Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம் .
இஸ்ரேலின் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நாடத்தினர் .
இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் வீடுகள் நூற்று கணக்கில் சேதமாகியுள்ளன .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் காயாமடைந்தும் பலியாகியும் வருகின்றனர் .
வெடிகுண்டு விமான தாக்குதல்
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ரொக்கட் ,ஏவுகணை ,வெடிகுண்டு விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த போரில் பாலஸ்தீனம் காசா பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தொடர்வதால் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தையும் ,அதன் மக்களையும் இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்கள் நடத்த படுகின்றன .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் ,ஹமாஸ் சிறை பிடித்து சென்ற உறவுகளை மீட்டு தரும்படி கோரி நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையி, இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்திகொண்டிருக்க அதனை நிறுத்தி ,உடனே கைதிகளை விடுவிக்கும் படி கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது .
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா தாக்குதல்
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கடந்த 72 மணித்தியாலத்தில் பல தளபதிகளை இஸ்ரேல் இழந்துள்ளது .
ஆள் ஆயுத இழப்பின் காரணமாக ,பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அப்பாவி காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் மக்கள்
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் , இராணுவ முகாம்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடரும் நெதன்யாகுவின் இனஅழிப்பும் ,அதனால் ஏற்படும் இழப்புக்களை தடுத்து நிறுத்தி கைகிகளை விடுவித்து தரும் படி கோரி 200 நாட்கள் கடந்து மக்கள் போரட்டம் நடத்துகின்றனர் .
ஆனால் மக்கள் கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்து ,தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் அரசியல் இராணுவ தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது
உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .
இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
தொடரும் போர்
ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட். போராளிகள் இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய கோட்டையை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் .நடத்தினர்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் தாக்குதலில் பலியான நான்கு இராணுவ தளபதிகளும் 19 வயதுடையவர்கள் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வாமாக தெரிவித்துள்ளது .
பால்குடிகளை பிடித்து நடத்தும் போர் என்பதற்கு ,இந்த பிஞ்சுகள் பலிகள் காணமுடிகிறது .
போர் அனுபவம் அற்றவர்களுக்கு , தளபதி பதவி வழங்கி போர் முனைக்கு அனுப்பிய இஸ்ரேல் இராணுவத்தின் ,இந்த நிலை கண்டு அரபிய தேசம் ,அதன் போர் படைகள் சிரிக்கிறது .
உலக வல்லாதிக்க இராணுவமாக தம்மை அடையாளம் காண்பித்த இஸ்ரேல் படைகளுக்கு ,, ஹிஸ்புல்லா ,வழங்கும் நெருப்படியினால் நிலை குலைந்து போயுள்ளனர் .
நெதன்யாகுவின் போர் பசிக்கு அப்பாவி பிஞ்சுகள் காவு கொடுக்க படுகின்றனர் .
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் ,சுற்றவளைத்து தாக்கும் போர் படைகள்,வெடித்த உச்ச கட்ட போர் .
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய இராணுவத்தின் ஒவ்டா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கிய போர்படைகள் வெடிகுண்டு விமானங்களை பயனப்டுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன .
விமான தளம் பலத்த சேதம்
துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமான தளம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது .
இவ்வேளை அங்கு தரித்து நின்ற விமானகள் பாதுகாப்பு தேடி பறந்து ஓடியுள்ளன .
தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈராக்கிய போராளிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன .
ஆனால் இஸ்ரேல் இராணுவமய வளமையான பாணியில் ,ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளன .
எகிப்து எல்லையான ரபா வெளியான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில் ,மூன்று நாடுகளில் இருந்து ,இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
பலவீனமடை ந்துள்ள இஸ்ரேல் இராணுவம் தோல்விகளை மறைத்து தாமே வெற்றியாளர்கள் என கொண்டாடி வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்
இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .
இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .
Featured
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .
தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பாலஸ்தினம் போர்
இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .
அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்
சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .
மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்
அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .
இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .
தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கோலன் குன்று
கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .
சிரியா போர் படை
அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .
இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .
இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .
கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்
அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .
சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .
அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .
எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .
ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்
எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .
அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .
இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .
தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .
ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்
அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .
பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .
இஸ்ரேல் தளபதி பலி
இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி
இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .
எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு
ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .
எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .
அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .
காசா மேற்கு கரையில் மோதல்
அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழியாக தாக்குதல் நடத்த பட்டு வரும் நிலையில் .தற்போது இஸ்ரேலிய வடக்கு எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
பெரும் வெற்றி
பெரும் வெற்றி பெறுவதன் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டி கொள்ள முடியும் என்ற நிலையில் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறார் நெதன்யாகு .
அவ்விதமான நிலையில் தமது மண்ணை பாதுகாக்க பாலஸ்தீனம் போராடி வருகிறது .
இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்
தமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடும் மக்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது இந்த ,இஸ்ரேல் அரச பயங்கரவாதம் .
இஸ்ரேலிய சியோனிச பாயங்கரவாதம் மேற்கொள்ளும் தாக்குதலை அடக்க மறுத்து அப்பாவிகளை தாக்க முற் பட்டால் ,போராடும் அந்த அமைப்புக்ளும் இவ்விதம் விமானம் மூலம் தாக்குவது இயல்புதானே என சொல்ல படுகிறது .
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்
எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
பாலஸ்தீனம் காசா மக்கள்
பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .
இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் பலி
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .
மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல் , இஸ்ரேலிய அரச இராணுவம் எகிப்தின் எல்லையோர ரபா எல்லையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் தாக்குதலாக இந்த நடவடிக்கை உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனை மண்ணை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போர்
பாலஸ்தீன மக்கள் முற்றாக அங்கிருந்து அகதிகளாக விரட்டியடித்து ,அந்த மண்ணை தமது கட்டு பாட்டுக்கொள் கொண்டு வரும் நோக்கமாக இது உள்ளது .
மேலும் 30 வருடத்திற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு ,இட்டு செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் நோக்கமாக உள்ளது .
அதனை கருத்தில் வைத்தே இந்த தாக்குதல் இஸ்ரேல் அரச இராணுவத்தினரால் திட்டமிட்டு நடத்த படுகிறது .
ரபா சாலையின் முக்கிய பிரதான வீதியை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ஹமாஸ் போர் படைகளை தாம் நெருங்கி விட்டதாக ,இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தடுக்க ,இஸ்ரேல் குவித்த 250 விமானங்கள் தொடரபாக திகில் செய்திகள் வெளியாகியுள்ளன .
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது .
அவ்வாறான தாக்குதலின் பொழுது ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா நேட்டோ நாட்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
மத்திய தரைக்கடல் ,செங்கடல் பகுதியில் தரித்து நின்ற விமான தாங்கி கப்பல்களில் உள்ள விமானங்கள் தாக்குதலை நடத்திட தயார் நிலையில் வைக்க பட்டு இருந்தன .
இஸ்ரேல் அணு உலைகள் தாக்குதல்
இஸ்ரேலிய அணு உலைகளை ஈரான் தாக்கினால் ,அவ்வேளை ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ,இந்த விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டது .
மிக பெரும் பதட்டத்தில் இஸ்ரேல் இருந்துள்ளதை மேற்படி விமான குவிப்புக்கள் மூலம் விடயம் அம்பல பட்டுள்ளது .
வெளியில் ஈரானை தாக்குவோம் என கூக்கிரலிட்ட இஸ்ரேல் இயலா நிலை இவ்விதமான நிலையில் காணப்பட்டுள்ளதை மேற்படி விமான குவிப்பு விடயம் அம்பல படுத்தியுள்ளது .
Featured
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை ,காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் கடத்தல்
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும்,
128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குகரையில் ஏற்பட்ட மோதல்
அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது.
இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
Featured
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய இராணுவ படை தளம்
இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .
அபாயகரமான விமான தளம்
ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .
நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .








































