Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இலங்கையில் பரவும் புதிய நோய்
இலங்கையில் பரவும் புதிய நோய்
மலேரியா ஒழிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் கடந்த ஆண்டு முதல் சோதிக்கப்படாததால், இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக, தேசிய மலேரியா ஒழிப்பு பிரசார இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த ஆண்டின் 9 மாதங்களில் 15 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 30 நோயாளிகளில், 10 பேர் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலேரியா நோய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரத்தப் பரிசோதனை இல்லாமல் சமூகமயமாக்கப்பட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, அவர்களின் இரத்த மாதிரிகளை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்
கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்
கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்
அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்
தற்போது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் சிறுவன் தொடர்ந்து கண்காணிக்க பட்டு வருகிறார்
மேற்படி சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா
புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா
ஈரான் நாட்டு இராணுவம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர்
குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது ,
இஸ்ரேல் ,அமெரிக்காவின் மிரட்டல்கள் மத்தியில் ஈரான் தனது அணுகுண்டு தயாரிப்பு மற்றும் ஏவுகணை சோதனையை தொடராக நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய விமனம் இருவர் மரணம் – சிலரை காணவில்லை
வீழ்ந்து நொறுங்கிய விமனம இருவர் மரணம் – சிலரை காணவில்லை
லெபனான் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று திடீரென கடல் பகுதியில் வீழ்ந்து மூழ்கியது ,இதன் பொழுது சம்பவ இடத்தில இருவர் பலியாகினர்
மேலு சிலரை காணவில்லை
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் -சிதறிய வண்டிகள்
அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் -சிதறிய வண்டிகள்
தெற்கு ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தின் தொடரணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது இதில் இராணுவதத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன
நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் என பாரளுமன்றம் தெரிவித்த
நிலையிலும் அத்துமீறி ஈராக்கில் அமெரிக்கா படைகள் வசித்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அம்பெய்தி மக்களை கொன்ற நபர் – நோர்வையில் நடந்த பயங்கரம்
அம்பெய்தி மக்களை கொன்ற நபர் – நோர்வையில் நடந்த பயங்கரம்
நோர்வே நாட்டின் Kongsberg. பகுதிதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென அம்பை எய்து அதன் மூலம் ஐந்து மக்களை சம்பவ இடத்தில படுகொலை புரிந்துள்ளார்
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்
இந்த தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டுள்ளார்
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள்
பாடசாலைக்கு வந்த யானைகள்
மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன.
இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பியை வெட்டி கொன்ற அண்ணா
தம்பியை வெட்டி கொன்ற அண்ணா
குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரனும் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு
புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு
முல்லைத்தீவின் இருவேறு இடங்களில் இருந்து, நேற்று (12) வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அளம்பில் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணி ஒன்றில் இருந்து, துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பில், நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முள்ளியவளை – கேப்பாபிலவு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலக்கு ரக பயணிகள் விமானம் ஒன்று திடிரென வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கியது
இந்த விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் வீடு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை
பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென வீசிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
காணமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது
நீர்மூழ்கி இரகசியங்களை விற்க முனைந்த இராணுவ தம்பதிகள் கைது
நீர்மூழ்கி இரகசியங்களை விற்க முனைந்த இராணுவ தம்பதிகள் கைது
அமெரிக்காவில் தயாரிக்க படும் புதியவகை நீர்மூழ்கி கப்பலின் இரகசியங்களை திருடி எதிரி நாட்டு படைகளிற்கு விற்க முனைந்த இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவரும் இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர் ,அமெரிக்கா வெளியாக
உளவுத்துறை இந்த விடயத்தை கண்டு பிடித்த நிலையில் இருவருக்கும் சாகும்வரை ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் மூன்றாம் அலை கொரானாவுக்கு 181 பேர் மரணம்
பிரிட்டனில் மூன்றாம் அலை கொரானாவுக்கு 181 பேர் மரணம்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 28 தினத்தில் 181
பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் 137,944. பேர் பாதிக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுளள்து .குளிர் காலத்தில் இந்த நோயின் தாக்குதல் அதிகமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
இலங்கையில் ஐநாவின் கீழ் பொதுஜென வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன ,அவை பெரும் பாண்மை இனத்தவர்களினால் அடக்க பட்டு ,அழிக்க பட்டு அவர்கள் உரிமைகள் பறிக்க பட்டு நிர்கதியாக உள்ளனர்
இவ்வேளையில் இந்த கொலைக்கு தீர்வு காண மறுக்கும் ஐநா அதனை செய்திட வேண்டும் என்பதே இவரதும் ,தமிழர்களின் ஏகோபித்த கருத்து என்பது குறிப்பிட தக்கது
இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது
இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது
இலங்கை திருகோணமலையில் இருந்து கடல்வழியாக நியுசுலாந்திற்கு செல்ல முயன்ற அறுபத்தி மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கடல் வழியாக வெளி நாயடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி அந்த பணத்தை மகிந்த மகன் கொள்ளையடித்து வருகினார்
இவர் தான் இந்த முகவர்களின் பிரதான முகவர் என தெரியாது பலர் பல லட்சணங்களை வழங்கி மோசம் போகின்றனர்
காவல்துறையால் கைது செய்ய பட்டவர்கள் சிறையில் அடைக்க பட்டால் அவர்களை வெளியில் விடுதவதற்கும் ஈவேரா டீல் பேசி பணத்தை கொள்ளையடிக்கிறார்
இதனை தெரியாது அப்பாவி தமிழர்கள் ஏமாந்து போகின்றமை வருந்த தக்கது
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் இருபத்தி மூன்று பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பலர் பாதிக்க பட்டுள்ளனர்
நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் இந்த மரணங்களை தடுக்க முடியாது சிங்கள அரசு தினறி வருகிறது
படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
காங்கோவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்
முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்
முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், நேற்று (11), கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட வேளை, மாவட்ட கடற்றொழிலாளர்களின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,
அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள், உள்ளூர் மீனவர்களின் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்ததுடன், கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்தின.
இது குறித்து மாவட்ட கடற்றொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இராணுவ தளபதி இலங்கையில்
இந்திய இராணுவ தளபதி இலங்கையில்
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில், காலை 11.05 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருந்தனர்.
இந்தக் குழுவை வரவேற்க, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏராளமானோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






