Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
தமிழர் பகுதியான வவுனியா, ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி அவர்களின் தலமையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்களும் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணியில் இயங்குகின்றமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
காதலனுடன் தங்கிய காதலி மரணம்
காதலனுடன் தங்கிய காதலி மரணம்
22 வயதான யுவதி ஒருவர் தனது காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறக்குவானை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன், தனது காதலியான 22 வயதுடைய யுவதியுடன் முச்சக்கரவண்டியில் இறக்குவானை பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு இருவரும் தங்கியுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனுடன் தங்கிய காதலி மரணம்
குறித்த இளைஞன் தனது காதலியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு வாங்குவதற்காக வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் தனது காதலி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, அவர்களின் உதவியுடன் யுவதி காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு யுவதியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

முல்லைத்தீவில் கரும்புலி நாள்
முல்லைத்தீவில் கரும்புலி நாள்
முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தூயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார்,புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

மீண்டும் உக்கிரமான கடலரிப்பு
மீண்டும் உக்கிரமான கடலரிப்பு
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் மீண்டும் மிகவும் உக்கிரமான கடலரிப்பு இடம் பெற்று வருகின்றது.
மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டிடங்களும் தென்னை மரங்களும் மீன் வாடிகளும் மையவாடியும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்
வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்
கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவரது கணவர் அமில சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது,
குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.
30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.
இந்த சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,
கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல.
உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன.
இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.
எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியதுடன் பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 58 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 26 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
பெண் ஒருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீ்டு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.
24 சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
பெண்கள் 4 பேருக்கும் பிணை வழங்கப்பட்டதுடன், ஆண்கள் 20 பேருக்கும் எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
மன்னார், தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.
குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.
தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.
மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு நேற்று (04) வழங்கி வைத்தனர்.
அதேநேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு
கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10% குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது
அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது
பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜூன் மாதம் 28ம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள
வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

நாணயம் சிக்கி குழந்தை உயிரிழப்பு
நாணயம் சிக்கி குழந்தை உயிரிழப்பு
இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை ( 03) தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சகோதரர்கள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மூத்த பிள்ளை தனது சகோதரி வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாணயம் சிக்கி குழந்தை உயிரிழப்பு
மேலும் குறிப்பிட்ட குழந்தையை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
டெங்கு நோய் நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் சதேவ்மினியை காப்பாற்றியிருக்கலாம் என அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனினும் உயிரிழந்த சிறுமியின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லம்பிட்டிய, வென்னவத்தை 102/19 என்ற முகவரியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.
இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.
இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு அமைய முகப்புத்தகத்தில் இந்த இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு
தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகவும், தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தவும் என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.
அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது.
அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவதை காண்கின்றோம்.
முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுகின்றோம்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம்.
அந்த அடிப்படையில் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பௌத்தமயமாக்கலை செய்வது தான்.
அதனை நியாயமான முறையில் பதிவேற்றியிருந்தேன். உண்மையில் நாங்கள் பௌத்த மத்திற்கோ, அதன் இனத்திற்கோ எதிரானவர்கள் இல்லை.
பௌத்தம் போதிக்கும் சிந்தனைகளை சிங்களவர் பின்பற்றி இருந்தாலே தமிழர் தாயகத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாது என்பது எங்களுடைய கருத்து.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
தேவையற்ற விதத்தில் சைவ ஆலயத்தில் பௌத்த மதத்தை சேர்க்க வேண்டிய தேவை என்ன..? சைவ ஆலயங்களில் சரியான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
இங்கு ஏன் இந்த அமைப்பு? எதற்கு வந்து தாகசர்ந்தி, சாப்பாடு வழங்குவதாக செயற்படுவது. திட்டமிட்டு பௌத்தமயமாக்கலுக்கும், விகாரைகளை கட்டுவதற்குமான செயற்பாடுகளை நகர்த்துவதற்கே.
இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியை பின்புலமாக கொண்டு மிக விரைவாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தான் இது தீவிரமாக நடைபெறுகிறது. பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது. பொலிசாரின் வாக்குமூலத்திலும் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
வவுனியா, குருமன்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் தாகசாந்தி நிலையத்தில் இந்த அமைப்பின் பதாதை அனுமதி பெறாது தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தின் உப செயலாளர் அதனை அகற்றியிருந்தார்.
அவர் பொலிசாரின் துணையுடன் மிரட்டப்பட்டு ஆலயநிர்வாக அனுமதி இல்லாமல் மீளவும் பதாதைகளை கட்டியுள்ளார்கள். நந்திக் கொடிகள் காணப்பட்ட இடத்தில் வீதிக்குரிய இடம் எனக் கூறி அப் பதாதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
வவுனியாவில் வெடிவைத்தகல்லை ஆக்கிரமித்து கச்சல்சமனங்குளம் என்ற பெயரில் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை கட்டப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் பௌத்த வல்வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பௌத்தமயமாக்கலை செய்ய இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வவுனியாவில் பல நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான அமைப்பின் ஊடக ஐக்கிய தேசிய கட்சி பௌத்த மயமாக்கலை செய்ய முயல்கிறது. இதனை அனுமதிக்க மாட்டாம். அனுமதிக்கவும் முடியாது. நான் போட்ட பதிவு தொடர்பில் சவாலுக்கு உட்படுத்துகின்றோம்.
முடியுமானால் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தை கையாளுங்கள். அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
பௌத்தமயமாக்கலுக்கு நாம் ஒரு போதும் துணை போக மாட்டோம் என்பதை பொறுப்பான இயக்கம் என்ற அடிப்படையில் பதிவு செய்கின்றேன் எனத் தெரிவித்தார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

யாழில் மூன்று ரவுடிகள் கைது
யாழில் மூன்று ரவுடிகள் கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி
இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த 2 இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
யாழில் மூன்று ரவுடிகள் கைது
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.
நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே (03) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்குத் திரும்புகிறது. குறித்த யானையை சரியாக பராமரிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே தாய்லாந்து அதனை மீள தருமாறு கோரியிருந்தது.

4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை இன்று காலை கொழும்பிலிருந்து வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
‘முத்து ராஜா’வை ஏற்றிய விமானம் இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.
ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.
இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4 வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயங்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பல பேர் குத்தி முறிகிறார்கள். வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை. வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.
ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.
இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.
முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழிய பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல இருகின்றோம். வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.
எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.
வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்தார்.























