Posted in Uncategorized

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியாவின் தலைநகர் டமகாஸ் அருகில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் உடனடியாக தெரியவரவில்லை

ஏவுகணை தாக்குதல் தொடர்பான இழப்பீடுகள் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் எத்தனையும் தெரிவிக்கவில்லை

தொடர்ச்சியாக வலிந்து தாக்குதலை திட்டமிட்டு இஸ்ரேலிய இராணுவ நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ

கிளிநொச்சி, வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

எனினும், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்இ கத்திக் குத்துக்கு இலக்காகி இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில், கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திக்குத்தில்,
அருளம்பலம் துஷ்யந்தன் பலியானார். இந்நிலையிலேயே, கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துச்செல்வதற்காக, பொலிஸாரின் பாதுகாப்புடன் உறவினர்கள் சிலர், அங்கு சென்றுள்ளனர்.

இதையறிந்த, கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்தவரின் மனைவியும் சகோதரிகளும் ஒருசில கிராம மக்களும் ஒன்றுதிரண்டு, இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து, பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே, சந்தேகநபரின் வீட்டைத் தீவைத்து சிலர் கொளுத்தியுள்ளனர். இதையடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். காயங்களுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்

போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்

தன்னை உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டி, பொல்வத்தை பகுதியில் பொலிஸாரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர் பொலிஸ் சீருடை அணிந்த தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா

சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா

.சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீற்றர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள்

இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன்

தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

ஆறு வயது சிறுமியை கொன்று வீசிய 14 வயது சிறுவன்

ஆறு வயது சிறுமியை கொன்று வீசிய 14 வயது சிறுவன்

அமெரிக்கா வடக்கு இண்டியான பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார் ,இவரை தேடி அருகில் உளள கட்டு பகுதிக்குள் நூறு பேர் தேடுதலில் ஈடுபட்டனர்

அப்பொழுது அந்த சிறுமி சடலமாக மீட்க பட்டார்

சடலமாக மீட்க பட்ட பின்னர் அவரது கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்க படும் 14 வயது சிறுவன் கைது

செய்ய பட்டு பின்னர் விடுவிக்க பட்டுளளார் ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
பிரேமலதா

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2011-ல் அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது. அப்போது, அவர்களுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.க. சார்பில் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. உடனே, தே.மு.தி.க. சார்பில் கொடும்பாவி எரிக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் நடத்தப்பட்டது. உடனடியாக, ஜெயலலிதா தனது

சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, விஜயகாந்த் வந்தால் தான் நான் பிரசாரத்துக்கே செல்வேன் என்று சொல்லி விஜயகாந்தை சந்தித்து 41 தொகுதிகளை கொடுத்து சிறப்பான கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் அமர்ந்தது அனைவருக்கும் தெரியும்.

இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை.

விஜயகாந்தை அனைவரும் வந்து சந்தித்தார்கள். அதன்பிறகு கூட்டணி உருவானது. நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் கால தாமதமாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகளை கடைசி நேர கட்டாயத்தால் அப்போது ஏற்றுக்கொண்டோம். அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.

அந்த நிகழ்வு மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முறை பேச்சுவார்த்தையை டிசம்பரிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் காலதாமதப்படுத்தினார்கள். கடைசி நிமிடம் வரை எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்ற எண்ணிக்கையும், தொகுதிகளின் பெயர் பட்டியலும் இறுதி செய்யப்படவில்லை.

அவர்கள், தே.மு.தி.க.வை அழைத்து பேசுவதற்கு பதில் மற்ற கட்சிகளை அழைத்து பேசி வந்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தே.மு.தி.க.வுக்கு பக்குவம் இல்லை என்றும், பக்குவமற்ற அரசியலை தே.மு.தி.க. மேற்கொண்டு வருகிறது என்றும் கூறி உள்ளார்.

இப்போது கூறுகிறேன், கூட்டணியை உருவாக்கி 41 தொகுதிகளை வழங்கி வெற்றிக்கூட்டணியாக மாற்றியது ஜெயலலிதா தான். அந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி


அவர்கள் பா.ம.க., பா.ஜ.க.வினரை அழைத்து பேசிவிட்டு, தே.மு.தி.க.வை கடைசியில் அழைத்து பேசினார்கள். எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி தொகுதிகளை ஒதுக்கீடு

செய்யுங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அவர்கள் பரிசீலிக்கவில்லை. உண்மையிலேயே இந்த கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றும் பக்குவம் இல்லாத முதல்-அமைச்சராகத்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

இறுதிகட்ட பேச்சுவார்த்தையின் போதும் அவர்கள் 12, 13 தொகுதியில் இருந்து மேலே ஏறி வரவில்லை. இதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் 41 இடங்களில் இருந்து

குறைத்து 25 என்று பேசி இந்த கூட்டணி சுமுகமாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை பேசி மிக மிக விட்டுக்கொடுத்தோம். கடைசியில் 18 சட்டமன்ற தொகுதியும் 1 மாநிலங்களவை உறுப்பினரும் கொடுங்கள் என்று இறுதியாக விஜயகாந்த் கூறியதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தோம்.
விஜயகாந்த்


ஆனால், அவர்கள் 13 தொகுதியில் இருந்து இறங்கி வரவில்லை. கடைசியில் நாங்கள் அதற்கும் ஒத்திசைந்து, எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கேட்டதற்கு அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், முதலில் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் அதற்கு பிறகு எந்தெந்த தொகுதி என்று சொல்கிறோம் என்றார்கள். இதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் உடன்படவில்லை.

எனவே, இந்த கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகிக்கொள்கிறோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

அதன்பிறகு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி, டி.வி.தினகரன் எங்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க-அ.ம.மு.க. கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் ஒரு சரித்திரம் படைக்கும். இந்த கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தான்.

தேர்தல் பிரசாரத்தில் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் ஈடுபடுவார்கள். இறுதிகட்ட பிரசாரத்தில் விஜயகாந்தும் ஈடுபடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நன்றாக இருக்கிறார். பிரசாரத்துக்கு எல்லாம் வருவார். இன்னும் சிறிது காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் அறிவுரைப்படி விஜயகாந்த் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

இது ஒட்டுமொத்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தெரியும். விஜயகாந்த் ஓய்வெடுத்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து தே.மு.தி.க. என்ன நோக்கத்திற்கு தொடங்கப்பட்டதோ? அதை அடைவார்” என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Posted in Uncategorized

பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு

பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு

அமெரிக்காவில் மூன்று அடிக்கு மேலான சினோ பொழிந்து வருவதால் மிக முக்கிய விமான நிலையமாக விளங்கும் Denver’s airport அடித்து பூட்ட பட்டுள்ளது

தொடர்ந்து எங்கும் சினோ பொழிந்து வருகிறது ,இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்

ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்

நையீரியாவில் ஆயுதமுனையில் மக்களை கடத்திய தீவிரவாதிகள் தாம் சிறைபிடித்துள்ள கைதிகளை காட்சி படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளனர்

இதில அரசுக்கு பலத்த செய்தியை வழங்கியுள்ளனர்

ஆயுதமுனையில் உள்ளவர்கள் மிக பெரும் கலக்கத்தில் ,பயந்த நிலையில் உள்ளதை காணமுடிகிறது


துப்பாக்கி முனையில் வைக்க பட்டுள்ள இவர்களை மீட்க இராணுவ நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ள வேளையில் இந்த காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்

விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்

அமெரிக்காவில் Landon Grier fஇருந்து Colorado நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த இருபது வயதுடைய வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் ,

அது மட்டுமா அந்த விமானத்தின் விமானியின் அறைப்பகுதிக்குள் நுழைந்த அவர் சிறுநீர் கழித்துள்ளார் ,போதையில் அதிக தகராறு செய்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது

இவரை கைது செய்த உளவுத்துறையினர் நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் ,இவருக்கு இருபது வருட சிறை மட்டும் ,$320,000 தண்டம் விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்

அமெரிக்கா தெற்கு சிக்காக்கோ பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற பாட்டி நிகழ்வில் கலந்து கொண்ட

நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில் மரணமாகினர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

அதிகாலை 4,41 மணியளவில் அவசர மையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார்

மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் பாதிக்க பட்ட மக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

மேற்படி சூட்டு தாக்குதலை மேற்கொண்டவர் 20 முதல் 44 வயதுக்குள் உட்பட்டவர்கள் என

போலிஸார் தெரிவித்துள்ளனர்,மேற்படி சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Home » Uncategorized » Page 118
அமெரிக்கா தெற்கு
அமெரிக்கா தெற்கு
Posted in Uncategorized

யாழில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

யாழில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் இணைந்துகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 15 ஆவது நாளாக நேற்றும் (14) தொடர்ந்தது.

நீதி வேண்டிய இந்தப் போராட்டம், நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அதில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்களெனப் பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தை முன்னெடுப்போர் “ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக, ஸ்ரீ லங்கா அரசால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித

நேயத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனத்துக்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி வேண்டும். தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு, தமிழ் மக்களின்

நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையே முன்வைத்துள்ளனர்.

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

இலங்கை கஜிமா வத்த பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணாமாக ஐம்பது வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின


இந்த தீப்பரவலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் அவை தீயில் எரிந்து அழிந்துள்ளன

பாதிக்க பட்ட குடும்பங்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றன

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

சீமானின் பேச்சை மெய்மறந்து பார்த்த வெள்ளைக்காரர் video

சீமானின் பேச்சை மெய்மறந்து பார்த்த வெள்ளைக்காரர்

சீமானின் பேச்சை வெள்ளைக்காரர் ஒருவர் மெய் மறந்து கேட்டு இரசித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

இவர் தமிழ் கற்று ,தமிழை வாழ வைக்க முயலும் கட்சியின் பேச்சை கேட்டு மிரண்டு நிற்கிறார்

சீமான் தமிழர்கள் மனங்களை மட்டுமல்ல ,வெள்ளையர்கள் மனதுக்குள்ளும் ஊடுருவி விட்டார் போங்கள்

Home » Uncategorized » Page 118

CLICK HERE VIDEO FULL VIDEO

Posted in Uncategorized

காணாமல் போன இளைஞன்-காயங்களுடன் மீட்பு

சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன இளைஞன் ஒருவரரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், அனுராதபுரத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய 07 இளைஞர்கள் நேற்று கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.

இந் நிலையில் மதுபோதையிலிருந்த குறித்த இளைஞன் இன்று அதிகாலை 01 மணியளவில் விடுதியின் மேல்மாடி ஜன்னல் வழியாக வெளியில் குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.

இவ்வாறு சென்ற இளைஞனை கண்டு பிடிக்க கொத்தமலை பொலிஸாரும் அதிரடிபடையினரும் காட்டுப்பகுதிக்குள் தேடுதலில் ஈடுட்ட நிலையிலே ரம்பொடை ஆற்றுப்பகுதியின் கற்பாறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்

சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இடம்பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை நிரைவேற்ற பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சிங்கள பால் குடித்து வசித்து அதே சிங்களத்திற்கு சேவகம் புரிந்து வரும் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐநாவுக்கு சென்று இலங்கையை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட இவர் உள்ளே மாப்பிள்ளையாகவும் ,வெளியே மக்கள் மத்தியில் கீரோ வேஷம் போடுவதை மேற்படி சம்பவங்கள் அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகின்றன

சிங்கள பால்குடி சுமந்திரன் என்று திருந்துவீர்கள் …?

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்

பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்

இலங்கை வரகாபொல பகுதியில் வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

பெண்களை இலக்கு வைத்து அவர்களின் தங்க சங்கிலிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வந்த வழிப்பறி கொள்ளையனே இவ்வாறு சிக்கியுள்ளார்

கைதானவரிடம் தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மேற்படி பகுதியில் மக்கள் நட மாற்றத்துக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்தது வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ளுவது எப்படி ..?
இதை பாருங்கள் ,நீங்களும் பணத்தை அள்ளிட முயற்சி செய்யுங்கள்


உலக நாடுகளே இதில் தான் இயங்கி கொண்டிருகிறது . ,அவ்வாறான இந்த பங்கு சந்தையில் , வீட்டில் இருந்தபடியே பல ஆயிரங்களை அள்ளுவது எப்படி என்பதை தான் குறித்த காணொளி மூலம் விளக்குகிறோம்

இதில் அதிக பணத்தை எவ்வித அனுபவம் இன்றி அள்ளிட பல வழிமுறைகள் உள்ளன ,அவை எவ்வாறு என்பதை நாம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்

காணொளியை பாருங்கள் இதனை செய்திட விரும்புகின்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
பயிற்சி அளித்து ,திறனை வளர்த்து நீங்களும் செல்வந்தராக மாற சிறந்த வழி

தொடராக எமது காணொளிகளை பாருங்கள் அதன் ஊடாக பங்கு சந்தைக்குள் நீங்களும் நுழைய முடியும்

https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
Home » Uncategorized » Page 118

click here full video- forex trading free money

Posted in Uncategorized

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி

கஸகஸானில் இராணுவத்தினர் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது பொழுது அதிக புகை

மூட்டம் நிலவியாதல் விமானம் தெளிவாக குறித்த விமான நிலையத்தில் இறக்க முடியவில்லை ,இதனால் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது

இதன் பொழுது அதில் பயணித்த நால்வர் உடல் சிதறி பலியானதுடன் விமானம் பலத்த சேதமடைந்த நிலையில் காண படுகிறது

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

ஓமானில் விபச்சாரம் புரிந்த இலங்கை பெண் கைது

ஓமானில் விபச்சாரம் புரிந்த இலங்கை பெண் கைது

ஓமானில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பல பெண்களை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியதாக
மஹியாங்கனாவைச்

சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கைதான பெண் தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Home » Uncategorized » Page 118
Posted in Uncategorized

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அர்ப்பணிப்பு குறித்த
பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

போர்முடிவடைந்து 12 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு எதுவித தீர்வும் எட்டப்படவிவில்லை என்பது குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 118