Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு.
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,
அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19)
இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத்
தரவில்லை எனத் தெரிவித்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்,
பஷில் ராஜபக்ஸ, ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்த 12,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் சிக்கியுள்ளனரென, தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம் இந்த
மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் இந்நடவடிக்கை உத்தியோகப்பூர்வமாக நடைபெறாவிட்டாலும் உரிய
பரிசோதனைகளின் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து உரிய சுகாதார பரிந்துரைகளின் கீழ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைக்கப்படுவர் என்றார்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் என்று சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தை, பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர் என, பொலிஜ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்தது என்று நம்பப்படும் பாரிய அளவிலான பணத்தொகை பறிமுதல்
செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில்,
பொலிஸார் நேற்று (18) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்தக் காலத்தில் அந்த கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்
தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்படவில்லை.
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டதாகவும்,
மஹர சிறைக் கலவரம் தொடர்பில் இதுவரையில் 500 மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது
மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட குளம் இராணுவத்தினரால் புனரமைப்பு
யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட குளம் இராணுவத்தினரால் புனரமைப்பு
யாழ்பாண வட்டுக்கோடையில் உள்ள இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ‘உப்பு வயல்குலம்’ என்று பெயரிடப்பட்டுள்ள விவசாய குளமானது, 17 ஆம் திகதி காலை பாதுகாப்பு பதவி நிலை
பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது..
இராணுவத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் திறன் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்கான அதன் மக்களுடனான நட்புசார்ந்த
அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் பொது ஆர்வம் மற்றும் நம்பிக்கை, இராணுவம் மற்றும் இராணுவத் தளபதியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றினை தென்மேற்கு வட்டுக்கோடை
விவசாய சம்மேளனம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ப்ரெண்ட்ஸ் ஆஃப் யாழ்ப்பாணத்தின் தலைவருமான டொக்டர்
சிதம்பரன் மோகன் அவர்கள் குறித்த குளத்தின் திறப்பு விழாவின் போது பகிரங்கமாக பாராட்டினார்.
சிவில்-இராணுவ ஒற்றுமையின் மற்றொரு மைல்கல்லாகவும், இப்போது யாழ்ப்பாண தீபகற்பத்தில் வேரூன்றியுள்ள நல்லிணக்கத்தின் பிணைப்புகளாகவும், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின்
வழிகாட்டுதலின் கீழ், 513 வது பிரிகேட் படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் மற்றும் 51 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் ஆகியோரின்
மேற்பார்வையில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 10 வது கள இலங்கை பொறியியலாளர்கள் படையணி
மற்றும் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் உப்பு வயல்குளத்தினை மறுஅகழ்வு செய்ததோடு அதனை புதுப்பித்தனர்.
இராணுவத் தளபதி குளத்தின் பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர், சமூக இடைவெளி நடைமுறைகளை கடைப்பிடித்து, டொக்டர் சிதம்பரன் மோகன் தலைமையிலான விவசாயிகள்,
அன்றைய பிரதம விருந்தினரான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து திட்டத்தின் கட்டடக்கலைஞர் டொக்டர் சிதம்பரன் மோகன் அவர்களினால் இந்திய கங்கை
நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மீண்டும் தோண்டப்பட்ட குளத்தில் ஊற்றி அதனை புனிதப்படுத்தினர்.
பல வருடங்களுக்கு முன்பு, குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் காணப்பட்டது. பின்னர் அது கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதோடு, நீர்
தக்கவைப்பு திறன் குறைதல், மழை பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் அதன் அடிப்பகுதி வறண்ட நிலையில் காணப்பட்டது . ‘தியாஹி நற்பணி மன்றத்தின்’ தலைவர் திரு
வாமதேவா தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி அனுசரணையில், வட்டுக்கோடை பகுதியில் உள்ள சிரமப்படும் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய குறித்த
புனரமைப்பு திட்டத்தை இராணுவம் முன்னெடுத்தது.புதுப்பிக்கப்பட்ட குறித்த குளத்தில் இருந்து 4000
ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் கிடைக்கும் அதே வேளை 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில் டொக்டர் சிதம்பரன் மோகன் ஆற்றிய தனது சுருக்கமான உரையில், இராணுவத்தின் சமூக ஒத்துழைப்பு, கட்டுமானம், மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பிற நலன்புரி பணிகளை பகிரங்கமாக பாராட்டினார். “இராணுவத்தின்
சேவைகளை, குறிப்பாக இராணுவத் தளபதியின் பங்களிப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, பேரழிவுகளின் போது அப்பாவி மக்களை மீட்பது மற்றும் வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குதல் , வீடுகளை வழங்குவது உள்ளிட்ட அர்பணிப்பு சேவைகளை முழு மனதுடன் நான் பாராட்டுகிறேன், மற்றும் வடக்கு மக்கள் துயரத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களின் அனைத்து வகையான நலன்களும், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள், கொவிட் -19 வைரஸைக்
கட்டுப்படுத்தும் பணி போன்ற விடயங்களை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், மேலும் உங்கள் அனைத்து முயற்சிகளிலுக்கும் நாங்கள் பிராத்திக்கிறோம்”என்று அவர் மேலும் கூறினார். வடக்கிலும் இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகி வருவதனால் நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க டொக்டர் மோகன் அவர்கள் இராணுவத் தளபதியிடம் ஒத்துழைப்பினை கோரினார்.
டொக்டர் சிதம்பரன் மோகனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகமாக, யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் விவசாய மேம்பாட்டு சபையின் உதவி ஆணையாளர் திரு இ.நிஷாந்த் வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பிரேமணி பொண்ணம்பலம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு கே மகேஷன் ஆகியோரின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் சில வாரங்களுக்குள் இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த குளத்தினை புதுப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் மத பிரமுகர்கள், யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு எஸ்.பாலசந்திரன், 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள், மேலதிக பிரதேச செயலாளர் (காணி) யாழ்ப்பாணம், வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், விவசாய மேம்பாட்டுத் திணைக்கள துணை ஆணையாளர், விவசாயிகள், பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த குளமானது முற்றிலும் வறண்டு, தேக்கமடைந்து, மண்ணினால் நிரம்பி காணப்பட்டதோடு மற்றும் மழை நீரின் முழுத் திறனையும் தக்க வைத்துக் கொள்ள முடியுமான திறன் காணப்படாமை மற்றும் ஆண்டு முழுவதும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் விவசாய திட்டங்களுக்கு மிகவும் தேவையானதால் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் அவர்கள் தங்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி விவசாய மேம்பாட்டுத் திணைக்களம் உட்பட அந்தந்த அனைத்து அரச நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து திட்டத்தை பூர்த்திசெய்தனர்.
இன்று காலை குளத்தின் அருகே இடம்பெற்ற சுருக்கமான விழாவின் போது, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புனரமைப்பு தொடர்பான ஆவணங்களை முழு புதுப்பித்தல் திட்டத்திற்கும் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிய விவசாய மேம்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த குளத்தின் மூலம் சங்கனாய் பிரதேச செயலகத்தில் உள்ள 600 குடும்பங்கள் பயன் பெறலாம் , மேலும் 4000 ஏக்கரிற்கும் மேல் நெல் பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். “இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது அவர்களுக்கு தேவையான வேறு எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும். சமீபத்திய வெள்ளம் மற்றும் ‘புரேவி’ சூறாவளியின் போது அவர்களினால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து வழங்கினர்.அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனம் அல்லது தனிநபர் அனுசரணையுடன் யாழ்பாணத்தில் யாழ் படையினர் இதுவரை வரிய குடும்பங்களுக்காக 740 புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பிரதான பொறுப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பகுதியாகக் கருதி அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.இங்குள்ள சில பெற்றோர்கள் கேட்டுக் கொண்டபடி, எதிர்காலத்தில் யாழ்ப்பாண இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் தடுப்பதற்கும் நாங்கள் உதவுவோம், ”என்று அவர் விரிவாகக் கூறினார். நாட்டில் உள்ள கொவிட் -19 தொற்றுநோய் குறித்த நிலைமை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தர்.
டொக்டர் சித்தம்பரன் மோகன் மற்றும் அரச அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம், சில மாதங்களுக்கு முன்பு, இதே முறையில், படையினர் பாலாலியில் கைவிடப்பட்ட ‘ரவிந்து வாபி’ குளத்தினை முற்றிலுமாக புனரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.
கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(19) காலை 9 மணிமுதல் மறுநாள் (20) அதிகாலை 3
மணிவரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, நீர்வழங்கள் வடிகாலமைச்சபை கூறியுள்ளது.
அதேநேரத்தில், கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும்.
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில் எண்மரும்
சாய்ந்தமருது 1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று 3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல்
நிலையை தொடர்ந்து செயற்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார
வழிகாட்டல்களை மீறிய 37 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளனர்.
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்கள்
600 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூநகரி பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த
முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில்
பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீனவர்களை எச்சரித்த டக்கிளஸ்- இந்தியாவுக்கு கெடு
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளலர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை
கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்பு கொண்டுள்ள இந்தியத் தரப்புக்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை
விடுதலை செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும்
செயற்பாடுகளை இடை நிறுத்தி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு எதிர்கால இலங்கை
– இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதரப் பிரச்சினை ஏற்படாமல் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோயை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பொழுது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி
இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டிகை கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுப்படக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொலிஸார்,
பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொவிட் தொற்றை தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. இவ்வாறான
சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களை கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
படிவம் ஒன்றில் இந்த தகவல்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை
குறித்த கடிதத்துண்டு ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்; கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாக இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவ்வாறானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டவாறு செயல்படுமாறு
நாம் கேட்டுக் கொள்கிள்றோம். பண்டிகை மற்றும் குடும்ப வைபவங்களை குடும்பத்துக்குள் மாத்திரம் வரையறுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பி.சீ.ஆர் பரிசோதனையின் போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், ஏனைய சுகாதார நடவடிக்கைகளின் போதும் போலியான பெயர்கள் தகவல்கள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இதுதொடர்பில் நாம் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செயல்படுவோர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி வழக்கு தொடரக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இவ்வாறான வழக்கு
ஒன்றில் குற்றம் இழைத்தவராக காணப்படுவோர் 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் . இதனால் போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு
பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்..
35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்
35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்று இன்று (16) இரவு 9 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஜீப் வண்டி அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது வட்டவளை
பகுதியில் வைத்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த ஜீப் வண்டியை செலுத்தியவர் அக்கர்ப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா
இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
அதன்படிஇ நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழுப்பு துறைமுக நகரத்தினுள் (Pழசவ ஊவைல) வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறைமையொன்றை
உருவாக்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் துறைமுக நகரத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர்
சபாநாயகரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
அதேபோன்றுஇ 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாக ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் டயர்
தொழிற்சாலையை ஒத்த டயர் தொழிற்சாலை ஒன்றை மதுகம பகுதியில் நிர்மாணிக்க சீன அரசு எதிர்பார்ப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.
சீன அரசினால் இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை ஒன்றை அடுத்த ஆண்டில் நிர்மாணிக்க
திட்டமிட்டுள்ளதுடன்இ அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய தூண்டுதல் ஒன்றை வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு சீன பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யுமாறு
சீன தூதுவர் இதன்போது மஹிந்த யாப்பா அபாயவர்தன அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
இதன்போது சீன அரசினால் ருஹுனு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியுதவியினை அதன் உப வேந்தர்
பேராசிரியர் சுஜீவ அமரசேனவிடம் கையளித்ததுடன் இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு
இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப்
பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த கடன் வழங்கல் 03 பிரிவுகளின் கீழ் இடம்பெறும். மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ
.25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும்
குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும். கடன்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படுகின்றன.
துணை நிவாரண நிதி வசதிகள் பெற விரும்பும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் நிறுவன தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர்
தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட பெயர் பட்டியலை சேவை நிலையத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த கிளையினால் ஊழியர்களின் கணக்குகளுக்கு உடனடியாக அந்த தொகை வரவு வைக்கப்படும்.
கடன் தொகை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அரவிடப்படும் மாத வட்டி 0.625 வீதமாகும். கடன்
தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலப்பகுதியில் ஊழியரின் சம்பளத்திலிருந்து அரவிடப்படும்.
அரச ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கான கடன் வழங்கல் ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பேணப்படும் அரச வங்கிகளில் தங்கள் தேசிய
அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவிற்குள் வராத ஆனால்
அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவிட் 19 சவாலுக்கு மத்தியில் பின்னடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக மீட்டு, 2020
ல் இழந்த முன்னேற்றத்துடன், 2021 ஆம் ஆண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
தொற்றுநோய் காலப்பகுதியில் சுமார் இரண்டு மாத பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் ஏற்றுமதி, சுற்றுலா, நிர்மாணத்துறை மற்றும் ஏனைய உற்பத்தி மற்றும் சேவைகளை படிப்படியாக
இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைக்கும் மக்களும் வர்த்தக சமூகமும் பெரும் தியாகங்களைச் செய்தனர். இதற்கு சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் அரச சேவைகளிடமிருந்து பெரும்
ஆதரவு கிடைத்தது. எனவே, 2020 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசிக்க முடிந்தது. நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான உணவு
விநியோகத்தை இது உறுதி செய்தது. அவ்வாறு பங்களித்த மக்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற நிதி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா
மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா
காலி மாவட்டத்தின் இந்துரவ-துன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச்
சடங்கொன்றில் கலந்துகொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி மரணச் சடங்கில் பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்
ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்
மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு
இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்
வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்
வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது
மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.






