Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai
சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai
உன்னால் தவிக்கிறோம்
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்
எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்
இன்றுந்தன் அகவையே –
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal
நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal
நண்பர் ஆனந்தம் அவர்கள் அகவை நாளில் ,அவரை எண்ணி சிலவரிகள் ,நீ வாழ என் வாழ்த்து ,நினைந்துருகி வாழ்த்துகிறேன்.
திருமணம் செய்வோம் வா
திருமணம் செய்வோம் வா
பக்கம் பக்கமாக கவிதை எழுதி
படித்து காட்ட வந்தாலும்
வெட்க பட்டு ஓடுறியே
வெருளியாக மாறிரியே
அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
அத்தனை பல்லும் அழகாச்சு
முத்தமிட முன் மொழியும் – உன்
உதடு இரண்டும் தெளிவாச்சு
சத்தமிடா நீ இருந்தா
சாந்தமாக ஆகிடுவேன்
உத்தரவு நீ கொடுத்தா
உன்னை நான் ஏற்றிடுவேன்
இத்தனை நாள் தவமிருந்தேன்
இந்த ஒரு நாளுக்காய்
இன்றேனும் ஏற்று விட்டாய்
இணைவோம் வா இல்லறத்தில் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-11-2022
துயர் தந்து ஏன் மறைந்தாய் video
துயர் தந்து ஏன் மறைந்தாய் video
துயர் தந்து ஏன் மறைந்தாய் video செல்லத்தம்பி செல்வகுமார் 31 ஆம் நாள் நினைவு பகிர்வு இரங்கல் கவிதை துயர் தந்து ஏன் மறைந்தாய்.video
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .
என்னோடு வா
என்னோடு வா
கவிதைக்குள் உன்னை நான் வரைய வா – என்
கனவுக்குள் என்றும் நீ மலர வா
இதயத்தை என்றும் திறக்க வா – என்
இதயத்தில் என்றும் இருக்க வா
உனக்காக என்றும் நான் வாடவோ – உன்
உயிரோடு என்றும் நான் கூடவோ
பிறந்தாயே நீ தானே எனக்காக – இந்த
பிரளயத்தை பிளக்க வா துணையாக ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-11-2022
வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
ஆண்ட பரம்பரை வீழ்ந்து படுத்தது
ஆண்ட தேசத்தில
அடிமையானவர் அடக்கியாண்டவர்
ஆள்கிறான் தேசத்தில
இங்கிலாந்திலும் இந்து ஆளலாம்
இங்கு நெறி இருக்கு
இன்று ஆளும் ரிஷி சுனெக்
இந்து தருமத்தில் இருக்கு
முந்தி வந்தெம்மை ஆண்டு மகிழ்ந்தவன்
முன்னே விழிக்கிறான்
முன்னேற்றம் காண நிலையிலே
முன்னேறி ஆள்கிறான்
வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
வந்தவர் இங்கு ஆளும் புலமை
வாயிலில் இருக்கு
வாய் உரைக்கும் மொழியின் புலமை
வளத்தில் நிறைந்திருக்கு
ஈர் நூறண்டு வரலாறு
இன்று உடைந்தது
இங்கிலாந்தின் இளம் வயது
இவன் என்றே மலர்ந்தது
முதல் இந்திய குடிமகன்
முன் பெயரே ஒலித்தது
வந்தேறி குடி மகன் ஆளும்
வசதி நெறி கிடைத்தது
இந்திய நாடு இலங்கையில்
இது போலொரு நெறி உண்டோ
இங்கிலாந்தின் ஆட்சி முறை
இனியேனும் பற்றுமோ …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-10-2022
இங்கிலாந்தை ஆளும் இந்திய பிரதமர் ரிஷி சுனெக் 25/10/2022 பதவி ஏற்ற பொழுது
நீதிக்கு இன்று பிறந்த நாள்
நீதிக்கு இன்று பிறந்த நாள்
அன்பிற்கும் பண்பிற்கும் முதலானவன்
அறத்திலே உதிர்கின்ற பெருமாளிவன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற நேயனிவன்
நேர்மையில் இவனொரு தாயானவன்
சொல்லுக்குள் நேயத்தின் வில்லானவன்
சொன்னதை செய்கின்ற பிரபாகரன்
கண்ணுக்குள் தெறிக்கின்ற ஒளியானவன்
கரிகால பரம்பரை பேரனிவன்
வெள்ளையர் நாட்டில் வெறியானவன் – நீதி
வெந்தணல் மூழ்கியே முடிகின்றவன்
அடிமையை ஏறியே உதைக்கின்றவன்
அடக்கிட நினைத்தாரை மிதிக்கின்றவன்
தன்னலம் இன்றியே நடக்கின்றவன்
தரணியில் தன் புகழ் விதைக்கின்றவன்
வந்தாரை கரையேற்றி வைக்கின்றவன்
வழிகாட்டி வாழ்வியல் கொடுக்கின்றவன்
சட்டத்தில் வித்தைகள் குடிக்கின்றவன்
தர்க்கத்தில் தன் வித்தை கொட்டிறவன்
நுணுக்கத்தில் நூலாகி நுழைகின்றவன்
நுண்ணுயிர் போலாகி வெல்கின்றவன்
பிரம்மனாய் இன்று நீ பிறப்பெடுத்தாய்
பிரமைகள் பலதை உடைத்தெறிந்தாய்
இறவா நடக்கின்ற நீதிவானாய்
இன்று போல் என்றும் வாழ்ந்திடுவாய்
பிரியத்தை பிழிகின்ற பிரியனே – என்
பிரியத்தில் உறைகின்ற முதல்வனே
தலைகள் வணங்கிடும் தலைவனே – நீதி
தரணியை ஆண்டிடு மைந்தனே .
இன்றிவன் இன்றிவன் பிறந்தானாம்
இதயத்தில் இறைவனாய் நின்றானாம்
இன்றுபோல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இதயமே வாழ்திறேன் நீ ஆண்டிடனும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-10-2022
பிரிட்டனில் சட்டத்தரணி பிரியன் அவர்கள் பிறந்த நாளான இன்று 06-10-2022
வாழ்த்திய வாழ்த்து பா .
உங்கள் வாழ்த்துக்களை கீழ் உள்ள கருத்து பகுதியில் NAME மற்றும் கருத்தை பதிவு செய்தல் போதுமானது – மின் அஞ்சல் தேவை அல்ல

விடை பெற்று ஏன் போனாய்
விடை பெற்று ஏன் போனாய்
நேற்றெங்கள் நெஞ்சத்தில்
நெடு நாளாய் உறைந்தவா
நேரலையில் ஓடி வந்து
நெடு நேரம் பேசியவா
ஆவி உடல் துறந்தின்று
ஐயா நீ வீழ்ந்தாயோ
ஆறா துயரினிலே
அழ வைத்து பார்த்தாயோ
வீடு வந்த உன்னை
வீதியில வழி மறித்து
விபத்தில் ஊனாக்கி
வீழ்ந்து போக வைத்தாரே
பத்து மாதம் கோமாவில்
பார்வை இழந்து கிடந்தவரே
எழுந்து வர நீ மறந்து
ஏக்கம் தந்து ஏன் மறைந்தாய்
கனி மரத்து தோப்பாகி
காலம் எல்லாம் காத்தவரே
விழி எல்லாம் நீர் வைத்து
விடை பெற்று ஏன் போனாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-10-2022
செல்லத்தம்பி செல்வகுமார் துயரில் தோய்ந்தவர்க்கு கண்ணீர் சமர்ப்பணம் .
மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்
எங்கள் அவலம் இன்று புரிகிறதா
எங்கள் அவலம் இன்று புரிகிறதா
ஆகாயம் ஆடிடும் அழகான நாடு
அதோபார் அந்தோபார் அசிங்கத்தின் கேடு
அடித்த கொள்ளையில் அரைவாசி கொட்டு
அன்றாட அவமானம் அதனை ஒட்டு
எரிபொருள் எங்கென்ற ஏக்கம் போக்கு
எந்நாளும் ஏறும் விலை ஏற்றம் நீக்கு
பட்டினி படரா பாதையை காட்டு
பகைவராய் பார்க்கும் பார்வையை ஒட்டு
இல்லாத இழிநிலை இன்றே ஒட்டு
இலங்கை இருக்கென்று இவ்வுலகில் காட்டு
நாட்டுக்குள் நாட்டை நாட்டியே காட்டு
நம்மவர் வாழும் வாழ்வியல் கூட்டு
ஓட்டுக்கு ஓடும் ஓலம் ஒட்டு
ஒன்றாகும் ஓர்மத்தின் ஓட்டை நாடு
இல்லாமல் தவிக்குது இலங்கையில் வீடு
இதுதானே இதுதானே இலங்கையில் கேடு
சிங்களநாடு சிறையிலே சிறையிலே
சிறுபான்மை கண்டது இவையாவும் போரிலே
இல்லாத நிலையிலே இன்றிந்த போராட்டம்
இனத்தமிழ் அழித்தாயே இதனாலே வாட்டம் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 23-09-2022
நீ மட்டும் வா
நீ மட்டும் வா
அஞ்சிடாத நெஞ்சு என்றால்
அருகில் வந்து நில்லு – நான்
அழைக்கும் போது ஓடி வந்து
என்னை நீயும் கொஞ்சு
பிஞ்சு போல பேசுகின்ற
உந்தன் பேச்சு வேண்டும்
பிரியமுடன் நீயணைக்கும்
பிரியா வரம் வேண்டும்
நீயும் நானும் வாழ்ந்து விட
இந்த பூமி போதும்
நீ அணைக்கும் போதினிலே
இருள் மட்டும் வேணும்
கண்ணுறங்கும் போதினிலே – உன்
காதல் பாட்டு வேண்டும் – நான்
காலம் எல்லாம் வாழ்ந்துவிட – நீ
காலடியில் வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-09-2022
வாழ்வோம் வா
வாழ்வோம் வா
உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ
அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே
இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்
03-08-2022
பதில் சொல்
பதில் சொல்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா
உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்
சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா
தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்
03-09-2022
இறந்து போ
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022
உன்னில் நான் என்னை நம்பு
உன்னில் நான் என்னை நம்பு
காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்
புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்
எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்
மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்
காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்
கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே
நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே
இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022
சிக்கன் கடை நாற்றம்
சிக்கன் கடை நாற்றம்
சிக்கன் கடை சிக்கன் கடை
சிரிப்பு வருகுது
லண்டனில சிக்கன் கடையில்
நாற்றம் எழுகுது
பணத்தை கொடுத்து உணவு வாங்க
பறந்து வருகிறான்
பழசை விற்று பணத்தை வாங்கி
பறந்து திரிகிறான்
வீடு காரு எல்லாம் இங்கே
கடனில் ஓடுறான்
பணக்காரன் என்றே தன்னை
பந்தா காட்டுறான்
காரில் இருந்து கமரா பார்த்து
கடைக்குள் நுழையுறான்
வேலை செய்யும் தொழிலாளியை
வெறித்து முறைக்கிறான்
தொழிலாளி போல வேலை செய்ய முடியல
தொந்தி வைத்த வயிறால ஏதும் முடியல
அரை குறையா ஆங்கிலமும் பேசி அலைகிறான்
அதிலேனும் புலமையில்லா இவனும் கிடக்கிறான்
பண்டியையும் கோழியையும்
ஒண்ணா பொரிக்கிறான்
பள்ளி வாசல் போறவனும்
பாவம் திண்ணுறான்
பாபுக்கி கிரில் சிக்கன்
வாங்கி உண்ணாத
பழைய சிக்கன் இதுதாங்க
மறந்து போகாத
இவர்கள் போல குப்பையர்கள்
இங்கு யாரும் இல்லையே
இவரை இங்கு சிறையில் போட
எவரும் முனையல
சிக்கன் கடை நாற்றம்
உழைத்த பணத்தில் வரியை கட்ட
ஊதி மறைக்கிறான்
ஊருக்குள்ள முதலாளி
ஊனம் போகிறான்
இவரை கண்டால் செருப்பெடுத்து
இன்றே அடியடா
இடுகாடு உள்ளே இழுத்து
இன்றே புதையடா
கலர் படத்தை செய்கிறவன்
கலராய் திரிகிறான்
நாற நாற சிக்கன் விற்கும்
நாயு போகிறான்
கோழிக் கடையில் கொஞ்சம் நீங்க
வேலை செயுங்க
கொள்ளை அடிக்கும் கொள்ளையரை
அங்க பாருங்க
சூடு ஒயிலை வடிக்கிறாங்க
ரப்பர் வாளியில்
சுகாதார பாதுகாப்பு
மறந்து போறாங்க
சட்டம் வாழும் நாட்டில தான்
எல்லாம் நடக்குது
சாட்ச்சி களாய் சொன்னேன் இதை
எடுத்து பேசுங்க
லண்டனில சிக்கன் கடை
கூத்து பாருங்க
நம்ம தமிழர் கடையில் இந்த
நாற்றம் கேளுங்க
பெண்டாட்டி பேரில
கடைகள் பாருங்க
பொறுப்பற்று திரியும்
இந்த ஊழல் வாதிங்க
சொலவதெல்லாம் உண்மை என்றே
சொல்லி போறெங்கே
சொன்னதில பொய் இருந்தா
சொல்லி திருத்துங்க …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-07-2022
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு












































