Posted in Uncategorized

இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஒக்டோபர்,13 மாலை ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.

படைத்தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த பாதுகாப்பு செயலமர்வில் “21 ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு” தொடர்பாக கலாநிதி. சுவாமி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

21ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பானது குறிக்கோள்கள், முன்னுரிமைகள், மூலோபாயம் மற்றும் வள அணிதிரட்டல் எனும் நான்கு பரிமாணங்களிலும் மாற்றமடைந்துள்ள விதம் குறித்து கலாநிதி.சுவாமி இதன்போது எடுத்துரைத்தார். இந்த மாற்றங்கள் முற்றிலும் ட்ரோன்கள்,

ரோபோக்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் கணினிகள் போன்ற இலத்திரனியல் மற்றும் சைபர் தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகளால் உருவானவை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த யுகத்தில், போர் என்பது வெறுமெனே ஆயுத பயன்பாடு மற்றும் படைப்பலத்தை சார்ந்து இருக்கப்போவதில்லை, மாறாக இணைய வளங்களை பயன்படுத்தல் (ஒன்லைன் டொமைன்) ட்ரோன் கருவிகளின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரயோகம் ஆகியவற்றில் சார்ந்திருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் நந்தமித்ர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த பாதுகாப்பு செயலமர்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு ) தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட “தி ரோட் டு நந்திக்கடால்”, “கோட்டாபய” ஆகிய இரண்டு புத்தகங்கள் நினைவுப் பரிசாக கலாநிதி. சுவாமியிடம் வழங்கப்பட்டது.

இந்த அமர்வு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹான் குணரத்ன தொகுத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ர்.

    Posted in Uncategorized உலக செய்திகள்

    ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

    ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

    மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

    ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி
    தாக்குதல் (கோப்பு படம்)
    ரியாத்:

    ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி

    கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை

    தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சண்டையின்போது 11 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.

    மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. அப்தியா நகர் மரிப் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

      Posted in Uncategorized

      மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

      மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

      நாளை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

      ஆரம்ப நேரம் :- காலை 7.00 மணி
      ஆரம்ப இடம் :- முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை.
      நிறைவு இடம் :- பருத்தித்துறை கடற்கரை

      Posted in Uncategorized

      லண்டனில் கரை திருடி போதைவஸ்து வியாபாரம் செய்த கும்பல் மடக்கி பிடிப்பு

      லண்டனில் கரை திருடி போதைவஸ்து வியாபாரம் செய்த கும்பல் மடக்கி பிடிப்பு

      லண்டன் கென்ட் Swanscombe பகுதியில் சிவப்பு நிற கார் ஒன்றை திருடிய கும்பல் அந்த காரில் வைத்து போதைவஸ்து வியாபார செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

      குறித்த கார் மீட்க பட்டுள்ளது ,அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பட்டுள்ளனர்
      மக்களே விழிப்பாக இருங்கள் உங்கள் கார்களும் இவ்விதம்திருட்டு போகலாம்

      கரை திருடி
        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

        சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

        சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

        இலங்கையில் சிங்கள காவல்துறை சிப்பாய்கள் இருவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக

        வெட்டியுள்ளார் ,இவரது இந்த வெட்டு தாக்குதலில் சிக்கி படுக்கையமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        மேற்படி குற்ற செயலை புரிந்த அப்பர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

          120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

          எத்தனையோ சாதனையாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தன் சாதனையைத் தானே முறித்து புதிய சாதனை படைக்க விரும்பும் பெண் சுசேதா சதிஷ். பதினோராம் வகுப்பு படிக்கும் பதினாறே வயது நிரம்பிய சிறு பெண் சாதனைப் பட்டியலோ மிகப்பெரியது. இதுவரை கின்னஸ் உலக சாதனை உட்பட மூன்று உலக சாதனைகள் படைத்தவர். சென்ற ஆண்டில் உலகின் சிறந்த சிறுமி (குளோபல் சைல்ட் ப்ராடிஜி அவார்டு) என்ற விருது பெற்றிருக்கிறார்.

          படிப்பு, இசை இரண்டிலும் தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் சுசேதா நடனமும் கற்றவர். தன் இசையால் உலகை நிறைத்துவிடத் துடிக்கும் வேகமும் விவேகமும் நிறைந்த சிறுமி. இறைவன் கருணையும், பெற்றோரின் ஒத்துழைப்பும் முயற்சியும் சுசேதாவின் கடின உழைப்போடு சேரும் பொழுது உலகம் வியக்கும் அற்புதங்கள் தொடர்கின்றன. தேசபக்தியோடு இந்தியாவை நேசிக்கும் துபாயில் வசிக்கும் பெண். தன் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

          என் தாத்தா சேலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார்கள். அப்பாவும் அங்கே படித்தவர்கள் தான். நான் பிறந்தது இந்தியாவில். வளர்ந்தது படிப்பது எல்லாம் துபாயில். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு இந்தியா வந்துவிடுவோம். இந்தியாவில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விட இந்தியா வர நான் விரும்புவதற்கு முக்கியக் காரணம் என் வழிகாட்டியாக ஆசானாக நினைக்கும் பின்னணி இசைப் பாடகி பி சுசிலா அம்மாவைப் பார்ப்பதற்குத் தான். சென்னை வந்தவுடன் அவர்களைத் தான் பார்ப்போம்.

          இந்தியாவிலும் பாடியிருக்கிறேன். இந்தியாவுக்காகவும் பாடியிருக்கிறேன். இந்த கரோனா நோய்த்தொற்று காலத்தில் எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதில் வருத்தம் தான். என்றாலும், இந்த நேரத்தை புதிய சாதனை படைப்பதற்கான பயிற்சி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி.

          மூன்று வயதில் எனக்குப் பாடுவதைக் கேட்டவுடன் திரும்பப் பாடவருகிறது என்று என் பெற்றோர் கர்நாடக இசை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். சில வருடங்களில் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வதற்கும் ஆரம்பித்தேன். ஹிந்துஸ்தானியில் என் குரு சுஜாதா ஹரிஷ்குமார் மற்றும் ஹரிப்ரசாத் ஆவர். தற்பொழுது, ஆஷா மேனன் அவர்களிடம் கர்நாடக இசை கற்றுக் கொண்டும் பயிற்சி பெற்றும் வருகிறேன்.

          மூன்று வயதில் முதன்முதலில் மேடையேறிப் பாடினேன். ஒரு மெல்லிசைக் கச்சேரி. அந்த வயதில் பயமோ பாடியதன் முக்கியத்துவமோ எதுவும் பெரிதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தது பாடினேன் அவ்வளவு தான். ஆனால், மறக்க முடியாத அனுபவம் முதன்முதலில் பி சுசீலா அம்மா பாடிய மேடையில் அவர்களோடு அவர்களுடன் பாடினேன் என்பது. அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்போது எனக்கு ஒன்பது வயது. துபாயில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சிக்கு சுசிலா அம்மா வந்திருந்தார்கள். அன்றைக்குத்தான் அவர்களை நான் பார்த்தேன். அதே மேடையில் பாடுவதற்கு எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்.

          இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சாதனை முயற்சி ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆண்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் நூற்றி இருபது மொழிகளில் தொடர்ந்து பாடியதற்காக இந்த கின்னஸ் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே முப்பது இந்திய மொழிகள், தொண்ணூறு வெளிநாட்டு மொழிகள். இதற்கு ஏழு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆயிற்று. இந்தியத் துணைதூதரகத்தில் நடைபெற்ற என்னுடைய இந்த முயற்சியை இந்தியப் பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் இருவருக்கும் சமர்பித்தேன்.

          பாடுவதற்கு நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். எந்த மொழியானாலும் அதிலே உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை ஆய்வு செய்வதற்கென்று தனி குழுவை நியமித்திருப்பார்கள். அவர்கள் நாம் அந்த மொழியில் சரியாகப் பாடியிருக்கிறோம் என்று நிபுணர்களைக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே நம்முடைய சாதனையை அங்கீகரிப்பார்கள். அப்படியான அங்கீகாரம் கிடைத்த நேரத்தில் என்னுடைய கடின உழைப்புக்கு வெகுமதி கிடைத்துவிட்டதாக நாம் சாதித்திருக்கிறோம் என்பதாக ஆனந்தம் ஏற்பட்டது.

          2018-ஆம் வருடம் நூற்றி இரண்டு மொழிகளில் ஆறு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் பாடினேன். ஒரு நிகழ்ச்சியில் அதிக மொழிகளில் பாடியதற்காக மியாமியில் இயங்கும் அமெரிக்க அமைப்பு உலக சாதனை என்று அங்கீகாரம் தந்தது. அதோடு அதிக நேரம் பாடிய சிறுமி என்றும் மற்றொரு அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதனால் எனக்கு இரண்டு உலக சாதனை செய்ததற்கான மதிப்பு வழங்கப்பட்டது.

          132 மொழிகளில் பாடுவதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எல்லா மொழிகளையும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. பாடுவதற்கென்று ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் இசையை நாம் சரியாக உள்வாங்கி கொண்டால் போதும். நம்முடைய நாட்டில் பல மொழிகள் பேசுகிறோம் என்பதால் இதைப் புரிந்து கொள்வது சுலபம். மலையாளம் பேசுவதற்கும் தெலுங்கு பேசுவதற்கும் தமிழ் பேசுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறோமே. ஒவ்வொரு மொழிக்கும் உள்ள ரிதம் அந்த மொழி பேசும் பொழுது பிடிபடும் அது போலத் தான் பாட்டிலும். அதோடு இது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று என் பெற்றோர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது உண்மையும் கூட.

          தொடர்ந்து இசை சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அவற்றுள் மூன்று முக்கியமானவை. இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பின் பொழுது தேசிய ஒற்றுமைக்கான சின்னம் என்று பிரதமர் அறிவித்த பொழுது ஒற்றுமைக்கான கீதம் என்று இருபத்தியொன்பது இந்திய மொழிகளில் பாடி அதனை பிரதமருக்கு அனுப்பினேன். சென்ற ஆண்டில் கரோனா விழிப்புணர்வுப் பாடல் இருபத்திரண்டு இந்தியா மொழிகளில் பாடி வெளியிட்டோம். இந்த ஆண்டில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு பாடல் நான்கு மொழிகளில் வெளியிட்டோம். இவையெல்லாம் இந்த கொள்ளை நோய் காலத்தில் எனக்கு மிகுந்த மனநிறைவு தந்த பணிகள்

          ஆம். அப்பொழுது எனக்கு எட்டு வயது. கலாம் ஐயா துபாய்க்கு ஒரு புத்தக கண்காட்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இருக்காது? எங்களுக்கும் அந்த ஆவல் இருந்தது. அவர்களைப் பார்ப்பதற்காக இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என்ன காரணத்தாலோ ஐயா வருவது தாமதமாகி விட்டது. மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது.

          பார்ப்பதற்காக விண்ணப்பம் செய்து காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு நேரமின்மையால் கிடைக்கவில்லை. எனக்கும் தான். ஐயா புறப்படும்பொழுது என்னுடைய அப்பா கலாம் ஐயா வணக்கம் என்று தமிழில் உரக்கச் சொன்னார்கள். ஐயா புயல் வேகத்தில் திரும்பிப் பார்த்து எங்களை அழைத்தார்கள். அப்பா என் குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொன்னவுடன் ஐயா என்னை அருகில் அழைத்துப் பேசியதோடு என் தலையில் கை வைத்து சில நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி நின்றுவிட்டார்கள். மனதில் இன்னதென்று சொல்ல இயலாத மறக்க முடியாத அனுபவமாக அந்த நிகழ்வு இருந்தது. கலாம் அவர்களின் ஆசி எனக்குக் கிடைத்தது வரம் என்றே கருதுகிறேன்.

          இன்னும் நிறைய மொழிகளில் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் சென்று பாட வேண்டும். இசையின் நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கின்னஸ் சாதனையை நானே முறியடித்து உலகின் அத்தனை மொழிகளிலும் பாட வேண்டும்

            Posted in Uncategorized

            கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்

            கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்

            இலங்கையில் கொட்டவிண்நிழல் ஆட்சியில் பல இனவாத காட்சிகள் உருவாக்க பட்டு அவை தமிழருக்கு எதிராக திசை திருப்ப பட்டுள்ளன

            அந்த காட்சிகள் யாவும் இவர்கள் வழங்கும் நிதி உதவியில் பயணிக்கின்றன

            அவ்வாறான இனவெறி கொண்ட அத்துரெலிய ரதன தேரரை அந்த கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது

              Posted in Uncategorized

              பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

              பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிரத்தை அடுத்து தற்போது மேலும் பயண தடை நீடிக்க பட்டுள்ளது

              இந்த தடையானது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது ,கோட்டபாயவுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்ட தக்கது

                Posted in Uncategorized

                தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்

                தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்

                முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

                இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

                வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                இந்த நிலையில் பொலிசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.

                ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர்.

                இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

                தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது

                தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

                இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை

                  பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை

                  பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை
                  பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ்
                  லண்டன்:

                  பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (வயது 69) இன்று எஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த எம்பி அமெஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

                  சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் எம்பிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

                  எம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                  எம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  கொலை செய்யப்பட்ட எம்பி சர் டேவிட்டுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் கூறி உள்ளனர்.

                  Posted in Uncategorized

                  கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

                  கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

                  ஐ.பி.எல். தொடரில் நான்காவது முறை வென்ற கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது.

                  கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
                  கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்

                  துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

                  ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

                  2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

                  Posted in Uncategorized

                  ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

                  ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

                  இலங்கை நாவலப்பிட்டி காவல்துறை பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
                  இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                  இவரது மரணம் தற்கொலையா அல்லது விபத்த என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                    கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

                    கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

                    கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது

                    இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

                    மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது

                      Posted in Uncategorized

                      மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

                      மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

                      இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது

                      அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊசி செல்யுதும் நிகழ்வு தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        Posted in Uncategorized

                        கட்டுப்பட்டது தளர்வு குசியில் மக்கள்

                        கட்டுப்பட்டது தளர்வு குசியில் மக்கள்

                        இன்று முதல் பயண கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மட்டுப்படுத்த நிலையில் அகற்ற தளர்வு பட்டுள்ளது

                        திருமண ,ஒன்று கூடல்களில் அந்த மக்கள் கொள்ளளவிற்கு ஏற்பட்ட 25 வீதம் ,மாற்று ஐம்பது வீதமானவர்கள் கூடலாம் என்ற நடைமுதுறை தளரத்த பட்டுள்ளது

                        அனைத்தும் சுகாதர வழிகாட்டல்கள் மூலம் அமைய வேண்டும் என தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          பாம்பை கடிக்க வீட்டு மனைவியை கொன்ற கணவன்

                          பாம்பை கடிக்க வீட்டு மனைவியை கொன்ற கணவன்

                          இந்தியாவில் கணவன் தனது மனைவிக்கு நாக பாம்பை பிடித்து கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் நிரூபிக்க பட்ட நிலையில் தற்ப்போது அவருக்கு சாகும் வரை ஆயுதம் தண்டனை விதிக்க பட்டுள்ளது

                          கள்ள காதல் காரணமாக மனைவியை இவர் வ்விதம் கொலை செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
                          இப்படியும் கணவன் மார்

                            Posted in Uncategorized

                            தாய்வானில் பாரிய தீ – 46 பேர் மானம்- 40 பேர் காயம்


                            தாய்வானில் பாரிய தீ – 46 பேர் மானம்- 40 பேர் காயம்

                            தாய்வானின் 13 டாவது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை நாற்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்


                            கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது
                            மேற்படி விபத்து குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                              Posted in Uncategorized

                              வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                              வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                              தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால்
                              நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் கனேடியத் தூதுவருக்கு சிறீதரன் எம். பி எடுத்துரைப்பு

                              click here full video

                                Posted in Uncategorized

                                விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                                விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                                நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

                                நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                                இதன்போது, அந்த விடுதியை முகாமைத்துவம் செய்த ஆண் மற்றும் விபசாரத்துக்கு உதவிய மற்றும் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது.

                                46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று(14) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

                                  Posted in Uncategorized

                                  இந்திய இராணுவ தளபதி- கோட்டா சந்திப்பு

                                  இந்திய இராணுவ தளபதி- கோட்டா சந்திப்பு

                                  இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை , ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.

                                  பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

                                  தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ
                                  அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து
                                  தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.

                                  பல தேச எல்லைகளால் சூழ்ந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மலைசார்ந்த கடினமான பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் தலைமைப் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்காக இந்திய இராணுவ
                                  அதிகாரிகள் பரிந்துரைக்கும் தரநிலைகள் போன்ற விடயங்களை, ஜெனரல் மனோஜ் முகுந்த், ஜனாதிபதியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

                                  படைப் பிரிவொன்றின் தளபதியாக நியமனம் பெற்ற பின்னரே,தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்த ஜெனரல், அந்தந்தத் தரநிலையினர் ஓய்வுபெறும் வயதெல்லைகள் குறித்தும் விவரித்தார்.

                                  இலங்கை இராணுவ அதிகாரிகளில் சுமார் ஆயிரம் பேர், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளுக்கமைய, மேற்படி இராணுவ
                                  அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் 50 இராணுவ அதிகாரிகளுக்கு, எதிர்காலத்தில் விசேட பயிற்சிப் பாடநெறிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.

                                  இந்திய அமைதிப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை – 4ஆம் மைல்கல் பிரதேசத்தில் தான் பணியாற்றிய காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் நினைவுகள், தற்போதைய இந்த விஜயத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.

                                  முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில், அந்த நினைவுகள் பற்றிக் கலந்துரையாடக் கிடைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  இந்தக் கலந்துரையாடலில் இந்திய இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிகளுக்கான கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஜீவ் தாபர், இராணுவ ஆலோசகர் ஜெனரல் விக்ராந்த் விளாஸ் நாயக், வெளிவிவகாரப் பிரிவின் உறுப்பினர் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்புப் படைகளின்
                                  பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா
                                  ஆகியோரும், கலந்துகொண்டிருந்தனர்.