Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
குறுகிய பார்வை கல்விச்சீர்திருத்தம் சஜித்சாடல்
குறுகிய பார்வை கல்விச்சீர்திருத்தம் சஜித்சாடல்
குறுகிய பார்வை கல்விச்சீர்திருத்தம் சஜித்சாடல் ,குறுகிய பார்வை கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது
சமூகத்தில் வாழும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் துன்பங்கள் குறித்து, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்பக்கூடிய அதிகபட்ச குரலை நாம் எழுப்பி வருகிறோம்.
மக்களின் பிரச்சினைகளை பேசும் அதே வேளையில், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமை பொருட்டு அரசாங்கத்தை வலுயுறுத்தியும் வருகிறோம்.
மக்களின் பிரச்சினைகளுக்காக முன்நிற்பதை சிலர் பலவீனமான விடயமாக கருதி அதை எதிர்க்கின்றனர்.
முதியோர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குமாறு பேசும்போது, ஓய்வு பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு பேசும்போது,
இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து பேசும்போது, அவற்றுக்கான தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலுயுறுத்தும் போது, பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட
கொள்கலன்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது, மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்காமை குறித்து கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தை பின்பற்ற மாட்டோம் என வாக்குறுதியளித்திருந்தாலும்,
வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாம் கேள்விகளை எழுப்பும் போது, இவ்வாறு கேள்விகளை
எழுப்ப விரும்பாத சில தரப்பினரும் குழுக்களும் எம்மத்தியில் இருந்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் சார்பாகக் குரல் எழுப்பி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பும்போது, இதனைப் பிடிக்காதவர்கள் எதிர்க்கட்சி தவறான வழியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது மக்கள் பிரதிநிதிகளின் பணியாகும். எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து தீர்வுகளைப்
பெற்றுக் கொடுப்பது எதிர்க்கட்சியின் வேலையாகும். இந்தப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி சிறப்பாகவே நிறைவேற்றி வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சில விடயங்கள் காரணமாக அரசாங்கம் செய்த சில தவறுகளை திருத்திக் கொள்ளவும், மீளப் பெற வேண்டிய
சந்தர்ப்பங்களும் கூட காணப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய இளைஞர் சக்தியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுரங்க ரத்நாயக்கவின் முயற்சியின் பயனாக அனுராதபுரம் யாய 11 பிரதேச வைத்தியசாலையை புதுப்பித்து
மக்கள் பாவனைக்கு கைளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பங்கேற்றார்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டு குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
இங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இலவசக் கல்வியை வலுப்படுத்தி, நாட்டின் மாணவர் தலைமுறைக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பல தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்திருந்தாலும், தவறைச் சுட்டிக்காட்டி நாம் எதிர்த்ததன் பிற்பாடு, அரசாங்கம் முடிவை மாற்றியது.
இன்று, கல்வித் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் வரலாற்றுப் பாடத்தை முற்றிலுமாக நீக்க முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் கிளர்ந்தெழுந்துள்ளது.
தேரர்கள், மதத் தலைவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அரசாங்கத்திற்கு இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை.
பொருத்தமான கல்வி
மாறாக நாட்டிற்குப் பொருத்தமான கல்வியை உருவாக்குவதற்கே அதிகாரத்தை வழங்கினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக் கல்வி போன்ற புதிய கல்வி வாய்ப்புகள் தொடர்பிலான விடயங்களை நானும்
ஐக்கிய மக்கள் சக்தியினரும் முன்வைத்த போது எம்மைப் பார்த்து பரிகசித்தவர்கள்,
தற்போதுள்ள கல்வி முறையை நேர்மறையான சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தி, பிள்ளைகளுக்கு நன்மைகளை உருவாக்குவதற்குப் பதிலாக,
மாணவர் தலைமுறையை அழிக்கும் குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கி நகர்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த பழமைவாத சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் குறைபாடுகள் குறித்து சிலர் எதிர்க்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்போது, எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்கு, எதிர்க் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று, முன்னாள் ஜனாதிபதி கையெழுத்திட்ட, மக்களுக்கு விரோதமான IMF ஒப்பந்தமே காணப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக மாறியுள்ளது. அதன் தாளத்திற்கு ஆடும் பொம்மையாக மாறியுள்ளது.
இதன் விளைவாகவே மின்சாரக் கட்டணங்களையும் எரிபொருள்களினது விலைகளையும் அதிகரித்துள்ளது.
விலைச் சூத்திரங்களை மாற்றுவதாகச் சொன்ன அரசாங்கம்
விலைச் சூத்திரங்களை மாற்றுவதாகச் சொன்ன அரசாங்கம், இன்று அந்த விலைச் சூத்திரங்களுக்கு அடிமைப்பட்டு காரியங்களை முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று, நாடு பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. குற்ற அலை தினமும் அதிகரித்து வருகிறது. நாளாந்தம் உயிர்கள் இழக்கப்படுகின்றன. கொலைகாரர்கள், கொள்ளையர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டைக் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைச் சரியாக பேண முடியாதுபோயுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து டியுசன் எடுப்போம் என சொன்ன அரசாங்கத்துக்கு இன்று குடிமக்களிடமிருந்து டியுசன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், விவசாயிகளுக்கு கூட நிவாரணம் கிடைத்தபாடில்லை. அறுவடைக்கு நிலையான விலை கிடைக்காமை, உரம்
மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, தரமான விதைகள் கிடைக்காமை போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நெல்லுக்கு நிலையான விலைப் பெற்றுத் தருவோம் எனக் கூறிய இந்த அரசாங்கம், தற்போது நெல் தரகர்கள் அதை குறைந்த விலைக்கு வாங்கும்போது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் பிரச்சினைகளைப் வெளிப்படையாக பேசி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
எமக்கு அரசியல் சதிகளோ அல்லது டீலகளோ இல்லை. எமது ஒரே டீலும் ஒரே சமூக ஒப்பந்தமும் பொதுமக்களுடன் மட்டுமே காணப்படுகின்றன.
இந்த நம்பிக்கையை உயிரைவிடவும் பாதுகாப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அதிகாலையில் பேருந்து விபத்து
அதிகாலையில் பேருந்து விபத்து
அதிகாலையில் பேருந்து விபத்து ,இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்து .
நேருக்கு நேர் மோதி விபத்து
ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 21 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் கேகாலை மற்றும்
வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்
முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்
முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல் | Bicycle provided to Muslim student | Bicycle project begins
முஸ்லிம் மாணவருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது | மிதிவண்டி திட்டம் தொடங்குகிறது.
100 மிதிவண்டி திட்டம் வன்னி மைந்தன் டிக் டோக் தல மூலம் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் முதல் மிதிவண்டியை வன்னி மைந்தன் நன்கொடையாக வழங்கினார்.
இந்த மிதிவண்டி வவுனியாவைச் சேர்ந்த எட்டு வயது மாணவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
உதவிக்கு தொடர்பு கொள்ளவும் - 0044 7536707793
CLICK HERE VIDEO
ஆண் கடத்திக் கொலை
ஆண் கடத்திக் கொலை
ஆண் கடத்திக் கொலை ,ஆண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட நபர் படுகொலை
மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக சடகமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு இறந்தவர் நான்கு மர்ம நபர்களால் ஆட்டோவில் வந்த குழுவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு மாடி வீட்டில் இருந்த பொழுது அங்கு ஆட்டோவில் வந்த கும்பல் இவரை கடத்தி அவரை படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் படுகொலை
இந்தக் கடத்தல் படுகொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு கடத்தி படுகொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற சம்பவம் ,இதன் பின்புலத்தில் அரசியல் பாதாள உலக குழு உள்ளதான செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை இது ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இந்த படுகொலைக்கான காரணம் அதை கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
பள்ளத்தில்கவிழ்ந்த வேன்
பள்ளத்தில்கவிழ்ந்த வேன்
பள்ளத்தில்கவிழ்ந்த வேன் ,வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்
உடுதும்பர, கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட
மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விபத்தில் ஐந்து வயது குழந்தை மற்றும் இரண்டு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக உடதும்பர மற்றும் தெல்தெனிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் கடவத்தை மற்றும் மீரிகமவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
சம்பவம் நடந்த நேரத்தில் கடவத்தையிலிருந்து மீமுரேவுக்குச் சென்ற வேனில் ஆறு பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தபோது இறந்த பெண்களில் ஒருவர் வேனை ஓட்டிச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து உடதும்பர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூத்த துணைகாவல் ஆய்வாளர் பணிநீக்கம்
மூத்த துணைகாவல் ஆய்வாளர் பணிநீக்கம்
மூத்த துணைகாவல் ஆய்வாளர் பணிநீக்கம் முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி நிலந்த ஜெயவர்தன காவல் பணியில் இருந்து நீக்கம்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் மூத்த துணை காவல் ஆய்வாளர்
(எஸ்.டி.ஐ.ஜி) நிலந்த ஜெயவர்தனவின் சேவையை தேசிய காவல் ஆணையம் (என்.பி.சி) அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்துள்ளது.
முன்னர் மாநில புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) தலைவராக பணியாற்றிய ஜெயவர்தன, ஜூலை 2024 இல் உள் விசாரணை நிலுவையில்
உள்ளதால், தேசிய காவல் ஆணையத்தால் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார்.
விசாரணையின் முடிவில், ஜெயவர்தனவை சேவையிலிருந்து நீக்க தேசிய காவல் ஆணையம் முடிவு செய்தது.
ஜூலை 4, 2025 அன்று மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயத்தால் தேசிய காவல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கையின்படி, கட்டாய விடுப்பில் இருந்த ஜெயவர்தன
குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 75 மில்லியன் இழப்பீடு
வழங்கத் தவறியதற்காக ஜெயவர்தன மீது சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.
ஜனவரி 12, 2023 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ்
மற்றும் முன்னாள் எஸ்ஐஎஸ் தலைவர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் தாக்குதல்களைத் தடுக்கக்கூடிய முன் உளவுத்துறையின் மீது செயல்படத்
தவறியதன் மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுவெடிப்புகளில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை ,தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து
அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது
அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று (15) தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரண்டு சரீரப் பிணைகள்
அதன்படி, சந்தேக நபர் தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு ,வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு
பொது மக்கள் பாதுகாப்பு
அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர்
குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது
செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல்
பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.
இரண்டு வார நிகழ்ச்சிக்காக இந்தக் குழு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியின் தாக்கம் மற்றும் புதிய பிராந்திய கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
அத்துடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் குழு பாராட்டியது.
இதற்கிடையில், எதிர்கால பங்காளிகளாக இந்திய-இலங்கை கூட்டாண்மையில் தங்களுக்கு மதிப்புமிக்க பங்கு உண்டு என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு ,தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார்.
சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63
எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி
பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது 3 விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.
மனித புதைக்குழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட
தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக
முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு, உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்”. என்றார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது.
ஏற்கனவே, மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய
காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார்.
அதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு
கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது.
இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட
சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21 ஆம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். என்றார்.
குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் ,2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய
மேலதிக விசாரணை
முயன்றதாகக் கூறி மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சியாளர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்ய மற்றொரு
திகதியை வழங்குமாறு முறைப்பாட்டு தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த வழக்கில் மேலதிக சாட்சி விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய சதி
செய்தமை உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு அமைய 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
NPPபிரதேசசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச் சூடு
NPPபிரதேசசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச் சூடு
NPPபிரதேசசபை உறுப்பினரின் வீட்டின்மீது துப்பாக்கிச் சூடு ,வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள போதும், அவர்கள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை ,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம்
அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்ததாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி.
தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட
சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.
சந்தேகநபர் இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்தி பாதிக்கப்பட்ட வைத்தியரை
அவமானப்படுத்த வேண்டுமென்றே முயற்சிப்பதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, சந்தேக நபர் இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்யான தகவல்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தை கோரினார்.
சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க
ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர்.
கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு
தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு
தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்களில்
கையெழுத்திடுவது இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
சவாலான பொருளாதார சூழ்நிலை
சவாலான பொருளாதார சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல்களை நிறுத்தி வைப்பதாக இலங்கை அறிவித்த பிறகும்,
சவுதி அரேபியா இராச்சியம் நாட்டிற்கு கடன்களை வழங்குவதில் குறிப்பிடத்தக்க
பங்கைக் கொண்டுள்ளது. இது எந்த தடையும் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சவுதி மேம்பாட்டு நிதியத்தால் வழங்கப்படும் கடன்கள் சலுகை
அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன, இது நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையைக் குறைக்க உதவியுள்ளது.
திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள்
இலங்கை அரசாங்கத்திற்கும் சவுதி மேம்பாட்டு நிதியத்திற்கும் இடையிலான இருதரப்பு திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் ஜூலை 14, 2025 அன்று கையெழுத்தானது, மொத்த மறுசீரமைக்கப்பட்ட கடன் மதிப்பு சவுதி ரியால்
(SAR) 516,951,065.02 ஆகும். இந்த ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப்பெருமவும், சவுதி அரேபிய தரப்பின்
சார்பாக சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் ஏ.அல்மர்ஷாத்தும் கையெழுத்திட்டனர். இணையாக, இந்த விஜயத்தின் போது, சவுதி மேம்பாட்டு நிதியத்தின் கடன் நிதியுதவியுடன்
கட்டப்பட்ட ‘வடமேற்கு பல்கலைக்கழக நகர அபவிருத்தி திட்டத்தின்’ திறப்பு விழாவில் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் உயர்மட்டக் குழுவும் பங்கேற்றது.
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் நிறைவடைவது சந்தேகத்திற்கு இடமின்றி சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான
ஆழமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும்.
கான்ஸ்டபிள் ஒருவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
கான்ஸ்டபிள் ஒருவர் கைது ரத்தோலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், போக்குவரத்து குற்றம் தொடர்பாக முறைப்பாட்டாளரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்து, சட்ட
நடவடிக்கை எடுக்காமல் அதனை மீள வழங்குவதற்காக 3,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
ரத்தோலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (14) இரவு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று
அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான
வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும்
செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.
சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார
நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத்
தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani), சவுதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசிய செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் சவுத் அயித் ஆர்.
அல்ஷம்மாரி (Saud Ayid R. Alshammari) மற்றும் நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த
பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும்
வெளிநாட்டு வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் ,ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது
சிரேஷ்ட மாணவர்கள்
சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
இதன்போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல்
பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள்
இதேவேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள்
நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள்தலைவருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள்தலைவருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள்தலைவருக்கு பிணை ,ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
நிஷாந்த விக்ரமசிங்கவை பிணை
வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபருக்கு வௌிநாட்டுப் பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார்
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால்ஊழியர்கள்
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால்ஊழியர்கள்
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால்ஊழியர்கள் ,ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக
மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க
அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை
இதனால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, தற்போதைய ஊழியர்கள் மீது அதிக வேலைப்பளு மற்றும் மேலதிக நேரப் பணி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
காட்டு யானை உயிரிழந்துள்ளது
காட்டு யானை உயிரிழந்துள்ளது
காட்டு யானை உயிரிழந்துள்ளது ,நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.
கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி
பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு,
பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த ‘பாத்திய’ யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது.
பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன்,
வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன்
வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார்.
இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட ‘பாத்திய’ யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது.








































