Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.

புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.

ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.

இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18.06) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.

இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.