Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா
கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா
1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு, இன்று (10) அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை,
அவர்களுக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக, அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களில் இருந்தும் 5 வீதத்தை
குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாட்டு கடன் உதவியை பெற முடியாத நிலையில நாடு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று
அஞ்சப்படுகின்றது. எனவே இதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாக இவ்வருடம் அனைத்து அமைச்சுக்களினதும் மூலதனச் செலவு தவிர்ந்த மீள் எழும் செலவில் இருந்து 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
அத்துடன், அமைச்சுக்களின் நாளாந்த செலவுகள் உட்பட அமைச்சுக்களின் செலவுகளை இயன்றவரை குறைத்துக் கொள்ளுமாறு அனைத்து
அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சின் ஊடாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இம்மாதம் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், அந்தக் கொடுப்பனவை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமூர்த்திக் கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதற்கு
அரசாங்கமும் நிதி அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.
துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும்
துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும்
பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.
தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299கிலோமீற்றர் பயணம் செய்து, மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே அவரது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
பாலச்சந்திரன் நிரோஜன் பயண விபரங்களாவன:
முதலாம் நாள் மட்டக்களப்பின் பழுகாமத்திலிருந்து 123கிலோமீற்றர் பயணம் செய்து, திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவரைக்கு சென்று, இரண்டாம் நாள் அங்கிருந்து 154கிலோமீற்றர் தூரம் பயணித்து முல்லைத்தீவிற்கு சென்றுள்ளார்.
9ஆம் நாள் 25ஆவது கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கும் போது பயகரமான மிருகங்களைச் சந்திக்க நேர்ந்ததாக பாலச்சந்திரன் நிரோஜன் தெரிவித்தார்.
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை
வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு மற்றும் வளர்ச்சி மட்டத்திற்குப் பாதிப்பேற்படாது பேணுதல் தொடர்பாக மட்டக்களப்பு,
அம்பாறை மாவட்டங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தத்தம் பிராந்தியங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக முன்வைத்தனர்.
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 558 முன்பள்ளிகளில் 18584 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் 209 முன்பள்ளிகளின் 6749 சிறார்களுக்கு தலா
மாணவருக்கு 100 ரூபா வீதம் 53.9மில்லியன் ரூபா நிதி காலை உணவு விநியோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறுவர்களின் போஷாக்குஇ உளவள செயற்பாடுகள், போதைப்பொருட்களுக்கு எதிரான பாடசாலை மட்டச்செயற்பாடுகள் என்பன குறித்து மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் சமர்ப்பித்தார்.
பெற்றோர்கள் பொருளாதார சிக்கலில் சிரமப்படுவதால், பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தைப் பேணுவதற்காக வழங்குவதற்கு எதிர்பார்க்கும், உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஞ்சி
மா, பிஸ்கட் போன்றவற்றை வழங்கும் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி அவசியப்படுவதை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ. எல். எம். ரிபாஸ் வலியுறுத்தினார்.
அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் எதிர்காலத்தில் ஒத்துழைப்புத் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பட்டார்.
பொருளாதார தளம்பல் காரணமாக மாவட்டத்தில் அதிகரித்து வரும்; பாடசாலை இடைவிலகல், சிறுவர் துஷ்பிரயோகம், கிராமங்களிலிருந்து
நகர்ப்புறங்களுக்கான மாணவர்களின் புலம்பெயர்வு, தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் போன்றவை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மாணவர்களின் கல்விமட்டத்தை அதிகரிப்பதற்கு சுயமாக நிலைத்திருக்கும் தன்மை, சமூக உளவள ஆதரவு, ஆளுமை விருத்தி என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் தேவை குறித்தும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட வைத்திய அதிகாரிகள்இ கல்வித்துறை உயர் அதிகாரிகள்இ
யுனிசெப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரி ,ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வவுனியா ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய காவல்துறை சார்யனே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் சடலம் காணப்படுவதாக, பொதுமகன் ஒருவர் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,காவல்துறைக்கு தகவல் வழங்க பட்டது .
விபத்தில் சிக்கி குறித்த காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இலங்கை வடுமுல்ல பகுதியில் மூன்றரை வயது சிறுமிக்கு பேயோட்டுவதாக கூறி ஊசியால் குற்றி சித்திரவதை புரிந்த பேயோட்டி கைது செய்யப் பட்டுள்ளார் .
பேயை ஒட்டி குணப்படுத்துவதாக கூறி ,சிறுமியின் உடலில் இருந்த்து இரத்தம் கொட்ட விட்டு வேடிக்கை பார்த்துள்ளார் .
சிறுவரின் உடலில் பொல்லாத நோயொன்று உள்ளதாகவும் ,அதனை ஒட்டிட இரண்டு லட்சம் தேவை படும் என கோரி, பணத்தையும் பிடுங்கியுள்ளார் .
பின்னர் சிறுமியை கொடுமை புரிந்த நிலையில் ,தந்தை காவல்துறையில் வழங்கிய முறைப்பட்டதை அடுத்து பேயோட்டி கைது செய்ய பட்டுள்ளார் .
விமான நிலையத்தில் வீழ்ந்து இறந்த பயணி
விமான நிலையத்தில் வீழ்ந்து இறந்த பயணி
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி வீழ்ந்து இறந்துள்ளார் .
கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பயணியே இவ்வாறு வீழ்ந்து மரணித்துள்ளார் .
இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மாரடைப்பு காரணமாக இவர் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
உடைந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி தனித்து போட்டி
உடைந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி தனித்து போட்டி
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தற்போது உடைந்துள்ளது .
அதில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது .
சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரது தனித்து செயல்படும் ,நிலையும் கட்சி உறுப்பினர்களுக்கு ஏதும் தெரிவிக்காது சென்றமையுமே ,இந்த விரிசலும் காரணமாக அமைந்துள்ளது .
வந்த வேலையை முடித்து வீடு செல்ல தயராகி வருகிறார் சுமந்திரன் .
சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு
சுன்னாகத்தில் வாலிபர் மீது வாள்வெட்டு
சுன்னாகத்தில் வாலிபர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
சிங்கள ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,
இவ்விதமான சம்பவங்கள் ,அதிகம் அரேங்கேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் கடந்த சனிக்கிழமை வீதி விபத்தில் சிக்கி .
இலங்கையை சேர்ந்த 18வயது வாலிபர் பலியாகியுள்ளார் .
மோட்டார் சைக்கிள் கார் மோதி சிதறியதில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன .
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகளின் செயலினால் ,மக்கள் பெரிதும் அவல நிலைக்கு உட்படுகின்றனர் .
அவ்வாறு வழங்காது செல்பவர்களை ,யானைகள் தாக்கி வருகின்றன .இதனை தடுப்பதற்கு நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது .
கதிர்காம பகுதியில் இவ்வாறான யானைகளில் கெடுபிடிகள் ,அதிகரித்து வருவதாக ,நெட்டிசன்கள் காட்சிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
குவைத் ஈரான் எல்லை பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒன்பது பேர் தடுத்து வைக்க பட்டிருந்தனர் .
பாலைவனம் ஒன்றில் தடுத்து வைக்க பட்டு சம்பளங்கள் ஏதுமின்றி ,வேலை வாங்க பட்டு அடிமைகளாக நடத்த பட்டனர் .
அவ்வாறு நடத்த பட்ட ஒன்பது தமிழர்கள் அங்கிருந்து தப்பித்து ,இலங்கை வந்தடைந்துள்ளனர் .
தமக்கு நிகழ்ந்த கொடூரத்தை தெரிவித்து கண்ணீர் பொழிந்தனர் .
இவ்வாறான துயரங்கள் கொடுமைகள் இடம் பெறுகின்ற பொழுதும் , அரபு நாடுகளை இலக்கு வைத்து ,நம்மவர்கள் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கிளிநொச்சியில் பயங்கரம்
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கிளிநொச்சியில் பயங்கரம்
கிளிநொச்சி தருமபுரம் கல்லாறு பகுதியில் அண்ணனை தம்பி குத்தி கொலை செய்துள்ளார் .
அண்ணன் தம்பிக்கு இடையில் கைபேசி தொடர்பிலான ,வாக்குவாதம் முற்றி ,கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது .
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்கண 37 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ,சம்பவ இடத்தில பலியானார் .
தம்பி கைது செய்யப் பட்டுள்ளார் .இதுகுறித்த நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
தலவாக்கலை, அகரபத்தனை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
நாய்களை வேட்டையாடுவதற்காக அடிக்கடி வீடுகளுக்குள் இந்த புலிகள் நுழைவதாக மக்கள் தெரிவித்தனர் .
வீட்டு கதவுகளை திறந்து ,புலி வீடுகளுக்குள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
வீடொன்றில் பொருத்த பட்ட கமராவில் இந்த காட்சிகள் பதிவாகிய நிலையில்,அந்த கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .
தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்
தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்
இலங்கை கொழும்பு பகுதியில் தாய் ஒருவரை பழிவாங்கிட மகளின் முடியை வெட்டிய கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மாணவியின் வீட்டுக்கு சென்ற கணவன் ,மனைவி தாயார் எங்கே என விசாரித்துள்ளனர் .
அப்பொழுது அவர் வீட்டில் இல்லை என மக்கள் தெரிவித்த நிலையில் ,12 வயது மகளின் முடியை வெட்டி எறிந்து விட்டு, கணவன் மனைவி சென்றுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்கள் வீடு வந்த தாயாருக்கு சம்பவத்தை தெரிவித்த நிலையில் ,காவல்துயில் முறைப்பாடு செய்ய பட்டது .
அதனை தொடர்ந்து கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் .
தாயை பழிவாங்கிட மகளை துன்புறுத்திய செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை
சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் தங்கை இறந்த சோகத்தின் தாங்கி கொள்ள முடியாத,சகோதரன் தூக்கில் தொங்கி இறந்துள்ளார் .
கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் சகோதரி இறந்துள்ளார் .
அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துவராது மயானத்திற்கு எடுத்து சென்று
தகனம் செய்துள்ளனர் .
இதனால் விரக்தி உற்ற சகோதரன் மரணமாகியுள்ளார் .
இந்த சம்பவம் பெரும் துயரை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை
மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை
இலங்கை நாவலபிட்டியை சேர்ந்த முஸ்லீம் தந்தை ஒருவர் தனது மகளின் திருமண நாளன்று பலியாகியுள்ளார் .
திருமண மண்டபத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, 62 வயது தந்தை ,மோட்டார் சைக்கிள் செலுத்தி கொண்டிருந்தார் .
அப்பொழுது நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார் .மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் எதிர் திசையில் பயணித்துள்ளார் .
இதனை கண்காணித்த காவல்துறையினர் ,அவரை வழிமறித்து ,ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் மனைவி கண்முன்னே கணவன் இறந்து விட்டார் .
இந்த சம்பவம் திருமண தம்பதிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி
கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி
இலங்கை மொனராகலை பகுதியின் காவல்துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கஞ்சா செடியுடன் கைது செய்ய பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு அதிரடி படையினரால் ,இந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுளளார் .
மக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் ,கஞ்சாவுடன் கைதாகியுள்ள செயல் ,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுகிறார்.
வீதி விபத்தில் ஐவர் மரணம்
வீதி விபத்தில் ஐவர் மரணம்
கடந்த 24 மணித்தியாலயத்தில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி ,ஐவர் பலியாகியுள்ளனர் .
நாள் தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துகாரணமாக நமக்கு பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர் .
இந்த மக்கள் மரணத்தை தடுக்க வழியின்றி ,இலங்கை அரச காவல்துறை வேடிக்கை பார்த்து வருகின்றமை குறிப்பிட தக்கது .




































