Tag: வருமானம்
2030 இலங்கை 300 பில்லியன் டாலர் வருமானம் பெறுமாம்
2030 இலங்கை 300 பில்லியன் டாலர் வருமானம் பெறுமாம்
2030 இலங்கை 300 பில்லியன் டாலர் வருமானம் பெறுமாம் தித்வா சூறாவளி இருந்தபோதிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை 300 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும்: தொழில்துறை அமைச்சகம்
தித்வா சூறாவளி
தித்வா சூறாவளி போன்ற கடுமையான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட போதிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மிகவும்
மீள்தன்மை கொண்டதாகவும் 300 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று தொழில்துறை
மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தரா இன்று (29) தெரிவித்தார்.
ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) சான்றிதழ் அமைப்பாக அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட
முதல் சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன்
முதல் சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர் (CPS) சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
கைத்தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் சான்றிதழ் நிறுவனம்,
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஒன்பது சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கும் 34 சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கியது.
உற்பத்தித்திறன் ஆலோசனையை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திருமதி ஜெயசுந்தராவின் ஆதரவின் கீழ் கொழும்பில் நடைபெற்ற விழா.
உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கான இலங்கையின் முதன்மையான அரசு நிறுவனமான தேசிய உற்பத்தித்திறன் செயலகம், APO-க்கான நாட்டின் பிரதிநிதித்துவ அமைப்பாக செயல்படுகிறது.
APO சான்றிதழ் நிறுவனம், பிராந்தியம் முழுவதும் உற்பத்தித்திறன் நிபுணர்களின் தரத்தை உயர்த்துவதற்காக APO சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சான்றிதழை வழங்கும் 21 APO உறுப்பு நாடுகளில் இலங்கை 12வது நாடாக மாறியுள்ளது. மலேசியா, வியட்நாம், மங்கோலியா, இந்தோனேசியா,
பாகிஸ்தான், இந்தியா, ஈரான், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை ஏற்கனவே இதை வழங்கும் நாடுகளில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய திருமதி ஜெயசு.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

வேட்பாளர்களின் மாத வருமானம்
வேட்பாளர்களின் மாத வருமானம்
வேட்பாளர்களின் மாத வருமானம் ,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் மாத வருமானம் வெளியாகி உள்ளது.
இதில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அதிகம் பயன் படுத்தினர் .
வாகன ஓட்டிகள் யாவரும் இந்த அதிவேக சாலைகளை பயன்படுத்தும் பொழுது பணத்தை செலுத்தியே பயணிக்க முடியும் .
அவ்வாறான நிலையிலே இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த பெரும் தொகையில் பணத்தை அள்ளியுள்ளது .
Featured
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், நம் நாட்டில் 2.5% ஆக இருந்த தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கையை 3% ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆடை மற்றும் நெசவுத் தொழில் நிறுவனம் ஏறக்குறைய 500 பிள்ளைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. IDB நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களை உருவாக்கி மாணவர்களை பாராட்ட முடிந்துள்ளது.
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கு பெரும் ஆதரவை அளிக்கிறது என்பதையும் கூற வேண்டும். இதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், களிமண், பித்தளை, பிரம்பு ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தாலி, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து, சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், பிரம்புகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து 500 பிரம்புகள் வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், களிமண் போக்குவரத்தில் அதிகபட்சமாக 05 கியுப்களை அனுமதிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் கலந்தாலோசித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்






















