Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
13,821 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!
தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!
தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலையத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு வீடுதிரும்பிய போது பூட்டியவீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள், உட்பட
28 இலச்சம் ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (04) மட்டு. ஏறாவூர்
பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மைலம்பாவெளி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாள் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான தீபாவளி தினத்தையிட்டு காலை 11 மணி அளவில்
வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணி அளவில் வீடுதிரும்பிய போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவு உடைத்து அறையில்
இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலச்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.
இதனை அடுத்து பொலிஸார் மேப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை
பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்
பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி
ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி
தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை
அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது
இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்
கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (03) தினம் மேலும் 15 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன
வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்
வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்
வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்
வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்
இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
தீபாவளியை புறக்கணித்த மக்கள்
தீபாவளியை புறக்கணித்த மக்கள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட
வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன்,
கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்
தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்
இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் மோதல் நிலையில் இருந்து வருகின்றனர் .
ஆனால் இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை ஒன்றாக இணைந்து கொண்டாடி
வருகின்றனர்,இது எவ்வாறு சாத்தியம் என்பதை கூட அறியாது தமிழர்கள் தமது தமிழ் அரசனை
அழித்த அதே நாளில் சிங்களவர்கள் போல கொண்டாடி வருகின்றனர்
அதற்கு ஆளும் இனவெறி அரசு தமிழர் பாடசாலைகளிற்கு விடுமுறை அளித்து ஊக்கமளித்துள்ளது குறிப்பிட தக்கது
முகமலையில் 316 ஏக்கர் காணிவிடுவிப்பாம் – இராணுவம்
முகமலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பாம் – இராணுவம்
சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்ட தமிழர் பகுதிகளில் உள்ள 316 ஏக்கர் காணியினை தாம் விடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
முகமாலை கிராமசேவர் பிரிவில் உள்ள காணிகள் இவ்வித விடுவிக்க பட்டுள்ளனவாம்
இந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க வேலிகள் அமைக்க பட்டு உக்கிர சமர் இடம்பெற்ற பகுதி என்பது இங்கே குறிப்பிட தக்கது
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்
உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்
தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
இலங்கை பத்தேகம- நாகொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிட வந்த வாலிபனுக்கும் அந்த கடை உரிமையாளருக்கும் இடையில்இடம்பெற்ற சண்டையில் உணவு அருந்த வந்த வாலிபர் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த சம்பவத்தில் கொட்டல் உரிமையாளரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்
பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
போரினால் பாதிக்க பட்ட வடக்கு தமிழர்களுக்கு இந்திய மாபெரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தி உதவும் என இந்தியா தூதர் யாழில் தெரிவித்துள்ளார்
வடபகுதியின் புதிய ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன
அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும்
என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் நமக்கு
தெரிவித்தனர்
நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் பல
பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினரால் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னனி சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட முப்படை, பொலிஸார், சுகாதார மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய முன்கள ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைத்து கொள்ளவுள்ளனர்.
இத்திட்டம் நேற்று காலை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சுற்றுலா, விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக முன்னணியிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
ஆறு மாதங்களுக்குப் முன்பாக தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடியும் என்றும், தற்போதும் நாளாந்தம் 500 – 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படும் அதேவேளை சுமார் 14,000 வரை தனிமைப்படுத்தலில் உள்ளமையால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
பூஸ்டர் தடுப்பூசிகளாக பைஸர் தடுப்பூசியை தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னணி பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ஒழுங்கில் வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை
இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை
இரால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு கடன் சலுகை திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான கடன் சலுகை முறையொன்றை நடைமுறைப்படுத்தல்
2020 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக்தொன் அளவிலான எமது நாட்டு இறால் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெட்ரிக்தொன்களாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இறால்
வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இறால் அதிக வளர்ச்சி வேகத்துடன் கூடிய, நோயால் பீடிக்கப்படும் தன்மை குறைவான, சிறிய தடாகங்களில் வளர்க்கும் போது அதிக அடர்த்தியாக விடக்கூடியதாக இருப்பதால் அதிகளவிலான
அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. குறித்த இறால் வகை ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் வளர்ப்பை மேற்கொள்வதற்கு இயலும். ஆனாலும் அடர்த்தியுடன் வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும், ஆகவே அதிகளவில் தடாகத்தில் சேர்கின்ற
கனிமக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான சேற்றுத் தடாகம் அதிக அடர்த்தியுடன் கூடிய பொலிஎத்தலீன் பயன்படுத்தப்படும் நவீனப்படுத்தல் அவசியமாகும். மேலும், அதற்குச் சமாந்தரமாக, அதிகரிக்கும்
இறால் அறுவடைகளை ஏற்றுமதிக்கான களஞ்சியப்படுத்தல் வசதிகள், அதன் மூலம் பெறுமதிசேர் உற்பத்திகளை பதனிடுவதற்காக இறால் பதினிடல் நிலையத்தின் இயலளவை அதிகரிப்பதற்கும், அவற்றை புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும்
உள்ளது. அதற்கமைய, வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை
நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.











