Posted in Uncategorized

பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும்  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு

செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

    Posted in Uncategorized

    இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்

    உணவு, மருந்து, எண்ணெய்க்கு இந்தியா..! கடன்சுமை மறுசீரமைப்புக்கு ஐஎம்எப்..!

    • இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்
      இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று, புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால், இந்த சித்திரை சிங்கள-தமிழ் புது வருடம், ராஜபக்ச அரசுக்கு கடைசி வருடமாகி இருக்கும். புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்.

    அதேபோல் சர்வதேச நாணய நிதியுடன் உரையாடி பழைய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறார்கள். அதைதான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கி,

    பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து, வீணடித்து ஏற்றி வைத்துள்ள கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்காவிட்டால், இலங்கை அதோகதிதான்.

    நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

    மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கரிசனையில் எடுக்காமல் இலங்கையின் இன்றைய அரசு அராஜகமாக செயற்பட்டது. இந்நிலைமை நீடித்து இருந்தால், இங்கும் ஒரு

    உக்ரைன் நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று இலங்கை – இலங்கை உறவுகள் ஒப்பீட்டளவில் சீரமைக்கப்பட்ட காரணத்தால் இந்நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

    பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்க முயலும் அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தங்களையும் நேர்மையுடன் அனுசரிக்க வேண்டும். 1964ன் சிறிமா-

    சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தம்,1987ன் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அமுலாக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசு பதில் கூற வேண்டியுள்ளது. இவற்றை கண்காணிக்கும் கடப்பாடு இந்திய அரசுக்கும் இருக்கிறது.

    அதேவேளை, இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து வீணடித்த கடன் சுமையை, திருப்பி

    செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்க, சர்வதேச நாணய நிதியை நமது அரசாங்கம் நாடுகிறது.

    சர்வதேச நாணய நிதியை பற்றி இலங்கையில் பாரம்பரியமாக நல்லெண்ணம் கிடையாது. எனினும் இன்று கடன் சுமையை மறு சீரமைக்க வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

    இந்தியாவிடம் புதிய கடன் வாங்கி அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதை போன்று சர்வதேச நாணய நிதியிடம், பொருள் வாங்க கடன் பெற முடியாது. இதுபற்றி இன்று இலங்கை அரசுக்கு உள்ளேயே தெளிவில்லை. சர்வதேச

    நாணய நிதியை நாடுவது ஏற்கனவே வாங்கிய கடன்களை, கால அவகாசம் பெற்று எப்போது, எப்படி திருப்பி செலுத்துவது என்ற மறுசீரமைப்புக்காக என்பதை மறக்க கூடாது.

    அதேவேளை சர்வதேச நாணய நிதி, ஐரோப்பிய யூனியனின் ஜிஎஸ்பி ப்ளஸ் போன்ற நிறுவன செயற்பாடுகளுக்கு பின் நிற்கும் மேற்கத்தைய நாடுகள், இந்நாட்டில் இன்றுள்ள 20ம் திருத்தம் அகற்றப்பட்டு, அதை பழைய அசல் ஷரத்துகளுடன் 19ம்

    திருத்தம் பிரதியீடு செய்ய வேண்டும் என இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் 20ம் திருத்தம் மூலம் உருவான சர்வதிகார ஜனாதிபதியை வரவேற்ற

    இலங்கை மக்கள், இன்று 20 போய் 19 மீண்டும் வருமானால் அதை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆகவே அதற்கான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்.

      Posted in Uncategorized

      ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை

      ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை

      ரசியா நாட்டின் ஆதரவு ஊடகமாக விளங்கி வரும் rt ஊடகம் பிரிட்டனில் ஒளிபரப்ப

      மற்றும் இயங்க தடை விதிக்க பட்டுள்ளது

      இந்த ஊடகம் பிரிட்டனில் அதன் ஒளிபரப்பை மேற்கொள்ள உரிய அனுமதி பத்திரம்

      பெற்று இருக்கவில்லை என ஆப்காம் தெரிவித்து இந்த தடையினை வழங்கியுள்ளது

      உக்கிரேன் நாட்டில் ரசிய இராணுவம் ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும்

      நிலையில் அதன் செய்திகளை முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் ஒளி பர பரப்பை


      வந்த நிலையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று இருப்பதாக கருத படுகிறது

        Posted in Uncategorized

        4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்

        4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்

        அட்லாந்திக் கடல் பகுதியில் 4000 கார்களை ஏற்றிய படி பயணித்து கொண்டிருந்த

        பெரும் சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இதன் போது அதில் பணியாற்றிய 27 மாலுமிகள் போர்த்துக்கல் கடற்படையினரால் மீட்க பட்டுள்ளனர்

        இந்த கப்பலில் உலகில் அதிக விலை உயந்த Lamborghinis including Urus SUVs as well as Aventador and Huraca
        கார்கள் என்பன உள்ளடக்க பட்டுள்ளன

        வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கும் முகமாக ஆடர் செய்ய பட்டு கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட கப்பலே இந்த தி விபத்தில் சிக்கியது

        இந்த தி விபத்துக்குரிய கரணம் இதுவரை வெளியிட படவில்லை,தீயினை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

          Posted in Uncategorized

          ஈரான் கடலில் மூழ்கிய கப்பல் -மாலுமிகள் தப்பினர்

          ஈரான் கடலில் மூழ்கிய கப்பல் -மாலுமிகள் தப்பினர்

          ஈரான் கடல் பகுதியில் கார்களை ஏற்றிய வண்ணம் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அங்கு
          வீசிய புயலில் சிக்கியது

          இதன் பொழுது அந்த கப்பல் கடலில் மூழ்கிய வண்ணம் உள்ளது

          எனினும் அந்த கபபிலில் பணிபுரிந்த முப்பது மாலுமிகள் ஈரான் கடற்படையால் காப்பற்ற பட்டுள்ளனர்

            Posted in Uncategorized

            ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்

            ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்

            உக்கிரேன் கீவ் நகரை சுற்றிவளைத்து ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,


            இந்த முற்றுகை தாக்குதலில் சிக்கி பிரபல நடிகைOksana Shvets’ பலியாகியுள்ளார்

            இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

              உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

              உக்கிரேன் மேற்கு Lviv பகுதி சர்வதேச விமான நிலையம் மீது ரசியா திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது

              இந்த தாக்குதலில் சிக்கி அந்த விமான தளம் பலத்த சேதமடைந்துள்ளது ,கட்டடங்கள் . உடைந்து நொறுங்கியுள்ளது

              அகோர குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் ஆமை வேகத்தில் ரசிய படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்

                ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்

                உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்வித்துள்ளது.

                உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்- இங்கிலாந்து தகவல்
                ரஷிய ராணுவம்

                உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

                ஆனால் பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. குறிப்பாக தலைநகர் கிவ்வையும், 2-வது பெரிய நகரமான கார்கிவையும் பிடிப்பதில் ரஷிய ராணுவம் திணறி வருகிறது.

                கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள போதிலும் நகருக்குள் இன்னும் நுழையவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.

                இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

                இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை கூறும் போது, ‘‘ரஷிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியாவின் படையெடுப்பு உக்ரைன் நகரங்களில் சமீப

                நாட்களில் ஸ்தம்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
                இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.

                  Posted in Uncategorized

                  ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்

                  ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்

                  7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் 101 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                  அவமானப்படுத்தியதால் ஆத்திரம்: ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் மாணவர்

                  பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

                  அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது.

                  அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை நூற்றுக்கணக்கான டி.என்.ஏ. மாதிரிகள் என

                  பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்த போதும் பலன் கிடைக்காமல் இருந்தது.

                  இந்த நிலையில் கொலை நடந்த 16 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஆசிரியை மரியா வெர்லிண்டனை கொன்றது முன்னாள் மாணவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

                  37 வயதான கன்டர் உவென்ட்ஸ் என்பவர் தனது 7 வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்தார்.

                  அப்போது கன்டர் உவென்ட்ஸ் பற்றி ஆசிரியை மரியா சில கருத்துக்களை தெரிவித்தார்.

                  இது தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கன்டர் உவென்டஸ் ஆத்திரம் அடைந்தார். அதை மனதில் வைத்து கொண்டே இருந்து அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு

                  தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

                  இந்த கொலை வழக்கு விசாரணையின் போது கன்டர் உவென்ட்ஸ் தனது டி.என்.ஏ. மாதிரியை வழங்கி இருந்தார்
                  . இதனால் தான் சிக்கி கொள்வோம் என்பதால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

                    Posted in Uncategorized

                    கணவன் மனைவியை தாக்கிய யானை

                    கணவன் மனைவியை தாக்கிய யானை

                    அடம்பன் – முருங்கன், மன்னார் பகுதியில் யானை தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்

                    றி நேற்று உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

                    சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சதானந்தன் சுஜாதா வயது 46 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    உயிரிழந்த பெண்ணின் வீடு அடம்பன் பகுதியில் உள்ள காட்டுன் அண்மித்தே காணப்படுகின்றது.

                    தினந்தோறும் குறித்த பெண்ணின் வீட்டுக்கருகில் யானை வருவது வழமை. இவர்கள் யானைக்கு வெடி வைத்து மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

                    கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் இவர்களின் வளவுக்குள் யானை வந்துள்ளது.

                    வழியில் சென்று பார்த்த பொழுது வீட்டை விட மிக உயரமான யானை வந்துள்ளது. இவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபொழுது யானை வீட்டுக்கு அருகில் நின்றுள்ளது.

                    கணவனை தும்பிக்கையால் இழுத்து தாக்கியுள்ளது. மனைவி யானைக்கு அஞ்சி அருகிலுள்ள வளவுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார். மனித வாடையை நுகர்ந்து கொண்ட யானை அடுத்த வளவுக்குள் ஒளிந்து கொண்ட மனைவியை தாக்கியுள்ளது.

                    இதனிடையே கணவன் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.

                    ஆவேசமடைந்த யானை வீட்டிற்குள் புகுந்து கொள்ள முற்பட்ட போதும் அதன் உயரம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

                    இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மனைவியை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றிக்கொண்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்

                    அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி மானைவி சிகிச்சை பெற்று வந்தார்.

                    நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பப்பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று
                    பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

                    Posted in Uncategorized

                    அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

                    அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

                    அமெரிக்காவின் புகழ் பூத்த ஊடகமாக விளங்கி வரும் பொக்ஸ் நியூஸ் ஊடக நபர்கள் இருவர் உக்கிரேன் கீவ் நகரின் புறநகர் பகுதியில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                    இவர்களின் பெண் செய்தியாளர் மற்றும் கமரா மான் ஆகியோர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                    இதுவரை உக்கிரேனில் மூன்று அமெரிக்கா ஊடாக நபர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                      அமெரிக்கா இராணுவம்
                      Posted in Uncategorized

                      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                      ஈராக்கின் Saladin நகர மாநிலத்தில் அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை

                      இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா வாகனங்கள் சேதமடைந்துள்ளன

                      அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து ஈரானின் ஆதரவு படைகள் தொடர் தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்

                      இவர்களின் கெரில்லா தாக்குதலினால் அமெரிக்கா படைகள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்

                      எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் தெரிவிக்கவில்லை.

                        Posted in Uncategorized

                        அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

                        அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

                        உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா கனடா

                        உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரசியா நாட்டின் முக்கிய அதிகரிகளுக்கு எதிராக தடை விதித்துடன் அவர்கள் சொத்துக்களையும் முடக்கியது

                        அது போல ரசியா தரப்பும் தனது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது

                        இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,கிளாரிகிளின்ரன்,உளவுத்துறை தலைவர் மற்றும்

                        ஒரு டஜன் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்க பட்டுள்ளது

                        உங்களால் மட்டும்தான் அறிவிக்க முடியுமா எங்களினாலும் முடியும் என பதிலுக்கு

                        புட்டீனும் அறிவித்துள்ளது மூன்றாம்
                        உலக போரின் ஆரம்பம் இதுவாக பார்க்க தோன்றுகிறது

                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                          Posted in Uncategorized

                          தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்

                          தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்

                          அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உள்ள பல் பொருள் அங்காடி கார் பார்க்கில்

                          ,காருக்குள் வைத்து தனது தாயினை மூன்று வயது சிறுவன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          தயார் தனது துப்பாக்கியை கவனயீனமாக வைத்ததன் காரணமாக சிறுவன் அழுத்திய

                          நிலையில் துப்பாக்கி குண்டு தாயின் உடலில் துளைத்து அவரது உயிரையே குடித்துள்ளது

                          மேற்படி சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்த பொழுது தாய் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் ,

                          மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

                          உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

                          உக்கிரேன் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் ஒன்றினை ரசியா

                          படைகள் தம் வச படுத்துகின்றனர்

                          அவ்விதம் ஆக்கிரமிக்கும் அந்த விமான தள தரையிறக்கம் மற்றும் முற்றுகை


                          தாக்குதலை ரசியா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது ,அந்த காட்சிகள் இவை

                          இதில் அழுத்தி காணொளி பார்க்க

                            Posted in Uncategorized

                            மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தல் – ரசியா மீது வழக்கு தொடுத்துள்ள அவுஸ்ரேலியா

                            .

                            மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தல் – ரசியா மீது வழக்கு தொடுத்துள்ள அவுஸ்ரேலியா

                            அவுஸ்ரேலியா பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியாவின் குற்ற செயலுக்கு அவுஸ்ரேலியா வழக்கு தொடுத்துள்ளது

                            சர்வதேச நீதிமன்றில் இந்த வழக்கினை தொடரவுள்ள அவுஸ்ரேலியஷ,ரசியாவை தண்டித்து அடக்கியாள துடிக்கிறது

                            ஆனால் இது அரசியல் ரீதியாக சாதாரண ஒன்றா என்பதும் ,இந்த சட்ட


                            மிரட்டல்களுக்கு ரசியா அடி பணியுமா என்பதையும் பொருந்திருந்தே பார்க்க வேண்டும்

                              Posted in Uncategorized

                              ரசியாவின் விமானத்தில் மோதிய ஏவுகணை-யுத்தகளத்தில் நடந்த அந்த அதிசயம்

                              ரசியாவின் விமானத்தில் மோதிய ஏவுகணை-யுத்தகளத்தில் நடந்த அந்த அதிசயம்

                              உக்கிரேன் மீது ரசியா போர் விமானங்கள் அகோர வான்வெளி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                              இதில் அதி உயர் ரக போர் விமானங்களாக விளங்கும் su 25 சண்டை விமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது

                              இந்த விமானங்கள் மீது உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,

                              இதில் இதே ரக விமானம் ஒன்றை ஏவுகணை தாக்கியது ,ஆயினும் விமானி சாதூரியாமாக விமானத்தை தரை இறக்கி தப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது

                              சண்டை களத்தில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்றாக இது பார்க்கக் படுகிறது

                                Posted in Uncategorized

                                சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு

                                சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு

                                சீனாவின் மூன்றாவது அலையாக வேகமாக கொரனோ நோயினை ஒத்த புதிய வைரஸ்

                                பரவி வருவதால் சீனாவின் அதிக மக்கள் தொகை வசிக்கும் நகரான Shenzhen அடித்து பூட்ட பட்டுள்ளது

                                கடந்த ஒரு வாரத்தில் ஒடித்து பூட்ட பட்ட இரண்டாவது நகர் இதுவாக பதிய பெற்றுள்ளது

                                இந்த நோயின் தாக்குதல் வேகமாக ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளையும் பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                                  Posted in Uncategorized

                                  பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

                                  பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

                                  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது

                                  மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அபாய அறிவிப்பு வெளியிட

                                  பட்டுள்ளது ,பிரிட்டனை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இந்த அறிவிப்பை
                                  வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்

                                    கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்

                                    கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் முக்கிய சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
                                    வண்டி முந்தி செல்ல முற்பட்ட பொழுதுகு விபத்தில் சிக்கியது

                                    இதன் பொழுது அதில் பயணித்த ஐந்து இந்தியர்கள் சம்பவ இடத்தில பலியாகினர்

                                    மேலும் இஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

                                    குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன