நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று (21) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆறுமுக பெருமான் வள்ளி
இன்று காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் காலை 7.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி
காலை 8.30 மணிக்கு இருப்பிடத்தை அடைந்த தேர், காலை 09.15 மணியளவில் ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி
பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10.30 மணிக்கு ஆறுமுக பெருமான் ஆலயத்திற்குள் சென்றார்.







