தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
Posted in இலங்கை செய்திகள்

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

இலங்கையில் தமிழரை புறம்தள்ளி அரசியல் தீர்வை வழங்க
மறுக்கும் எதிரியுடன் கூட்டு வைத்துள்ள லண்டன் புலி கட்சிகள் .

விடுதலை புலிகள் மிக பெரும் ஆதரவை பெற்று ஈழ மண்ணின் விடியலுக்கு உரத்து குரல் கொடுத்து வந்த அதே கட்சி ,இன்று எதிரிகளுடன் கூட்டு வைத்து ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண போவதாக தெரிவித்துள்ளனர்

இறுதி போரில் எதிரியானவன் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டு ,தமிழரை அடிமைகளாக நினைத்து ,அவர்கள் உரிமையை பறித்து நசுக்கி வருகின்றான் .

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

அவ்வாறான எதிரியானவன் ஆயுத பலம் அற்று நிரபராதியாக நிற்கும் தமிழருக்கு எவ்விதமான தீர்வை பெற்று தருவான் என்பதே கேள்வியாக உள்ளது .

அவ்வாறான புறசூழல் காணப்படும் இவ்வேளையில் ,லண்டன் புலிகட்சி இலங்கை சென்று தமிழர்க்கு தீர்வு திட்டம் தொடர்பாக பேசுகிறது .

இவர்கள் கேட்கும் திட்டத்தை பரம எதிரி வாழங்குவானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .

வீடியோ

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .

இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன

கைது எதிரொலி

இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .

எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்

எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .

எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .

கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையை லண்டன் புலி கட்சி வேட்டு
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு

கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆப்பு அடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் லண்டனை தளமாக கொண்டு இயங்கிய உலக தமிழர் பேரவை தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது .

இந்த கட்சியானது மகிந்த ராஜபக்ச காலத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் ,ரணில் ஆட்சியினால் அந்த தடை நீக்க பட்டு தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது

இந்த கட்சி இலங்கை ஆளும் மத்திய பவுத்த அரச நிர்வாகத்துடன் இணைந்து தமிழருக்கான தீர்வை பெற்றிட காலடி எடுத்து வைத்துள்ளது .

தமிழீழம் வேண்டாம் இலங்கை ஒற்றை ஆட்சிக்குள் இணைந்து பயணிப்போம் என்கிறது .

வடை விற்பனை மீள ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் ,இது ஓட்டை வடையா அல்லது தட்டை வடையா என்பதாக இப்பொழுது புலி கட்சிக்குள் குத்து வெட்டு ஆரம்பமாகியுள்ளது .

வெங்காயம் மிளகாய் போட்டு ரெம்ப காரமாக சூடு நடக்கிறது .சமையல் பிரமாதம் ,அரை அவியலாக மாறலாம் என்பதால் பதட்டமாக கழிகிறது .

கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு

முன்னு பின் முரண் நிலையிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் பயணிப்பதாக தோற்ற பாடு காண்பிக்க படுகிறது .

இதே இலங்கையில் இருந்து முள்ளி வாய்க்காலில் இடம்பெற்றது தமிழ் இன அழிப்பு என்று இவர்களினால் சகட்டு மேனி அரசியலுக்கு கருத்துரைத்தாலும் அதன் ஊடக தீர்வினை பெற்றுவிட முடியுமா என்பது கேள்வியாக உள்ளது .

கள்ள நாதாரி சம்பந்தன் ,ஒட்டுண்ணி சுமந்திரனுக்கு இவர்களது வெளிநாட்டு அரசியல் நகர்வு ஆப்பு அடிக்கும் எனலாம் .

பாம்மாத்து அரசியல் விட்டு வண்டி ஒட்டிய கூட்டமைப்புக்குள் ,தமிழ் அரசியல் கட்சிக்கும் இவர்கள் வரவு சாவு மணி என்பதாகிறது .

அமெரிக்கா வெள்ளை மாளிகை வரை இந்த கட்சிக்கு தொடர்புகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்க .

இந்த கட்சியில் இவர்கள் வலைக்குள் யார் தலை முன் உருள போகிறது என்பது தான் விடயமாகிறது

புது மாப்பிள்ளைக்கு நல்ல வரவேற்பு ,பொண்ணு வீட்டு காரங்க கும்மி அடிப்பாங்களா ,கொளுத்தி போடுவாங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

வீடியோ

உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்
Posted in இலங்கை செய்திகள்

உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்

உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்

தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (09) விஐயம் செய்தனர்.

இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ். ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கசந்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள்

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன

ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து

அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது


இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மதுரை மோகன் காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில்

இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.

விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த

இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

வீடியோ

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை.

முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.

இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்

இது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய அவரது பெரிய பார்வையின் ஒரு பகுதியாகும்,

இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

எனினும் சிங்கள-பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இதன்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பௌதீகத் தொடர்பைப் பற்றிய பேச்சு அடியோடு நின்றுவிடுகிறது என்றும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

2015 டிசம்பரில் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான

இலங்கை இந்திய பாலத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக மக்களவையில் தெரிவித்தபோது,எதிர்ப்பாளர்களின்

கடுமையான விமர்சனங்கள் காரணமாக இலங்கையின் பதில் முடக்கப்பட்டதாகவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையிலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்றும் த ஹிந்து தெரிவித்துள்ளது.

வீடியோ

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக

யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்,


சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

வீடியோ

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம், மாவட்டத்தில் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும்

சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில்

கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

நாளை (10) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல்

கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் என இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்போது எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்து ,கட்சிகளை அலறவிட்டுள்ளார்

வீடியோ

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார்.

அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர்.

சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.

இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது

கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு

அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.

ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

கண்டியில் இருந்து லக்‌ஷபான ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் –கொழும்பு- கண்டி வீதியில் தியகல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீதியை முற்றாக தடை செய்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடச் சென்ற போது, ​​குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.

நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக

வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில்

பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு

முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்பதற்கு முன்னாள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில்

அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.

வீடியோ

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை

ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள்

தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

வீடியோ

சீனாவின் கப்பல் வந்தது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன் சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை

கண்டுபிடிக்கப் யோகின்றார்களா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம் . அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

இந்தியா பாதுகாப்பு

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம்

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன. அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது?.இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ? எனக் கேட்டார்.

அத்துமீறும் இந்திய மீனவர்கள்

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது.இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும்

பொறுப்புண்டு.அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமான பயணி ஒருவர், இன்று (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி செல்வதற்காக வந்திருந்த, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வீடியோ

குடு தானு சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையில் குடு தானு சிக்கினார்

காவல்துறையில் குடு தானு சிக்கினார்

காவல்துறையில் குடு தானு சிக்கினார் ,1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், ‘குடு தானு’ என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி பிரமுகரான “மாத்தரா கல்பா” என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

குடு தானு சிக்கினார்

இதற்கமைய, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் இன்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதன்படி, 1 கிலோ 50 கிராம் எடையுள்ள ‘ஐஸ், இலத்திரனியல் தராசு, ரூ.12,000 ரொக்கம் போதை பொருள் கடத்தல் மற்றும் தொலைபேசி திருட்டு ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.

வீடியோ