Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

  • வன்னி மைந்தன் –
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து இலங்கைக்கு உதவும் முகமாக இந்தியா தூதுக்குழு இலங்கை வந்தடைந்துள்ளது .

இந்தியா தூதுக்குழு

இந்த விசேட தூதுக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா,இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான
செயலாளர் அஜய் சேத், த பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர் .

ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளது .இந்தியா வெளியுறவு அமைச்சர் தலைமையில் மேற்படி குழு வருகை தந்துள்ளது .

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் விக்கிரமசிங்க சந்திப்பு

இலங்கை வந்தடைந்துள்ள இந்திய விசேட குழுவினர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தனிப்பதற்குரிய வேலைகளை இந்த இந்தியா தூதுக்குழு செயல்முறை படுத்தும் .

ஆனால் அதற்கு கைமாறாக இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு 99 வருடங்களுக்கு மீளப்பெற்று கொள்ளும் பேச்சுக்களும் இதில் இடம் பெற்று உள்ளதாக முக்கிய அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர் .

மிக ஆபத்தான நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சீனாவின் பாணியில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது .

அவ்வாறான நகர்வுகள் இன்று இங்கே வந்த இந்தியா விசேட குழுவினர் பேசியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது .

இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய நன்றி

இலங்கை சந்தித்து வரும் மிக நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகின்றது .அவ்வாறான அவசர புரிந்துணர்வு உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார் .

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

இந்தியா சும்மாவா உதவி செய்கிறது என்பதற்கு இன்று உள்ளே இடம்பெற்ற பேச்சுக்கள் மூலம் கொழும்பு புரிந்திருக்கும்.

சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் என்பதும் தமிழக மீனவர்கள் மீது தேவையற்று கைது செய்திட முனைந்து இன்று இடியாப்ப சிக்கல்லுளுக்குள் இலங்கை சிக்கியுள்ளது .

மேலும் இலங்கையை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அணைத்து நகர்விலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்

    இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்

    இலங்கைக்கு இந்தியாவின் உதவி திட்டத்தில் ஐநூறு மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான எரிபொருளை தாங்கிய படி இந்தியா எண்ணெய் கப்பல் இலங்கை வருகிறது

    இவ்வாறு இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல் ஊடாக மக்களுக்கு போதுமான எரிபொருள் நிவர்த்தி பெறும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்

    இலங்கைக்கு அவசரகால உதவியின் கீழ் இந்திய பாரிய அளவிலான உதவியை வழங்கி வருகிறது ,

    இந்திய உதவி திட்டம் நிறுத்த பட்டால் இலங்கை மிக பெரும் நெருக்கடி நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

    இலங்கையில் எரிபொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிய வண்ணம் உள்ளது ,மக்கள் பல மைல் தொலைவில் நிரையில் காத்துக் கிடக்கின்றனர்

    ஆனால் அவர்கள் எதிர் பார்த்த எரிபொருள் கிடைக்க பெறாத நிலையில் ,நாள்தோறும் எரிபொருள் விலையும் அதிகாரித்துள்ளது

    எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து முடக்க பட்டுள்ள அதேவேளை உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்பும் தடை பட்டுள்ளது

    மின்சாரம் எரிபொருள் இலங்கையில் பாற்றாக்குறை நிலவி வருவதால் இந்த உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன

    இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்இலங்கையின் நெருக்கடியை உடனே தீர்த்து வைக்க போதுமானதாக உள்ளதாக என்ற ஐயம் எழுந்துள்ளது


    எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து இருந்தார்

    இவரது கூற்று மெய்ப்படும் வண்ணம் இந்தியா உதவிகள் நிறுத்த பட்ட பின்னர் ஏற்படும் அபாயகரமான நிலை தோற்ற பெற போகிறது

    தொடரும் இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண உலக வாங்கி முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    ஆனால் அவையும் பயனுள்ள ஒன்றாக மாற்றம் பெறுமா தொடர்ந்து இலங்கைக்கு
    எண்ணெய் கப்பல்கள் வந்தடையுமா என்ற கேள்வியோடே மக்கள் அவளை வாழ்வு தொடர்கிறது

    உலகவங்கி மேற்கொள்ளும் கடன் வழங்குதல் ஊடாக இலங்கை நெருக்கடி நிலை கட்டுப்படுத்த படுமா ..?

    • வன்னி மைந்தன்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

      இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி

      இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது

      சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்


      உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
      இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது

      கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்

      போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது

      இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்


      இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்

        Posted in உலக செய்திகள்

        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

        இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது

        ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்

        காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்

        இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது

        இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்

        முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை

        இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை

        அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது

        தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது

        தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது

        அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன

        உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –

        இதில் அழுத்தி காணொளி பார்க்க

        https://www.youtube.com/watch?v=heAmoxaa-QA
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்க

        இந்தியா தீர்மானித்துள்ளது குறித்த தொகை பணத்திற்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        நாட்டின் தற்கால நெருக்கடியை தீர்க்க இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும்

        இலங்கை ,அதனை மீள செலுத்திட முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை
        குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!

          இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!

          இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டின் சென்னைப் பெருநகரில் நா.தமிழீழ அரசாங்கம் நடாத்துகின்றது.

          Hotel Benzz Park(Hall Volvo) N62, Thirumalai Pillai Road, T.Nagar, Chennai – 600 017 at 5 PM

          கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக மே21ம் நாள் சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

          அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’

          ‘சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’ ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.

          மூத்த ஊடகர் திரு.அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன்,

          முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இக்கருத்தமர்வுகளில் பங்கெடுக்கின்றனர்.

          கனடா, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன.

          மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார் என

          தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையுரையினை வழங்குகின்றார்.

          இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்த நேரடி நிகழ்வினை நா.தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            மக்கள் போராடடத்தை குழப்பும் இந்தியா

            அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

            அத்துடன், மே 18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

            வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராயாவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

            தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியாவில் சிங்கள தேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை நாம் நினைவுகூருகின்றோம்.

            “முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.

            “இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்துகொள்கின்றோம்.

            “அத்துடன், இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பை எந்தத் தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்.

            “இதேவேளை, புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

            “மக்கள் துக்கத்தை அனுபவித்துவரும்இந்தச் சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது.
            இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்” என்றார்.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

            இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

            இலங்கையில் எதிர்வரும் முள்ளிவாய்கால் 18 ஆம் திகதி புலிகள் குண்டு தாக்குதலை

            மேற்கொள்ள உள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

            ஆளும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்களை மிரட்டவும் ,அடக்கவும் குண்டு தாக்குதல்கள் அவசியமாக உள்ளது

            அதனை புலிகள் பெயரில் நடத்த கோட்டா திட்டமிட்டுள்ளது ,இதன் ஊடக

            அம்பலமாகியுள்ளது ,இல்லாத புலிகள் இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்த உள்ளனர்


            என்ற தகவல்தமிழர்களை மேலும் பழிவாங்க கோட்டா திட்டம் போட்டு நகர்வதாக இந்த விடயங்கள் அம்பல படுத்துகின்றன

              Posted in இலங்கை செய்திகள்

              தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்

              தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்

              இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது சிறைகளில் இருந்து தப்பித்து சென்ற

              கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது


              இதனால் தற்போது இந்தியா கடலோர பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது

              தப்பியவர்களை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு இந்தியா 65 மெட்ரிக் தொன் யூரியா

                இலங்கைக்கு இந்தியா 65 மெட்ரிக் தொன் யூரியா

                இலங்கையின் அவசரகால நெருக்கடியை தீர்க்கும் முகமாக இந்தியா 65.000 மெட்ரிக்

                தொன் எடையுள்ள யூரியோவை வழங்கியுள்ளது

                இவை போதுமானதாக இல்லாத பொழுதும் ஒரு கண்துடைப்பிற்கு அரசு இவற்றை பயன் படுத்தி கொள்கின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                  திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                  இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                  மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.

                  அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.


                  இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
                  குறிப்பிட தக்கது.

                    Posted in Uncategorized

                    பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்

                    பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்

                    இந்த வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                    பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்- டெல்லியில் பரபரப்பு
                    பள்ளி மாணவிகள்
                    புது டெல்லி:

                    டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டியுள்ளார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

                    இந்த சம்பவம் குறித்து மாணவிகள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிகளிடமும் இந்த சம்பவத்தை மறந்துவிடும் படி கூறியுள்ளனர்.

                    இந்த சம்பவம் குறித்து தற்போது டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

                    மேலும் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                    இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:-

                    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
                    இது மாநகராட்சி பள்ளி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை.
                    அதனால் குற்றவாளி குறித்த தகவல் தெரியவில்லை.
                    இருப்பினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம்.
                    அதேபோல பள்ளி மாணவிகளிடம் குற்றவாளி குறித்த தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்.

                      Posted in Uncategorized

                      இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                      இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                      இலங்கைக்கு இந்தியா தொடரந்து அவசர உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது

                      ,கொழும்பு துறைமுகத்திற்கு 440,000 மெட்ரிக் தொன் எடையுள்ள எண்ணெய்களை

                      தாங்கிய வண்ணம் இந்த கப்பல் வந்தடைந்துள்ளது

                      சமீப காலங்களாக இலங்கைக்கு இந்தியா அவசர வசர உதவிகளை வழங்கியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

                        இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உடனடி

                        கடன் உதவியாக 23 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியுள்ளது

                        இந்த கடன் உதவியை விரைவில் மீள செலுத்தும் ஒப்பந்தம் எழுத பட்டுள்ளது

                        இதனை செலுத்திட முடியா நிலைக்கு இலங்கைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                          இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                          இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல

                          முற்பட்ட 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          மூன்று குடும்பங்களை சேர்ந்த 12 பேருடன் படகோட்டிகளும் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

                            Posted in Uncategorized

                            இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                            இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                            இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு


                            ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன

                            இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்

                            நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

                            இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                              ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

                              இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,இந்திய கடலோரா படையினால் ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.

                              கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

                              இரு நாடுகளின் இராணுவத்தால் அப்பாவி மீனவர்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                Posted in உலக செய்திகள்

                                ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்

                                இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.

                                பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
                                சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி

                                பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,

                                ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

                                இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்

                                பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.

                                அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்


                                செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                                  இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                                  இலங்கை காங்கேசன்துறையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட பன்னிரெண்டு பேர் கடற்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  கடற்படை விசாரணையின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது