Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள டிக்டாக் ராசனுடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு டிக்டாக் ராசனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது,
நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.
நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்துவைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.
பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பபட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.
பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.
பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மக்களிடம் உதவி செய்திடபணத்தை பெற்று அது தானே தனது பணத்தினை வழங்குவது போன்ற நிலையில் ,தனனை ஒரு நீதிபதி போல இவர் செயல் படுவதாக தற்போது பலர் மக்கள்குற்றம் சுமத்தியுள்ளனர் .
இவரை ஆதரித்து பேசிய மக்கள் பலர் இவரது இவ்வாறான இவ்விதமான தொடர் இழிவான செயலினால் மக்கள் இவரை வெறுத்து இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர் .
இவ்வாறான உதவி செய்யும் யுடுப்பர் மற்றும் டிக்டாக் வாதிகளுக்கு வெளிநாட்டு மக்கள்பணம் வழங்கிட கூடாது என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
இவர் மீது பல குற்ற சாட்டுக்கள்முன் வைக்க பட்டுள்ளன அவை தொடராக வெளி வரும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்
இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்
இலங்கையில் புதிய விசா நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இலங்கை வருவதற்கு விசா பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இணையத்தின் ஊடாக புதிய வழிமுறையில் விசா விண்ணப்பம் செய்வதற்கு ஏற்ப புதிய விசா நடைமுறை கையாள பட்டு வருகிறது .
அதன் அடைப்படியில் உல்லாசப்பயணிகள் மற்றும் இலங்கை வாழ் மக்கள் விசா பெறுவதற்கு சிறந்த வழியை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்ய பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது .
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .
திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .
அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது
கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கொழும்பு வாழைத்தோட்டம் புதுக்கடை உணவாக உரிமையாளர் கொத்துரொட்டி விலையால் கைது செய்யப்பட்டார் .
இலங்கையில் உணவாக விலை பட்டியலுக்கு அமைவாக கொத்துரொட்டி விற்பனை செய்யாது ,வெளிநாட்டவருக்கு 1900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்கமுனைந்த பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டவர் கொத்துரொட்டி விலையை கேட்டு விட்டு அவரிடம் கொத்துரொட்டி வாங்கிட மறுத்தாமையால் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் .
மேற்படி வெளிநாட்டவர் குறித்த கொத்துரொட்டி சர்ச்சை சம்பவத்தை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தனர் .
இலங்கை உல்லாச பயணம் வரும் வெளிநாட்டவர்களை இலங்கையில் உள்ளசிலர் இவ்விதம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் ,அவர்களிடம் இவவிதம் காணொளி பிடித்து வெளியிடுவதால் இலங்கை மக்கள்தொடர்பாக அவ நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது .
இதனால் இலங்கை உல்லாச பயணம் வீழ்ச்சியடையும் நிலைக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது .
போலீசார் கொத்துரொட்டி சர்ச்சை தொடர்பாக விசாரணை மேற் கொண்டு கொத்துரொட்டி விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளது பாராட்டுக்கு உரிய செயலை பார்க்க படுகிறது .
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள் ,தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைந்ததை அடுத்து சுப நேரத்தில் வேலையை மீள ஆரம்பிக்க இலங்கையர்கள் காத்துள்ளனராம் .
மூடா நம்பிக்கையின் உச்சத்திலுறைந்த்திருக்கும் மக்கள் சமூகத்தில் இலங்கை மக்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை இந்த வேலையை ஆரம்பிக்க சுப நேரத்திற்கு காத்திருப்பதன் மூலம் காண முடிகிறது .
இணை அபைவிருத்தி நோக்கி முன்னேறி வருகின்ற இந்த காலத்தில் விழிப்புணவு அற்ற சமூகமாக இலங்கை மக்கள் வாழ்வதை பலவிடடயங்கள் கோடி கட்டுவதை இலங்கை வரும் உல்லாச பயணிகள் வெளியிடும் காணொளிகள் மூலம் காண கிடக்கின்றன .
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அதிகம் பயன் படுத்தினர் .
வாகன ஓட்டிகள் யாவரும் இந்த அதிவேக சாலைகளை பயன்படுத்தும் பொழுது பணத்தை செலுத்தியே பயணிக்க முடியும் .
அவ்வாறான நிலையிலே இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த பெரும் தொகையில் பணத்தை அள்ளியுள்ளது .
வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
வாகன விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் , இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியியுள்ளனர் .
164 விபத்துக்கள் சம்பவித்துள்ளன , அதில் 136 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .
சாரதிகள் அலட்சியே போக்கே இந்த வாகன விபத்துக்கள் இலங்கையில் அதிகரித்து செல்ல காரணமாகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..
இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது எனினும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உயிர் சேதம் இன்றி தப்பித்துள்ளார் .
மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த போது பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில் வாகனம் ஹீ பற்றி கொண்டது .
இந்த வாகனம் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக இவ்வாறு பல இலங்கை அரசியல்வாதிகள் வாகனங்கள் தீப்பிடிப்பதும் ,விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 தொலை தூர ரயில் பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டுள்ளது ,இதனால் ரயில் பயணிகள் அவதியுற்றுள்ளனர் .
தொடரூந்து பாதையில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக திருத்த பணிகள் இடம்பெறுவதால் கொழும்பு கோட்டை முதல் Moratuwa, Panadura, Wadduwa, Negombo, Ambepussa, Padukka and Ragama ஆகிய ரயில் பயண சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
வேலைகள் நிறைவடைந்ததும் வளமை போன்று ரயில் பயணங்கள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது .
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி உள்ளதாக இந்தியா அரசாங்கதின் கொழும்பு உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதிக அளவான வெங்காயம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்டு வருகிறது .
இந்தியா வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்திட விதிக்க பட்ட தடையால் இலங்கையில் வெங்காயத்துக்கு அதிக தட்டு படு காணப்பட்டது .
இந்தியா அரசின் வெங்காய தடையினால் இலங்கையில் வெங்காயத்தின் விலை திடிரென கடுகதி வேகத்தில் உயர்ந்தது .
வெங்காய தடை நீக்க பட்டதை அடுத்து வெங்காயத்தின் விலையில் அதிக வீழ்ச்சி காணப்படும் எனவும் ,மக்கள் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்கி பயன் படுத்தி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது .
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபாவாக அதிகரிக்க பட்டதை அடுத்து தற்போது கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் கோழி இறைச்சி விலை எதிர் வரும் நாட்களில் விலை வீழ்ச்சியடைந்து காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கோழி இறைச்சியை வாங்கி உண்டிட இந்த விலை குறைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,சிக்கன் பொரியல் ,என்பனவற்றுக்கு கோழி இறைச்சி அதிக பயன் படுத்த பட்டு வருகிறது .
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
இதனாலேயே சிக்கன் இறைச்சி அதிக விலைக்கு எகிறியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
திடீரென கோழி இறைச்சி விலை குறைவடைந்துள்ளதால் ,கோழி இறைச்சி பிரியர்கள் குஷியில் உறைந்துள்ளனர் .
இதனால் சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,போன்ற உணவு பண்டங்கள் விலைகளும் குறைவடையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.
இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார்.
மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.
ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் பண்டார கூறுகிறார்.
இதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதி ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் வைபவம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றதாகவும் இலங்கைத் தூதுவர் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது 500 க்கும் மேற்பட்ட ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் இதுவரை ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்ததாக அவர் கூறினார்.
அந்த அனைத்து வான்வழி தாக்குதல்களையும் அயர்ன் டோம் அமைப்பு மூலம் அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



































