Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video
உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video
தமழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் படு தோல்வியை கமல் சந்தித்தார் ,இதனை அடுத்து அதன்
கட்சி பிரதி தலைவர் உள்ளிட்ட பத்து பேர் பதவி விலகியுள்ளனர்
தானே தமிழகத்தின் முதல்வர் என சத்தம் போட்டு கிளம்பிய கமல் எதிர்பாராத படு தோல்வியை சந்தித்த நிலையில்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
தமிழகத்தின் புதிய முதல்வர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்றே என்ன தோன்றுகிறது
மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்
மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது
அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளானதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் முற்றுமுழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா
தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் 12 பேர் களுவாஞ்சிகுடியிலும் 09 பேர் மட்டக்களப்பிலும் 05 பேர் செங்கலடி பகுதியிலும் 04 பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களின் 1020 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.143 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரையில் 10 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையினைப்பொறுத்தவரையில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் இறுதி ஏழு நாட்களும் 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரோனா சிசிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையில் உள்ளன.
இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்றுமுழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதன்காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000 கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம்.
கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளில் இருந்து ஒட்சிசனை எடுத்துவரவேண்டியுள்ளது. ஒரு
ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களை பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை
போன்ற வைத்தியசாலைகளில் எச்யு மற்றும் ஐசியு ஆகியவற்றினையும் நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்கு வருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி
கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி
உலகில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க அமெரிக்கா பைசர் நிறுவனம் கண்டு பிடித்த
தடுப்பூசியை 12 தொடக்கம் 15 வயதுக்கு உள்ளிட்டவர்களுக்கு செலுத்திட கனடா அனுமதி வழங்கியுள்ளது
பைசர் அதிக பாதுகாப்பான தடுப்பூசியாக தற்போது விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
இலங்கை பாரளுமன்றில் சாணக்கியன் எம்பி சிங்கள எம்பியோ ஒருவர் கொட்டி யா என கூப்பிடும் பொழுது
நான் புலி எண்டால் நீ நாயா …போடா …என பேசியுள்ள பேச்சு தற்போது வைரலாகி வருகிறது
ஸ்ரீதரனுக்கு போட்டியாக இவரது பேச்சு இவ்விதம் அமைவதும் ,சுமந்திரனின் செல்ல பிள்ளையாக
விளங்கி வருவதும் மக்கள் அறிந்ததே
காணாமல் போன பெண் காட்டு பகுதியில் இருந்து மீட்பு
காணாமல் போன பெண் காட்டு பகுதியில் இருந்து மீட்பு
அமெரிக்காவில் கடந்த மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 47 வயதுடைய பெண் ஒருவர்
உட்டா பகுதியில் உள்ள காட்டுப்புற மலையடிவாரத்தில் இருந்து மீட்க பட்டுள்ளார்
சிறு டென்ட் ஒன்று அமைத்து அதற்குள் தனிமையில் வசித்து வந்துள்ளார் ,சிறிய அளவிலான
உணவு பொருட்களை சேமிப்பில் வைத்து ,நீரோடை அருகில் வசித்து வந்துள்ளார்
இவர் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார் ,தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
10 இலட்சம் தடுப்பூசிகளைஇலங்கைக்கு வழங்கும் பைசர் நிறுவனம்
10 இலட்சம் தடுப்பூசிகளைஇலங்கைக்கு வழங்கும் பைசர் நிறுவனம்
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும்
இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ‘ஸ்புட்நிக்’ என்ற கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கின்றது.
மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ‘சீரம்’ நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ‘சைனோபாம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன. இதேவேளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ‘பைசர்’
நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ஸ்புட்நிக் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.
ஸ்புட்நிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன. பைசர் நிறுவனம் இந்த மாதத்தில் 35 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஷ்ரா செனேக்கா தடுப்பூசியைப்
பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Mexico க்கோ நாட்டில் உடைந்து வீழ்ந்த மெட்ரோ – 24 பேர் மரணம் – 65 பேர் காயம்
Mexico க்கோ நாட்டில் உடைந்து வீழ்ந்த மெட்ரோ – 24 பேர் மரணம் – 65 பேர் காயம்
Mexico க்கோ நாட்டில் மெட்ரோ ரயில் செல்லும் பாலம் உடைந்து வீழ்ந்ததில் இதுவரை இருபத்தி
நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க பட்டுள்ளன ,காயமடைந்தவர்களில்
பத்துக்கு மேற்பட்டவர்கள் அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

சூதாட்டம் ,கிளப்புக்களில் தங்கி குத்தாட்டம் போட்ட 73 பேர் கைது
சூதாட்டம் ,கிளப்புக்களில் தங்கி குத்தாட்டம் போட்ட 73 பேர் கைது
இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இரவிபு விடுதிகள் ,சூதாட்டம் ,பப்புக்கள்
என்பன அடித்து பூட்ட பட்டுள்ளன
அவ்வாறான தடை உத்தரவுகள் விதிக்க பட்ட பொழுதும் அதனை மீறி திறந்து நடத்திய குற்ற
சாட்டில் 73 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா
பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வன உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 8 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் உடல்நிலை சீராக உள்ளது. உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு பூங்காவும் மூடிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் (சிசிஎம்பி) ஆலோசகா் ராகேஷ் மிஸ்ரா கூறியது:
சிங்கங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவற்றின் எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
சிசிஎம்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை முழுமையாக பரிசோதித்தபோது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கொரோனா பரவியிருக்கலாம்.
எனினும் அவை உருமாற்றம் அடைந்த கொரோனா தீநுண்மிகளால் பாதிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காவில் உள்ள பணியாளா்களிடம் இருந்து சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்க
வாய்ப்புள்ளது. மனிதா்களை போல் மிருகங்களும் பாலூட்டிகள் என்பதால் அவையும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவித்தாா்.
இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது
உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் மட்டும் சுமார் 42 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை இடம் பெற்று வருகிறது
இதே நோயினால் இறந்தவர்களை நெருப்பு காய்ச்சல் மற்றும் டெங்கு நோயினால் இறந்ததக கூறி அனுப்பி வைக்க படுகின்றனர்
கொரனோ இழப்பை மூடி மறைக்க இவ்விதம் இடம்பெறுவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிகின்றனர்
துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்
துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ பரவலை அடுத்து தற்போது 12 கிராமங்கள்
தனிமை படுத்த பட்டுள்ளன
நாள் தோறும் பத்து ஆயிரம் பேர் பாதிக்க பட்டு வருவதால் நாடு முற்று முழுதான முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது
எவ்வேளையு முழு லொக்கடவுனுக்கு இலங்கை செல்ல கூடும் என அதிகாரிகள் கருத்து தெருவித்து வருகின்றனர்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அவரது நண்பரான
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதியும் தனியே வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். எனவே
மணிகண்டன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தர்மபுரிக்கு
மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பூபதி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து உதவியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் பொலிஸார் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மணிகண்டனை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதை அடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற
மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.
காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது
காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 173 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இதில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க நபர்கள் நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக பல விழிப்புணர்வு விடயங்களை அரசு
தெரிவித்து வரு நிலையிலும் மக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
அமெரிக்கா கடல் வழியாக சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கி
கவிழ்ந்ததில் அதில் பயணித்த மூவர் மரணமாகினர் ,மேலும் 29 பேர் உயிரோடு மீட்க பட்டுள்ளனர்
இதில் ஆபத்தான நிலையில் உள்ள ஐவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
அதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன
ஈரானில் சுவிஸ் தூதரக அதிகாரி மாடியில் இருந்து வீழ்ந்து மரணம்
ஈரானில் சுவிஸ் தூதரக அதிகாரி மாடியில் இருந்து வீழ்ந்து மரணம்
ஈரான் தலைநகரில் டவர் ஒன்றில் பயணித்த ஈரானுக்கான சுவிஸ் நாட்டின் தூதரக பெண்
அதிகாரி அதில் இருந்து தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார்
51 வயதுடைய தூதரக அதிகாரி தவறி வீழ்ந்தார் ,அல்லது திட்டமிடப்பட்டு படு கொலை செய்ய
பட்டாரா ..?என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
இன்று 04-05-2021 மதியம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் அறவழி போராட்டத்தை நடத்தினர் ,
இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,இனப் படுகொலை, புலிகளின் பெயரால் கைது செய்ய பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய கோரியும் ,தமிழர்களை
துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டாம் என கோரியும் ,பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது
இந்த நிகழ்வு சமகால கொரனோ விதிகளை பின்பற்றி ,காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்க அமைதி வழியில் நடத்த பட்டுள்ளது ,
எனினும் சிங்கள அரச மற்றும் உளவுத்துறை அதிகாரிகளினால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களை காணொளி ,மற்றும் புகைப்படங்கள் பிடிக்க பட்டுள்ளன
இவ்வாறு பிடிக்க பட்ட காட்சிகளினால் அங்கு கலந்து கொண்ட மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
இங்கே கலந்து கொண்ட மக்களை கழுத்து வெட்டுவேன் என இராணுவ தளபதி ஒருவர் முன்னர் தெரிவித்து
அவை லண்டன் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தத நிலையில் ,அவ்விதம் இவர்களை படம் பிடித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளக்க நேரிடும் என்பது இயல்பாகிறது
தமிழர்களை கொன்று குவித்த சகோதர்கள் ஆட்சி இலங்கையில் இடம் பெற்று வரும் நிலையில் சொல்லென்னா அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது





துருக்கியின் தாக்குதலில் 57 குருதீஸ் போராளிகள் படுகொலை
துருக்கியின் தாக்குதலில் 57 குருதீஸ் போராளிகள் படுகொலை
வடக்கு ஈராக் பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது துருக்கிய
இராணுவம் நடத்தி வந்த பெரும் இராணுவ படையெடுப்பில் சிக்கி 57 போராளிகள் மரணமாகியுள்ளனர்
இவர்களுக்கு எதிரான வழி மறிப்பு சமரில் ஏழு துருக்கிய இராணுவம் பாலியாகியுள்ளது
தொடர்ந்து பெரும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு
லண்டன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு
லண்டன் Charing’ Metro and Cross Station நிலையத்தில் மர்ம பொதி ஒன்று கண்டு பிடிக்க பட்டதால்
அங்கு பெரும் பர பரப்பு நிலவியது ,மக்கள் வெளியேற்ற பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு
சோதனைகள் முடிவடைந்த பின்னர் மீள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது
மேற்படி மர்ம பொதி என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
கொலம்பியா போராட்டம் – 18 பேர் மரணம் -856 பேர் காயம்
கொலம்பியா போராட்டம் – 18 பேர் மரணம் -856 பேர் காயம்
கொலம்பியாவில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய அமைதி வழி போராடடத்தில் கலந்து கொண்டவர்கள்
மீது இராணுவம் ,போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 19 பேர் மரணமாகியுள்ளனர்
மேலு 856 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்து பறக்கின்றன
பிரான்சின் ஆதிக்க பகுதியில் நடந்துள்ள இந்த மோதல்களை அடுத்து அங்கு இயல்பு நிலையை
நிலை நாட்ட பிரான்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
எகிப்து நாடானது அதி உயர் Rafale fighter jets சண்டை விமானங்கள் முப்தினை பிரான்சிடம் இருந்து
வாங்கி குவிக்கிறது
இதன் மொத்த பெறுமதி 4.5 பில்லியன் டலராகும் ,உலகத்தில் அதிகரித்துள்ள ஆயுத போட்டியின்
காரணமாக உலக சந்தையில் அதி நவீன ஆயுதங்கள் அதிகம் விற்க படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை











