Tag: இலங்கை
மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச
செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;
அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.
மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை
எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.
இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு தெரு ரவுடிகள் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்
இதில் இருவரும் பலத்த படுகாயமடைந்த நிலையில் யாழ்போதன வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மகனை தேடி வந்த குழுவினர் அவர் அங்கு இல்லாததினால் பெற்றவர்கள் மீதுதாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
இலங்கையில் 18 வயதுக்கு கீழ் பட்டவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது தடை விதிக்க
பட்டுள்ளது ,இதனை மீறி அனுப்ப பட்டால் அவர்கள் மீது விசாரணைகள் நடத்த பட்டு நடவடிக்கை
மேற்கொள்ள படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட காரணத்தினால் கடந்த தினம்
மட்டும் 207 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை – கரடிக்குளம், கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான
கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு
சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு
உடைந்து இரண்டாக ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணியுடன் பேசிட ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்
ஒன்றாக இணைந்து பயணித்து ஆட்சி அமைக்கும் நோக்குடன் இவரது செயல்பாடுகள் அமைய
பெறுகின்றன ,இந்த சந்திப்பு இடம்பெறுமா என்பதும் ,அதில் இணைக்க பாடு ஏற்பட்டு ஒன்றாவார்களா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்
டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்
ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்
பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்
டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும்
அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன்
டொலர்களாகும். ஆண்டின் நடுப்பகுதியில் 1 பில்லியன் டொலர் பத்திரக் கடனை
செலுத்தவேண்டும். அதனை செலுத்திய பின்னர், கருவூலத்தில் 3 பில்லியன் டொலர் இருப்பு மட்டுமே உள்ளது என்றார்.
18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி
18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர படவுள்ளது ,.இதற்கான ஆலோசனை தற்போது வழங்க பட்டுள்ளது
விரைவில் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை, நல்லூருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இணையதளத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிலியந்தல, அளுபொலந்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 16 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 417 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் முக கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேலானவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை
நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆந் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு
உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆந் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன்
24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக்
காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29ஆந் திகதி ஒதுக்கப்பட்டது.
வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது. 27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின்
ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.
இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது. இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக்
கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க
அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்புக்
குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி,
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு
செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24வது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.
இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே
ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின்
உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அமைச்சு
யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்
யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்
யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, , திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
அவுஸ்ரேலியா நாட்டில் வசித்து வந்த ஜானேஷ் பிரசாத் என்பவர் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்ற பொழுது சீரற்ற கால நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார்
டீசல் மெக்கானிக்கராக பணி பிரிந்து வந்த அவர் அன்று பணியில் ,இயந்திரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளார்
தனது கணவர் இன்று சீரற்ற காலநிலையால் வேலைக்கு சென்றதன் விளைவால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்
15 வருடகால திருமண வாழ்வு இந்த திடீர் கணவர் மரணத்தால் பறிபோயுள்ளது ,கலகலப்பாக
பேசும் இவர் ,கடின உழைப்பாளி அவ்வாறான ஒருவரை இழந்து தாம் வேதனையில் தவிப்பதாக பாரியார் தெரிவித்துளளார்

இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்
இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்
கடன் அட்டைகள் தொடர்பான பண மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களினால் போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி ஒன்லைன் ஊடாக
பல்வேறு பொருட்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சுமார் ரூ.7 இலட்சத்து 87 ஆயிரம் நிதி மோசடி இடம்பெற்றமை
தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்
திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால்
வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா
பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை
மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளது
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பொதுவில் முதல் மன்னார் வரையான பகுதிகள் பாதிக்க படும் வலையங்களாக அறிவிக்க பட்டுள்ளது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
இலங்கையில்; இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது கண்காணிப்பு பணி தீவிரமாக்க பட்டுள்ளது
இவ்வேளை நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் எந்த குற்ற சாட்டில் கடந்த தினம்
மட்டும் 1,281 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் ஐம்பத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
பலத்த கட்டுப்பாடுகள் ,பயண முடக்கம் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் இழப்பை தடுக்க முடியாது இலங்கை திணறி வருகிரது
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை
நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது
பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த
குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது











