ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30

குடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகள் கோரியதை தாம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே

வழங்கப்படும் என ஜனாதிபதி பொது பேரணியில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என மேலும் கூறினார்.

மேலும், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளர்

காவு வண்டிகளை மீளப்பெற்றுக்கொண்ட திஸாநாயக்க, இந்த வசதிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம்.

ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த காலங்களில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் துயரங்களைத் தாங்கிக் கொண்டதன் பலனாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க எம்மால் முடிந்துள்ளது.

இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அது மலர் பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கும்.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இதனால், இலங்கை மீளக் கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது பொறுப்பாகும்.

ஜனவரி மாதத்திற்கு ஜேனஸ் எனும் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அக்கடவுளினால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.!

அதனால் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலம் தொடர்பிலும் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எமது பொறுப்புக்களை அறிந்துகொள்வோம். அவற்றை செயற்படுத்தி, தாய் நாட்டை பலப்படுத்துவோம்.

அதற்காக பொறுப்புடனும் அர்பணிப்புடனும் செயற்படுவோம். அதனால் புத்தாண்டை செழிப்பானதாக மாற்றிக்கொள்வோம்.

பிறந்திருக்கும் இந்த ஆண்டு, அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் என இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்போது எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்து ,கட்சிகளை அலறவிட்டுள்ளார்

வீடியோ