Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து
உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி, இரு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து கொள்ளையடித்து.
பின்னர் பொலிஜாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இது மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபர; உயிரிழந்ததுடன், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அவளை கர்ப்பமாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விருந்தினராக வந்திருந்த மாமா, அந்த யுவதியின் பெற்றோர் இருவரும் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள விலங்கு பண்ணைக்கு வேலைக்குச் சென்றிருந்த போதே, இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
தன்னுடைய மகளுக்கு தொடர்ச்சியாக வயிற்றுவலி ஏற்பட்டது தொடர்பில், வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மகள் கர்ப்பமாக இருக்கின்ற விடயம் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த பெண்ணின் தாய், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர், நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் சிரமம் இல்லை மைத்திரிபால
மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் சிரமம் இல்லை
மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு எந்தவித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று வர்த்தகர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரச ஊழியர் மகிழ்ச்சியாக இல்லை, மீனவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, சாதாரண குடிமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்துள்ள அவர், நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் சிரமம் இல்லை
இவற்றை ஒழிப்பதிலும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் அந்த அனுபவத்துடன் மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் தனக்கு சிரமம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அத்துடன், சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு தனது நல்லாட்சி காலம் சிறப்பான ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
அச்சுறுத்திய மாணவன் கத்தியுடன் கைது
அச்சுறுத்திய மாணவன் கத்தியுடன் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவர் உயிரிழந்தார்.
ஒவ்வொரு வருடமும் திருவிழா காலத்தில் இவர். வழக்கமாக அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார். திருவிழா தொடங்கிய நாள்முதல் வழமை போன்று அவர் இந்த வருடமும் தினமும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளார்.
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
திங்கட்கிழமை 28 அங்கப் பிரதட்சணத்தை நிறைவு செய்த நிலையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாரடைப்பு காரணமாகவே மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணைகளை பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நடத்தினார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
2024 பட்ஜெட் சவாலானது
2024 பட்ஜெட் சவாலானது
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் திங்கட்கிழமை முதல் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஒக்டோபர் மாதம் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அறியமுடிகிறது.
நவம்பர் மாதத்தில், நிதி, பொருளாதார விவகாரங்கள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்காக மற்றுமொரு சவாலான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2024 பட்ஜெட் சவாலானது
கடந்த வருட நெருக்கடியிலிருந்து நாடு இன்னும் மெதுவாக மீண்டு வருவதாகவும் எனவே 2024 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது எனவும்அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நாட்டை முழுமையாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற்றுவதற்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற யுவதி பலி
கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற யுவதி பலி
கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) இரவு 07:00 மணியளவில் பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற யுவதி பலி
விபத்தில் படுகாயமடைந்த யுவதி அதே ரயிலில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்ததாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 22 வயது மதிக்கத்தக்க யுவதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ரயில் பல தடவைகள் ஹார்ன் அடித்த போதும் உயிரிழந்த யுவதிக்கு கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6 ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை (26) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இவ் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும்
தொடம்கஸ்லந்த ஸ்ரீ சைலத்தலாராம விகாரையில் தூபியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே பூசல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், வெவ்வேறு புவியியல் அதிகார வரம்புகளில் வாழும் மக்களின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி பேசி இந்த சர்ச்சைகளை அரசியல்வாதிகளே உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
அதன் மூலம் வாக்குகளைப் பெறவே எதிர்பார்க்கின்றனர் என்றும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு நபர்களிடம் 13 குறித்து சிலரிடம் விருப்பம் என்றும் மற்றும் சிலரிடம் விருப்பமில்லை என்றும் ஜனாதிபதி கனவுகளை கொண்ட இவர்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த அரசியல் தலைவர்கள் சரியான குணாதிசயங்களில் இல்லாமல் அதிகாரத்தை பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கின்றனர் என்றும், தமது சுகபோக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக 220 இலட்சம் மக்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற போக்கில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
மதங்கள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவினால்தான் நாட்டின் ஒருமைப்பாடு, பிரதேச ஒருமைப்பாடு, பலம், இறைமை, எமது தேசியம் எமது வாழ்வியல் பாதுகாக்கப்படும் என்றும், எனவே இன, மத, சாதி முரண்பாடுகள் ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக வைத்தியர் சாபிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனப் பிளவைக் கிளப்பினர் என்றும், இறுதியில்,வைத்தியர் சாபி சரியானவர் என்று நிரூபனமானது என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
எனவே சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து இன,மத,இன மக்களுக்கும் இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கொண்ட பேராசையால் சிலர் நாட்டை துண்டு துண்டாக பிரித்து வருகின்றனர் என்றும், இது தேசப்பற்று அல்ல என்றும், கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவரை மக்களே விரட்டியடித்தனர் என்றும் படித்தவர்களையும் அறிவாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்பதை தான் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பிரச்சனைகளை பேச பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்றத்தில் ஒரு முட்டாள் கூட்டம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பேசி,பேச்சுக்களில் குறுக்கிட்டு மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான வசந்த அத்துகோரலவின் ஆய்வின் பிரகாரம், இந்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் அம்மக்கள் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர் என்றும், பயிர் சேதத்தால் 60 ஆயிரம் ஏக்கர் நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் 68729 கோடி தங்கம், நகைகள் ஆபரணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
என்றும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
நடனமாடிக்கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு
நடனமாடிக்கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (வயது 61) என்பவரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை (26) தெல்லிப்பழை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
அதன் போது பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை
இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை
இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை
குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன
10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன
நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 – 40 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பருவமழைக்கு முன்னதாக சேதமடைந்த தொட்டிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன
தற்போது நிலவும் எல்-நினோ செயன்முறை காரணமாக அடுத்த பருவத்தில் நல்ல மழைவீழ்ச்சி கிடைக்குமெனவும், அதற்கு அடுத்த பருவத்தில் மீண்டும் வறட்சி ஏற்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே பருவமழைக்கு முன் இந்த தொட்டிகளை புனரமைத்து அவற்றில் நீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலிby நிருபர் காவலன்
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்காby நிருபர் காவலன்
காரில் சிக்கிய இளம் ஜோடி
காரில் சிக்கிய இளம் ஜோடி
சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி அதில் இருந்த பெண் மற்றும் ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.
அதன்படி, நுவரெலியா பொலிஸார் அவர்கள் இருவரையும் போலி ஆவணங்களுடன் கைது செய்தனர்.
போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் நுவரெலியாவுக்கு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடம் 03 மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், 03 வருமான உரிமங்கள், 03 காப்புறுதிச் சான்றிதழ்கள், நிதி நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி தவணைகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த 03
காரில் சிக்கிய இளம் ஜோடி
கடிதங்கள், வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான ஆட்சேபனை இல்லை என 03 கடிதங்கள், வாகன இலக்கத் தகடு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் 03 பிரதிகள், 03 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கரவண்டியொன்றின் பதிவு சான்றிதழை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 180,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
பின்னர், இது தொடர்பான முறைப்பாடு பேராதனை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் 21 வயதுடைய பெண் சந்தேகநபர் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் இன்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு
4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் நுரைச்சோலை ஷெடபொல களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷெட்டபொல மன்பூரிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய செபஸ்டியன் உர்சுலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு
மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் தலையில் இரண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணைக் கொன்ற பின்னர், அவளிடம் இருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய், உடைகள் மற்றும் தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், மருந்து, அலைபேசி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து சதுப்புநிலக் காட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி
ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி
5 வருட கள்ளக்காதலில் வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி சிறைச்சாலைக்கு சென்றிருக்கின்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி லால் 60 வயதாகிறது. இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார். அவருக்கு 45 வயதாகிறது. இந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருகிறார். அவருக்கு 19 வயதாகிறது.
இந்த கள்ளக்காதல் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி உள்ளது. மகளுக்கு இப்போது 19 வயது என்றால், இந்த ஜோடி கள்ள உறவை தொடங்கியபோது, 14 வயது சிறுமியாக இருந்திருக்கிறார். தந்தை இல்லாமல் வளர்ந்த சிறுமிக்கு, தாயின் கள்ளக்காதல் குறித்து அந்த வயதில் அறியவில்லை.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கு தெரிந்துவிட்டது. இதனால், பெண்ணின் குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது. கள்ளக்காதலை கைவிடுமாறும், வயதுக்கு வந்த மகள் இருப்பதால், இதுபோன்று செய்ய வேண்டாம் என்றும் பெண்ணை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி
ஆனால், மெஹந்திலால், கள்ளக்காதலியையும், அவரது மகளையும் அழைத்து வந்து, ஊருக்கு வெளியே குடி வைத்தார். ஊருக்கு ஓரமாக ஒரு குடிசை போட்டு, அதில் அவர்களை தங்க வைத்தார். இத்தனைக்கும் மெஹந்தி லாலுக்கென, மனைவி, மகன் என தனி குடும்பமே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 21ம் திகதி, மெஹந்திலால் இறந்துவிட்டார். உடம்பெல்லாம் காயங்களுடன் காட்டுப்பகுதியில் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு அவரது மகன் சுனில் என்பவர் தகவல் அளித்தார். இதனால் பொலிஸார் விரைந்த சென்று சடலத்தை பார்த்தனர். அப்போதுதான், மெஹந்திலாலின், அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டனர்.
பிறகு, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், அவரது விலா எலும்பு முறிந்திருந்ததாம். கழுத்து மோசமாக நெரிக்கப்பட்டிருந்ததாம். இதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவுமே மெஹந்தி லால் இறந்துவிட்டார் என்று அறிக்கையில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, பொலிஸாரின் விசாரணை வலுவானது. கள்ளக்காதலி சிக்கினார். அப்போது விசாரிக்கும்போது, பல்வேறு திடுக் தகவல்களை சொல்லி உள்ளார். இதுகுறித்து பொலிஸார் சொல்லும்போது, “மெஹந்தி லாலும், அந்த பெண்ணும் நீண்ட காலமாகவே ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், கள்ளக்காதலியின் மகள் மீதும், மெஹந்தி லாலின் காமப்பார்வை விழுந்துள்ளது. பிறகு, 2 முறை பாலியல் ரீதியாகவும் இளம்பெண்ணை துன்புறுத்தல் செய்திருக்கிறார்.
ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி
கடந்த 20ம் திகதியன்றும்கூட, இரவு நேரத்தில் தூங்கும்போது, இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.. இந்த தொந்தரவை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம்பெண், வேறுவழியின்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டதும், கொந்தளித்து போயுள்ளார் கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்து, மெஹந்தி லாலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மறுநாளே, அதாவது 21ம் திகதியன்று, மெஹந்தி லாலுக்கு, மயக்க மருந்து கலந்த மதுவை ஊற்றி தந்துள்ளார். அதைக்குடித்துவிட்டு, அவர் போதையில் விழுந்ததுமே அவரை கொடூரமாக கொன்றுள்ளார்.
அப்போதுதான், மகளிடமே அத்துமீறிய ஆவேசத்தில், அவரது அந்தரங்க உறுப்பையும் வெட்டியுள்ளார். பிறகு சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, காட்டில் வீசிவிட்டு வந்துள்ளார்.
இந்த கொலையை மகளின் உதவியுடன் செய்ததாகவும் வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார். எனினும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என்ற விசாரணையை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இப்போது, அந்த தாயும் – மகளும் சிறைச்சாலையில் உள்ளனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது
இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது
சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே இக்கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.
இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது
இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்





























