கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அன்று மதியம் ஒரு மணியளவில், அவர் விடுதியில் திடீரென விழுந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இது திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அசானிக்கு வீடு தரல எல்லாம் பொய் அசானி தாய் கண்ணீர்|asani saregamapa songs|zee tamil asani|அசானி வீடு
Posted in அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள்

அசானிக்கு வீடு தரல எல்லாம் பொய் அசானி தாய் கண்ணீர்|asani saregamapa songs|zee tamil asani|அசானி வீடு


அசானிக்கு வீடு தரல எல்லாம் பொய் அசானி தாய் கண்ணீர்|asani saregamapa songs|zee tamil asani|அசானி வீடு

அசானி குடும்பத்திற்கு இதுவரை எவரும் வீடு கட்டி தரவில்லை என, அசானியின்
அம்மா கண்ணீரோடு தெரிவித்துள்ளார் ,இலங்கை யுடுபர்கள் பித்தலாட்டம் அம்பலம்

அசானி போட்டிக்கு தெரிவு |அசானி ஐந்தாவது பாடல்|asani saregamapa songs|zee tamil asani

அசானி போட்டிக்கு தெரிவு அனந்த கண்ணீரில் மக்கள்

கண்டி சின்ன குயில் ஆசானி போட்டியாளராக தெரிவு ,உலக தமிழர்கள் ஆனந்த கண்ணீரில் ,
ஆசானிக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி வாய்ப்பு ,அசானியின் முகத்தில் குழப்பங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தது ,இப்போதுதான் முழுமையான சந்தோஷம் அவளின் முகத்தில் வழிகின்றன.

காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தந்தையும் மகளும் பலி

விபத்தில் தந்தையும் மகளும் பலி

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தந்தையும் மகளும் பலி

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது.

கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
Posted in இலங்கை செய்திகள்

சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்
Posted in இலங்கை செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்

100-120 நாட்கள் பயணித்து எல் 1 சுற்று வட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும். சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்

ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை தொடங்க இருக்கும் ஆதித்யா எல்-1, சூரியனை நாள் ஒன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.

நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும்.

இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் நேற்றுத் தொடங்கிய நிலையில் சரியாக இன்று காலை 11.50க்கு விண்ணில் பாய்ந்தது. ஆதித்யா எல்1 சோதனையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன

இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்

இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்

இஸ்ரேல் உளவுத்துறைக்குள் நுழைந்து வேலை பார்த்து இஸ்ரேலை உளவுத்துறையை கவிழ்த்த ஈரான் ,
அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் மொஸாட் ,

வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி

வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பூவரசன்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று மாலை பயணித்துள்ளது.

இதன்போது திடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், இருவரில் ஒரு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணித்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு
தாக்குதலில், 26 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

மோட்டர் சைக்கிளில் பயணித்த மனித வெடிகுண்டு தாரி ,
இராணுவத்தினரை நெருங்கியதும் ,வெடிகுண்டை வெடிக்க செய்தார் ,
இதில் இந்த பேரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,
பாதுகாப்பு பலப்படுத்த பட்டு சோதனைகள் முடுக்கி பட்டுள்ளன .

லண்டன் சிவன் ஆலயத்தில் சிக்கிய நகை திருடன் video
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் சிவன் ஆலயத்தில் சிக்கிய நகை திருடன் video

லண்டன் சிவன் ஆலயத்தில் சிக்கிய நகை திருடன் video

லண்டன் சிவன் ஆலயத்தில் மக்கள் நகை திருடிய திருடன் மடக்கி பிடித்து தர்ம அடி

https://www.youtube.com/watch?v=X_Lw8bLNUQs
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது

1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், 1 1/2 கோடி ரூபாய் பணத்துடனும் 5 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது

அதன் போது, சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது, அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமையை கண்டறிந்துள்ளனர்.

அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல்ம் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, வியாழக்கிழமை (31) அறிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை (31) திகதியிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்தனர்.

ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் எம்.பிக்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

இதேவேளை, தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் போதே நீதிபதி மேற்குறித்த விடயத்தை அறிவித்தார்.

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்தியர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர் என்றும் இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அரசின் நலனுக்காக தரம் தாழ்ந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவசர கொள்வனவு விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுவதாகவும் பெரும்பாலானவை தரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.

அவற்றில் ப்ரெட்னிசோலோன் கண் மருந்தும் ஒன்று என்றும் இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

வைத்தியர்கள் என்று சொன்னாலும் சில இடங்களில் மனநோயாளிகள் போல நடத்தப்படுகிறோம் எனவும் இந்த நிலைமைக்கு இழுத்திருப்பது அரசாங்கமே என்றும் கூறிய அவர், வை்தியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததால் அவர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றார்.

சத்திரசிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்த இழப்பீடு நிவாரணமும் வழங்கவில்லை

இல்லை என்றும் இழப்பீடு வழங்கினாலும் அவை எவ்வளவு நாட்களுக்கு போதுமானது என்றும் கேள்வியெழுப்பிய அவர், அப்பாவி மக்களுக்கு இழப்பீடுக்கு அப்பாற்பட்ட ஒன்றை வழங்குவது கட்டாயமாகும் என்றார்.

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்

மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்

மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்

இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான்

அறிவதாகவும், எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவிகளுக்கு ஏற்படுகின்றது. எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது, மாதவிடாய் காரணமாக தான் மாணவிகள

பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் பணித்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
Posted in இலங்கை செய்திகள்

3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்

3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்துள்ளது.

  1. ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாய்.
  2. ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாயாகும்.
  3. ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாய்.
  4. சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாயாகும்.
    05.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.

சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்

இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்

இந்நாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும்,சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றாலும் அவ்வாறான

கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை என்றும்,எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் UNDP மற்றும் Oxford பல்கலைக்கழகத்தினால் இவ்வாறான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறையான கணக்கெடுப்பு இல்லாமல் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றும்,தற்போதைய அரசாங்கம்

அஸ்வெசும போன்ற திட்டங்களைக் கூட முறையாகக் கணக்கெடுக்காமல் நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால்,சமூகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு,கவனிப்பார் அற்ற மக்களிடையே தகராறுகள் கூட ஏற்பட்டுள்ளன என்றும், இதனால் சமூகத்தில் குழப்ப நிலை தோன்றியுள்ளதுடன் அஸ்வெசும வேலைத்திட்டம் நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் குழப்பிய திட்டமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து எமது நாடு தொடர்பில் மேற்கொண்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka என்ற

தலைப்பிலான ஆய்வறிக்கையை அதனை நடத்தியவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்காக வந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (31) இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்

வறுமைக்கு தீர்வாக அஸ்வெசும திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும்,அது தெளிவானதொரு தீர்வாக காணப்படாததால் நாட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வங்குரோத்து நாட்டில் அரசாங்கம் திருட்டு,ஊழல் மோசடிளை செய்து வருவதாகவும்,தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் கூட நாட்டுக்கு தரம் குறைந்த மருந்துகள் கொண்டு வரப்பட்டதை

ஒப்புக்கொண்டார் என்றும்,அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி தரக்குறைவான மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதே ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வாய் திறந்தார் என்றும், இதுவரை ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி

எழுப்புவதாகவும், ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி Ms Azusa Kubota,Dr Sabina Alkire (Director -Oxford Poverty and Human Development Initiative (OPHI),University of Oxford), சமூகவியல் துறைப் பேராசிரியர் சிறி ஹெட்டிகே,Mr.Fadhil Bakeer Markar ( Team Leader, UNDP) மற்றும் Ms.Tshokey Zangmo, Researcher, (OPHI) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு திட்டமாக,பல் பரிமாண இடர் குறிகாட்டிகளை அடையாளம் காணும் திட்டம் நம் நாட்டிற்கு இன்றியமையாத திட்டமாகும் என்றும், குறிப்பாக நம் நாட்டில் ஆபத்தில் உள்ளவர்கள்,கடன் சுமையால்

பாதிக்கப்பட்டவர்கள்,நோய்வாய்ப்பட்டவர்கள், காலநிலை மாற்றம் காரணமாக கல்வி கற்க முடியாதவர்கள், வறுமையால் ஆபத்தில் உள்ளவர்கள்

போன்றோர் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச கொள்கைகளை வகுக்க இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்

இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்


போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே பகுதியில் கடமையாற்றும் 2 கலால் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

குறித்த உத்தியோகத்தர்களை மத்துகம, சிறிகடுல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர்கள் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை அபகரிக்கச் சென்ற போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சந்தேகநபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த குழுவினர், கெப் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கெப் வண்டியின் பின்புறத்தின் கதவு உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

இதன்போது கெப் வண்டியில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்து காயமடைந்துள்ளனர்

பின்னர் அவர்கள் வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.