திருமணம் செய்வோம் வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

திருமணம் செய்வோம் வா

திருமணம் செய்வோம் வா

பக்கம் பக்கமாக கவிதை எழுதி
படித்து காட்ட வந்தாலும்
வெட்க பட்டு ஓடுறியே
வெருளியாக மாறிரியே

அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
அத்தனை பல்லும் அழகாச்சு
முத்தமிட முன் மொழியும் – உன்
உதடு இரண்டும் தெளிவாச்சு

சத்தமிடா நீ இருந்தா
சாந்தமாக ஆகிடுவேன்
உத்தரவு நீ கொடுத்தா
உன்னை நான் ஏற்றிடுவேன்

இத்தனை நாள் தவமிருந்தேன்
இந்த ஒரு நாளுக்காய்
இன்றேனும் ஏற்று விட்டாய்
இணைவோம் வா இல்லறத்தில் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-11-2022

https://www.youtube.com/watch?v=DTjw9V_C490