இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார்.
எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை.
முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்திய இலங்கைக்கு இடையில் பாலம்
இது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய அவரது பெரிய பார்வையின் ஒரு பகுதியாகும்,
இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
எனினும் சிங்கள-பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இதன்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பௌதீகத் தொடர்பைப் பற்றிய பேச்சு அடியோடு நின்றுவிடுகிறது என்றும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
2015 டிசம்பரில் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான
இலங்கை இந்திய பாலத் திட்டத்திற்கு நிதியளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக மக்களவையில் தெரிவித்தபோது,எதிர்ப்பாளர்களின்
கடுமையான விமர்சனங்கள் காரணமாக இலங்கையின் பதில் முடக்கப்பட்டதாகவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையிலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்றும் த ஹிந்து தெரிவித்துள்ளது.
- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு
- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது
- மருத்துவர் கொலை குற்றவாளி கைது
- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா
- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்
















