Posted in இலங்கை செய்திகள்

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா

மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ‘தெயட்ட எலிய’ மின்சார திட்டத்தை

முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கிரிபாவ வேரகல கிராமத்தில் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.

‘தெயட்ட எலிய’ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, மின்சார சபையின் தலைவர் விஜித

ஹேரத் மற்றும் சமுர்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

வவுனியா புளியங்களுளம் பகுதியில் போலீசா நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது துப்பாக்கியுடன் வாலிபர்

ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இல்லாத புலிகள் மீள எழுச்சி பெற துடிகின்றனர் என்ற

போர்வையில் சிங்கள அரச பயங்கரவாதம் பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

அனாதையாக கிடைக்கும் சடலம் – உறவுகளை தேடும் பொலிஸ்

அனாதையாக கிடைக்கும் சடலம் – உறவுகளை தேடும் பொலிஸ்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில், கடந்த மூன்று வாரங்களாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ள

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு லிந்துலை பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் (வயது 74) என்ற பெயர் மற்றும் வயது விபரத்துடன், கடந்த ஜனவரி 4)ஆம் திகதி, கண்டி பெரியாஸ்பத்திரியில் குறித்த நபர் சுகவீனம் காரணமாக

அனுமதியாகியுள்ளார் என்றும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், கண்டி வைத்தியசாலையிலிருந்து

குறித்த நபரை (16) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், வைத்தியசாலையின் ஆண்கள் பிரிவு விடுதியில் ஏற்பட்ட இடவசதி பற்றாக்குறை காரணமாக, லிந்துலை பிரதேச

வைத்திசாலைக்கு இடமாற்றம் செயப்பட்டிருந்த நிலையில், கடந்த (4) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபருக்கு உறவினர்கள் யாரும் இருந்ததாகவோ, சரியான முகவரி இருந்ததாகவோ தொடர்பான

தகவல்கள் ஏதும் வைத்தியசாலையின் பதிவேட்டில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம், உயிரிழந்த நபரின் சடலத்தை மீண்டும் நுவரெலியா மாவட்ட

வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், சடலம் பிரதே அறையில் கடந்த ஒருமாத காலமாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சடலத்தை ஆடையாளம் காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

11 மாணவர்களை கடத்திய கடல்படை அதிகாரி விடுதலையாகும் அபாயம்

கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த

கரனாகொடவுக்கு எதிராக வழக்கை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களை அறிவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் மேலும்

காரணங்களை ஆராய்வதாக, மேலதிக சொலிசிட்டர் நாயகம் அயேசா ஜினசேன நேற்று(4) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதியாக தன்னை

பெயரிடுவதற்கு எதிராக ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தான் உள்ளிட்ட 14 அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வலுவற்றதாகும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது,

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர (தலைவர்) மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய

நீதியரசர்கள் குழாமால் மனு ஆராயப்பட்டபோதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் நாயகம அயேசா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ரிட் மனுவை மே மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று

எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர்

நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி

ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்;திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ‘சௌபாக்கிய வாரத்தை’ அமுலாக்கி வருகின்றது.

இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத்

திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.

ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக

களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு

அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.

இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிற்றி பஸ் சேவை’ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி

வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு

இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு

இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை

வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு,

போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும்

விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்

சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்

கொழும்பு டாம் வீதியில் முப்பது வயது மதிக்க தக்க பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டு சூட்கேசில் அடைத்து வைக்க பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

குறித்த சூட்கேசில் பெண்ணை கொலை செய்து அடைத்து எடுத்து சென்ற நபர் தற்போது தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .


பெண்ணை கொன்று கொடூரமாக சூட்கேசில் அடைத்து வீசிய கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் தீவிர விசாரணையில் சிறப்பு போலீஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர் .

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் மிரட்டும் கொலைகள்

முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்

குறித்த இளம் பெண் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை .

இலங்கை தலைநகரில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்க பட்ட மேற்படி சம்பவ உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியாவில் பேரூந்து சாரதியை தாக்கிய பெண்

    நேற்று (02) மதியம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.

    பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார்.

    அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர் அதே தொலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது நடத்துனரின் தொலைபேசியினை கேட்ட போது தொலைபேசியினை அவர் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

    அதன் போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில்

    ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தாக்குதல் நடத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு

    தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.

    காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமையுடன் வவுனியா மாவட்ட பொது

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி சி டிவியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ

    தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ

    நாம் தமிழர் கட்சி சட்ட சபை தேர்தலின் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்திட விவசாயி சின்னத்தில் புதிய பாடல்கள் உருவாக்க பெற்று வெளியிடப் பட்டுள்ளன

    அவ்வாறான பாடல்களில் புதிய பாடல் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

    இளங்கோ செல்லாப்பா இசையில் கம்பீரமாக நடை போடுகிறது இந்த பாடல் ,

    சமகால அரசியல் களத்தின் முதன்மை அறிந்து பரப்புரை பணியாளர்களினால் முன்னெடுக்க படும் இந்த களப்பணி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது

    இந்த பாடல் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எமது பாரட்டுக்கள் ,வாழ்த்துக்கள் ,வெல்லட்டும் நாம் தமிழர்,

    https://www.youtube.com/watch?v=kEuY_Cl0Amc&t=5s

    CLICK HERE VIDEO

    Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

    ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

    ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

    அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள்

    குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு திங்கட்கிழமை (01-03-02021) அன்று இணையவழிமூலமாக நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா

    பார்வையாளராக இல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றக்கொடுக்க இந்தியாவே தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கிறோம்.

    https://youtu.be/hw5a7OmeO-k
    ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென

    எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு

    பிராந்தியம் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தூக்கியெறிந்துள்ள சிங்கள அரசாங்கம், தமிழர்களின் பாரம்பரிய

    தேசத்தைச் சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

    சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தைச் சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையினைத் தடுத்து நிறுத்தும் தார்மீக் கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.

    யாழ்ப்பாணத்தின் தீவுக் கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.

    ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலாகும். ஈழத் தமிழர்கள் தொடர்பான

    இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

    இதற்கு வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்கின்றோம். இதனடிப்படையில், சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்துக்குப்

    பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக கட்சிகள் அனைத்தும், தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

    அதனை, அனைத்துக் கட்சிகளும் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலைமையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு

    பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதனையும் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க அவர்கள், கௌரவ பிரதமர்

    மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (2021.03.02) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

    மஹாசங்கத்தினரது ஆசீர்வாதத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்கள் தனது அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

    குறித்த நிகழ்வில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்

    ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள்

    இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    Posted in இலங்கை செய்திகள்

    மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை

    மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை

    மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

    கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்

    நீண்ட நாள் நல்லுறவு தொடர்புபட்ட விடயமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

    இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இலங்கை தமிழர்கள்

    தொடர்பில் இந்திய அரசாங்கம் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்குட்பட்ட அதிகார பகிர்வை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இவ்வாறான நிலையில், தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தற்போது இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்கும் என இலங்கை அரசாங்கம்

    எதிர்பார்க்கின்றது என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

    13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் 1976 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இடம்பெற்றதாகும். அந்த

    நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டு அமைச்சர் எமது படையினர் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

    துரதிஷ்டமான இந்த கருத்துக்களினால் பல நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டது. உண்மை நிலையை

    புரிந்துக்கொண்டு பல நாடுகள் செயற்பட்டதற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

    L.T.T.E இனால் யாழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை கருத்தில் கொள்ளாமல் சில நாடுகள்

    செயற்பட்டன. L.T.T.E இனால் பிள்ளைகள் கடத்தப்பட்டமையால் பெற்றோர் துன்பத்தை அனுபவித்தனர்.

    யுத்ததிற்கு பின்னர் யாழ் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துக்கொண்டுள்ளனர். சில நாடுகள் டு.வு.வு.நு மற்றும்

    புலம்பெயர்ந்தவர்களுக்காக ஆதரவை தெரிவிக்காததையிட்டு நாம் கவலை அடைகின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

    இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதி அபிவிருத்தியை பணியை மேற்கொள்ள இந்தியாவுக்கு 35 வட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது

    இதனை அடுத்து மீளவும் இந்தியா அதனை பாவனைக்கு உட்படுத்தும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது

    இந்தியா இலங்கைக்குள் இடம்பெற்று வந்த இழுபறி நிலை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிப்பதற்கு மகிந்தா உத்தரவு

    கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.

    நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

    பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கௌரவ பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

    அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

    நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

    அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

    குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித

    ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்

    யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா

    மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    Posted in இலங்கை செய்திகள்

    சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

    சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஒட்டு சுட்டான் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்

    அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

    ஜனநாயக நாடு என இலங்கை கூறி கொள்கின்ற பொழுதும் ,அறவழியில் நடத்த பட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள்

    ,மற்றும் பிரமுகர்களை சிங்கள ஆளும் இரத்த காட்டேறி அரசு அடக்குமுறைகளை பிரோயோகித்து மிரட்டி அடக்கி வருகின்றமை

    மேற்படி செயல் ஊடாக மீண்டும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

    சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

    சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்”

    சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

    மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

    இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

    விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.

    இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.

    இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.

    சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை

    போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

    அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

    இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

    இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

    இதுவரை 471 பேர் மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    நாள் தோறும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உயிரிழப்பு

    மேலும் திகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்ச படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

    கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

    கிளிநொச்சியில் பகுதியில் சிறுவன் ஒருவன் அவனது உறவினர் ஒருவரினால் மிக கோரமாக தாக்க பட்ட நிலையில்
    மரணமடைந்துள்ளான் ,

    கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்க பட்ட ,இவன் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் ,அப்பகுதி மக்கள் அவனை கண்டு பொலிசாருக்கு

    தெரிவித்த நிலையில் ,அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான் ,ஆயினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்

    ,மேற்படி மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன