இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா

இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா

இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .

இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .

500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .

No posts found.
மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

இலங்கை நானு ஓயா பகுதிக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று மரத்துடன் மோதியது .

இந்த விபத்து சம்பவம் ஏற்பட்ட பொழுது பேரூந்தில் 40 பயணிகள் இருந்தனர் .

எனினும் அவர்கள் எவரும் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

No posts found.
கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்

கொழும்பு விபச்சாரா விடுதிகளில் யாழ்பாணத்து ,பெண்கள் சிக்கியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மசாச் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ,நிலையங்களில் ,வடக்கு பகுதியை சேர்ந்த பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

ஆடை தொழில் சாலையில் வேலைக்கு செல்வதாக தெரிவித்து ,இந்த விபச்சார நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனால் வரும் பணத்தினை தமது வீட்டுக்கும் அனுப்பி வந்துள்ளனர் .

வேலைவாய்ப்பு இல்லாமை காரணமாக இந்த தொழில் ,தாம் ஈடுபட்டதாக ,இந்த பெண்கள் தெரிவித்துள்ள விடயம் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்

பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்

பிறந்த பின்னர் பிள்ளையை கொன்று சடலத்தை பையில் வைத்து,அதனை வீட்டில் உள்ள ,கழிவறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார் .

இவ்வாறு மறைத்து வைக்க பட்ட சிசு சடலம் மீட்க பட்டதுடன் , 23 வயது இளம் பெண் ,காவல்துறையால கைது செய்யப் பட்டுள்ளார் .

அதிக வயிற்று வழிகாரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பெண் ,அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .

இதனால் சநதேகம் அடைந்த மருத்துவர் ,குடும்ப மருத்துவருக்கு தெரிவித்த நிலையில் .அவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது .

கள்ள காதல் காரணமாக இந்த சிசு பிறந்திருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

No posts found.
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த அணி தனித்துப்போட்டி

மஹிந்த அணி தனித்துப்போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்தக் கட்சியின் சின்னத்திலோ களமிறங்கப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேரும்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.

No posts found.
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்

கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதோ தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதோ இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (07) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்

No posts found.
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்,

உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் இளைஞர் அணியினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக்

கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறுகின்ற போது, மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

No posts found.
3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
Posted in இலங்கை செய்திகள்

3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது.

மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி ,
சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No posts found.
பாடசாலை புத்தகங்கள் உபகரணங்களை கூடுதலான விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்

புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

No posts found.
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது

வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது

வவுனியாவில் தமிழ் தெரு ரவுடிகள் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

வவுனியாவில் பல்வேறு பட்ட சமூக விரோத குற்ற செயல்களில் ,ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ,நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,18 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர் .

இவர்கள் கெத்து பசங்க என்ற தெரு ரவுடி குழு இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது .

இவர்கள் போதை மாத்திரைகள் ,வாள்வெட்டு மற்றும் கொலை ,கொள்ளை ,கடத்தல் ,மிரடடல் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது .

கைதானவர்கள் காவல்துறையின் ,சிறந்த உரியமுறை விருந்து ஏற்பாட்டில் கவனிக்க பட்டு வருகின்றனர் .

No posts found.
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை

குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் ,இலங்கை பெரும் பணத்தை அள்ளியுள்ளது .

இலங்கையின் பொருளாதரத்தின் முதுகெலும்பாக உல்லாச பயணிகள் உள்ளனர் .

அவ்வாறான உல்லாச சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் அதிகமாக வருகை தந்தன் மூலம் 1.13 பில்லியன் பணத்தை அள்ளியதாக இலங்கை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளது .

No posts found.
காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

கெங்கல்ல – அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

குறித்த சிறுமி 2022 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தினத்தில் பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

குறித்த தினத்தில் சிறுமி பாடசாலைக்கு செல்லாமல் கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி
இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No posts found.
யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழ்ப்பாணம் அறியலால் மீட்க பட கைக்குண்டு ஒன்று ,செம்மணி மயான பகுதியில் வெடிக்க வைக்க பட்டுள்ளது .

அரியாலை பகுதியில் வீடொன்றுக்குள் குண்டு ஒன்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,குறித்த குண்டு தொடர்பாக காவல்துறைக்கு அறிவிக்க பட்டது .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,மற்றும் குண்டூ செயலிழக்க வைக்கும் இராணுவத்தினர், கைக்குண்டை வெடிக்க செய்தனர் .

இந்த குண்டு எவ்வாறு குறித்த வீட்டுக்குள் வந்தது என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனியை சுங்கப்பகுதி கைப்பற்றியுள்ளது.

நாட்டில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீனி வெள்ளை சீனி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது.

1200 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு இறக்குமதி செய்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.


இதனால் இதனை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் வெள்ளை சீனியின் விலையிலும் பார்க்க சிவப்பு சீனி ரூபா100/= அதிகம். மோசடியாக கொண்டுவரப்படும் சீனியை பொது மக்களுக்கு

விற்பனை செய்ய சிலர் முற்படுகின்றனர்.இதன் மூலம் சிலர் பெருந்தொகை வருமானத்தை பெருகின்றனர்
என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No posts found.
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில், வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார்.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.

யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

No posts found.
போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும்

முன்வைத்த கூற்றுக்கு அமைய விரைவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குழுக்கள் இந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகையை அமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த மக்களை ஏமாற்றி பணத்தையும் தங்க நகைகளையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்

சாட்டப்பட்டுள்ள ஜானக்க சேனாதிபதி என்பவருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க என்பவருக்கும்

எதிராக சட்ட ஏற்பாடுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடொன்றுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது

தனிமையில் வசித்து வந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு சு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தூர் நாற்றம் வீசிய நிலையில் ,காணப்பட்ட சடலம் மீட்க பட்டு ,மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி

வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் டிசெம்பர் 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

இதன்போது பல முற்போக்கான கருத்துகள் வெளியிப்பட்டன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு இதில் முக்கியப் பங்குள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி, எமது நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகளே பிரதான விடயமாக உள்ளன எனவும் தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை அரசியல் தீர்வின் ஊடாக அடைய முடியுமா என்பதை பெப்பரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு என்ன என்பதை நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே எமது கட்சியின் நிலைப்பாடு. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவையில்லை.

அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு உண்மையில் அதிகாரப் பகிர்வாக இருக்காது. சமஸ்டி கட்டமைப்பில் மாத்திரமே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி இதனை தீர்க்க முடியும் என தெரிவித்து காலக்கெடு ஒன்றையும் ஜனாதிபதியே அறிவித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்கு நாமும் இணங்கியிருக்கிறோம். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் புதிதாக எதனையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. 35 வருடங்களாக இது தொடர்பில் பேசப்பட்டு பல தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, பல இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி கூறியுள்ள காலக்கெடுவுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனை செய்யாது காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இது

இருக்கக்கூடாது. நாமும் பல்வேறு சந்தேகங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம். பல தடவைகள் இதுபோன்ற முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆனால் எதுவும் நடக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வரவில்லை என்கிற பலிச்சொல் எமக்கு வரக்கூடாது என்பதாலேயே நாம் கலந்துரையாடலில் ஈடுபடுகிறோம்.

காலக்கெடுவுக்குள் இதனை செய்ய முடியாதென தெரிந்து ஜனாதிபதி எம்மை ஏமாற்றுவராக இருந்தால், நாட்டினதும் சர்வதேசத்தினதும் கண்களில்

மண்ணைத் தூவும் செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால் அதனை உலகுக்கு அம்பலப்படுத்துவோம்.

இது மட்டுமல்ல நாட்டில் எங்களுடைய மக்களை அணி திரட்டி நியாயமான
அரசியல் சுதந்திரத்துக்காக பல போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.

No posts found.
கொழும்பில் குழந்தை கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் குழந்தை கடத்தல்

கொழும்பில் குழந்தை கடத்தல்

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் குழந்தை கடத்தல்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (02)) திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், வரலாற்றில்


முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றினார்.

கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் A9 ரகம், HOB-2 எனும் முதலாவது போஞ்சி மரபணு ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தியமை, புதிய

கலப்பின கறி மிளகாய் வகையான “பிரார்த்தனா”வை அறிமுகப்படுத்தியமை போன்ற பல ஆராய்ச்சிகளை மாலதி பரசுராமன் மேற்கொண்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்ப,
பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் மாலதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts found.