Posted in Uncategorized

துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்

.கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ குளித்த
Posted in Uncategorized

கொழும்பில் -தீயில் எரிந்த 23 வீடுகள்

கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Posted in Uncategorized

புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில்

செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட

ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன.

ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.

புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே

காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முப்பது வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அவர் அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

    இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

    டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.

    ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான

    இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்

    உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்

    உக்ரைன் ராணுவம் எதிர்பார்த்ததை விட கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதால் ரஷியாவுக்கு அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு
    ரஷியாவின் தாக்குதலில் சிதிலமடைந்த வணிக வளாகம்
    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி

    வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.

    இந்த சண்டையில் ரஷிய ராணுவம் தரப்பில் இதுவரை 7000 முதல் 15 ஆயிரம் வரையிலான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

    உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

    இதற்கிடையே அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி

    உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்

    Posted in Uncategorized

    ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

    ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

    அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் நலமாக உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
    ஹிலாரி கிளிண்டன்

    அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது.

    அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்

    Posted in Uncategorized

    ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

    ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்.

    உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக சிலவற்றில் இந்தியா நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

    ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
    ஜோ பைடன்
    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை

    நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது. இதேபோல் குவாட் அமைப்பில்

    இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளது. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவுக்கு எதிராக உள்ளன.

    ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

    இந்தியா ஐ.நா. சபயைில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பொருளாதாரத்தடை காரணமாக

    ரஷியா கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மலிவு விலையில் விற்க முடிவு செய்தது.

    ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

    தங்களுன் நட்பில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும்போது இந்தியா மட்டும் தனித்து இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது.

    நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், ‘‘நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால்

    , குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது. ஆனால், ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.

    புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ என்றார்

      தீ குளித்த
      Posted in Uncategorized உலக செய்திகள்

      தீயில் கருகி 13 பேர் மரணம்

      தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார்

      மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.

      இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

      அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

      தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோனில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

      அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செகந்தராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

      இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

      இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

      பலியானவர்கள் விவரம் வருமாறு:-

      சிக்கந்தர் (வயது 40), தினேஷ் (35), ராஜேஷ் (25), பிட்டு (23), கோலு (28), தாமோதர் (25), சத்யேந்தர் (40), தீபக் (25), சிண்டு (27), பங்கஜ் (23), ராஜூ என தெரியவந்துள்ளது.

      மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

      மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் குடோனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

      தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாப்பையா தெரிவித்தார்.

      மர டிப்போ உரிமையாளர் சம்பத் மர டிப்போ வைப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். குடோன் வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மர டிப்போ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

      தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

      இதையும் படியுங்கள்…ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

      Posted in Uncategorized

      ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

      ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

      ரசியா உக்கிரேன் மீது இராணுவ நகர்வை ஆரம்பித்து அகோரமான தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

      இடைவிடாது நடத்த படும் இந்த தாக்குதலில் உக்கிரேன் எண்பது வீதமான பகுதிகள் அழிக்க பட்டோ அல்லது செயல் முடக்க பட்டோ உள்ளது

      இவ்வாறான வேளை அந்த மண்ணில் ரசிய படைகள் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் குற்றம் சுமத்தியுள்ளது

      மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்து, அந்த

      நாட்டு அதிபர்களை தூக்கிலிட்டு தனது சர்வாதிகாரத்தை காண்பித்து ஏப்பம் விட்ட அமெரிக்கா இவ்விதம் கூக்குரல் போடுகிறது

      இனஅழிப்பு என்ற பத்ததை மறைத்து போர்க் குற்றம் என்கிறது

      அப்படி என்றால் அமெரிக்கா பாயங்கரவாதம் என்ற போர்வையில் நடத்திய இனப் படு

      கொலைக்கு என்று தீர்வு கிட்டும் என்பது பாதிக்க பட்ட நாடுகளின் மக்களின் கேள்வியாக உள்ளது

      இது ஒரு புறம் இருக்க ,ரஷியா மீது தடைகள் தொடர்ந்தால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபானர்கள் எச்சரிக்கின்றனர்

        Posted in Uncategorized

        அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை

        அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை
        ரஷிய கொடி, அமெரிக்கா கொடி

        உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நிலையில், அந்நாட்டின் அதிபர் புதின் குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.

        புதின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் பைடன் குற்றம் சாட்டியிருந்தார்.

        பைடன், புதின்

        இந்நிலையில், பைடன் விமர்சனத்திற்கு ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான்

        சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

        இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதின் குறித்த பைடன் கருத்துக்கள் ஏற்றுக் முடியாதவை என்றும், உயர்த்த பதவியில் இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        ரஷியா-அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும், மீண்டும் இது தொடர்ந்தால் தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

          Posted in Uncategorized

          வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

          வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி

          சீனாவின் Eastern Airlines விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 132 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,


          திடீரென கட்டு பாட்டு அறையுடன் தனது தொடர்புகளை துண்டித்து கொண்டது

          தற்போது இந்த விமானமானது Guangxi மாகாணத்தில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          குறித்த விமான விபத்து தொடபில் உடனடி விசாரணைகள் ஆரம்பித்து விபத்து

          தொடர்பான விடயத்தை தெரிவிக்கும்படி சீன அதிபர் அறிவித்துள்ளார்

            Posted in Uncategorized

            ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

            ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

            உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பேச்சுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            இந்த பேச்சு மேசையில் உக்கிரேன் இராணுவத்தினர் ஆயுதங்களை கையளித்து சரணடையுமாறு கூறிவருகிறது

            அதற்கு உக்கிரேன் மறுத்து வருகிறது ,இதனால் அந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளது

            மேலும் தமது இலக்கு நோக்கி மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவாறு ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன

              Posted in Uncategorized

              கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

              கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

              Arkansas பகுதியில் இடம் பெற்ற கார் ஓட்ட பந்தய காட்சிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

              நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் ,மேலும் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

              காயமடைந்தவர்களில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                Posted in Uncategorized

                படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

                படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

                நியுசுலாந்தில் மீன் பிடி படகு ஒன்று புயலில் சிக்கி கவிழ்ந்ததில் நான்கு பேர்

                பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்

                ஐவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ,உயிர் தப்பியவர்க்ள கரைக்கு திரும்பினர்

                  Posted in Uncategorized

                  உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்

                  உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்

                  உக்கிரேனின் மேற்கு பகுதியில் ,போலந்து எல்லை அருகே அமைந்துள்ள விமான

                  திருத்தும் இராணுவ முகாம்கள் மீ து ரஷியா இராணுவத்தினர் கருங்கடல் பகுதியில் இருந்தவாறு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்

                  இந்த தாக்குதலில் அந்த விமான தளம் பாரிய சேதமடைந்துள்ளது

                  அங்கு பெரும் புகை மூட்டம் வானளாவிய ரீதியில் பரவி வருகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன
                  ஆனால் உக்கிரேன் இராணுவமோ தாம் ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தம்பட்டம் அடித்துள்ளன

                  உக்கிரேன் இராணுவம் தனது இழப்புக்களை மூடி மறைத்தவாறு ரசியாவுக்கே இழப்புக்கள்


                  அதிகம் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்

                    மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்

                    ஈரான் எல்லை பகுதி ஊடாக எதிரிகள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதல்


                    ஈரான் இராணுவத்தின் கடல் படையினர் விசேட சுற்று காவல் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                    உளவு விமானங்கள் தகவல் வழங்க கடல் படையினர் குழு குழுவாக இந்த சுற்று காவல் நடவடிக்கையில் ஈடு பட்டுளள்னர்

                    இலகுரக கலங்கள் முதல் அதி நவீன மிதக்கும் போர் கப்பல்கள் வரை


                    இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

                      ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

                      உக்கிரேன் மீது ரஷியா இராணுவம் 25 நாட்கள் கழிந்து போரினை நடத்தி வருகிறது


                      உக்கிரேன் முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது

                      சுருங்க கூறின் இறுதி கட்ட தாக்குதல்கள் அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      இவ்வேளை உக்கிரேன் அரசுக்கும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் ,ரசியா அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முக்கிய


                      ஊடக நபர் ஒருவரை ரசியா இராணுவம் கடத்தி சென்றுள்ளதாக உக்கிரேன் குற்ற சுமத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்

                        நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்

                        வடக்கு நோர்வையில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தின் MV-22B ரக போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது

                        இவ்வேளை இந்த விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் இவர்களுக்கு என்ன ஆனது

                        என்பது தொடர்பில் தெரியாது இராணுவம் திணறி வருகிறது

                        விமானம் கடத்த பட்டதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில்

                        விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          Posted in Uncategorized

                          சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

                          .
                          சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

                          சீனாவில் தற்போது புதிய கொரனோ நோயானது பரவி வருகிரது ,இந்த நோயின்

                          தாக்குதலில் இருந்து மீள சீனாவை காப்பாற்றி கொள்ள பல நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

                          இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,228 பேர் பாதிக்க பட்டும் ஒருவர்

                          மரணமடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது

                          சீனாவை துரத்தும் இந்த நோயானது விரைவில் ஐரோப்பா எங்கும் பரவ கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

                            Posted in Uncategorized

                            உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

                            .

                            உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

                            உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்டுவிட ரசிய படைகள் தொடர்ந்து போர் புரிந்து

                            வருகின்றனர் எனினும் அந்த நகரை மீட்க முடியாது ரசியா படைகள் தினறி வருகின்றனர்

                            உக்கிரேன் இராணுவம் சர்வதேச நாடுகளின் ஆயுதங்கள் மூலம் கடும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

                            கீவ் நகரின் புறநகர் பகுதிகளை ஆக்கிரமித்த ரசியா படைகளை பின்புறமாக தாக்கி

                            அங்கிருந்து அவர்களை வெளியேற்றி பல கிராமங்களைமீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

                            எனினும் ரசியா படைகள் தொடர்ந்து தாக்குதலைகளைமேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

                            இங்கு உக்கிரேன் இராணுவ தளம் ஒன்றின் மீது 40 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது