Posted in இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில்


அதனை அடக்கும் முகமாக சமூக வலைத்தளங்கள் தடை செய்ய பட்டன ,அவை தற்போது நீக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


எனினும் அவை பல பகுதிகளில்ஸ் செயல்பட முடியாத நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றன

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு

    இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து


    தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்

    தற்போது 13
    ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க

    படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது

    இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்

      கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்

      இலங்கையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழும் மக்கள் புரட்சியை தடுக்க

      ஊரடங்கு சட்டங்கள் அமுல்படுத்த பட்டுள்ளன ,.

      ஆவ்வறான காலப்பகுதியில் மக்கள் அதிகம் கூடி புரட்சி நடத்த காரணமாக

      விளங்கிய சமுக வலைத்தளங்கள் மீதும் அரசு தடை விதித்துள்ளது

      இந்த சமூக முகவலைத்தள முடக்கம் அர்த்தம் அற்ற ஒன்று எனவும், அவற்றை

      தான் எதிர்க்கிறேன் என தனது சித்தப்பா கோட்டாவுக்கு எதிராக மகிந்த மகன்

      நாமல் கொதித்து எழுந்துள்ளாராம்

      இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும்

      என்பது சொல்லியா தெரியவேண்டும் என்பது சமூக வலைத்தள நபர்கள்

      பேச்சாக பதிய பெறுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஓயாது எழும் மக்கள்

        கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஓயாது எழும் மக்கள்

        ஆளும் ராஜபஸ்க்ஷா அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயல் பாட்டினால்

        நாடு பஞ்சத்தில் சிக்கியுள்ளது


        இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு மக்கள் தொழில்துறை பாதிக்க பட்டு பட்டினியில் நாடு சிக்கி தவிக்கிறது

        இந்த நிலைக்கு மக்களை இட்டு சென்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்

        ஆர்ப்பாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்

        இவ்விதம் சஜிதா பிரேமதாச கட்சியினரால் கொம்பு சுதந்திர சதுக்கத்தில்

        ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த பட்டு கொண்டுள்ளது

        ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள்

        இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
          Posted in இலங்கை செய்திகள்

          ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

          ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

          இலங்கை Madipola பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 வயதுடைய

          நபர் ஒருவர் பலி யாகியுள்ளார்

          இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீசார்

          விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

          நாடெங்கும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்

            பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்

            இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும்

            நிலையில் அதனை தடுத்திட கோட்டாவினால் வர்த்தமானி மூலம் அறிவித்தல்விடுக்க பட்டுள்ளது

            இதன் விடயம் யாதெனில் பூங்கா ,மற்றும் பொது இடங்களில் மக்கள்

            கூடுவதற்கு தடை விதிக்க பட்டுள்ளது


            அதனை மீறி ஒன்றுகூடினால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது

            மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து வித சட்டங்களும் அமூல் படுத்த பட்டு சர்வாதிகார


            போக்கில் அரசு நாட்டை நகர்த்தி செல்வது மேலும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்குள் இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு

              இலங்கைக்ள் கு இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு

              இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலவரங்களை அடுத்து ஆளும்

              அரசுக்கு எதிராக இராணுவம் திசை திரும்ப கூடும் என்பதால் அதனை கட்டு

              படுத்த இந்தியா இராணுவம் இலங்கைக்கு அனுப்ப பட்டுள்ளதாக பரவி வந்த

              சமூக வலைத்தள செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது


              அவை வெறும் வதந்தி என விழுந்தடித்து மறுத்திருக்கும்செய்தி என்பது பலத்த

              சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

                இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

                இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக,
                இலங்கை அரச பேரூந்துகள் முடக்க பட்டுள்ளன,

                இந்த சேவையானது குறுகிய தூரம் வரை இயக்க படும் எனவும் தொலை தூர ,போக்குவரத்துக்கள் ,எதிர்வரும் திங்கள் வரை மட்டு படுத்த படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

                இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                  இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                  இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                  ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த தமிழர்களை

                  இனவாதம் மேலோங்கி அவர்களை அடிமையாக்கி விலங்குகளை விட கீழ் நிலையில் நடத்தியதன் விளைவு ஆயுத போராட்டம் வெடித்தது

                  அவ்விதம் முப்பது வருடங்களாகி இலங்கையில் நடந்தேறிய உள் நாட்டு போரில் பல லட்சம் மக்கள் பலியாகினர்


                  குறிப்பாக இதில் தமிழர்களே லட்ச கணக்கில் கொன்று குவித்தது சிங்கள அரச பயங்கரவாதம்

                  இனவெறியை கக்கி தமிழர்களை ஒரு பயங்கரவாதிகளாக சித்தரித்து அரியணையில் ஆண்டு வந்த தலைமைகளுக்கு இப்பொழுது நெத்தியடி வழங்க பட்டுள்ளது

                  இவர்கள் யார் என்கின்ற முகமூடி கிழிக்க பட்டு நாம் எல்லாம் இலங்கை குடிகள் என்ற நிலையில் மக்கள்,ஒன்று பட்டு எழும் காலம் பிறந்திருக்கிறது

                  தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவிகளை தமது இரைக்கு பயன் படுத்தி வந்தவர்கள் இன்று அழிவின் விளிம்பில்

                  புலிகள் என்ற போர்வையில் முள்ளி வாய்க்களில் ஒட்டு மொத்த தமிழனத்தை கொன்று குவித்து நெஞ்சு நிமிர்த்தி ஆடிய மகிந்தா குடும்ப ஆட்சி இன்று அதே

                  மக்கள் சாபத்தின் விளைவால் அதே சிங்கள மக்களினால் கண்முன்னே விரட்டியடிக்க படும் காலம் அரங்கேறியுள்ளது

                  இராணுவ சர்வாதிகாரத்தில் சிவில் நிர்வாகத்தை ஆட்சி கொள்ள முனைந்த இடி அமீன்கள் இன்று தமது பதவிகளை உதறி விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன

                  இனம் ஒன்றின் சாபத்தில் இடிகிறது இரத்த காட்டேறிகள்

                  வாரிசு அரசியலை முன் நகர்த்த முனைந்தவர்களுக்கு இன்று பெரும் இடி வீழ்ந்துள்ளது

                  அழுகுரல்களின் மேல் ஏறி அவர்களின் இரத்தம் குடித்து கதற கதற கொன்று குவித்து ஏப்பம் இட்ட சிங்கள அரச பயங்கரவாதம் இன்று வீதி வந்த மக்களின் செருப்புகளில் மிதிபட்டு ஓலமிடுகிறது

                  இந்த ஓலம்தான் அன்று எம் மக்களின் வாழ்வாக இருந்தது ,அரசன் அன்றே அறுப்பன் தெய்வம் நின்று அறுக்கும் என்பது இது தான் போலும்

                  இலங்கையில் மகிந்த ஆட்சி இல்லாது ஒழியும் காலம் வரும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாம் தொடராக கூறி வந்தோம் ,அன்று நம்மை

                  நயப்புடைத்தவர்கள் இன்று எமது எதிர்வு கூறல் தெளிவானது என்பதை புரிந்திருப்பீர்கள்

                  கடாபி வீழ்ந்த போதும் எச்சரித்தோம், எவர் கேட்டார் ,மகிந்தவின் ஊதுகுழல்களாக விளஙகியவர்வர்களும்


                  நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க மறந்ததன் விளைவு இன்று இருந்த இடம் தெரியாதது காணாமல் போகும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி மாறிவிட்டது

                  முற்போக்கை முன் விரிக்க மறந்தால் பிற்போக்கு பிடரியில் அடிக்கும் என்பது இது தான் .

                  • வன்னி மைந்தன் –
                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்

                  கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்

                  இலங்கையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று சர்வாதிகார

                  ஆட்சியில் மிதந்து வந்த கோட்டாவின் ஆட்சி மூன்றாண்டு கடக்கும் முன்னே

                  அதே சிங்கள மக்கள் வீதி இறங்கி அந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்

                  நாட்டில் எகிறியுள்ள விலைவாசிகள் அதனால் எழுந்த பட்டினி அதன்

                  எதாரொளியாக இந்த விடயம் அரங்கேறியுள்ளது

                  கடனை வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி அதன் கயானவை கொள்ளையடித்த

                  மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு இப்பொழுது செருப்படி வீழ்ந்துள்ளது

                  இலங்கை வரலாற்றில் மீளவும் ஆட்சியில் அமர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                  நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடு என மக்கள் முழங்கினார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி

                    கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி

                    யாழ்ப்பாண பேரூந்தில் நிலையம் அருகே சஜித்அணியினர் நடத்திய

                    போராட்டத்தில் கலவரம் விளைவிக்க நுழைந்த கோட்டாவின் அடியாலும்

                    ,சண்டியனும்,ரவுடியாக வலம் வரும் அருண் சித்தார்த் மீது செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                    இவரே நல்லூர் கோயிலை இடித்து மலசலம் கட்டுவேன் என தெரிவித்தவர்

                    அவ்வாறான அடியாள் மீதே இந்த செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்

                      இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்

                      இலங்கை எயர்லங்கா விமான சேவைகளில் கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான


                      சேவைகள் எதிர் வரும் மே மாதம் 12 திகதி முதல் இடை நிறுத்த படுகிறது

                      இது போன்று மேலும் பல சேவைகள் நிறுத்த படலாம் என்பதால் ,இலங்கை சென்ற

                      வெளிநாட்டவர்கள் முண்டியடித்து நாட்டை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்

                      தற்கால நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பது நிலவரமாக உள்ளது

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழில் நீச்சல் தடாகத்தில் மிதந்த ஆணின் சடலம் –

                        யாழில் நீச்சல் தடாகத்தில் மிதந்த ஆணின் சடலம் –

                        யாழ்ப்பாணம் விருத்தம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது


                        இவர் எவ்விதம் அங்கு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                        இலங்கையில் நாள் தோறும் வீதிகள், நீரேரிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை
                        குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்-மனோ கணேசன்

                          திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்

                          • தமுகூ தலைவர் மனோ கணேசன்

                          தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன

                          ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.

                          “கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                          இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                          “கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த

                          உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

                          நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும்

                          தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.

                          எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில்


                          திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம்,


                          ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்

                            கோட்டாவை விட்டு தப்பி ஓடும் அமைச்சர்கள்

                            இலங்கையில் ஆளும் கோட்டா கட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்கள்

                            ,ஆளும் ஜனாதிபதி கோட்டாவை
                            கைவிட்டு தப்பி ஓடும் நிலை தொடர்கிறது

                            இவ்விதம் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியை ராயீனமா

                            செய்துள்ளதாக கோட்டாவுக்கு அறிவித்துள்ளார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?

                              நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?

                              இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்


                              அதனை அடக்கும் நோக்குடன் தற்போது அவசர அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்

                              மூலம் அவசரகால பிரகடனம் அமூல் படுத்த பட்டுள்ளது

                              போர்க்காலத்தில் இடம்பெறுவது போன்ற இந்த அவசர அறிவிப்பு மக்களை மேலும்

                              கொதிப்பில் உறைய வைத்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்

                                கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்

                                ஆளும் கோட்டாவின் மொட்டுக்கு வாக்களித்து அதிக வெற்றியை பெற்று கொண்ட காலி நகரம்
                                முடங்கியுள்ளது

                                இந்த போராட்டம் காரணமாக அங்கு இயழ்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

                                தொழிலாளர்கள் தமது தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

                                இதனால் காலி பிரதான வீதி போக்குவரத்து தடை பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்

                                  மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்

                                  இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சிக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்


                                  அதிக சிங்கள மக்கள் வசிக்கும் காலி முதல் அம்பாந்தோட்டை வரை இந்த போராட்டங்கள் வெடித்துள்ளது

                                  கோட்டபாய உடனடியாக ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி இந்த போராட்டம் தொடர்ந்து இடம் பெறுகிறது

                                  நாடு எங்கும் பரவியுள்ள இந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது

                                  தற்போது கொழும்பு நகர் நோக்கி போராட்டம் விரிந்து செல்கிறது

                                  அமைச்சர்கள் ,பிரதமர் உள்ளிட்டவர்கள் வீடுகளுக்கு இராணுவ போலீஸ் பாதுகாப்பபு வழங்க பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மொரட்டுவ மேயர் இல்லம் முற்றுகை – கல் வீச்சு தாக்குதல்

                                    மொரட்டுவ மேயர் வீடு முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
                                    இவரது இல்லம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                    போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
                                    நாடு எங்கும் போர்க்களமாக மாறியுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கோட்டாவே பதவியை விட்டு ஓடு மக்கள் முழக்கம்

                                    கோட்டாவே பதவியை விட்டு ஓடு மக்கள் முழக்கம்

                                    இலங்கையில் ஆளும் கோட்டாவின் ஆட்சியில் மக்கள் பெரும் பொருளாதாரா

                                    நெருக்கடியில் சிக்கிய நிலையில் போராட்டம் வெடித்தது ,தொடர்நது Pangiriwatta Mawatha in Mirihana, பகுதிகளில் லட்ச கணக்கான மக்கள் கூடி போராட்டம்
                                    இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    இவ்வேளை இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோட்டாவை பதவியை விட்டு போ என முழக்கம் இட்ட வண்ணம் உள்ளனர்

                                    இவர்கள் உடனடி ஆட்சி மாற்றத்தில் ஈடுபட வேண்டும் தவறின் நாடு மோசமாக பற்றி எரியும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது