மக்களை கொன்ற கார் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற தியத்தலாவ கார் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த கார் விபத்தில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

தியத்தலாவ நரியாகாந்தை கார் பந்தைய திடலில் இடம்பெற்ற கார் ஓட்ட பந்தயத்தில் ,கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,ஏழுபேர் பலியாகியும் 21 பேர் காயமடைந்துள்ளனர் .

பதுளை கார் பந்தயத்தில் பயங்கர விபத்து

இந்த கார் பந்தய விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பந்தயத்தில் ஈடுப்பட்ட கார் ஒன்று மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

இந்த கார் விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பதுளை மாவட்டத்தின் கார் பந்தைய திடலில் ஈடுபட்ட கார்களே இந்த விபத்தில் சிக்கி கொண்டன .

கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்தம்

மிக பெரும் கார் விபத்து ஏற்பட்டத்தை அடுத்து ,கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்த பட்டன .

ஆண்டுகள் தோறும் இதே தியத்தலாவ நரியாகாந்த்தை கார் பந்தைய திடலில் கார் ஓட்ட போட்டிகள இடம்பெறும் .

அவ்விதம் இன்றும் இங்கு இடம்பெற்ற பொழுதே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

வழமைக்கு மாறாக இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

ஓட்ட பந்தய கார் பாதுகாப்பு வேலிகளை உடைத்து ,கார் மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

மக்களுக்குள் கார் மோதும் காட்சிகள் ,மக்களை கார் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த கார் பந்தயத்தில் நின்ற மக்கள் ,அந்த கொலை காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

அதில் மக்கள் காயமடைந்து அலறுவதும் ,காப்பாற்றும் படி கோருவதும் பதிவாகியுள்ளது .

மேற்படி கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா
Posted in இலங்கை செய்திகள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள் ,உலக மக்கள் பாசறை பானர் தேனிசை செல்லப்பாவின் 83 வது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர் .

தனது மதுர குரலினால் பாட ஆரம்பித்து மக்கள் விடுதலைக்கு தனது மதுர குரல் ஊடாக பாடி வளம் சேர்த்தவர் .

அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்களின் வீரமிகு அகவை நாள் இன்றாகும் .

தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா

தமிழீழ விடுதலை அமைப்பை கட்டியமைத்து ,மக்கள் விடுதலைக்கு போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், இந்தியாவில் தங்கி இருந்த கால பகுதியில் ,

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா

ஐயா செல்லப்பா தொடர்பாக அறிகிறார் ,அதனை அடுத்து தமது போராளி தளபதிகள் ஊடக அணுகி, அவரை எமது இயக்கத்தின் பாடகராக அறிமுகம் செய்கின்றனர் .

அன்றில் இருந்து இன்றுவரை எதுவித சமரசமும் இன்றி ,ஐயா ஈழ தமிழ் விடியலுக்கு தனது குரலை வழங்கி உயிர் கொடுத்து வருகிறார் .

தளராத மதுக்குரல் தேனிசை செல்லப்பா

ஈழ மக்களுக்கு தளராத குரல் ஊடாக வீரம் ஊட்டி வந்த ஐயா செல்லப்பாவுக்கு ,விடுதலை புலிகளினால் பாசறை பானர் ,தேனிசை செல்லப்பா என்கின்ற உயர் கவுரவுத்துடன் அவரை அழைக்கின்றனர் .

அன்றில் இருந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் செல்லப்பா ,தேனிசை செல்லப்பாவாக நெஞ்சங்களில் உறைவிடம் ஆகி விட்டார் .

அவ்வாறு செல்லப்பா மீதும் அம் மக்கள் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர் .

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா
பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

லண்டனில் செல்லப்பா பாட அழுத மக்கள்

தடைகள் விலக்க பட்டு செல்லப்பா முதன் முதலாக லண்டன் வருகை தந்தார் ,.பல இடங்களில் லண்டனில் இசை கச்சேரி நடத்த பட்டது .

அப்பொழுது அரங்கம் நிறைந்த அந்த மண்டபத்தில் செல்லப்பா அவர்கள் உயிர் கொடுத்து பாடி கொண்டிருக்கும் பொழுது ,அவர் பாட அழுத மக்கள் நினைவுகள் இன்றுவரை என் நினைவில் உள்ளது .

அந்த மக்கள் அழுகின்ற காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு இருந்தேன் .

இது தேனிசை செல்லப்பா மீது மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த நேசத்தின் சாட்சியாக உள்ளது .

அந்த அரங்கத்தில் இளங்கோ செல்லப்பா இசை அமைக்க ,தேனிசை செல்லப்பா ,மற்றும் இளங்கோ செல்லப்பா மனைவி ஆகியோர் பாடினர் .

வரலாற்றில் அழியாத இடம் பிடித்து சாதித்து ,சாதனையாளனாக நிற்கும் தேனிசை செல்லப்பா மக்களினால் கொண்டாட படுவார் .அவர் நினைவுகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் தமிழரோடு நிலைத்து நிற்கும் .

அவ்வாறான அந்த மாசற்ற புனித மகனின் பிறந்த நாளில் எதிரி இணையமும் அவரை நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .

ஆக்கம் – வன்னி -மைந்தன் –

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .

நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .

வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்

வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .

குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது

மிரட்டும் மர்ம படுகொலைகள்

இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .

துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .

மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .

ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .

படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

பயந்த மாடு மிராண்ட ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில் ,அம்பேவல பண்ணையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு நடந்த சுவாரசிய சம்பவம் .

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் .

அதன் அடிப்படையில் புதிதாக உருவாக்க பட்ட அம்பேவல பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் .

இங்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க பால் மாடுகள் அருகில் சென்று பார்வையிட்ட பொழுது ,ரணில் விக்கிரமசிங்காவை கண்டு மாடுகள் மிரண்டன ,அதனை பார்த்து ரணில் விக்கிரமசிங்கவும் மிரண்டு போனார் .

இந்த அம்பேவல பண்ணை உல்லாச பயணிகள் பார்த்து செல்லும் படி திறந்துவிட பட்டுள்ளது .அதனால் அதனை பார்வையிட வரும் உல்லாச பயணிகளிடம் பணம் அறவிட படுகிறது .

மக்களிடம் பணம் வசூல் வேட்டை

இந்த அம்பேவல பண்ணையை நடத்திட உல்லாச பயணிகள் பார்வை மூலம் வரும் பணத்தை வைத்து ,நாட்டை ஒட்டி செல்ல இலங்கை அரசு முயல்கிறது என்பது இதன் ஊடக காட்டி கொடுக்க பட்டுள்ளது .

நாட்டின் வளர்ச்சி அங்கு மேற்கொள்ள படும் பிவிருத்தி திட்டங்களிலேயே தங்கியுள்ளது .அதற்கு அமைவாக இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க படுகின்றன .

பண மோசடி

இலங்கையில் மேற்கொள்ள படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்க படும் பல மில்லியன் பணத்தை ,அதன் ஒழுங்கமைக்க படும் அமைச்சுகளினால் சூறையாட பட்டு வருவதான குற்றசாட்டு முன் வைக்க படுகிறது .

பத்து விகிதம் கமிஷன் என்கின்ற வகையில் ,அமைச்சுகளுக்கு ஒதுக்க படும் நிதியை ,அந்த அமைச்சில் உள்ளவர்கள் ,அதன் மேல் உள்ளவர்கள் வரை பகிர்ந்து வழங்க படுவதன் குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது .

கிராம சேவகர் முதல் மந்திரிகள் அதற்கு மேல் மட்டங்களுக்கும் ,இந்த ஊழல் பயண படுவதன் தொடர் கதைகள் உலா வருகின்றன .

பூனைகள் கண்னை மூடி பாலை குடிக்கின்றன .

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம் ,இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உறைவு .

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பணி புரியும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

இலங்கையில் வைத்தியர்கள் தப்பி ஓட காரணம் என்ன ..?

இலங்கையில் இலங்கை வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு வழங்க படும் சம்பள பணத்தில் அதிக வரி மற்றும் ,சம்பளம் போதாமை உள்ளமை காரணத்தினால் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர் .

இந்த வைத்தியர்களுக்கு உரிய சம்பளத்தை இலங்கைஆளும் அரசுகள் ,அதன் சுகாதார மைச்சு வழங்குமாக இருந்தால் ,ஏன் அவர்கள் தமது தாய் நாட்டை விட்டு ஓட போகிறார்கள் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ஆளும் அரசியல்வாதிகழ் தமது நலன்களுக்காக ,அரசியலில் குந்தி இருந்து,நாட்டையும் மக்களையும் சிந்திக்காது உள்ளதன் விளைவே ,இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்ய கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .

1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

கோட்டபாய ட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி காரணமாக, இலங்கை பொருளாதரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது .

அதனை அடுத்து இதுவரையான கால பகுதியில் 1800 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர் , என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

கற்றவர்கள் ,மருத்துவர்கள் ,நீதிபதிகள்,சட்டத்தரணிகளுக்கு எதிராக ,இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் அடாவடிகள்,அடக்குமுறை ,சம்பள வெட்டு காரணமாகவே ,இவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தேவாலய குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி .மக்கள் இறந்த ஆத் மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி .

சகரான் குவினரால் இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த பட்டது .அவ்வாறு தேவலாயம் கொட்டல்கள் என்பனவற்றின் மீது நடத்தப்பட்டதில் 250 பேர் பலியாகினர் .

மேலும் 407 பேர் காயமடைந்தனர் .ஏப்ரல் 21 அன்று நடத்த பட்ட அந்த தாக்குதல் இலங்கை மக்களை அலற வைத்தது .

அவ்வாறான கண்ணீர் தோய்ந்த அந்த நாள் இன்றாகும் .

தேவலய குண்டு தாக்குதல் பின்னணி

தேவாலயத்தில் நடத்த பட்ட குண்டு தாக்குதல் பின்புலத்தில் ,அல்கொய்தாவுடன் தொடர்புடைய சகரான் குழு இந்த குண்டு தாக்குதலை நடத்தியது .

நன்கு திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதலாக இது காணப்பட்டது .எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும் என்ற பயப்பீதியை கிளப்பிய நாள் அன்று .

வழமையாக மக்கள் தமது வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,தோள்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்த குண்டு வெடித்து சிதறியது .

அதனை நடத்தியவர்களை தற்கொலை செய்து கொண்டனர் .இஸ்லாமிய புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி ,இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கமாக ,இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்தன .

ராஜபக்ச குடும்பம் பின்புலம்

இலங்கையில் மைத்திரி ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவோடு இந்த குண்டு தாக்குதல் நடத்த பட்டது .

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோட்டபாயவினால் திட்டமிடப்பட்டு நடத்த பட்ட தாக்குதலாக இது காணப்பட்டது .

கொழும்பு பகுதியை அண்மித்து இடம்பெற்ற ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பு, முதல் தேவாலய குண்டு வெடிப்பு வரை, பின்புலத்தில் மறைந்திருந்த முகமாக கோட்டபாய காணப்படுகின்றார் .

இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை .இஸ்லாமிய ஜிகாத் குழுவை சேர்ந்த சகரான் குழு நடத்திய இந்த தாக்குதல் இன்றுவரை மக்கள் மனதில் மறையாத கரிநாளாக உள்ளமை குறிப்பிட தக்கது ..

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை ,இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .பணதகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது .

இருவருக்கு இடையில் இடம்,பெற்ற பணக்கொடுக்கள் வாங்கல்காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .

கத்தி வெட்டு தாக்குதல்

சமையலறை கத்தியை பயன் படுத்தி கடனை கொடுத்தவர் ,பணத்தை பெற்றவரை வெட்டி கொலை செய்துள்ளார் ,

இவரது இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண சோதனைக்கு உட்படுத்திய பின்னர், உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்தது கண்படுகின்ற்றன .

நாள் தோறும் இலங்கையில் நீரேரிகள் ,குளங்கள் ,காடுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் இருந்து மக்கள் சடலங்கள் கண்டு பிடிக்க படுகின்றன .

அதே போன்று இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இந்த படுகொலையும் இடம்பெற்றுள்ளது .

அற்ப பண கொடுங்கல் வாங்கல் ஒன்றினால் ,ஒரு அப்பாவி உயிர் காவு வாங்க பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் பேசி கொள்கின்றனர் .

இலங்கையில் தினம் வெட்டி கொலை என்கின்ற செய்திகள் ,இலங்கையில் தலைப்பு செய்திகளாக இடம் பிடிக்கும் நிலைக்கு ,இலங்கை எங்கும் இவ்வாறன கத்தி வெட்டு தாக்குதல் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

சட்டம் ஒழுங்கு கேட்டு விட்ட நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க படும் என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .

சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .

அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .

இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .

இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?

சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .

தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .

கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .

இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .

அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .

பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?

சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –

-வன்னி மைந்தன் –

தாயை கோபத்தில் வெட்டிய மகன்
Posted in இலங்கை செய்திகள்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .

பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .

மருத்துவமனையில் சிகிச்சை

மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .

தாயை கோடாலியால் வெட்டிய மகன்

தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .

வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .

சிறுமி கொலை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சிறுமியின் கொலையில் மர்மம்

இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை

வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்

இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .

காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .

இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .

இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .

அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .

வீட்டு குளியலறையில் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம் கண்டு பிடிக்க பிடிக்க பட்ட நிலையில் ,குளியலறை மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குளியலறையில் மனித சடலம் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தூக்கில் தொங்கிய சடலம்

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் தற்கொலை செய்தாரா அல்லது யாராவது படுகொலை செய்தார்களா என்கின்ற ரீதியில் ,பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளன.

சடலம் மீட்க பட்ட இடத்தில இருந்து சேகரிக்க பட்ட தடயங்களை அடிப்படையாக வைத்து, காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நுவரெலியாஒலிபண்ட் தோட்டம் அதிர்ச்சியில் உறைவு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த மரண சம்பவம் ,ஒலிபண்ட் தோட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் இவ்வாறு தூக்கில் தொங்கி மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தற்கொலைக்கு காரணம் என்ன ..?

மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர்களது புறசூழல் காரணமாகிறது .

வறுமை ,இழிநிலை அதனால் ஏற்படும் மனசோர்வு காரணமாகவே தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர் .

ஆற்று படுத்தவும் ஆறுதல் தெரிவிக்கவும் யாரும் இல்லாத நிலையில் ,தனித்து விடப்பட்டதாக தாழ்மை மன எண்ணத்துடன் பயணிப்பவர்களினால் இவ்வாறான தற்கொலை செய்துகொள்ள காரணமாகிறது என ,உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார், இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கண்காணிக்கும் உளவுத்துறைகள், பலத்த பாதுக்காப்பில் இலங்கை .

இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ,இலங்கை வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கை

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி காணப்படுகிறார் .

இதனால் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி க்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் கோபத்தில் உள்ள இவ்வேளை , இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி வருகை தருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது .

இலங்கையில் ஈரான் ஜனாதிபதி கொலை செய்யப்படுவரா ..?

கொழும்பில் வைத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல் மொசாட் மற்றும் அமெரிக்கா உளவுத்துறையால் ,படுகொலை செய்யப்படலாம் என்கின்ற பதட்டமும் காணப்படுகிறது .

அமெரிக்கா இஸ்ரேல் ஏற்பாட்டில் தான், இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை , அழைத்து வருகிறதா இலங்கை என்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .

அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அது இலங்கைக்கு மிக பெரும் இழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறையால் முக்கிய புள்ளிகளை போட்டு தள்ளுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் .

அவ்வாறு இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,அதனால் ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது .

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
Posted in இலங்கை செய்திகள்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்

இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார் ,நாளைகொழும்பில் இசைஞானி இளையராஜாஇசை இடம்பெறவுள்ளது .

தனது மகளை இசைஞானி இளையராஜா பறிகொடுத்திருந்த பின்னர் இலங்கையில் இசைஞானி இளையராஜா நடத்தும் இசை திருவிழா இதுவாக காணப்படுகிறது .

இந்திய தமிழர்களில் மூத்த இசை அமைப்பாளராக இசைஞானி இளையராஜா விளங்கி வருகிறார் .

இசை சக்கரவத்தி இளையராஜா இசை நிகழ்வை கண்டு களிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர் .

என்றும் ராஜ ராஜாதான் இசைஞானி இளையராஜா

என்றும் ராஜ ராஜா தான் எனும் தலைப்பில் இலங்கை கொழும்பில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்வு இடம்பெறுகிறது .

இந்த இசை பாட்டு சங்கமத்தை அடுத்து நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு குவிக்க பட்டுள்ளது .

பவதாரிணி மரணம்

மகள் பவதாரிணி மரணம் அடைந்த நிலையில் தனது மகளுக்கு பிடித்த பாடலை இசைஞானி இளையராஜா பாடுவார் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வேளை அரங்கம் கண்ணீரில் மூழ்கும் என இசைஞானி இளையராஜாவை நேசிக்கும் மக்கள் கூட்டம் ,தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .

பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?

பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .

இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .

அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .

இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்

இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .

கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .

மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு ,இலங்கையில் வெளியான மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மாரடைப்பால் இறப்பு ஏன் ஏற்படுகிறது ..?

மனிதர்கள் உண்ணும் உணவு பழக்கத்தின் வாயிலாக இந்த மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் 2010 முதல் 2020 ஆண்டு வரையிலான கால பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் உயிர் எண்ணிக்கை, அதிகம் என வெளியான புள்ளி விபரம் காண்பிக்கிறது .

திடீர் மாரடைப்பு மரணத்தை தடுப்பது எப்படி ..?

திடீரென ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கு சில உணவு முறைகளை உட்கொள்வதை தவிர்த்து வந்தால் ,மாரடைப்பு மரணத்தை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

உலகளாவிய நிலையில் மாரடைப்பு நோயினால் பல ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் பலியாகி வருகின்றனர் .

உண்ணும் உணவால் ஏற்படும் மரணம்

அதனால் மக்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மையிலான் உணவுகளை தவிர்த்து வந்தால் மாரடைப்பு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .

மரணத்தை தடுக்க இதோ வழி

மேலும் மாரடைப்பு நோயானது ஏற்படாது இருக்க வழிசமைக்கும் ,அதிர்ச்சியான சம்பவங்கள் காரணமாகவே அதிகம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற விடயத்தை இறந்தவர்கள் உறவுகள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம் .

உலகில் அதிகரித்து வரும் இந்த மின்னல் வேக மரணமாக காணப்படும் விளங்கி வரும் ,மாரடைப்பு நோயில் இருந்து மனித சமுதயத்தை காப்பாற்ற வேண்டிய தேவை யாவருக்கும் உண்டு .

தற்காலத்தில் சிறுவர்களும் இந்த மாரடைப்பு நோயினால் பாதிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமீப கால ஆண்டுகளில் இறந்தவர்களில் இந்த மாரடைப்பு நோயில் சிக்கி சிறுவர்களும் இறந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆதாலால் மாரடைப்பு வராது தடுக்க மேலே கூற பட்ட விடயங்களை கடை பிடியுங்கள் மக்களே .

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .

கள்ள காதல் கொலை

கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .

நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .

வீதி சோதனையில் சிக்கிய கைதி

இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை

வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை

எம்பிலிபிட்டிய மடுவன்வெல பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் ,வாடகை வீட்டை வழங்கியவர்கள் இந்த கொலையை செய்து இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .

தென்னை நார் உற்பத்தி தொழில் புரிந்து வந்த நபரே வாடகை வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளார் .

வெட்டி படு கொலை

அவ்வாறு வாடகை வீட்டில் தங்கி இருந்தவரே இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணிகளில் தெரிய வந்துள்ளது .

குறித்த நபர் படுகொலை தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வாள்வெட்டு கொலைகள் ,வெட்டி படுகொலை சம்பவங்கள் ,கடத்தி கொலை செய்யப்படுதல் என்பன நீடித்து செல்கிறது .

இந்த மர்ம கொலைகளை செய்வது சீரியல் கில்லரா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது ..

கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .

மாரடைப்பால் கணவன் மரணம்

நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .

கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .

பிள்ளைகள் அனாதை

இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .

தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .

மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உடன்கட்டை ஏறிய மனைவி

உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .

அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள்

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு எழுச்சியுடன் நினைவு கூற பட்டது ,யாழில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த அன்னை பூபதி ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர் .

இலங்கை அரச கொடுமை மற்றும் இந்திய படைகளை அடக்குமுறைகளுக்கு எதிராக அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து மாய்த்து கொண்டார் .

முப்பத்தி ஆறு ஆண்டுகள் அன்னை பூபதி வீரமரணம் அடைந்த பொழுதும் ,அன்னை பூபதியை இன்றுவரை தமிழ் மக்கள் மனங்களில் உள்ளார் .

ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா

ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா

ரணில் விக்கிரமசிங்கா எமக்கு ஆதாரவு வழங்கினால் பதவி வழங்க படும் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிப்பு .

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியி எமக்கு ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்காவுக்கு உரிய பொறுப்பான பதவி வழங்க படும் என ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச அறிவித்துள்ளனர் .

திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவித்து இருந்தார் .

தற்போது இலங்கை அரசியல் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதுடன் கட்சி தாவும் படலம் ஆரம்பிக்க பட்டுள்ளது .