Posted in Uncategorized

இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான

இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்

உக்ரைன் ராணுவம் எதிர்பார்த்ததை விட கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதால் ரஷியாவுக்கு அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு
ரஷியாவின் தாக்குதலில் சிதிலமடைந்த வணிக வளாகம்
கீவ்:

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி

வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.

இந்த சண்டையில் ரஷிய ராணுவம் தரப்பில் இதுவரை 7000 முதல் 15 ஆயிரம் வரையிலான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி

உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்

Posted in Uncategorized

ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் நலமாக உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்.

உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக சிலவற்றில் இந்தியா நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
ஜோ பைடன்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை

நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது. இதேபோல் குவாட் அமைப்பில்

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளது. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவுக்கு எதிராக உள்ளன.

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

இந்தியா ஐ.நா. சபயைில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பொருளாதாரத்தடை காரணமாக

ரஷியா கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மலிவு விலையில் விற்க முடிவு செய்தது.

ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

தங்களுன் நட்பில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும்போது இந்தியா மட்டும் தனித்து இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது.

நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், ‘‘நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால்

, குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது. ஆனால், ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.

புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ என்றார்

    தீ குளித்த
    Posted in Uncategorized உலக செய்திகள்

    தீயில் கருகி 13 பேர் மரணம்

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார்

    மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

    அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோனில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செகந்தராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    பலியானவர்கள் விவரம் வருமாறு:-

    சிக்கந்தர் (வயது 40), தினேஷ் (35), ராஜேஷ் (25), பிட்டு (23), கோலு (28), தாமோதர் (25), சத்யேந்தர் (40), தீபக் (25), சிண்டு (27), பங்கஜ் (23), ராஜூ என தெரியவந்துள்ளது.

    மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் குடோனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாப்பையா தெரிவித்தார்.

    மர டிப்போ உரிமையாளர் சம்பத் மர டிப்போ வைப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். குடோன் வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மர டிப்போ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படியுங்கள்…ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

    Posted in Uncategorized

    ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

    ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

    ரசியா உக்கிரேன் மீது இராணுவ நகர்வை ஆரம்பித்து அகோரமான தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

    இடைவிடாது நடத்த படும் இந்த தாக்குதலில் உக்கிரேன் எண்பது வீதமான பகுதிகள் அழிக்க பட்டோ அல்லது செயல் முடக்க பட்டோ உள்ளது

    இவ்வாறான வேளை அந்த மண்ணில் ரசிய படைகள் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் குற்றம் சுமத்தியுள்ளது

    மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்து, அந்த

    நாட்டு அதிபர்களை தூக்கிலிட்டு தனது சர்வாதிகாரத்தை காண்பித்து ஏப்பம் விட்ட அமெரிக்கா இவ்விதம் கூக்குரல் போடுகிறது

    இனஅழிப்பு என்ற பத்ததை மறைத்து போர்க் குற்றம் என்கிறது

    அப்படி என்றால் அமெரிக்கா பாயங்கரவாதம் என்ற போர்வையில் நடத்திய இனப் படு

    கொலைக்கு என்று தீர்வு கிட்டும் என்பது பாதிக்க பட்ட நாடுகளின் மக்களின் கேள்வியாக உள்ளது

    இது ஒரு புறம் இருக்க ,ரஷியா மீது தடைகள் தொடர்ந்தால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபானர்கள் எச்சரிக்கின்றனர்

      Posted in Uncategorized

      அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை

      அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை
      ரஷிய கொடி, அமெரிக்கா கொடி

      உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நிலையில், அந்நாட்டின் அதிபர் புதின் குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.

      புதின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் பைடன் குற்றம் சாட்டியிருந்தார்.

      பைடன், புதின்

      இந்நிலையில், பைடன் விமர்சனத்திற்கு ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான்

      சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

      இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதின் குறித்த பைடன் கருத்துக்கள் ஏற்றுக் முடியாதவை என்றும், உயர்த்த பதவியில் இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ரஷியா-அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும், மீண்டும் இது தொடர்ந்தால் தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

        Posted in Uncategorized

        வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

        வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

        சீனாவின் Eastern Airlines விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 132 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,


        திடீரென கட்டு பாட்டு அறையுடன் தனது தொடர்புகளை துண்டித்து கொண்டது

        தற்போது இந்த விமானமானது Guangxi மாகாணத்தில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        குறித்த விமான விபத்து தொடபில் உடனடி விசாரணைகள் ஆரம்பித்து விபத்து

        தொடர்பான விடயத்தை தெரிவிக்கும்படி சீன அதிபர் அறிவித்துள்ளார்

          Posted in Uncategorized

          ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

          ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

          உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பேச்சுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          இந்த பேச்சு மேசையில் உக்கிரேன் இராணுவத்தினர் ஆயுதங்களை கையளித்து சரணடையுமாறு கூறிவருகிறது

          அதற்கு உக்கிரேன் மறுத்து வருகிறது ,இதனால் அந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளது

          மேலும் தமது இலக்கு நோக்கி மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவாறு ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன

            Posted in Uncategorized

            கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

            கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

            Arkansas பகுதியில் இடம் பெற்ற கார் ஓட்ட பந்தய காட்சிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

            நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் ,மேலும் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்

            இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

            காயமடைந்தவர்களில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in Uncategorized

              படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

              படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

              நியுசுலாந்தில் மீன் பிடி படகு ஒன்று புயலில் சிக்கி கவிழ்ந்ததில் நான்கு பேர்

              பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்

              ஐவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ,உயிர் தப்பியவர்க்ள கரைக்கு திரும்பினர்

                Posted in Uncategorized

                உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்

                உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்

                உக்கிரேனின் மேற்கு பகுதியில் ,போலந்து எல்லை அருகே அமைந்துள்ள விமான

                திருத்தும் இராணுவ முகாம்கள் மீ து ரஷியா இராணுவத்தினர் கருங்கடல் பகுதியில் இருந்தவாறு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்

                இந்த தாக்குதலில் அந்த விமான தளம் பாரிய சேதமடைந்துள்ளது

                அங்கு பெரும் புகை மூட்டம் வானளாவிய ரீதியில் பரவி வருகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன
                ஆனால் உக்கிரேன் இராணுவமோ தாம் ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தம்பட்டம் அடித்துள்ளன

                உக்கிரேன் இராணுவம் தனது இழப்புக்களை மூடி மறைத்தவாறு ரசியாவுக்கே இழப்புக்கள்


                அதிகம் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்

                  மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்

                  ஈரான் எல்லை பகுதி ஊடாக எதிரிகள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதல்


                  ஈரான் இராணுவத்தின் கடல் படையினர் விசேட சுற்று காவல் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                  உளவு விமானங்கள் தகவல் வழங்க கடல் படையினர் குழு குழுவாக இந்த சுற்று காவல் நடவடிக்கையில் ஈடு பட்டுளள்னர்

                  இலகுரக கலங்கள் முதல் அதி நவீன மிதக்கும் போர் கப்பல்கள் வரை


                  இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized

                    ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

                    ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

                    உக்கிரேன் மீது ரஷியா இராணுவம் 25 நாட்கள் கழிந்து போரினை நடத்தி வருகிறது


                    உக்கிரேன் முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது

                    சுருங்க கூறின் இறுதி கட்ட தாக்குதல்கள் அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    இவ்வேளை உக்கிரேன் அரசுக்கும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் ,ரசியா அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முக்கிய


                    ஊடக நபர் ஒருவரை ரசியா இராணுவம் கடத்தி சென்றுள்ளதாக உக்கிரேன் குற்ற சுமத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்

                      நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்

                      வடக்கு நோர்வையில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தின் MV-22B ரக போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது

                      இவ்வேளை இந்த விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் இவர்களுக்கு என்ன ஆனது

                      என்பது தொடர்பில் தெரியாது இராணுவம் திணறி வருகிறது

                      விமானம் கடத்த பட்டதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில்

                      விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized

                        சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

                        .
                        சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

                        சீனாவில் தற்போது புதிய கொரனோ நோயானது பரவி வருகிரது ,இந்த நோயின்

                        தாக்குதலில் இருந்து மீள சீனாவை காப்பாற்றி கொள்ள பல நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

                        இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,228 பேர் பாதிக்க பட்டும் ஒருவர்

                        மரணமடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது

                        சீனாவை துரத்தும் இந்த நோயானது விரைவில் ஐரோப்பா எங்கும் பரவ கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

                          .

                          உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

                          உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்டுவிட ரசிய படைகள் தொடர்ந்து போர் புரிந்து

                          வருகின்றனர் எனினும் அந்த நகரை மீட்க முடியாது ரசியா படைகள் தினறி வருகின்றனர்

                          உக்கிரேன் இராணுவம் சர்வதேச நாடுகளின் ஆயுதங்கள் மூலம் கடும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

                          கீவ் நகரின் புறநகர் பகுதிகளை ஆக்கிரமித்த ரசியா படைகளை பின்புறமாக தாக்கி

                          அங்கிருந்து அவர்களை வெளியேற்றி பல கிராமங்களைமீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

                          எனினும் ரசியா படைகள் தொடர்ந்து தாக்குதலைகளைமேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

                          இங்கு உக்கிரேன் இராணுவ தளம் ஒன்றின் மீது 40 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது

                            Posted in Uncategorized

                            பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

                            பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

                            முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

                            இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும்  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள்.

                            சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.

                            அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு

                            செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

                            செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.

                            இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது நள்ளிரவாகியுள்ளது.

                            இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

                            யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

                            புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

                            இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.

                            சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

                              Posted in Uncategorized

                              இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்

                              உணவு, மருந்து, எண்ணெய்க்கு இந்தியா..! கடன்சுமை மறுசீரமைப்புக்கு ஐஎம்எப்..!

                              • இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்
                                இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று, புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால், இந்த சித்திரை சிங்கள-தமிழ் புது வருடம், ராஜபக்ச அரசுக்கு கடைசி வருடமாகி இருக்கும். புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்.

                              அதேபோல் சர்வதேச நாணய நிதியுடன் உரையாடி பழைய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறார்கள். அதைதான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கி,

                              பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து, வீணடித்து ஏற்றி வைத்துள்ள கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்காவிட்டால், இலங்கை அதோகதிதான்.

                              நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

                              மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                              இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கரிசனையில் எடுக்காமல் இலங்கையின் இன்றைய அரசு அராஜகமாக செயற்பட்டது. இந்நிலைமை நீடித்து இருந்தால், இங்கும் ஒரு

                              உக்ரைன் நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று இலங்கை – இலங்கை உறவுகள் ஒப்பீட்டளவில் சீரமைக்கப்பட்ட காரணத்தால் இந்நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

                              பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்க முயலும் அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தங்களையும் நேர்மையுடன் அனுசரிக்க வேண்டும். 1964ன் சிறிமா-

                              சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தம்,1987ன் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அமுலாக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசு பதில் கூற வேண்டியுள்ளது. இவற்றை கண்காணிக்கும் கடப்பாடு இந்திய அரசுக்கும் இருக்கிறது.

                              அதேவேளை, இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து வீணடித்த கடன் சுமையை, திருப்பி

                              செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்க, சர்வதேச நாணய நிதியை நமது அரசாங்கம் நாடுகிறது.

                              சர்வதேச நாணய நிதியை பற்றி இலங்கையில் பாரம்பரியமாக நல்லெண்ணம் கிடையாது. எனினும் இன்று கடன் சுமையை மறு சீரமைக்க வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

                              இந்தியாவிடம் புதிய கடன் வாங்கி அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதை போன்று சர்வதேச நாணய நிதியிடம், பொருள் வாங்க கடன் பெற முடியாது. இதுபற்றி இன்று இலங்கை அரசுக்கு உள்ளேயே தெளிவில்லை. சர்வதேச

                              நாணய நிதியை நாடுவது ஏற்கனவே வாங்கிய கடன்களை, கால அவகாசம் பெற்று எப்போது, எப்படி திருப்பி செலுத்துவது என்ற மறுசீரமைப்புக்காக என்பதை மறக்க கூடாது.

                              அதேவேளை சர்வதேச நாணய நிதி, ஐரோப்பிய யூனியனின் ஜிஎஸ்பி ப்ளஸ் போன்ற நிறுவன செயற்பாடுகளுக்கு பின் நிற்கும் மேற்கத்தைய நாடுகள், இந்நாட்டில் இன்றுள்ள 20ம் திருத்தம் அகற்றப்பட்டு, அதை பழைய அசல் ஷரத்துகளுடன் 19ம்

                              திருத்தம் பிரதியீடு செய்ய வேண்டும் என இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் 20ம் திருத்தம் மூலம் உருவான சர்வதிகார ஜனாதிபதியை வரவேற்ற

                              இலங்கை மக்கள், இன்று 20 போய் 19 மீண்டும் வருமானால் அதை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆகவே அதற்கான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்.

                                Posted in Uncategorized

                                ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை

                                ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை

                                ரசியா நாட்டின் ஆதரவு ஊடகமாக விளங்கி வரும் rt ஊடகம் பிரிட்டனில் ஒளிபரப்ப

                                மற்றும் இயங்க தடை விதிக்க பட்டுள்ளது

                                இந்த ஊடகம் பிரிட்டனில் அதன் ஒளிபரப்பை மேற்கொள்ள உரிய அனுமதி பத்திரம்

                                பெற்று இருக்கவில்லை என ஆப்காம் தெரிவித்து இந்த தடையினை வழங்கியுள்ளது

                                உக்கிரேன் நாட்டில் ரசிய இராணுவம் ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும்

                                நிலையில் அதன் செய்திகளை முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் ஒளி பர பரப்பை


                                வந்த நிலையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று இருப்பதாக கருத படுகிறது