Posted in Uncategorized

அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்


அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்

அமெரிக்கா Arkansas State பகுதியில் நடத்த பட்ட திடீர் கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஊழியர் மீதும் கத்தி

வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

சமீப காலங்களாக இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்

    வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்

    பாகிஸ்தான் நாட்டின் காவல்துறை வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட ஊந்துருளி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதகாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன


    தலிபான்கள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் பாகிஸ்தானில் இந்த குண்டு தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

      30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

      நையீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் முப்பது பேரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்


      தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர்

      இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற போதும் இவ்வாறான அதிரடி

      தாக்குதல்களில் மக்கள் பலியாகி வருவதாக இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்


        அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்

        அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்

        கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்

        இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

          வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி


          தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

          பாகிஸ்தானில் வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
          தீ விபத்து

          பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

          அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

          ஆனால் அதற்குள் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

          வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

            Posted in Uncategorized

            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

            வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

            ஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
            கோட்டயம்:

            கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

            இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

            வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

              Posted in Uncategorized

              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

              கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- சிக்கலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
              கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அப்பார்ட்மெண்ட்.
              சென்னை:

              அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

              இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

              முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

              இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

              சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

              கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.

              இந்த சோதனையொட்டி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

              இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

              விஜயபாஸ்கர்

              விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

              விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

              விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, கொரோனா கால கட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

              சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.

              இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

              திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான வீடு, கிராப்பட்டி பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் குருபாலன் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.

              செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டில் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

              காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

              அஜய்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

              கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி. கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

              அனைத்து இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

              சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

              கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

              கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

              இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

              இது தொடர்பான விரிவான தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை வெளியிட உள்ளனர்.

              43 இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

                Posted in Uncategorized

                பாலத்தில் தவறி விழுந்த எம்.பி

                பாலத்தில் தவறி விழுந்த எம்.பி

                பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெர்ணான்டோ குறித்த பாலத்தில் தவறி விழுந்துள்ளார்.

                113 அடி நீளமான குறித்த பாலம் பயணிக்க முடியாதளவு பழுதடைந்து உள்ளதால், இதனூடாகப் பயணிக்கும் ஹாலிஎல மற்றும் ஊவாபரணம விவசாயிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

                குறித்த பாலத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்ற போது, அதனை கண்காணிப்பதற்காக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வருகைத் தந்துள்ளார்.

                இதன்போது, பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய, பாலத்தில் நடந்த டிலான் எம்.பி, இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.

                அப்போது அருகிலிருந்த மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச உள்ளிட்டவர்கள் டிலானை காப்பாற்றியுள்ளனர்.

                இந்த நிலையில்,கீழே விழுந்து இந்த பாலத்தின் நிலைமையை தான் நன்றாக புரிந்துக்கொண்டதால், விரைவில் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

                  Posted in Uncategorized

                  பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன்

                  பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன்

                  இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் (16) வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

                  அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஐந்து வயதுடைய சிறுமியின் அந்தரங்க உறுப்பை நகரங்களால் கீறி காயப்படுத்தியுள்ளார்.

                  இதுதொடர்பில், தன்னுடைய பெற்​றோருக்கு தெரிவிக்கவே, இராகலை பொலிஸில் சிறுமியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். அதன்பின்னர், பொலிஸாரின் உதவியுடன் அச்சிறுமி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

                  அதன்பின்னர் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அச்சிறுவனை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                    Posted in Uncategorized

                    பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

                    பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

                    எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

                    அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து படிப்படியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in Uncategorized

                      இராணுவ சார்ஜன்ட் திடீர் மரணம்

                      இராணுவ சார்ஜன்ட் திடீர் மரணம்

                      பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார்.

                      நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      இவ்வாறு உயிரிழந்தவர் 53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      அவர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, 2 மாதங்களுக்கு முன்னர், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வெல்லவாய- வருணகம இராணுவ முகாமுக்கு வருகைத் தந்துள்ளனர்.

                      நேற்று முன்தினம் (16) இரவு நித்திரைக்குச் சென்ற மேஜர், நேற்று மாலை வரை அறையிலிருந்து வெளியே வராமையால், அவர் தங்கியிருந்த அறை திறந்து பார்க்கப்பட்டுள்ளது.

                      இதன்போது கட்டிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெறும் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        Posted in Uncategorized

                        ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை

                        ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை

                        அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஓட்டோக்களுக்கும மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

                        போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

                        இது தொடர்பான பணிப்புரை, 2017இல் வெளியிடப்பட்டது. ஆனால் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை.

                        இதையடுத்து, இந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க போக்குவரத்து அமைச்சுன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                        மீற்றர் பொருத்துவதற்கு, ஜனவரி முதல் ஜூன் வரை சலுகை காலம் வழங்க உள்ளதாகவும், ஜூன் 01க்கு பிறகு மீற்றர் இல்லாமல் இயங்கும் ஓட்டோக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்

                          பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்

                          பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை கடந்து படகுமூலம் அறுபது சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கென் பகுதியில் நுழைந்துள்ளனர்

                          ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்த நிலையில் அகதிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது


                          மேற்படி அகதிகள் நுழைவை தடுக்கபிரிட்டன் பல்வேறு பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த பொழுதும் அவை பயனளிக்கவில்லை என தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்

                            உலக

                            அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்

                            அமெரிக் டெஸ்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் காவல்துறை சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்
                            மேலும் இரண்டிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                            காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
                            மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              Posted in Uncategorized

                              முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

                              முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

                              முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

                              நேற்று (16) மாலை, தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றை துப்புரவு செய்யும் போது, வெடிபொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு

                              விரைந்த விசேட அதிரடிப்படையினர், கிணற்றை சுத்தம் செய்பவர்களை தொடர்ச்சியாக துப்புரவு செய்யுமாறு கூறியுள்ளார்கள்.

                              கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

                              இதன் போது, கிணற்றில் இருந்து 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

                              இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

                                Posted in Uncategorized

                                பருத்தித்துறையை வந்தடைந்தத பேரணி

                                பருத்தித்துறையை வந்தடைந்தத பேரணி

                                மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி, முல்லைத்தீவில், இன்று காலை ஆரம்பித்த படகு பேரணி, பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

                                முல்லைத்தீவு – கள்ளப்பாடு கடற்கரையில், இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் படகு பேரணி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.

                                நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் பேரணியாக பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தனர்.

                                இதன் பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                                  Posted in Uncategorized

                                  பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன்

                                  பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன்

                                  தன்னை கடித்த நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில், இன்று (17) இடம்பெற்றுள்ளது.

                                  இந்நிலையில், குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                  குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்த போது, பாம்பு கடிக்கு இலக்கானார்.

                                  இதையடுத்து, குறித்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்துக் கொண்டு, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

                                  இதன்போதே, சிறுவனை கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது.

                                    Posted in Uncategorized

                                    இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

                                    இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

                                    தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஒக்டோபர்,13 மாலை ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.

                                    படைத்தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த பாதுகாப்பு செயலமர்வில் “21 ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு” தொடர்பாக கலாநிதி. சுவாமி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

                                    21ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பானது குறிக்கோள்கள், முன்னுரிமைகள், மூலோபாயம் மற்றும் வள அணிதிரட்டல் எனும் நான்கு பரிமாணங்களிலும் மாற்றமடைந்துள்ள விதம் குறித்து கலாநிதி.சுவாமி இதன்போது எடுத்துரைத்தார். இந்த மாற்றங்கள் முற்றிலும் ட்ரோன்கள்,

                                    ரோபோக்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் கணினிகள் போன்ற இலத்திரனியல் மற்றும் சைபர் தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகளால் உருவானவை என்று அவர் குறிப்பிட்டார்.

                                    மேலும் இந்த யுகத்தில், போர் என்பது வெறுமெனே ஆயுத பயன்பாடு மற்றும் படைப்பலத்தை சார்ந்து இருக்கப்போவதில்லை, மாறாக இணைய வளங்களை பயன்படுத்தல் (ஒன்லைன் டொமைன்) ட்ரோன் கருவிகளின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரயோகம் ஆகியவற்றில் சார்ந்திருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

                                    பாதுகாப்பு அமைச்சின் நந்தமித்ர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த பாதுகாப்பு செயலமர்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு ) தலைமையில் இடம்பெற்றது.

                                    இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட “தி ரோட் டு நந்திக்கடால்”, “கோட்டாபய” ஆகிய இரண்டு புத்தகங்கள் நினைவுப் பரிசாக கலாநிதி. சுவாமியிடம் வழங்கப்பட்டது.

                                    இந்த அமர்வு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹான் குணரத்ன தொகுத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ர்.

                                      Posted in Uncategorized உலக செய்திகள்

                                      ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

                                      ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

                                      மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

                                      ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி
                                      தாக்குதல் (கோப்பு படம்)
                                      ரியாத்:

                                      ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

                                      ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி

                                      கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

                                      இந்நிலையில், மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை

                                      தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சண்டையின்போது 11 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.

                                      மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. அப்தியா நகர் மரிப் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

                                        Posted in Uncategorized

                                        மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

                                        மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

                                        நாளை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

                                        ஆரம்ப நேரம் :- காலை 7.00 மணி
                                        ஆரம்ப இடம் :- முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை.
                                        நிறைவு இடம் :- பருத்தித்துறை கடற்கரை