Posted in உலக செய்திகள்

12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு

பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது

இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்

சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச

இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in Uncategorized

    செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம்

    செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம் #

    வவுனியா செட்டிகுளம் காட்டு பகுதியில் ஆயுத குழு ஒன்றுக்கும்

    இராணுவத்திற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று

    இடம்பெற்றுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக

    இராணுவம் தெரிவித்துள்ளது

    மர கடத்தலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக

    தெரிவிக்க பட்டுள்ளது ,காயமடைந்தவர் வவுனியா

    வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்

    அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்

    அமெரிக்காவில் டிரம்ப் பதவி பறிபோன நிலையில் அங்கு பெரும் பதட்டம்

    நிலவியது ,இதனை அடுத்து தற்பொழுது
    வாஷிங்க்டன்

    பகுதியில் தொடர்ந்து ஏழாயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு காவல் கடமையில் ஈடு படுத்த பட்டுள்ளனர்

    இவர்கள் எதிர்வரும் பங்குனி மாதம் விரை இவ்வாறு நிலை நிறுத்த

    படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

    இராணுவம்
    இராணுவம்
    Posted in Uncategorized

    தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழிக்கும் இராணுவம்

    சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


    அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள

    சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை தாங்கள் பார்க்கின்றோமென்றார்.

    இதற்கு நிச்சயமாக, தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு எனவும், அவர் தெரிவித்தார்.

    ‘நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து

    வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை

    எதிர்க்கின்றோம்’ எனவும், அவர் கூறினார்.
    ‘பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து

    இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள். அவர்களுக்கு

    அங்கு என்ன வேலை? தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான்

    தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.

    ‘அங்கே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். அவருக்கு சிங்கள

    மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு என்றேன்.

    அத்துடன், கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள். கிடங்கு ரீ வடிவில் ஆழமாக

    வெட்டப்பட்டிருந்தது. உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது. அதற்குள் எதையாவது கொண்டுவந்து

    புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் இதே போன்று

    தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது’ எனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

    கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

    சிங்கப்பூரில் உள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் காலே உதித்த தேரர், வணக்கத்திற்குரிய பலங்கொட புத்தகோஷா தேரர் மற்றும் சிங்கப்பூர் புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின்

    அனுசரணையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட்-19 தொற்று நோயின்

    காரணமாக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 07 ஆம் திகதி 1000 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஒருங்கிணைப்பானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவினால் மேற்கொள்ளப்பட்டது.

    கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் இழப்பு காரணமாக கஷ்டங்களுக்கு உள்ளான குடும்பங்களை

    அடிப்படையாக கொண்டு வரவிருக்கும் இந்து நம்பிக்கையின் தைப் பொங்கல் திருவிழாவை நடத்துவதற்கான ஊக்கமாகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    கிளநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட , 57வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாப்பா, 571 மற்றும் 662 வது பிரிகேட்

    தளபதிகள், 9வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 20 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் குறித்த பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று

    சுகாதார வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

    கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் அனில் சோமவீர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை

    ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகாரங்கள் லெப்டினன்ட் கேணல் எல்.கித்சிறி ஆகியோர் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக

    நிறைவு செய்ய நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

    Posted in இலங்கை செய்திகள்

    கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்

    கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்

    மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில்,

    பொலிஸார் நேற்று (18) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    யுத்தக் காலத்தில் அந்த கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்

    தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள்

    முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்படவில்லை.

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

    யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

    யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைபிரிவின் 521 வது பிரிகேட்டின் 11 விஜயபாகு காலாட் படை

    படையினர் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி வல்வெட்டித்துறையில் சூறாவளி மற்றும் பாதகமான காலநிலை காரணமாக

    பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

    யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த

    சமைத்த உணவு விநியோகிப்பதை 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிதசிரி லியானகே மேற்பார்வை செய்தார்.

    521 வது பிரிகேட் தளபதி கர்ணல் மஹேன் சல்வதுர, 11 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட்

    கேணல் கீத் முனகமகே, அதிகாரிகள் மற்றும் படையினர் அவர்களின் அவசர தேவைகள் குறித்து விசாரித்தனர்.

    இராணுவம்
    இராணுவம்
    Posted in உலக செய்திகள்

    இந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி

    இந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி

    இந்தியா கஸ்மீர் ர பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் இந்தியா

    படைகளுக்கு இடையில் இடம் பெற்ற மோதல்களில் சிக்கி இரண்டு இந்தியா சிப்பாய்கள் பலியாகியுள்ளனர்

    இந்திய இராணுவத்திற்கு எதிராக சீனா பாக்கிஸ்தான் முறுகல் நிலையில்

    உள்ளதும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற செயல்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு

    ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு

    ஜோர்டான் நாட்டின் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தி வந்த இருவர்

    மீது தமது இராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடாத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

    இந்த தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தற்போது

    பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

        பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

        பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த

        98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

        கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

        இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

        பலாலி விமானப்படை தளத்தில்
        பலாலி விமானப்படை தளத்தில்
            Posted in இலங்கை செய்திகள்

            சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்

            சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்

            இலங்கை ,சிங்கள இராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பபு துறை சார்ந்த

            இணையங்களை கைக்கிங் புரிந்து அதில் புலிக்கொடி மற்றும் ,புலிகளை

            வெற்றி காணொளிகளை வெளியிட புலிகளின் வெளிநாட்டு கைக்கிங்

            குழு ஒன்று முயன்றுள்ளதாக சிங்கள அரச பயங்கரவாதம் அறிவித்துள்ளது

            முள்ளி வாய்க்கால் தினத்தில் இந்த நாசகார வேலைகளை புரிந்திட அவர்கள்

            முயன்றுள்ளதாகவும் ,ஆனல் அவை தமது பாதுகாப்பு பிரிவினரால் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            சிங்கள இராணுவ இணையங்களில்
            சிங்கள இராணுவ இணையங்களில்
                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை

                வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை

                வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது

                அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்

                இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,

                அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்

                என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்

                ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது

                அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,

                லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்

                யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

                வடகொரியா இராணுவத்துக்குள்
                வடகொரியா இராணுவத்துக்குள்
                    Posted in முக்கிய செய்திகள்

                    9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்

                    9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்

                    சிரியாவில் தொடர்ந்து வரும் போர் தற்பொழுது உக்கிரம் பெற்றுள்ளது .


                    சிரியா அரச இராணுவத்தினர் ஒன்பது பேர் கிளர்ச்சி படைகளினால் கடத்த பட்டு ,

                    கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது சிரியா அரச இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

                    சிரியாவின் முன்னரங்க நிலையான Tafas. பகுதியில் இந்த முக்கிய தாக்குதல்கள் படைகள் ,கனரக ஆயுத வண்டிகளுடன் குவிக்க பட்டு வருகின்றனர்

                    வரும் மணித்தியாங்களில் இங்கு கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    மக்கள் அச்சத்தின் காரணமாக இந்த நகர் பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்


                    எப்பொழுதும் எதுவும் இங்கு இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது

                    இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம் பேர் அகதிகளாகி உள்ளமை குறிப்பிட தக்கது

                    9 இராணுவத்தினர் கடத்தி
                    9 இராணுவத்தினர் கடத்தி
                        Posted in உலக செய்திகள்

                        அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?

                        அமேசான் காட்டுக்குள் தேடுதல் நடத்தும் பிரேசில் இராணுவம் – நடப்பது என்ன ..?

                        உலகில் புகழ் பெற்றதும், நீண்ட பழமை வாய்ந்ததுமான, அமேசன் காட்டுக்குக்குள்

                        பிரேசில் நாட்டு இராணுவத்தினர் ,தரை மற்றும் வான்வழி ஊடாக திடீர் தேடுதலில் ஈடு பட்டுள்ளனர் .

                        இந்த காடானது விஷமிகளினால் தீவைதி எரியூட்ட பட்டது ,பல லட்சம்

                        உயிரினங்கள் படுகொலை செய்யப்பட்டன ,ஆதிவாசிகள் கூட எரிந்து பலியாகின

                        இதனை அடுத்து மேற்படி காட்டு பகுதிக்குள் திடீரென பிரேசில் இராணுவம் நுழைந்துள்ளது

                        இந்த திடீர் முற்றுகை ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                        அமேசான் காட்டுக்குள்
                        அமேசான் காட்டுக்குள்
                        Posted in உலக செய்திகள்

                        சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

                        சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

                        சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்

                        மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்

                        சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்

                        உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,

                        இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது

                        சிரியாவுக்குள்
                        சிரியாவுக்குள்
                        Posted in இலங்கை செய்திகள்

                        இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை

                        இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை

                        இலங்கையில் தமிழின படுகொலையாளிகள் ஆட்சியில் ஏறினர் ,ஒன்று பட்ட நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி

                        ,புலிகளினால் அடக்கி ஒடுக்க பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்திகளை

                        புரிந்து அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுவோம் என முழங்கினார்

                        அதற்காக இன ,மத பேதம் இன்றி மக்கள் ஆட்சி தொடரும் என சிவப்பு சால்வைகள் முழக்கமிட்டன ,


                        இவர்கள் பேச்சுக்களை மக்களும் நம்பிடத்தான் செய்தனர்

                        ஆனால் நடந்தது என்ன …? மக்கள் வீடுகள் முன்பாக சிங்கள உளவுத்துறையின்

                        நாடமாட்டம் ,வீடு சென்றே மிரட்டல் ,வெளியில் சொன்னால் கொலை

                        என தொடரும் சிங்கள இராணுவ வன்கொடுமை , அடக்குமுறைக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .

                        செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள் ,அவர்தம் ஆதரவாளர்கள் ,முன்னாள்

                        புலிப் போராளிகள் ,அவர்தம் தொடர்பாளர்கள் எனநீண்டு செல்கிறது பட்டியல்

                        அதுமட்டுமா ,,ஆளும் மக்கள் ஜனநாயக கட்டமைப்புக்குள் சிங்கள இராணுவ

                        அதிகாரிகள் நியமனம் ,இவை எதனை குறிக்கிறது ..?
                        மக்கள்

                        ஆட்சி தத்துவத்தை ஏற்றுள்ள இலங்கைக்குள் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன …?

                        கேள்வி கேட்பவன் கடத்த படுகிறார் ,அடக்க படுகிறான் ,அவன் கடத்தி முடக்க

                        படுகிறான் ,தொடரும் இந்த பவுத்த பேரினவாத சிந்தனைக்குள் சிக்கியுள்ள

                        கோத்தபாயவின் கொலை வெறி விரோதம் ,வஞ்சத்துடனேயே தமிழர்களை துரத்திய வண்ணம் உள்ளது

                        இதற்கு முடிவு கட்டுவது யார் ..?வாக்கு வங்கிகளை தமது பக்கம் வைத்துள்ள

                        மக்கள் தான் ,முடிவெடுங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்டியுங்கள் என்பதே நமது வாதமாகும் ,

                        இராணுவ மயமாகும்
                        இராணுவ மயமாகும்
                        Posted in உலக செய்திகள்

                        இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு

                        இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு

                        இந்தியா இராணுவத்தினர் பதினெட்டு பேர் புதிதாக பரவி வரும் கொரனோ

                        நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக
                        இராணுவம் தெரிவித்துள்ளது

                        இதற்கு முன்னர் 22 பேர் பாதிக்க பட்ட நிலையில் தற்பொழுது

                        மேலும் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

                        இதுவரை எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க

                        பட்டுள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                        இந்தியா இராணுவத்தினர்
                        இந்தியா இராணுவத்தினர்
                        Posted in உலக செய்திகள்

                        சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

                        சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி

                        சிரியாவில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம் பெற்ற

                        மோதல்களில் கிளர்ச்சி படைகளை சேர்ந்த முப்பத்தி ஐந்து பேர் பலியாகியும்

                        அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படு காய மடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

                        சிரியாவின் Al-Manarah பகுதியில் இடம்பெற்று வெவ்வேறு தாக்குதல்களில்

                        இரண்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்களே இவ்விதம் அரச

                        இராணுவ தாக்குதலில் பலியாகியுள்ளனர் ,பரஸ்பர மோட்டார் ,எறிகணை தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                        இவ்வேளை ரசியாவின் விமானம் தளம் மீதும் துருக்கிய ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                        சிரியாவில் கடும் மோதல்
                        சிரியாவில் கடும் மோதல்
                        Posted in இலங்கை செய்திகள்

                        முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

                        முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

                        முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால்

                        வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

                        குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல்யமான வர்தகர் திரு சுரேஷ் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்

                          டீப்தி ஜயதிலக்க அவர்களை தொடர்பு கொண்டு இதற்பொழுது காணப்படும் தொற்று நோய் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக

                          பாதிக்கப்பட்டுள்ள நாயாறு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தனது அனுசரணையினை

                          வழங்கினார்.20200506 முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுடன் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி

                          மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலகும்பர, 19

                            ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இவ்விநியோகத்தில் கலந்து கொண்டனர்

                            Posted in உலக செய்திகள்

                            இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                            இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                            ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தாலிபான்கள்

                            திடீர் தாக்குதலை நடத்தினர் .இதில் குறித்த இராணுவத்தை சேர்ந்த 150 பேர்

                            பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர் என தாலிபான்கள் அறிவித்துள்ளன

                            ஆனால் அரசு இராணுவமோ, சுமார் 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்


                            உண்மையான சேத விபரங்களை அரச இராணுவம் வெளியிடவில்லை

                            இராணுவ தளம் மீது அதிரடி
                            இராணுவ தளம் மீது அதிரடி