்தில் இணைத்து கொள்ள படுவதில்லை ,
ஆசை வார்த்தை காட்டி இவ்வாறு பலநூறு தமிழர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்
இதில் இணைந்த பெண்கள் பலர் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமையும் ,தற்கொலை செய்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைபவரக்ளை தடுத்து அவர்களை கைது
செய்திடும் நோக்குடன் ஐந்து உளவு விமானங்களை இலங்கைக்கு இலவசமாக அவுஸ்ரேலிய வழங்கியுள்ளது
மகிந்த காலத்தில் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குள் பலநூறு பேர் மகிந்த மகனால் கடத்த பட்டனர்
அவ்வாறான ஒரு கடத்தல் இப் பொழுது இடம்பெறலாம் என்பதால்,அவுஸ்ரேலிய முந்தி கொண்டு
இந்த அன்பளிப்பை செய்துள்ளமை கவனிக்க தக்கது
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை
தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்
புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்
விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது
இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்















