சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
டெங்கு நோய் நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் சதேவ்மினியை காப்பாற்றியிருக்கலாம் என அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனினும் உயிரிழந்த சிறுமியின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லம்பிட்டிய, வென்னவத்தை 102/19 என்ற முகவரியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது








