Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு
கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைதினம் மட்டும் 137 பேர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இன்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா மரணங்கள் ஐந்து, சம்பவித்துள்ளன.
அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி
தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்கா எண்ணையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதாக அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இது குறித்து மேற்க்கொள்ளப்பட்ட இரண்டாவது தர நிர்ணய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணையில் புற்று நோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் கலந்துள்ளமை உறுதியானது.
இவ்வாறான நிலையில் குறித்த தேங்காய் எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்திணைக்களம் சம்பந்தப்பபட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை தொடர்பான பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டானையில் உள்ள ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்திற்கு எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வாரத்தில் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படும் என சுங்க பணிணப்பாளர் தெரிவித்துள்ளளளார்.
இதேவேளை, இன்றைய தினம் மற்றுமொரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணைய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்
.
நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!
இடர் வரினும் அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடும் அர்ப்பணிப்புடன் தீரமிகு உன்னத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை புகழ்வணக்கம் செலுத்திக் கொண்டது.
2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவின் இனஅழிப்புப் போர்,பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசவையில் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்வர் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.
மேலும் அவர் தனதுரையில், 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில், ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.
வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராஜப்பு.
விடுதலைக்கும், அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராஜப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.
எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
நீதியின் ஒரு குரலிலிருந்து பல குரல்கள் எழும்.
இராஜப்பு ஆண்டகையின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இழப்பாகும் எனத் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை துணைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள், போரின் இறுதிக் கட்டங்களில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவர் சாட்சியத்தை எவராலும் நிராகரிக்க முடியவில்லை என தனது இரங்கல் உரையில் தெரிவித்திருந்தார்.
ஆயர் இராஜப்பு ஆண்டகை அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலாக விளங்கினார் எனத் தெரிவித்த தாயக தொடர்பாடலுக்கான அமைச்சர் விஜிதரன் அவர்கள், தமிழர் போராட்டத்தின் நியாயத்தைப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு
எடுத்டுரைப்பவராகவும், தமிழினவழிப்பின் சாட்சியாகவும் இருந்தார் என்றார். இறுதி வரை தமிழர் போராட்டத்தின் வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியிருந்ததோடு, என்றார்.
இறுதிப்போரின் போது தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லி உலகின் மனசாட்சியை ஓங்கி அறைந்தார் என தனது இரங்கலில் தெரிவித்திருந்தார்.
போர்க் காலத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி தமிழ்மக்களுக்கான உணவையும் ,மருந்தையும் குறைத்து நேரடியாகத்
தமிழர்களை அழிக்க முயன்ற போது, சிறிலங்கா அரச திணைக்களங்களின் அறிக்கைகளைக் எடுத்க்காட்டி, சிறிலங்கா அரசாங்கத்தினை உண்மை முகத்தினை உலகின் முன் ஆண்டகை அவர்கள் அம்பலமாக்கினார் என பிரதமர் பணிமனை பணிப்பாளர் நாயகம் கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.
தாயகத்திலுள்ள மக்கள் ஆயர் இராயப்பு ஆண்டகைக்கு ‘புனிதர்’ என்ற சிறப்பை வழங்கும்படி பொப்பாண்டகையினை வேண்டிக் கொள்ள வேண்டுமென துணை அமைச்சர் கலையழகன் தனது இரங்கலுரையில் தெரிவித்திருக்க, நாடுகடந்த தமிழீழ அரசங்கமும் இக்கோரிக்கையினை
பொப்பாண்டகைக்கு விடுக்க வேண்டுமென கோரிய அரசவை உறுப்பினர் லிங்க ஜோதி அவர்கள்,தமிழர் ஆன்மிகத்திற்கும் சான்றாக ஆண்டகை அவர்கள் திகழ்ந்திருந்தார் என குறித்துரைத்திருந்தார்.
19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்
19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கலேவெல பகுதியில் 19 வயது இளம் பெ ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்
யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்
யாழ்ப்பாணத்தில் போலீசார் ஒருவருக்கும் வாலிபன் ஒருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது
இதன் பொழுது காவல்துரை சிப்பாயின் கை விரலைகடித்து குத்தறியுள்ளான்
பலத்த காய் காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்
திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்
திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்
இலக்கை இரத்தினபாரிமாவட்டத்தில் கடந்த 90 நாட்களில் 89 பேர் டெங்கு நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இதனை தடுப்பதற்குரிய விழிப்புணர்வு கருத்தரங்ககுள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க பட்டு வருகிறது
சுற்று புறத்தை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாக இந்த நோயானது அதிகமாக பரவி
வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் 18 மில்லியன் மக்கள் Oxford-AstraZeneca தடுப்பு ஊசியினை செலுத்தியுள்ளனர் ,அவ்விதம்
செலுத்தியவர்களில் ஏழுபேர் இரத்த உறைதல் காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும்
அது இதன் மூலம் தான் இந்த இறப்பு ஏற்பட்டதா என்பதை தெளிவாக கூற இயலவில்லை என்ற குழப்பமான தகவலை வெளியிட்டுள்ளது
மேலும் முப்பது பேருக்கு இந்த இரத்த உறைதல் கட்டிகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது
,நமது தமிழர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்கத்தில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
In total, 30 people out of 18 million vaccinated by 24 March had these clots.
It is still not clear if they are just a coincidence or a genuine side effect of the vaccine.
The Medicines and Healthcare Products Regulatory Agency says the benefits continue to outweigh any risk
இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது
இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது
இலங்கை கண்டி பகுதியில் இணையதளத்தின் மூலம் விபச்சாரம் புரிந்து வந்த 29 வயது பெண்
ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
வெளிநாட்டு வாலிபர்களை இலக்கு வைத்து இவர் திறந்த மேனியை காட்டி அதிக பணம் பறிமுதல்
செய்து வந்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 575 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 575 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 575 பேர் மரணம் ,
கடந்த தினத்தில் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற
பொழுதும் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன்
உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை
தமுகூ தலைவர் மனோ கணேசன்
உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.
2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள்
இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக
ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.
அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.
நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின்
மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.
ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.
யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது கொலை வெறித் தாக்குதல்
யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது கொலை வெறித் தாக்குதல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாவற்குழியில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான சமரச முயற்சிக்கு சென்ற சாவக்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராமநாதன் யோகேஸ்வரன் என்ற உறுப்பினர் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்தியால் வெட்டிப் படுகாயம் அடைந்த அவர் மீது கற்களாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு திருட்டு சம்பவங்களை உடனடியாக முறிடியத்த நடவடிக்கைக்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் தலைமை தாங்கியிருப்பதாக தெரிய வருகிறது.
நேற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 300 வீட்டுத்திட்டம் பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தை அடுத்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக தனியாக அவர் அங்கு சென்றிருக்கின்றார். சென்ற பின்னரேயே திட்டமிட்டு அவர் வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
அங்கு அவரின் தலைப்பகுதிக்கு கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு நின்றிருந்த சிலர் கற்களால் அவரின் தலையில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்திருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு
பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு
எதிர் வரும் திங்கட்கிழமை முதல் இலங்கையில் பிறவுண் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 115 ரூபாயாக விலை நிர்ணையிக்க படுகிறது
ஆளும் ஜனாதிபதி கோட்டபாய சீனி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,அதனால் இந்த விலை இவ்வாறு நிர்ணயிக்க படுகிறது
நாள் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய்களை சினி வியாபாரம் மூலம் கோட்டா பெற்று
கொள்கின்றார் என்ற தகவல் பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!
போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்தே இந்தக் கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடித்தில்,
சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
உலகில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சிறிலங்க இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐ.நாவின் அறிக்கையொன்றில் உள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா. உள்நாட்டு மறுஆய்வு அறிக்கையின்படி, 2009 ஆண்டின் இறுதிப்பபோரின் போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும்,
காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.சிறிலங்கா இராணுவத்தினாரால் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் சிறிலங்கா இராணுவ மற்றும்
உளவுத்துறையிடமிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அகதிகளை, சந்திக்கவும், அவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிக்களை வேண்டுமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாளரிடம் கோரியுள்ளார்.
முன்னராக தமிழ்அகதிகளை நாடுகடத்த வேண்டாமென ஜேர்மன் வெளிவிகார அமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்
போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்
சிறை சாலைக்குள் துவாய் ஒன்றுக்குள் மறைத்து போதைவஸ்து கடத்த முயன்ற பெண் ஒருவர்
கைது செய்ய பட்டுள்ளார் ,கவால்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது
இடம்பெற்றுள்ளது
கைதானவர் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்
தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்
தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்
இலங்கை நுவரெலியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது லொறி வண்டி
மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள்
பலியாகினர் ,லொறி சாரதி தப்பி ஓடியுள்ளார் ,நாள் தோறும் இலங்கை வீதி விபத்தில் சிக்கி நான்கிற்கு
மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை-இராணுவம் குவிப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு
ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும்
இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார்
இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்
இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் புற்று நோயினால் நாள் தோறும் முப்பத்தி எட்டு பேர் பலியாகிவருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட புற்று நோய் நோயாளர்கள் நாட்டில் உள்ளனர் எனவும் ,இவர்கள்
தமது நோயினை தடுக்க வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் 45 ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து வருவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண்
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண்
நிகழ்விடம்: St John’s Church Parish Hall, 52 Yarra St, Heidleberg VIC. 3084
காலம்: 18/04/2021 Sunday 6PM – 8PM
நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு
நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற
நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும்
நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெறும் இடம்: St John’s Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084
காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
பிற்குறிப்பு: நாட்டுப்பற்றாளர் நிகழ்வில் ஆண்டுதோறும் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் அல்லது தனிநபர்கள் விரைவில் மேற்கூறிய இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!
தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!
ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது.
தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற முழக்கத்துடன், ஈழத்தமிழ் மக்கள் தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்கும் வகையில்,
பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
கனேடிய நேரம் மாலை 6 மணிக்கு இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கருத்தரங்கில், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி,
தமிழ்நாட்டில் இருந்து மத்ராஸ் பல்கலைக்கழக பொருளியில் பேராசிரியர் கலாநிதி நாகநாதன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
ZOOM செயலி மூலம் ( Meeting ID: 875 9167 2409 ) இடம்பெறுகின்ற இக்கருத்தரங்கில் அனைத்த தமிழ்உறவுகளையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா
ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா
ஹரித” தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது.
விவசாய துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும்.
விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்தில் இருந்துவந்த உயர் விவசாய
தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும்.
இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்களினால் “ஹரித” இணையத்தளமும் (www.harithatv.com) கருப்பொருள் பாடலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மரக் கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.
டயலொக் அலைவரிசை என் 16 மற்றும் பியோ டிவி அலைவரிசையின் 09 ஊடாக ஹரித தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள் பார்வையிட முடியும்.
மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
, மேல் மாகாண ஆளுநர் மாசல் எப் த எயாபோஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் அமைச்சர்கள் தூதுவர்கள்,
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






