Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு
ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் தமிழ் கட்சிகள் யாருடனும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் .
இந்த சந்திப்பில் தமிழர்கள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்படவுள்ளது .
தமிழ் மக்களை மறந்து தமது பைகளை நிரப்பும் நோக்குடன் செயல்படும் தமிழ் காட்சிகளை ,ரணில் சந்தித்து பேசுவது ,கண்துடைப்பு நாடகம் என நோக்க படுகிறது .
தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்
தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்துக்கு சனிக்கிழமை(10) முள்ளியவளையில் இருந்து கேக் வாங்க வந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி தவறி வீழ்ந்துள்ளது.
இதை எடுத்த வெதுப்பக உரிமையாளர், இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்
தொலைத்தவர் தேடிவரும் வரை, அதைப் பத்திரமாக வைத்திருக்குமாறு வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ள நிலையில், தாலிக்கொடியைத் தொலைத்தவர்கள் வெதுப்பகத்துக்கு வருகைதந்த போது,
வணிகர் சங்க தலைவர் முன்னிலையில் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, வெதுப்பக உரிமையாளரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெதுப்பகத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான தாலிக்கொடி தங்களுக்கு மீளவும் கிடைத்ததையிட்டு வெதுப்பக உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் குறித்த குடும்பத்தினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.
சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை
சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை
இலங்கை பொரளை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் இடம்பெற்று வந்த சிறுநீரக மோசடி தொடர்பில் .10 பேரிடம் விசாரணைகள் இடம்பெறுகிறது .
காவல்துறையினருக்கு கிளைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,நடத்த பட்ட விசாரணையில் ,இந்த மருத்துவமனையின் மோசடி அமபலமாகியுள்ளது .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதால் ,குறித்த மருத்துவமனை முற்றாக அடித்து மூட படும் அபாயம் எழுந்துள்ளதுடன் ,
மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
செக்ஸ் தேடலில் இலங்கை உலகில் முதலிடம் பிடித்து சாதனை
செக்ஸ் தேடலில் இலங்கை உலகில் முதலிடம் பிடித்து சாதனை
கூகிள் இணையத்தில் செக்ஸ் தேடலில் உலகத்தில் முதலாவது இடத்தை இலங்கை பிடித்து சாதனை படைத்துள்ளது .
இவற்றில் வடமாகாணம் முதலாவது இடத்திலும் , Uva and North Central Provinces இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
இவர்கள் செக்ஸ் உறவு தொடர்பான காணொளி காட்சிகள் மற்றும் ,செக்ஸ் தொடர்பண பல தரப்பட்ட விடயங்களை தேடியுள்ளது அம்பலமாகியுள்ளது .
நம்ம புள்ளைங்க உசார் தான் போங்க .
பாதாள உலக குழுவிடம் இருந்து 50 துப்பாக்கிகள் மீட்பு – முக்கிய நபர்கள் கைது
பாதாள உலக குழுவிடம் இருந்து 50 துப்பாக்கிகள் மீட்பு – முக்கிய நபர்கள் கைது
இலங்கையில் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய பாதாள உலக குழுவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் இவ்ரகளிடம் இருந்து சுமார் 50 அதி நவீன ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
இவற்றில் கை துப்பாக்கிகள் ,மற்றும் ஏகே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
டுபாய் முதல் இலங்கை வரை நடத்த பட்ட தேடுதல் ,நடவடிக்கையில் இந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் மீட்க பட்டுள்ளது என்கிறது குற்ற புலனாய்வு துறை .
எனினும் தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
துணைவேந்தரை தாக்கிய 12 மாணவர்கள் பணி நீக்கம்
துணைவேந்தரை தாக்கிய 12 மாணவர்கள் பணி நீக்கம்
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை தாக்கிய குற்ற சாட்டில் அங்கு கல்வி பயின்று வந்த ,12 மாணவர்கள் ,கல்வி கற்க தடை விதிக்க பட்டு அடித்து விரட்ட பட்டுள்ளனர் .
மேலும் ஆசிரியர் மீதான தாக்குதல் தொடர்பான சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அங்கு பொருத்த பட்டிருந்த கமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது ஆராயப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
இது தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் என்கின்ற கருத்துக்கள் பரவி வருகின்றன .
விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தப்பி ஓட்டம் – தேடும் இண்டர்போல்
விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தப்பி ஓட்டம் – தேடும் இண்டர்போல்
இலங்கை ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள களியாட்ட விடுதிக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி கொண்டிருந்த முஸ்லீம் வாலிபர் ஒருவர் ,காரை வேகமாக செலுத்தியதில் ஆட்டோ ஒன்றுடன் மோதியது .
மேற்படி விபத்தை ஏற்படுத்திய சாரதி ,காரை அவ்விடத்தில் விட்டு துபாய்க்கு அன்றே தப்பி ஓடியுள்ளார் .
நடத்த பட்ட விசாரணைகள் ,குறித்த செல்வந்த நபரது பெயரில் மூன்று பென்ஸ் கார்கள் உள்ளது தெரியவந்துளளது .
தற்போது குறித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் இண்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது .
இப்படியும் சாரதிகள் இலங்கையில் இருக்கத்தான் செய்யிறாங்க .
குளிரினால் 1600 கால்நடைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன
குளிரினால் 1600 கால்நடைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன
இலங்கை வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1600 கால்நடைகள் பலியாகியுள்ளன .
இன்று மதியம் வரையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நிலவும் அதிக குளிர் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை விவசாயத்துறை புதிய கட்டு கதையை பரப்பி விட்டுள்ளது .
இது வேறு விடயமாக பார்க்க படுகிறது .
இந்த விலங்குகள் இறப்பதற்கு முன்னர் மக்களுக்கு தோல் வியாதி ஒன்று உருவானது .
அதனை அடுத்து இந்த விலங்குகள் பலியாகியுள்ளமை ,சமாச்சாரம் வேறாக இருக்கலாம் என கணிக்க பெறுகிறது .
வெளியில் தெரிந்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்கின்ற விதத்தில் மூடி மறைப்புக்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றன .
கிழக்கு மாகாணத்தில் இறைச்சி கடைகள் அடித்து பூட்டு
கிழக்கு மாகாணத்தில் இறைச்சி கடைகள் அடித்து பூட்டு
கிழக்கு மாகாணத்தினுள் கால்நடைகள் தீடிரென இறந்து வீழ்ந்த நிலையில் ,அந்த விலங்குகள் இறைச்சிகள் விற்க பட்டு வருவதான குற்ற சாட்டு எழுந்து வந்த நிலையில் ,தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒருவாரத்திற்கு இறைச்சி கடைகளை அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது .
இந்த கால் நடைகள் இறப்பு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
450 க்கு மேற்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட
குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹல்துமுல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளதுடன்,
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்
ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரையான 11 மாதங்களில் மொனராகலை மாவட்டத்தில் வாகன விபத்துகளால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என மொனராகலை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஏ.எஸ்.அபேகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த 11 மாதங்களில் 462 விபத்துகள் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகமானவர்கள் தலமன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 462 வாகன விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 164 பேர் பாரிய காயங்களுக்கும் 214
பேர் சிறிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்டு
ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்டு
ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்ட படுகிறது .
வீதி திருத்த பணிகள் இடம்பெறுவதால் இந்த சாலை மூடும் நடவடிக்கை இடம்பெறுகிறது .
எதிர் வரும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த சாலைகள் முற்றாக அடித்து பூடட படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த சாலை பயனாளர்கள் இதனை கவனத்தில் கொள்க .
யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ் சர்வதேச பலாலி விமான நிலையத்திற்கும் ,சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்று (12) ஆரம்பமாகிறது.
இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் இந்த விமான சேவைக்கு அமைவாக , சென்னை விமான நிலையத்தில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையன்ஸ் ஏர் விமானம் இன்று காலை 10:50 அளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.
யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
அதே விமானம் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்பட உள்ளதாக பலாலி விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ,திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் இடம்பெறும்.
2019ஆம் ஆண்டில், சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும்,
கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களில் மழை
வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களில் மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 டிசம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 டிசம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களில் மழை
புத்தளம்,அம்பாறை,மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களிலும் காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள
தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்
பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்
தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பிரிகேடியர் தீபன் மற்றும் லெப்கேணல் தீபன் ஆகியோரது தந்தை அவர்கள் மரணமானார் .

ஈழ விடுதலை போருக்கு முக்கிய தளபதிகளை தந்து ,மக்களையும் மண்ணையும் நேசித்த மிக பெரும் ஆதரவாளர் .
போராடத்திற்கே தம்மை அர்ப்பணித்த வீர விடுதலை குடும்பம் .
அவ்விதமான வீர தந்தை இன்று எம்முடன் இல்லை .
தமிழீழ விடுதலை புலிகள் மண்ணில் ஆண்டிருந்தால் ,இந்த தந்தை இறுதி நிகழ்வு தமிழீழம எங்கும் களைகட்டி இருக்கும் .
ஆனால் தமிழ் தேசியம் கேப்சும் நமது ஊடகங்கள் இவரை மறந்துள்ளன .
காலம் கடந்து போகலாம் ,ஆனால் அந்த காலத்தில் நடக்கும் ,தட்டி கழிப்புக்களும் ,காட்டி கொடுப்புகளும் ,அவமதிப்புகளும் ,தமிழர் நெஞ்சங்களில் இருந்து அழிந்து போகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
.
வீர தந்தத்தையே வீராசாமி உறங்கு .தமிழாம் உன் பெயர் நாளை சொல்லும் .
வீர வணக்கம் .
பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்
அமரர்.திரு. கந்தையா வேலாயுதபிள்ளை
மண்ணில் -1937.09.14
விண்ணில் -2022.12.09
யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பராசக்தியின் பாசமிகு கணவரும்,
விஜயகுமார் (இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முன்னாள் நடத்துனர்), சுகுணகுமாரி, வேணுகுமாரி (முன்னாள் ஆசிரியை, கிளி/முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி), காலஞ்சென்ற பகீரதகுமார் ( மூத்த தளபதி பிரிகேடியர் தீபன்), மற்றும் சிவஞானகுமாரி (ஆசிரியை- யா/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சிவகுமார் (லெப்.கேணல்.கில்மன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனந்தநீலா, அனந்தசேகரன், லோகநாதன், குமாரி, சிறீதரன் (பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்)
ஆகியோரின் மாமனாரும்,
கோபினா, கோபிசன், அனோஜா, சிறிதரன், அஜிந்த், கீர்த்தனா, அருணியா, அஜந்தூரன், லக்சன், லக்சனா, சாரங்கன், பிரணவன், பிரவீனன், ஆர்த்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு பேரனும், அஞ்சனா, ஆசா, அஸ்மி, அகானா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், முரசுமோட்டையில் அமைந்துள்ள அவரது மூத்தமகனின் இல்லத்தில் நடைபெற்று (முருகானந்தா கல்லூரிக்கு முன்னால்), பூதவுடல் தகனக்கிரியைக்காக, அன்னாரின் குடும்ப மயானமான யாழ் வரணி-குடமியன் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பெண்கள் போதைக்கு அடிமையாகி தள்ளாடும் அவலம் இடம்பெறுகிறது .
இவ்விதம் நகரப் போவது ஓர் பிளைக்மெயில் கலாசாரமா..?
மருத்துவர்கள் வலிந்தே சிக்க வைக்கப்படுகின்றனரா ….
பொருளாதார செறிவுடைய யாவரும் இலக்கு வைக்கப்படுகின்ற …… பொறி
பெண்கள் திட்டமிட்டே போதை வலையில் சிக்க வைக்கப்படுகின்றனர்
நானாந்தம் பத்திரிகை செய்திகளும் மருத்துவதுறையினரை போதை வலையமைப்பின் பிணாமிகளாக சித்தரிக்கினறன
பிரேசில் வெனிசுலா போன்று நகர்கின்றது ..
ஆட்சி போதைப்பொருள் மாபியா கைகளில்.
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை ஆட்சியாளர்களின் லஞ்சம் .கொள்ளை காரணமாக அப்பாவி மக்கள் பாதிக்க பட்டு வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
தமது குடும்பங்கள் வாழ்வு செழிப்பை மட்டும் மைய படுத்தி நகர்ந்த ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் காரணமாகவே ,அழகிய இலங்கை இன்று இந்த அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளது என்கிறது அந்த ஆய்வு அறிக்கை .
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக
நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில்,
டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாவட்டம் 306 சி2 ,இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6,500 புதிய வியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான
தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை
அதில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்திற்கொண்டு,
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதன்
மூலம் அர்த்தமுள்ள செயல்பாட்டுக்கு வழிவகுக்குமாறும் ஜனாதிபதி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அவர்களுக்கும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்தார்.
மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க,
முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின்
மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்விலல் கலந்து கொண்டனர்.
உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் நேற்று (10) இரவு அவரது மகனின் கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மிக மோசமாக சென்றதையடுத்து, சுமார் 300 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அதுல சேனாரத்ன தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
பின்னர் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த அதுல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் அதுல சேனாரத்னவின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு
கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு
இலங்கை மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் நபர் ஒருவரை வானில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ,வான் ,மோட்டார் சைக்கிள் என்பன மீட்க பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
































