வெளியில் தெரியாத வேர்கள்.
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗

-பிறேமா(எழில்)-

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அவளை தேடுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அவளை தேடுகிறேன்

அவளை தேடுகிறேன்

முரசுமோட்டை வீதியில
முன்னே நான் நிற்கையில
பரந்தன் வீதியில
பார்த்தவள் பக்கம் வந்தாள்

என்னப்பா இங்கே எண்டு
எடுத்தெரு கேள்வி கேட்டால்
என்னத்தான் நீ என்று
ஏங்க என்னை வைத்துவிட்டாள்

பேச்சின்றி நான் நிற்க
பேரிடியாய் அவள் சிரிக்க
வானரங்கம் போல அவள்
வந்த வழி போய்விட்டாள்

திரும்பி பார்க்கையில
திசை தெரியா போனவளை
திரும்ப பார்ப்பன் என்று
திகதியை தேடுகிறேன்

அரும்பு மீசையில
அழகாய்த்தான் உள்ளேனென்று
ஆள் மனதில் நான் நினைத்து
அவளை தேடுகிறேன் …!

ஆக்கம் 02-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

சம்பந்தன் விடை பெற்றார்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சம்பந்தன் விடை பெற்றார்

சம்பந்தன் விடை பெற்றார்

தேசத்தின் விடுதலைக்காய்
தெருவிறங்கி வந்தவராம் – எம்
தேசிய தலைவனையும்
தெருவெறிந்து போனவராம்

கூட்டமைப்பின் தலைவராய்
கூடு கட்டி வைத்தவரை
நாயிடை கேவலமாய்
நாவாட்டி நின்றவராம்

தேசத்தின் தலைமகனை
தெருவெறிந்து போனவனை
மனமிருத்தி பாடவோ – நீ
மா மனிதன் ஆனவானோ

குள்ளநரி காடையரின்
குழு தலைவனானவனே
பின்னாளில் தமிழ் அழிவின்
பிள்ளை கறி மணந்தவனே

அண்ணனவன் சொன்னதற்காய்
அன்னை தமிழ் ஏற்றதுவே
உந்தன் புத்தி மாறாது
உமிழ்ந்து திரிந்தவனே

இன்று இறந்து போனவனே
இறுதியிலே என் கண்டாய்
ஆனாலும் இரங்குகிறோம்
ஆழ்ந்த இரங்கல் உந்தனுக்கு ..!

ஆக்கம் 01-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை #kavithai #kavithaigal #கவிதைகள்

மூத்த அரசியல் தலைவர் ,சம்பந்தன் 30-06-2024 விடை பெற்றார் ,அவருக்கு என் இரங்கல் பா

சேரன் குளிர்களி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சேரன் குளிர்களி

சேரன் குளிர்களி

பாட்டுச் சத்தம் கேட்டாலே
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கும்.
பாட்டி, குழந்தைகள் எல்லாம்
பறந்தோடி வாங்கிக் குடிக்கும்.

ராஜா, லிங்கம், றியோ
தராத சுவையை
சேரன் குளிர்களி தந்தது.
ரோஜாப்பூ வாசமாய்
அவர்கள் சேவையிருந்தது.

றோலுக்க கம்பில்லை
பாலுக்க தண்ணியில்லை
பானுக்க மண்ணில்லை
ஆனால்,
வாழ்வுக்க வசந்தமிருந்தது.

கலப்படமில்லாத வியாபாரம்
களிப்புடன் வாழ்ந்தது சமுதாயம்.
நிழல்படமாய் இதன் நினைவுகள்
நிலையாக எங்கள் நெஞ்சோரம்.

சேரன் பாண்டியன் சுவையூற்று
பேரைக்கேட்கவே பெருகுது
நினைவூற்று அந்த
நேரம் எங்களுக்கு இவையும்
ஆனந்தப் பூங்காற்று.❗

-பிறேமா(எழில்)-

ஏன் துரோகம் செய்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் துரோகம் செய்தாய்

ஏன் துரோகம் செய்தாய்

உன்னை தினம் நினைக்கையில்
உள்ளம் வாடுதே
உன்னோடு பேச நாளும்
உள்ளம் தேடுதே

கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
கனவு தாங்குதே
காலடியின் மண்ணெடுத்து
தலை தூங்குதே

கண் விழிக்கும் போதினில்
கால் சலங்கை அழைக்குதே
கண் இமையின் மேலே
கரும் கூந்தல் தழுவுதே

உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் வாடுதே
ஊன் உறக்கம் தொலைத்து
உன்னால் சாகுதே

காண மறந்து போனதென்ன
காதல் இறந்த மாயம் என்ன
என்ன நினைத்து என்னை மறந்தாய்
எதற்காக என்னை இழிந்தாய் …?

ஆக்கம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்

என்னை எரிக்காதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை எரிக்காதே

என்னை எரிக்காதே

பங்கு சந்தை போல
பாவை நீ ஆடாத
ஏற்ற இறக்கம் போல
ஏறி என்னை மிரட்டாத

சேர்த்து வைத்த இலாபத்தை
சேதமாக்கி போகாத
செய்கூலி இல்லாமாலே
சென்நெருப்பை வீசாத

சாட்டை நீ பார்க்காமலே
சாளரத்தை திறக்காத
தோற்றுவிட்ட பின்னாலே
தோல்வி என்னில் வீசாத

மூச்சு முட்ட பாசம் வைத்தேன்
முன்னே என்னை முறைக்காத
தாலி கட்டும் வரைக்கும் என்னை
தள்ளி என்னை வைக்காதே

வன்னி மண் யுத்தம் போல
வாட்டி என்னை எடுக்காத
வாலாட்டும் நாயைப்போல
வாசலில வைக்காதே

உன்னை நானே நம்பி வந்தேன்
உயிரே என்னை வெறுக்காதே
வைகாசியில் பிறந்தவளே
வைக்கோலாய் என்னை எரிக்காதே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-06-2024

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

ஒத்தவரி நீயுரைத்தால்
ஓடினான் வருவேனே
பத்தடி தூரத்திலே
பார்த்துதான் நிற்பேனே

எட்டுமாத கருபோல
எடினான் சுமந்தேனே
ஆழ மனதில்
அடி பதியம் வைத்தேனே

கட்டுடைத்து பாயுதடி
காதல் வெள்ளம்
சொத்து வேணாண்டி
சொந்தமா வாவேண்டி

அப்பன் காசு வேணாண்டி
அவர் வேர்வை வேணாண்டி
முதுகெலும்பு உள்ளவனே
முதுகிலுனை சுமப்பேனே

பாத்திரங்கள் வாங்கிவிட
பாதுகாசு போதுமடி
சொத்தெழுதி தரவேண்டாம்
சொந்தமா வாவேண்டி

நீயும் நானுமே
நிலவொளியில் காய்வோமே
காலம் முழுதும்
காதலித்தே வாழ்வோமே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2024

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
பக்கங்கள் புரளும் பக்கம் நீ
எண்ணத்தை தூண்டும் எண்ணம் நீ
எழுத வைத்த கவிதை நீ

இப்படி எழுததென உரைத்தவள் நீ
இதயம் உள்ளே துடிப்பவள் நீ
படிக்க படிக்க பிடித்தவள் நீ
பார்வைகள் தேடும் பாவை நீ

காற்றில் கரையும் கற்பனை நீ
காலத்தால் அழியா காவியம் நீ
கவிதைக்குள் புதுமை செய்தவள் நீ
காதல் செய்திட வைத்தவள் நீ

எப்படி மறப்பேன் உன்னை நானோ
எதுகை மோனையை எறிவேனோ
வித்தகி இன்று நீ தானே
விவாகம் செய் என்னை மானே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-06-2024

மங்கைகள் களம் புகுந்தது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது
மணி மகுடம் அங்கு தரித்தது
வேங்கை தாமென சிலிர்த்தது
வெந்த தமிழோ மகிழ்ந்தது

புறநானூறு இங்கு பிறந்தது – புலி
புது சரிதம் இங்கு படைத்தது
எதுகை மோனையும் எழுந்தது
எழுதியே வரலாறு படைத்தது

குனிந்த தலை நிமிர்ந்தது – தமிழ்
குரல்கள் இன்று உயரந்தது
அகிலம் இன்று வியந்தது – கால்
ஆடு களம் சிறந்தது

முதல் கோல் நமக்கு
முடிவை எழுது உனக்கு
ஆடினர் மகிழ்வோ நமக்கு
அங்கையர் கன்னிகள் சிறப்பு

உதைத்தவன் கால்கள் உருண்டன
உதை பந்தில் அவை சுருண்டன
எதிர்த்தார் இன்று மிரண்டன
எதிர்காலம் உண்டு விழித்தன …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2024

பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இதயம் கனக்கும் வேளையிலே
இதயம் உன்னை தேடுகிறேன்
மழையாய் பொழியும் கண்ணீரால்
மலைமகள் உன்னால் வாடுகிறேன்

நெருங்கி உன்னை நேசிக்கையில்
நெஞ்சே இதயம் உடைக்கின்றாய்
வலிகளை தினம் எனக்களித்து
வாட ஏனோ வைக்கின்றாய்

அழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
அல்லும் பகலும் அழுகின்றேன்
தொழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
தொடராய் உன்னை தொழுகின்றேன்

விடை பெறு என்றேன் விரட்டுகிறாய்
விரிசலை ஏனோ விரிக்கின்றாய்
உறவை உடைக்க முனைவதாலோ
உள்ளமே என்னை உதைக்கின்றாய் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-06-2024

என் செய்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் செய்வேன்

என் செய்வேன்

தொட்டு பேசிட வந்தால்
தொட முன் ஏன் முறைக்கின்றாய்
கட்டு கடங்கா காதலித்தால்
காதலை ஏன் வெறுக்கின்றாய்

முட்டி பேசிட வந்தால்
முன்னே வர மறுக்கின்றாய்
விட்டு விலகிட நினைத்தால்
விழுந்தேன் அழுகின்றாய்

தட்டி தழுவும் மழை துளியாய்
தரையில் ஏன் விழுகின்றாய்
கட்டி தழுவிட நினைத்தால்
கத்தி ஏன் முறைக்கின்றாய்

கட்டி தாலி தொழுதுவிடு
கரம் கூப்பி வேண்டுகிறாய்
இப்படி என்னை தண்டித்தால்
இதயமே என் செய்வேன் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-06-2024

முட்டை கண்ணு பார்வை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

அடுக்களையில் குந்தியவள்.
அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள்.

✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.
பாத்திருக்க பகையை நொறுக்கியவள்.

✍️விடுதலையின்றி ஏங்கியவள்.
சுடுகலனை கையில் ஏந்தியவள்.

✍️கவலையில் விழி வாடியவள்.
கடலில் சுழி ஓடியவள்.

✍️இயந்திரமாய் இருந்தவள்.
சுதந்திரமாய்ப் பறந்தவள்.

✍️கடும் சட்டங்களால் துடித்தவள்.
கரும்புலியாக வெடித்தவள்.

✍️புறநானூற்றை மேவியவள்.
பிறநாட்டுடன் மோதியவள்.

✍️புலிவடிவாக சீறியவள்.
புயல் மழையாக மாறியவள்.

🍁பூவாக மலர்ந்தவள்.
👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗

-பிறேமா(எழில்)-28-05-2024

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
Posted in கவிதைகள் நிலா தமிழ்

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை
மங்குதிங்கே
மதியற்றோர் கொண்ட மடத்தாலே!

நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே
நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும்
நாடிங்கு எழுவதெந்நாள்
நாணுதிங்கே
நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!

நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே
நாடிய மக்கள் நலமெங்கே
நாம் நாடுகின்ற நாடொன்று
நாளாகத் தேய்வதிங்கே
நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே!

தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே
தடையை உடைத்தாலே
மனித்த பிறவி பயனறிந்த
மனிதநேய தமிழரங்கே
மடையை உடைத்தாலே
தனித்த நாடொன்று
தனியாயங்கே
அமைந்திடுமே
தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!

நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே
சீரான உணர்வுகளை
சீர்மிகுந்த நற்செயலையிங்கே
நேரான வழிகளிலே
ஊரறிய உலகறிய
ஊர் மக்கள் உலக மக்கள்
உளமறிய செய்வதிங்கே
நேரான வழி கொண்ட
நேர் கொண்ட விழி கொண்ட
கூரறிவுடையோர் கொண்ட
கடமையதிலே!

-நிலாதமிழ். கவிதைகள்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

அறம் சிறக்க நெஞ்சில் மறம் பிறக்க
மானத் திறம் இருக்க
இரும்புத் தோள்கள் கொண்டு
தமிழர் துயர் துடைக்க
ஈழ மண் விடுதலையடைய
வியர்வை சிந்தி தங்கள்
அயர்வை மறந்து இளமைக் காலக்
கனவைத் துறந்து
கரிகாலன் படையில் இணைந்து
வெஞ்சமர் புரிந்து எதிரியை
வீழ்த்தி
தனித் தமிழீழம் பெற
வழிகாட்டியே
சந்தனப் பேழைகளில்
உறங்கும் மாவீரர்களே
மரணத்தை வென்று மீண்டும் பிறப்பீர்கள்
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது
என உணர்ந்து
வீறு கொண்டெழுந்து
ஆண்டுகொண்டிருக்கும்
சிங்களத்தின் பிடியினுள்
மாண்டு கொண்டிருந்த
எம் இனத்தினை
மீண்டு எழ உரிமை உணர்வினை தூண்டினீர்!
உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும்
எம் தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே என்று
ஆகுதியாகினீர்
மரணத்தை வென்று மகுடத்தை அமைத்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!

தமிழர் நிலம் காத்தீர்
தமிழ் மக்கள் உயிர் காத்தீர்
உம் உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர்
எம் இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர்
என்றும் எங்கள்
மனங்களில் உறவாக
உயிராக உணர்வாக இருப்பீர்
ஈழ மண்ணை நேசித்து
அதனால் மரணத்தை யாசித்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
பலித்திடும் உங்கள் கனவு
மலர்ந்திடும் எம் தமிழீழம்!!!!

-நிலாதமிழ்.

தமிழேந்தியப்பா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

தமிழேந்தியப்பா

தமிழேந்தியப்பா

அன்பினிலே கனிந்தவரே
பண்பினிலே முதிர்ந்தவரே
பல்துறையும் கற்றவரே
செல்வச்சீர் பெற்றிருந்தும்
மலர்ப்படுக்கை வாழ்விருந்தும்
தன்நலம் கருதாமல்
இனமானம் பெரிதென்று
தனையீந்து போராடி
தமிழின விடுதலைக்கு
உரம் சேர்க்க வந்தவரே!!!

தமிழேந்தியப்பா

இனியேனும் எமக்கு
விடிவேதும் கிடைக்கும் என்று
எம் தலைவன் கைகோர்த்து
பனியென்றும் குளிரென்றும்
மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
தெருத்தெருவாய் ஊரூராய்
திரிந்து நிதி திரட்டி
எம்படை வளர்த்தவரே!!!

மொழியெனப்படுவது விழியெனக் கருதி
பழியெனப் பிறமொழி கலப்பது துறந்து
மொழி நலமும் இன நலமும் கொண்டு
அன்னைத் தமிழுக்கே அடி பணிந்து
தன்னைத் தமிழுக்கே தந்து தமிழ் காத்து
எம் தலைவன் மதிப்பினிலே மூத்தவராய்
அறப்போர் புரிந்து சிறப்பாந் தமிழில்
மறப்போர் புரிந்தவரே!!!

எம் ஈழ தேசத்தின் முதுகெலும்பாய்
நிதித்துறையின் ஆலமரமாய் இருந்தவரே
பிள்ளைகளாய் எங்களைப் பார்த்தவரே
உங்கள் பிரிவினிலால் எங்களை வதைத்தவரே
எம் நெஞ்சினிலும் நினைவினிலும்
தமிழேந்தி அப்பாவே நீங்கள் தான்
நெட்டுயிர்க்கின்ற எம் மூச்சினிலும் நீங்கள் தான்
உங்கள் பெயர் சொல்லி தடம் பதித்து
விழுதுகள் நாம்
தேசத்தின் பணி தொடர்வோம்!!!

-நிலாதமிழ்.

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே
வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே
பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே
ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே
உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே
என் மொழி என்னினம் என்நிலம் என வாழ்கையிலே
புன் மொழி கேட்பினும் புன்னகையுடன் சிந்தனை செய்து
எம் மொழியை எம்மினத்தை எம்நிலத்தை
சிறப்புடனே காத்திடற்கே என்றீரே

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடித்தீரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடிக்கையிலே
பனித்த கண்ணீரையும் பாங்கே மறைத்து
தனித்த எம் மக்கள் செழித்த வாழ்வுக்கே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழ மக்கள் இழிவை
இம்மியும் பொறுக்கமாட்டார்
தனித் தமிழீழம் வாங்க
இனியும் பின்வாங்கமாட்டார்
தீக்குழம்புருக்கித் தெறிக்கும் எரிமலை போல்
கொதித்தெழுவர்
எம் தமிழீழம் எமக்கினி மலரும்
வீழாது உம்புகழ் விளைய மாளாது உம்வீரம்

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
உலகமெலாம் உம் புகழ் செழிக்க
உலகிலுள்ள தமிழரெலாம் ஒன்று கூடி
பெரும் புரட்சி செய்து
யார் யாரோ அழித்த எம்மினத்தை
உம் நினைவால் திரண்டு கூடி
யாப்புறவே ஈழம் காண்போம்!.

-நிலாதமிழ்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
எந்நாளும் விளக்கேற்றி அழுதிடுவோம்
எம் வாழ்வின் பெருமையென உணர்ந்திடுவோம்
மாவீரர் திருநாளை
தலை வணங்கி நினைத்திடுவோம்
மான மறவர்க்கு தினமும் மலர் தூவிப் போற்றிடுவோம்
தரணியெல்லாம் அவர் புகழை
தமுக்கு எடுத்து அறைந்திடுவோம்!

ஈழத்தின் விடியலுக்காய் யாகத் தீயில்
மாவீர முதல் வித்தாய்
ஆகுதியானார்
சங்கரண்ணா
உண்ணாமல் நோன்பிருந்து
உயிரீய்ந்தார் திலீபன் அண்ணா
எம்மின விடுதலைக்காய்
பெண் மாவீர விடுதலை முதற் தாயாய் தன்னுயிரை உவந்தளித்தாள்
ஈழத்துக் கொற்றவையாம் மாலதி அக்கா!

கருவேங்கை விடுதலை முதல் மாமுனிவனாக
சரித்திரம் படைத்தார்
மில்லர் அண்ணா
ஈழத்து மறத்திகளும் வீரத்தில் சளைத்தவர்கள்
அல்ல என்று
முதற் பெண் கடற் கரும்புலியாய்
கடலினிலே காவியம் படைத்தாள் அங்கயற்கண்ணி அக்கா
வானில் கூட வெடித்து உலகை வாய் திறக்க வைத்தார்கள்
ரூபனும் சித்திரனும்!

எம் நாடு எம் நிலம்
என்னுணவு என்னுணர்வு
எம்மொழியே எம்மறிவு
யாரவன் நீ எமைக் கேட்க
எம் வலிமை உணராமல்
எகத்தாளமுடன் வந்து
எள்ளி நகையாடி
எமையடிமையாக்க வந்த
எதிரிகளை
வீறுடனே வீழ்த்தியழித்து
அச்சம் தவிர்த்து அடங்க மறுத்து
வருங்காலம் உணர்வு பெற வழி வகுத்து
ஈழத்தின் இறையாண்மை
காத்தோர்கள்!

தானுயர வாழாமல்
தம் சுற்றம் வாழ்வினிக்க
தமிழ் உயர தமிழன் புகழ் வான் சிறக்க
தொல் குடித் தமிழினம் தான் பெருமை கொள்ள
உண்மையுடன் வாழ்க்கை வாழ்ந்து
ஒப்பற்ற தலைவன் வழியில் நடந்து
தரணியிலே புதுப் பரணி
படைத்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
நாளெல்லாம் இவர்கள் புகழை
கொட்டட்டும் செண்டை மேளம்
முழங்கட்டும் பம்பை மேளம்
நித்தம் எம் எழுத்தாணியும் மாவீரர் புகழ் பாடியே சிறக்கட்டும்
ஊனு

-நிலா தமிழ் –

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

கற்றைக் கருங்குழலும் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்
கொண்டிருந்தும்
அற்றை ஈழத்தாய் அருந்துயர்
நீக்கவென்று
மற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !

எற்றைக் கெம் நிலை ஏற்றம் உறும் என
அற்றைக் கேங்கி நின்ற எம் மக்களைக் காக்க
ஒற்றைத் தலைவனாய் நின்ற
எம் தலை வனின்
நற்றைப் பெருமை முழுமையும்
உணர்ந்து தோள் கொடுத்தவர்கள்!

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

வல்லடிமை புரிந்த சிங்களத்தின்
மல்லடிமைச் சேற்றில் புதையாமல்
இல்லறத்தைத் தான் ஒதுக்கி
இளம் பருவச் சீரொதுக்கி
வல்ல மற நெஞ்சை வளையாத இரும்பாக்கி
ஒல்லைப் பெரும் போர் புரிந்து
எல்லை காத்து நின்றவர்கள் !

வெம் பகைவர் காலில் தலை தெறித்தோட
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப்படுத்தி
காலை முதற் கொண்டு கவின் மாலைப் பொழுது வரை
காவலரணில் சற்றும் விழி
சோர்தல் இல்லாது
வியன் றமிழ் ஈழத்தைக் காவல் செய்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள் நினைவைக் கருக்கொண்டு
அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!

-நிலாதமிழ்.