Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

இலங்கையில் பரவி வரும் கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுயமார் 340 பேர் கைது செய்ய

பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதுவரை பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    இனப்படு கொலையை எப்படி கடந்து போவது?- பதிலடி கொடுப்போம் நாம்தமிழர் video

    இனப் படுகொலையை எப்படி கடந்து போவது?- பதிலடி கொடுப்போம் நாம்தமிழர் video

    இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய படுகொலையை எப்படி

    கடந்து போவது …? மறக்கவோ ,மறைக்கவோ முடியாத வலியுடன் தமிழர் தேசம் நடக்கிறது

    அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என நாம தமிழர் கட்சி தெரிவித்துள்ளது

    click here video

      Posted in இலங்கை செய்திகள்

      இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.PHOTO IN

      இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.

      18/05/2021

      பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

      ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில்

      படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள்.

      மே 2009 சிறிலங்கா அரசின்இனவெறித் தாண்டவத்தின்உச்ச கட்டம் எனபது உலகறிந்த உண்மை. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஈழத்திலுள்ள சமூக அமைப்புகளும் மே 2009 இல் காணாமல்

      ஆக்கப்பட்ட 146,679 தமிழ் மக்கள் இன்றும் கணக்கிடப்படாமல் உள்ளார்கள் என வருத்தம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறார்கள்.

      முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று அப்பாவித் தமிழ் மக்கள் இனவெறி அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ திட்டமிட்டு தள்ளப்பட்டு

      சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசான ஆயுதங்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப் பட்டார்கள்.

      பசி என ஒரு வேளை உணராது தம் உழைப்பால் உணவருந்தி இயற்கையோடு செறிந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் உண்ண உணவின்றி இறுதியில் கஞ்சிக்கு

      வரிசையில் கையேந்தி நின்றார்கள். ஆனால் சர்வதேசங்கள் நடப்பவற்றை நன்கு அறிந்தும் இனப்படுகொலையை நிறுத்தத் தவறியது. தொடர்ந்தும் அதற்கான நீதியை நாம் பெற பல வழிகளில் சதிகள் செய்து நீதி மறுக்கப்படுகின்றது.

      போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் 20க்கும் மேற்பட்ட பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து

      மதிப்பிற்குரிய Rt Hon Dominic Raab MP அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்கள்.

      கோரிக்கைகள் பின்வருமாறு :

       1. இன்றும் இலங்கை அரசாங்கத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் செயல்களை இனவழிப்பு என இனங்காணப்பட வேண்டும். 
      
      2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தற்காலிக தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும்.
      
      3.  தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.  

      ஐக்கிய இராச்சியத் தமிழ் இளையோர்கள் ஆகிய நாம் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் எதை இழந்தோமென்றும் எதற்காக போராடுகின்றோமென்றும் உலகத்திற்கு

      எடுத்துக்கூறினார்கள். உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் இளையோர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலையையும், இன அழிப்பையும், அடக்குமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.

      தமிழீழம் அடையும் வரை இந்த எழுச்சி தொடரும்!

      “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

      முள்ளி வாய்க்கால்
        Posted in இலங்கை செய்திகள்

        லண்டன் பாராளுமன்றம் -லீவர் பூல் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே


        லண்டன் பாராளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே

        இன்று 18-05-2021 மதியம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், லீவர் பூல் லைம் ஸ்ட்ரீட் முன்பாகவும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள்

        என்ற அமைப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்தினர் ,மதியம் ஒருமணி முதல் இரண்டு மணிவரை இந்த நிகழ்வு இடம்பெற்றது

        இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாக்க படும் தமிழர்களுக்கான விடுதலை ,காணாமல் போனவர்கள்

        விடுதலை ,மற்றும் முள்ளி வாய்க்காலில் சிங்கள இன படுகொலைக்கு நீதி என்பனவற்றை வேண்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

        காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது

        உலகம் தழுவிய நிலையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய பட்ட அப்பாவி மக்கள் நினைவுகூற படுகின்றனர் .12 ஆண்டுகளை கடந்த பொழுதும் இதுவரை இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையாகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

          கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

          இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.

          இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34

          பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிர் இழந்துள்ளனர்.இந்த டாக்டர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது.

          இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் ஐந்து மாதங்கள் கழித்து, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி

          போட்டுக்கொள்ள டாக்டர்களை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

          இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே கே அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

          இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இந்திய மருத்துவ

          சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

            இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

            மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

            ஏழாவது ஆண்டாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதோடு, உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வொன்றினை இந்நாளில் ஏற்பாடு செய்துள்ளது.

            2012 முதல் 2020 ஆண்டு வரை இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றிய Adama Dieng அவர்கள், 1995-2001 ஆண்டுகளில் கெய்ரி நாட்டுக்கான ஐ.நாவின் சிறப்பு

            பிரதிநிதியாக பணியாற்றியிருந்தவர்.1982-1990 காலங்களில் அனைத்துலக நீதிபதிகள் ஆணையத்திலும் பங்கெடுத்திருந்தவர் மட்டுமல்லாது, 45க்கும் மேற்பட்ட கருத்தாக்கங்களை பதிப்பாக வெளியிட்டவர்.

            பல்வேறு ஆளுமைகளை கொண்ட Adama Dieng அவர்கள் பங்கெடுக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, 18-05-2021 செவ்வாய்க்கிழமை New York 2 PM / UK : 7 PM / EU : 8 PM நேரத்துக்கு இடம்பெற இருக்கின்றது.

            இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

            இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு நியு யோர்க் நேரம் காலை 10 மணிக்கு (UK : 7 PM / EU : 8 PM) தொடங்குகின்றது.

            பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்.

            உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பது பல நாடுகளில் சவாலாக மாறியுள்ள நிலையில், இணையவழியே உலகளாவிய நிகழ்வாக இவ்விரு நிகழ்வுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

            எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி

            நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக நினைவேந்துவது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக

            இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

            கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாhக நினைவேந்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

            • இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
            • ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த
            • சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை
            • நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றை
            • தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட
            • கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால்
            • இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

            ஊடகங்களுக்கான நேரஞ்சல் இணைப்புக்கு :

            https://youtu.be/jhsmXffKvz4
              Posted in இலங்கை செய்திகள்

              துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்

              துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்

              இலங்கை துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் விசமிகள் நடத்திய தாக்குதலில் அந்த ஆலயம் முற்றாக சேதமாக்க பட்டுள்ளது

              மேற்படி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட நபரை கைது செய்யும் நடவடிக்கையில்

              போலீசார் ஈடுபட்டுள்ளனராம்

                Posted in இலங்கை செய்திகள்

                பருத்துறை மீன் சந்தை அடித்து பூட்டு – மக்கள் அவதி

                பருத்துறை மீன் சந்தை அடித்து பூட்டு – மக்கள் அவதி

                இலங்கை யாழ்ப்பாணம் பருத்துறை மீன் சந்தை சுகாதார விதிமுறைகளை பினற்ற தவறிய

                நிலையில் அந்த சந்தை தற்காலிகமா அடித்து மூடப்பட்டுள்ளது

                நிகழ்கால கொரனோ பரவல் விதிகள் இங்கு செழுமையாக நடைமுறை படுத்த தவறிய நிலையில்

                இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம்

                  Posted in இலங்கை செய்திகள்

                  போலீசர் வேட்டை 223 பேர் கைது

                  போலீசர் வேட்டை 223 பேர் கைது

                  இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற தவறிய 233 பேர் கவல்த்துறையினரால்

                  கைது செய்ய பட்டுள்ளனர்

                  கைதானவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாது உலவினர் என்ற குற்ற சாட்டில்

                  கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்

                    தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்

                    முள்ளி வாய்க்கால் தின நிகழ்வை நடத்திடமுல்லைதீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி

                    அளித்துள்ளது ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைபிடித்து இந்த நிகழ்வை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

                    எனினும் அந்த சாலையை மூடி விடும் நகர்வில் சிங்கள இராணுவம் ஈடுபட்டுள்ளது ,அங்கு

                    செல்பவர்களை கைது செய்யும் நகர்வில் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்க படுகிறது

                    சுமந்திரன் காணொளி வாயிலாக நினைவு கூறுவோம் என கிண்டலாக பேசியுள்ளார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

                      கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

                      இலங்கையில் தனி பெரும் சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் கம்பாக பகுதியில் கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

                      எனினும் இங்கே கூடி நிற்பவர்கள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றாது மிக நெருக்கமாக உள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது

                      மேலும் கொரனோ ஊசி செலுத்த படும் பகுதியிலும் தாதிமார் மற்றும் வைத்தியர்கள் குவியலாக உள்ளது இலங்கையில்

                      கொரனோ கட்டுப் பாடு எவ்வாறான கீழ் நிலையில் உள்ளது என்பதையும் ,இதில் இருந்து இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது என்பதையும் அடித்து கூறலாம்

                      வெளி நாடுகளில் இவ்விதம் அல்ல ,அதனால் தான் லண்டனில் இந்த நோயானது விரைவாக கட்டு படுத்த முடிந்தது என்பது குறிப்பிட தக்கது

                      இலங்கை அரசுக்கு வேண்டும் என்றால் நாங்க கொஞ்சம் பயிற்சி தரலாம் வாங்க ,

                      கொரனோ ஊசி
                      கொரனோ ஊசி
                        Posted in இலங்கை செய்திகள்

                        தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது-மனோ

                        தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது

                        • மனோ கணேசன்

                        ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.

                        இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.

                        அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

                        இன்று நடைபெற்ற தேர்தல்முறை தெரிவுக்குழுவின் முதற்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

                        இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி

                        கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை.அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                        ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.

                        ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல

                        அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும்கூட இடமளிக்காது.

                        அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.

                        பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம்

                        வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.

                        இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே ஒன்பது (9) தமிழ் எம்பீக்களும், இருபத்திஐந்து (25) தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும், ஏழு (7) முஸ்லிம் எம்பீக்களும், பதினெட்டு (18) முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவாகின்றார்கள்.

                        இந்நிலையில் தேர்தல் முறையை மாற்ற கிளம்பும் அரசுக்கு, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், 20ம் திருத்தத்துக்காக அரசு பக்கம் தாவிய சிறுபான்மை எம்பீக்களும் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.

                        இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு, மாற்று

                        யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

                        தேர்தல் சீர்திருத்தை கோருவது அரசாங்கம்தான். ஆகவே இது தொடர்பான நியாயமான யோசனைகளை முன்வைக்க வேண்டியது அரசாங்கமே ஆகும். ஆகவே இது தொடர்பான பந்தை நாம் அரசாங்க பக்கத்துக்கு அடித்து அனுப்ப வேண்டும்.

                        மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை ஆரம்பத்திலேயே முன் வைப்பது முறையாகாது. இதுபற்றிய தெளிவும்,

                        அனுபவமும் அற்ற ஒருசிலரின் யோசனை முன்மொழிவுகள், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.

                        அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமையை முன்வைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, ஜனத்தொகைக்கு ஏற்ப, இன்றைய தேர்தல் மாவட்டங்களை, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.

                        இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக

                        பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம். ஆகவே இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் என்ற விடயம் தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

                        பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல்

                        முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்


                          கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்

                          இலங்கை போகம்பர சிறை சாலியின் கூரையில் ஏறி நின்று நாற்பதுக்கு மேற்பட்ட கைதிகள் போராட்டத்த்தில் குதித்துள்ளனர்


                          தமது கோரிக்கைகள் நிரைவேற்ற படும் வரை தாம் சாகும் வர போராட்டத்த்தில் ஈடுபட

                          போவதாக கைதிகள் தெறிவித்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            70 கிராமங்கள் தனிமை படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

                            70 கிராமங்கள் தனிமை ய் படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

                            இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி

                            கொள்ளும் முகமாக உடனடி அமுலாகும் வகையில் பத்து மாவட்டங்களை சேர்ந்த எழுபது

                            கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

                            நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் மூவாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு

                            வருவதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                              கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                              இலங்கை பமுனுவ பகுதியில் கம்பி ஒன்றால் மனைவியை தாக்கி கனவை படுகொலைசெய்துள்ளார்


                              இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி மேற்படி கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது

                              சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் கொலை குற்ற

                              சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                                முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                                இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது

                                செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                                நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்

                                எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

                                  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

                                  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் அடையாளம்

                                  காணப்பட்டுள்ளனர் ,தற்போது யாழ்ப்பாண பகுதியில் அதிக நோயாளிகளை கொண்ட பகுதியாக

                                  மாற்றம்பெற்று வருகின்றது ,இதனால் பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                                    இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                                    இஸ்ரேல் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ மோதல்களை அடுத்து , மக்களை

                                    வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ,பாதுகாப்பான இடத்தில தங்கி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                    மேலும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                                    ,தொடர்ந்து ஹிஸ்புல்லா மாற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வரும்

                                    நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                    அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                    அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                    இலங்கை பொத்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்து முப்பத்தி ஐந்து வயது மதிக்க

                                    தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உடலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                    இவர் அடித்து கொலை செய்ய பட்டு வயல் வெளியில் வீச பட்டு இருக்கலாம் என்ற சநதேகம் வலுத்துள்ளது


                                    மேற்படி கொலையுடன் தொடர்பு பட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                                    தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,கோட்டா ஆட்சியில் இலங்கையில்

                                    தொடர்ந்து இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

                                      இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் கடந்த தினம் மரணமாகியுள்ளனர்

                                      இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 962, பேர் பலியாகியுள்ளனர் ,வேகமாக உருவெடுத்து

                                      பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த ,வரும் நாட்களில் இருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன

                                      இதனை அடுத்து நோயின் தாக்குதல் குறையலாம் என கருத படுகிறது