வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று (30) அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.