Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
பகரைனுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கபட்டுள்ளது

இவர்களுக்கு வேலை செய்திடும் அனுமதி சான்றிதழ்கள்இரத்து செய்ய பட்டுள்ளன

இந்த தடைகளினால் இலங்கை பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை

    எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

    தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்

    விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

    வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

    வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட

    பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர

    தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

    இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

      இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

      ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.” என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

      பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (13) முன்னெடுத்திருந்தது.

      இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

      இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

      ” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.

      இந்நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.

      கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாக செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.

      செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க முயற்படுகின்றனர்.” – என்றார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இதை செய்தால் கிரிமினல் குற்றம் – மிரட்டும் அரசு

        இதை செய்தால் கிரிமினல் குற்றம் – மிரட்டும் அரசு

        சமூக வலைத்தளங்களில் போலியான செய்த்தகிகள் பாம்பினால் கிரிமினல் குற்றம்

        இலங்கையில் ஆளும் காசுக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை

        பரப்பினால் அவை கிரிமினல் குற்றமாகும் ,அத்துடன் அந்த செய்திகளை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

          மரணத்திற்கான காரணத்தைக்கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ்

          வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

          சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த

          அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை

          முடிந்தவரையில் நேற்றைய தினம் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

          கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென

          அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

          எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில்

          மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

            இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது

            இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,353 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            இவ்வாறு கைதானவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை மற்றும் மாகாண எல்லைகளை

            தாண்டிய குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              இந்தியா செல்லும் இலங்கையர்கள் 14நாட்கள் தடுத்து வைப்பு

              இந்தியா செல்லும் இலங்கையர்கள் 14நாட்கள் தடுத்து வைப்பு

              இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல் சோதனைக்கு உள்ளாக்க படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளது

              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன

              இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை பங்கு சந்தை கடும் வீழ்ச்சி -4 52.6 மில்லியன் இழப்பு

                இலங்கை பங்கு சந்தை கடும் வீழ்ச்சி -4 52.6 மில்லியன் இழப்பு

                இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கையின் பங்கு சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது


                கடந்த வைகாசி மாதம் மட்டும் சுமார் 452.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை

                  கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை

                  நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம்

                  எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

                  இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் ; மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வரை அதிகரிக்கலாம்

                  என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

                  இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி

                    மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி

                    யாழ்ப்பாணம் கண்டி விதி கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நிர்மாணிக்க பட்டிருந்த

                    வீதியோயோர பிள்ளையார் கோவில் ஒன்றை அவ்வழியாக பயணித்த லொறி ஒன்று இடித்து சேதமாக்கியது

                    இதனால் அந்த சிலை முற்றாக சேதமடைந்த நிலையில் தற்போது புதிதாக நிர்மாணிக்க பட்டு வருகிறது

                    மேற்படி குற்ற செயலை புரிந்த சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

                      இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

                      இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோயானது அதிகமாக பரவி வருகிரது


                      இந்த நோயின் தாக்குதலில் சிக்கி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                      சுற்றுப்புற சூழல் அசுத்தம் காரணமாகவே இந்த நோயானது பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

                        பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த

                        குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

                        இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

                        இந்தியாவில் இருந்து இலங்கை முள்ளியவளை பகுதிக்கு படகு மூலமா வந்தடைந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்

                        மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

                          இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

                          இலங்கையில் இன்று மட்டும் சுமார் 2,715 பேர் கொரனோ தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்


                          இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          பல நாடுகளில் இருந்து கொரனோ தடுப்பு மருந்துகள் இயக்குமதி செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

                            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

                            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021

                            ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன சிறப்பாக வரவேற்றார்.

                            இந்த கப்பல்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ஆதரவினை பாராட்டிய அவர், எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய துரிதமான பதில் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு விசேட நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

                            கடல் மாசு நீக்கும் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமுத்திர பிரஹரி கப்பலின் செயற்பாடுகள் குறித்தும் இந்நடவடிக்கைகளில் தமது வகிபாகம் குறித்தும் இந்திய கடலோர காவல் படையின் கப்டன்கள் இலங்கை கடற்படை தளபதிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

                            1. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்திருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், இந்நடவடிக்கை முழுவதும் இந்திய கப்பல்களின் செயற்பாடுகளுக்கு இதயபூர்வமான ஒத்துழைப்பினை வழங்கிய இலங்கை கடற்படைக்கும் இலங்கை கடற்படை தளபதிக்கும்
                            2. நன்றியினை தெரிவித்திருந்தார். கடல் மார்க்கத்தில் இந்தியாவையும் இலங்கையையும்
                            3. பிணைத்த புவியியல் ரீதியிலான காரணிகள் மாத்திரமின்றி ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 1 மற்றும் 2 செயற்பாடுகளின் மூலமாக சான்று பகர்ந்ததைப்போன்று கடலில் இடம்பெற்ற அனர்த்தங்கள் மற்றும் HADR ஆகிய அவசர நிலைகளில் பதிலளிப்பதற்காக பாரம்பரிய ரீதியில் காணப்படும் ஒத்துழைப்பும் இதற்கான முக்கிய காரணியாக அமைகின்றது எனவும் அவர்
                            4. இங்கு குறிப்பிட்டார். பொதுவான கடற்பரப்பில் அனர்த்த சூழ்நிலைகளில் உரிய தருணத்தில் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காணப்படும் இருதரப்பு பொறிமுறைகளையும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். மேலும் பொதுவான
                            5. கடற்பரப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமையை சுட்டிக்காட்டியிருந்த அவர் மீண்டும் நிகழக்கூடிய செயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் ஏற்படும் அனர்த்தங்கள்
                            6. ஆகியவற்றிற்கு உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
                            7. எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இலங்கை
                            8. கடற்படையிடமிருந்து உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மே 25ஆம் திகதி முதல் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் மாசு நீக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும் இந்த
                            9. சந்தர்ப்பத்தில் நினைவூட்டமுடியும். எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சிகளில் ஐசிஜி டோனியருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் கடல் மாசு
                            10. அச்சுறுத்தலை கணிப்பிடும் பணிகளில் மாசினை கட்டுப்படுத்தும் கப்பல்கள் உதவியை வழங்கியிருந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பூரண வசதிகளை அக்கப்பல்கள் தம் வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு
                            11. நாடுகளினதும் கடல் படைகள் இடையில் காணப்படும் கூட்டுத்திறன் மற்றும் ஒன்றிணைவானது இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த சான்றாக அமைகின்றன.
                            12. 2020 செப்டம்பர் இலங்கை கரைக்கு அப்பால் எம்டி.நியூ டைமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ
                            13. விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இந்தியக் கடற்படையினதும் இந்திய கடலோர காவல் படையினதும் இவ்வாறான கப்பல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள்
                            14. மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் முதலில் பதிலளித்து உதவியினை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது. பிராந்தியத்தில் அனைவருக்கும்
                            15. பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டிற்கு அமைவாகவும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் இந்த செயற்பாடுகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

                            இந்திய உயர் ஸ்தானிகராலயம்
                            கொழும்பு

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

                            ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

                            இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர இல்லத்தில் விருந்து வைத்து மகிழ்ந்த ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            கைதான அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                            போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

                              பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

                              இலங்கை கம்பளை பகுதியில் பிறந்து 8 நாட்களான குழந்தை ஒன்று கொரனோ நோயினால் சிக்கி பலியாகியுள்ளார்

                              இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

                                கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

                                இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான்

                                இந்த சிறுவன் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
                                இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                                சமீப காலங்களாக நீர் அருவிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!photo

                                  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

                                  பைஷல் இஸ்மாயில் –

                                  அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களால் இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                                  கொவிட் -19 ஆட் கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியரா?, கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு,


                                  தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்துக்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றி மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்து

                                  கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று.

                                  சுமார் 5,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய், தடுப்பூசி ஏற்றாத தாதியருக்கு உடனே தடுப்பூசியேற்ற ஒழுங்கு செய்.

                                  ஆபத்தைப் பொருட்படுத்தாது சேவையாற்றும் சுகாதாரப் பணிக் குழுவினருக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதிகளில் சேவையாற்றும் பணிக்

                                  குழுவினருக்கு உணவு வினியோகத்தை ஒழுங்கு செய், ஆபத்துக்கு முகங்கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய் போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

                                  வைத்தியசாலை
                                  வைத்தியசாலை
                                  வைத்தியசாலை
                                  வைத்தியசாலை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                                  கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                                  கிராம உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

                                  இணையவழி (Online) மூலம் விண்ணப்பிப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

                                  பரீட்சைகள் திணைக்களத்தின்உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும்.