Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா
டெங்கு நோய் நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் சதேவ்மினியை காப்பாற்றியிருக்கலாம் என அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனினும் உயிரிழந்த சிறுமியின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லம்பிட்டிய, வென்னவத்தை 102/19 என்ற முகவரியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.
இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.
இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு அமைய முகப்புத்தகத்தில் இந்த இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு
தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகவும், தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தவும் என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.
அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது.
அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவதை காண்கின்றோம்.
முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுகின்றோம்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம்.
அந்த அடிப்படையில் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பௌத்தமயமாக்கலை செய்வது தான்.
அதனை நியாயமான முறையில் பதிவேற்றியிருந்தேன். உண்மையில் நாங்கள் பௌத்த மத்திற்கோ, அதன் இனத்திற்கோ எதிரானவர்கள் இல்லை.
பௌத்தம் போதிக்கும் சிந்தனைகளை சிங்களவர் பின்பற்றி இருந்தாலே தமிழர் தாயகத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாது என்பது எங்களுடைய கருத்து.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
தேவையற்ற விதத்தில் சைவ ஆலயத்தில் பௌத்த மதத்தை சேர்க்க வேண்டிய தேவை என்ன..? சைவ ஆலயங்களில் சரியான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
இங்கு ஏன் இந்த அமைப்பு? எதற்கு வந்து தாகசர்ந்தி, சாப்பாடு வழங்குவதாக செயற்படுவது. திட்டமிட்டு பௌத்தமயமாக்கலுக்கும், விகாரைகளை கட்டுவதற்குமான செயற்பாடுகளை நகர்த்துவதற்கே.
இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியை பின்புலமாக கொண்டு மிக விரைவாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தான் இது தீவிரமாக நடைபெறுகிறது. பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது. பொலிசாரின் வாக்குமூலத்திலும் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
வவுனியா, குருமன்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் தாகசாந்தி நிலையத்தில் இந்த அமைப்பின் பதாதை அனுமதி பெறாது தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தின் உப செயலாளர் அதனை அகற்றியிருந்தார்.
அவர் பொலிசாரின் துணையுடன் மிரட்டப்பட்டு ஆலயநிர்வாக அனுமதி இல்லாமல் மீளவும் பதாதைகளை கட்டியுள்ளார்கள். நந்திக் கொடிகள் காணப்பட்ட இடத்தில் வீதிக்குரிய இடம் எனக் கூறி அப் பதாதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
வவுனியாவில் வெடிவைத்தகல்லை ஆக்கிரமித்து கச்சல்சமனங்குளம் என்ற பெயரில் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை கட்டப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் பௌத்த வல்வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பௌத்தமயமாக்கலை செய்ய இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வவுனியாவில் பல நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான அமைப்பின் ஊடக ஐக்கிய தேசிய கட்சி பௌத்த மயமாக்கலை செய்ய முயல்கிறது. இதனை அனுமதிக்க மாட்டாம். அனுமதிக்கவும் முடியாது. நான் போட்ட பதிவு தொடர்பில் சவாலுக்கு உட்படுத்துகின்றோம்.
முடியுமானால் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தை கையாளுங்கள். அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
பௌத்தமயமாக்கலுக்கு நாம் ஒரு போதும் துணை போக மாட்டோம் என்பதை பொறுப்பான இயக்கம் என்ற அடிப்படையில் பதிவு செய்கின்றேன் எனத் தெரிவித்தார்.
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

யாழில் மூன்று ரவுடிகள் கைது
யாழில் மூன்று ரவுடிகள் கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி
இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த 2 இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
யாழில் மூன்று ரவுடிகள் கைது
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.
நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே (03) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்
விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்குத் திரும்புகிறது. குறித்த யானையை சரியாக பராமரிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே தாய்லாந்து அதனை மீள தருமாறு கோரியிருந்தது.

4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை இன்று காலை கொழும்பிலிருந்து வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
‘முத்து ராஜா’வை ஏற்றிய விமானம் இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.
ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.
இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4 வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயங்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பல பேர் குத்தி முறிகிறார்கள். வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை. வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.
ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.
இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.
முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழிய பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல இருகின்றோம். வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.
எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.
வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை ஞாயிற்றுக்கிழமை (02) நடத்தினார்.
இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
அக்கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இறுதி யுத்த காலத்தில் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராகவே நானிருந்தேன் என்றார்.
அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு
செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு
நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இத் தினங்களில் ஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளனர்.
நாசாவிலிருந்து இலங்கை வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு
இது குறித்து களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்திற்குரிய கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையின் புவியியல் அம்சங்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.”
இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, சிங்களத்தில் இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும்” தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி
பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி
புத்தளம் – நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் இன்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி
உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை – இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் பாட்டன், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்துவந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே அவர் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி
எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, ஸ்தல விசாரணையை மேற்கொண்டதுடன், நுரைச்சோலை பொலிஸாரும் உறவினர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, குறித்த இரண்டு சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

காலி முக திடலில் மோசமான உணவு
காலி முக திடலில் மோசமான உணவு
மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்தார்.
இதன்படி காலி முகத்திடல் சதுக்கத்தில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலி முகத்திடல் சதுக்கம் கொழும்பு நகரின் மிகப்பெரிய வெற்று இடமாகும் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதி.
காலி முக திடலில் மோசமான உணவு
இதனால், தினமும் ஏராளமானோர் இங்கு வந்து ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சி செய்யவும் வருகின்றனர்.
மதச் செயல்பாடுகள் தவிர, அதன் அழகைப் பாதுகாக்கும் நோக்கில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு அந்த பகுதியை வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
இங்கு வருபவர்களுக்கு உணவு விற்கும் வகையில், கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு
கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு
தமிழகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இவர், அதே
பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த நிதீஷ்குமார் (15), சமத்துவபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.
அங்கிருந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் வீதி ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு
இவர்கள் பின்னாலே மற்றொரு வாகனத்தில் வந்த குப்புசாமி (58), அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும், இதனை கண்டதும் அதிர்ந்தனர். உடனே அந்த சிறுவர்களை காப்பற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்தனர்.
தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதில் இதில் அபினேஷ், நிதீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இருப்பினும் விக்னேஷை காப்பாற்ற இயலவில்லை.
அதுமட்டுமின்றி சிறுவர்களை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த குப்புசாமி, அசோக் குமார், சரவணன் ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த ராசிபுரம் பொலிஸார், தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி எல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண்கள் இருவரும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
சம்பவம் தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் வினவிய போது, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
செவனகல, நலசிறிகம பிரதேசத்தில் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உடவலவ வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உடவலவ தேசிய பூங்காவின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் இரு உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
குறித்த குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது மிருகங்களின் தலை, இரண்டு துப்பாக்கிகள், இரண்டு ரைபிள் தோட்டாக்கள், குளிர்சாதனப் பெட்டி,
சைக்கிள், யானைத் தோல், இறைச்சி வெட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் மூன்று கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
குப்பை மேட்டில் மீட்கப்பட்ட இத்தாலி யுவதியின் சடலம்
குப்பை மேட்டில் மீட்கப்பட்ட இத்தாலி யுவதியின் சடலம்
17 வயது இத்தாலிய யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை சந்தேகநபர் குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று (01) மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.
மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கடற்றொழிலாளர்களின் சார்பாக உரையாற்றியிருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய மீன்பிடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ட்ரோலர் படகுகளின் அத்துமீறல்கள், சுருக்குவலை சட்டவிரோத
செயற்பாடுகள், மீன் வளங்களை அடியோடு சூறையாடுதல், மீன்களின் இனப்பெருக்க காலங்களை கவனிக்காத அத்துமீறிய மீன்பிடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கடற்றொழிலாளர்கள் முன்வைத்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
சந்திப்பில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் பாரதூரமானவை. அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்பாக இந்திய அரச தரப்பை எமது குழுவோடு சென்று சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எமது அழுத்தத்தை நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச்
செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால,
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய
மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) குறித்த வியாபாரியின் கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணிடம் வியாபாரி தகாத வார்த்தை பேசினார்.
அதைக் கண்டித்தவரை கழுத்தில் கத்தியை வைத்து அவர் மிரட்டியதால் , பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரை கடத்திச் சென்றவர்கள் அவரை உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த வியாபாரி அங்கிருந்து தப்பி சென்று
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்





























