Posted in இலங்கை செய்திகள்

பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாளை எதுவித பயணிகள் போக்குவரத்து ரயிலும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே

திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.