Posted in Uncategorized

இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

லண்டன்,மற்றும் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்த மிக பெரும் வலைய
மைப்பு ஒன்றை சர்வதேச போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்

பிரிட்டனை இலக்கு வைத்து மிக பெரும் மனித கடத்தலை மேற் கொண்டு வந்த முக்கிய சூத்திரதாரிகளே இவ்வாறு மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

ஆப்ரிக்கா போலீசார் இணைந்து இந்த வேட்டையை நடத்தியுள்ளனர் ,ஐரோப்பாவுடன் இருந்து பிரிட்டன் விலகிய

நிலையில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நாள் தோறும் பல நூறு அகதிகள் நுழைந்து வந்த நிலையில் இந்த

வேட்டையை பிரிட்டன் அரசு மேற்கொண்டது ,கொரனோவில் மக்களை வீடுகளுக்குள்

முடக்கி,சர்வதேச உளவுத்துறையுடன் இணைந்து இந்த எய்னசிகளுக்கு ஆப்படித்துள்ளது பிரிட்டன் என்பதே மேற்படி செய்திகள் இடித்துரைக்கின்றன

    Posted in Uncategorized

    புலி வருகுது புலி வருகுது – எழுச்சி கொள்ளும் தமிழ் தேசம் – video

    புலி வருகுது புலி வருகுது – பீதி கிளப்பும் சிங்களம் – வீடியோ மேயர் மணிவண்ணன்

    இலங்கை தமிழர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அவர்களை வழி நடத்துகின்ற அரசியல் தலைமகளை மிரட்டி அடிபணிய வைக்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுள்ளார்

    பாராளுமன்றில் முன்னாள் இராணுவ தளபதியை வெளியில் வா பார்த்து கொள்கிறோம் என வாய் மிரட்டல் விடுத்த கோட்டா சகோதரனை பார்த்தோம் ,அவ்வாறு விரிந்து படரும் கொட்ட ஆட்சி

    அடக்குமுறை வெறியர்களின் ஆட்சி அதிகாரம் இன்று சாதாரண மகக்ளை எவ்வாறு அடக்கி ஒடுக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும் .

    அவ்விதம் படை உருவாக்கம் என முழங்கும் சிறிலங்கா சதிகளும் ,அவை சிக்க வைக்க நடக்கும் உலக சூழ்ச்சிகளும் எவ்வாறு உள்ளது என்பதை இந்த காணொளி இயம்புகிறது பாருங்கள் ,பரப்புங்கள்

    எழுச்சி கொள்ளும் தமிழ் தேசம் – வெடித்து பறக்கும் அடக்குமுறை மிரட்டல்

    click here full video

    https://www.youtube.com/watch?v=TreuQ4IBpQU
      Posted in Uncategorized

      மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

      மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

      மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல்

      நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

      இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்

      கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்

      அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

      அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று

      தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் கார்த்திக் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்

      கார்த்திக்
      கார்த்திக்
        Posted in Uncategorized

        தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

        • தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

        சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

        எங்களை தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

        சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

        அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைந்துள்ளது.

        சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

        இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கா, தைவானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தைவானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

        இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 5-ந் தேதி சீனாவின் 10 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டது.

        இந்த நிலையில் சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, எங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

        இதுகுறித்து தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ கூறியதாவது:-

        நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.

        தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.

        அவர்கள் (சீனா) ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தைவான் மக்களை கவர்ந்திழுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது ராணுவ விமானங்களையும், ராணுவ கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.

        சீனர்கள், தைவான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள். அதை நான் தோற்கடிப்பதாகவே வகைப்படுத்துவேன்.

          Posted in Uncategorized

          இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை

          இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை

          இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் 13 பேரைக் கொண்ட ஒரு கும்பல் சிக்கியது.

          இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை

          இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3

          ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட ஒரு கும்பல் சிக்கியது. அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) சிக்கியது. இவர்கள் கைது செய்யப்பட்டு,

          மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

          இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கு, அவரது மனைவியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில்

          போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

            Posted in Uncategorized

            டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்

            டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்

            துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல்

            மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

            இந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அதேபோல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.

            இதன் உட்புறத்தில் ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல்.ஈ.டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தலாம்.

            அதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமலேயே தீயணைப்புத்துறையின்

            கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம். இந்த வாகனத்தில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து

            வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சார தீ போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்

            ஏற்றிக்கொள்ளலாம். அதேபோல வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள்ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம்

            செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்படவில்லை. துபாய் தீயணைப்புத்துறைக்கு மட்டும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

              Posted in Uncategorized

              மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

              மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

              கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள்

              மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

              கட்டார் விமான சேவை, எமிரேட்ஸ் – துருக்கி விமான சேவை, குவைட் விமான சேவை, உக்ரைன் விமான நிறுவனம், ஓமான் விமான நிறுவனம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.

              கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் 2019 – 2020 காலப்பகுதியில் 35 விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                Posted in Uncategorized

                வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்

                வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்

                மீண்டும் நாட்டில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

                நேற்று (08) மாத்திரம் விபத்துகளால் 13 மரணங்கள் நாட்டில் பதிவானதாக கூறிய அவர், அதில் 7 மரணங்கள் 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

                ஏனைய 6 மரணங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களால் காயமடைந்த நிலையில் நேற்று சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

                இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் பாதசாரிகள் என்றும், 4 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், சாரதிகள் இருவர் மற்றும் பயணி ஒருவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

                  Posted in Uncategorized

                  புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

                  புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

                  தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்

                  யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

                  மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.

                  இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக்

                  கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

                  அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

                    Posted in Uncategorized

                    வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த-மூன்று மீனவர்களை காணவில்லை

                    மூன்று மீனவர்களை காணவில்லை

                    கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                    நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப

                    வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம்

                    (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                      Posted in Uncategorized

                      வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                      வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                      வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

                      மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

                      சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன்,

                      பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்று (07) வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

                      இந்நிலையில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் குறித்த சம்பவம்

                      தொடர்பில் இருவர் இன்று (08 ) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

                      வாள்வெட்டு
                      வாள்வெட்டு
                        Posted in Uncategorized

                        யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?

                        யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?

                        யாழ்ப்பாணத்தில் திடீரென கொரனோ நோயானது அதிகரித்துள்ளதாக வடமாகாண சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார்

                        சீனாவுக்கு வடக்கின் மூன்று தீவுகளை வழங்கிய பின்னர் இவ்விதமான விடயங்களை சமீப

                        நாட்களில் சிங்கள பவுத்த அடக்குமுறை அரசு பரப்பி வருகிறது

                        மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

                          136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

                          இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்

                          வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்

                          இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்

                          விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                            Posted in Uncategorized

                            பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

                            பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

                            தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்த வாலிபன் ஒருவ

                            ர் யாழில் கைது செய்யப் பட்டுளளார்

                            இவ்வாறு கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,


                            மேற்படி வாலிபனை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

                              Posted in Uncategorized

                              மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்

                              மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்

                              மகிந்தவின் ஆட்சியில் நிறுவப்பட்ட மகிந்தவின் பெயர் கொண்ட விமான நிலையத்தால் கடந்த

                              வருடம் மட்டும் சுமார் 453 மில்லியன் ரூபாய்கள் இலாபம் கிடைத்துள்ளதாக உல்லாசத்துறை

                              அமைச்சர் ,உல்லாசமாக தெரிவித்துள்ளார்

                              மைத்திரியின் ஆட்சியில் குறித்த விமான நிலையத்தால் வருமானம் இல்லை என கூறி அதனை

                              மூடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                                சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                                சிரியாவின் தலைநகர் டமஸ்கத் பகுதியில் இஸ்ரேல் இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்

                                மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளதுடன் ,அதே போன்ற

                                தாக்குதல்களை ஈரானுக்குள்ளும் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                  சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                  சூடான் Darfur பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை சுமார் 87 ஆக அதிகரித்துள்ளது

                                  மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 க்கு மேலாக அதிகரித்துள்ளது

                                  கட்டுக் கடங்காது பரவி வரும் இந்த வன்முறை சம்பவம் பெரும் கொலைக்களமாக மாறும்

                                  அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

                                  உலக
                                  உலக
                                    Posted in Uncategorized

                                    நீங்க செக்ஸ் நடிகை – கடுப்பான அந்த பிரபலம்

                                    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட

                                    பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.

                                    கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள்,

                                    குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

                                    அபிராமி

                                    “நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்

                                    . உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.”

                                    “இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்.” என்று அபிராமி கூறி உள்ளார்.

                                      Posted in Uncategorized

                                      கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா

                                      கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா

                                      உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா,

                                      கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது.

                                      ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.

                                      சுகாதாரப்பணி

                                      இந்த நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

                                      இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா

                                      பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை

                                      செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.

                                      இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால்

                                      ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.‌

                                        Posted in Uncategorized

                                        புயலில் சிக்கிய HOLLAND சரக்கு கப்பல் – கடலில் குதித்த மாலுமிகள் – வீடியோ

                                        புயலில் சிக்கிய HOLLAND சரக்கு கப்பல் – கடலில் குதித்த மாலுமிகள் – வீடியோ

                                        நோர்வே நாட்டின் வட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த டச்சு சரக்கு கப்பல் ஒன்று புயலில் சிக்கியது ,இதனால் கப்பலில் பணியாற்றிய 12 மாலுமிகளில் பலர் கடலில் குதித்தனர்

                                        மீட்பு குழுவிற்கு அறிவித்ததை அடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் அனைவரையும் மீட்டனர்

                                        இந்த சம்பவத்தில் உலங்குவானூர்தி பயன்படுத்த பட்டதாக மீட்பு குழுவினர் ,தெரிவித்துள்ளனர்

                                        மேலும் குறித்த கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளன

                                        CLICK HERE FULL VIDEO

                                        https://www.youtube.com/watch?v=RQH8XBCYBjo