Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
எதிர்வரும் கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல் இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்
காரணமாக உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் பிரவேசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம்
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், 4 மாதங்களுக்கு
மேலாகியும் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய 2 இலட்சம் மாணவர்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளுக்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், அந்த பெறுபேறுகளின் தாமதம்
காரணமாக உயர்தர பாடப் பிரிவுகளை தெரிவு செய்வதில் மாணவர்களின் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மீண்டும் மீள் மதிப்பீட்டை நடத்தி பெறுபேறுகளை விரைந்து வெளியிடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் .
ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மோசடிகளை தடுக்க உத்தரவு
இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுகிறது.
ஏப்ரல் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் மூன்று வாரங்களில் வருகை தந்துள்ளனர்.
நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைந்தது.
மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை
எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல, மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போக்குகளைப் பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும்.
ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 சதவீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 11 சதவீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 சதவீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
கொரனோ வைரஸ்
உலகை தாக்கிய மிக பெரும் கொரனோ வைரஸ் தாக்குதலை நோயினை அடுத்து ,பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கை தேசத்தினால் அதில் இருந்து மீண்டு எழ முடியவில்லை .
உல்லாசப் பயணத்தில் மட்டுமே தமது நாட்டின் வருமானத்தை நம்பி இருந்த ,இலங்கை தற்பொழுது அந்த வருமானத்தை இழந்து தவிக்கும் காட்சிகள் இலங்கையை நகைப்புக்கு உள்ளாக்கியது .
வீதிக்கடை உணவாகம்
அவ்வாறான கால பகுதியில் மீளவும் வளர்ச்சியடைந்து வரும் உல்லாச பயணத்தை ,சில வீதிக்கடை உணவாக காரர்கள் மேற்கொள்ளும் செயல் பாட்டினால், மீளவும் அந்த உல்லாச பயணம் வீச்சியுறும் நிலைக்கு தள்ள பட்டு வருகிறது .
மீளவும் அதே துயரை இலங்கை சந்திக்க போவதை உல்லாச பயணிகள் வரவு எடுத்து இடித்துரைக்கிறது .
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு
செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணை
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும்
மோசடிகள் இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .
அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே புதன்கிழமை (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான முண்டிகு சரச்சந்திரன் மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அமுலில் இருக்கும்
மைத்திரிபால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது
2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்ச்சந்திர தாக்கல் செய்துள்ளார், மேலும் மைத்திரிபால சிறிசேன 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க சாத்தியமில்லை எனவும் அவர்கள் ஆதரவாளர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாத, பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், ஆட்சேபனைகளை ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய மற்றும் சட்டத்தரணி சம்பத் பெரேரா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்,இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தார்.
இலங்கை மாத்தள விமான நிலையத்தி வந்தடைந்த ஈரான் கேனாதிபதி இப்ராஹிம் ரைசி.உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பர் என தெரிவிக்க பட்டுள்ளது .
அச்சுறுத்தல் நிலையில் இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இக்கால பகுதியில் ,இலங்கை ,வந்தடைந்துள்ள ஈரான் ஜனாதிபதியின் வரவு துணிச்சல் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரானுக்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் ,பதிலுக்கு ,இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த நிலையில் ,அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் ,எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளார் .
மொசாட் குறியில் ஈரான் ஜனாதிபதி
மொஸாட் குறியில் என்றான் ஜனாதிபதி உள்ள பொழுதும் ,பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் பயணித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது .
இவர் இலங்கையில் மொசாட்டினால் கொலை செய்ய பட கூடிய ஆபத்துக்களு உள்ளதான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது .
அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அமெரிக்கா ,இஸ்ரேலை தட்டி கேட்கவா முடியும் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரான் இலங்கை உறவு
ஈரானுக்கும் சிலாகிக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது .பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த பொழுது ஈரான் மிக பெரும் ஆதரவை வழங்கி இருந்தது .
விசேட எண்ணெய் கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது .மேலும் இலங்கை தேயிலையை மாதம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது .
இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்களில் ஈரானுக்கும் இலக்கைக்கும் நல்லுறவு காணப்படுகிறது .
அவ்வாறான இவ்வேளையில் ,ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளது ,மேலும் இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் பலத்தை சேர்க்கும் என கருத படுகிறது .
ஜனாதிபதியின் இலக்கை வருகையுடன் இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் ,ஐக்கிய நடுகல் மனித உரிமை அவையில் ,இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயம் தீவிரம் பெறலாம் என படுகிறது .
தமது சொல்லை தட்டையா இலங்கைக்கு ,அவர்கள் புரிந்த தமிழ் இந கொலையை தூசி தட்டி எடுத்தாலும் வியப்பதற்கில்லை எனலாம் .
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம், யாழ்நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பட்டாரக வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது .
வான் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்
வான் மோதியதில் சிதறிய ஆட்டோ
யாழ் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
மடசந்தி வான் ஆட்டோ விபத்தில் ஒருவர் காயம்
இதன் போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
இதேவேளை, பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக ,இஞ்சி அதிகம் பயன் படுத்தும் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் பொருட்களின் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு
இலங்கையில் இஞ்சியின் விலை அதி உச்ச விலைக்கு சென்றதினால் ,அதனை இந்த விலை கொடுத்து வாங்கிட முடியா நிலையில் மக்கள் திணறி வருகின்றனர் .
உள்ளூர் உற்பத்தியில் இஞ்சி பயிர் செய்கை வீழ்ச்சி அடைந்த நிலையிலும் ,இறக்குமதி குறைவடைந்து நிலையில் ,இஞ்சியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது .
கோட்டபாய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் பின்னர் ,தற்போது இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது அதிகரித்துள்ளது .
உயரும் பொருள் விலை தவிக்கும் மக்கள்
திடீர் திடீரென உயரும் பொருள் விலையினால் ,மக்கள் அன்றாட வாழ்வியல் பாதிக்க பட்டுள்ளது .
காய்கறி விலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பால் ,ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வந்தனர் .
அவ்வாறான நிலையில் இலங்கையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக அதிகரித்து காணப்படுவது ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Featured
வங்கி உடைத்து தங்கம் திருட்டு
வங்கி உடைத்து தங்கம் திருட்டு
வங்கி உடைத்து தங்கம் திருட்டு ,கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும்
சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் விசேடமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுடைய பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம் .
பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.
இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கினர்.
அப்போது 3 மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு வலி
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.
கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகல்
தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கட்சியில் கடும் கருத்து மோதல்
தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.
இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.
எதிர் வரும் தேர்தலை அடுத்து உள்கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன .அதன் ஒரு அங்கமாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது .
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்,யாழில் புத்த விகாரையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் .
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்க பட்டுள்ள சதிஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழர் தாயக பகுதி எங்கும் சிங்கள பவுத்த விகாரை அமைக்க பெற்று ,அதன் சிங்களவர்கள் ஆதிக்கம் யாழில் அதிகமாக கால் ஊன்றி வருவதால் ,இந்த விகாரை முற்றாக அகற்ற படவேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ,ஈடுபட்டனர் .
பவுணர்மி தினத்தில் இந்த சதிஸ்ஸ விகாரையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும் .அவ்வேளை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் நேசிக்கும் ஒரு கட்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளதாக ,குறித்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் .
பாதிக்க பட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விளங்குவதாகவும் ,அவ்வாறான மக்களே இந்த கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .
ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
போதைவஸ்து கடத்தல்
இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை
மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .
முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது.
விடுதலை புலிகளினால் புதைக்க பட்ட தங்க நகைகள் உள்ள பகுதியை தோண்டியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளள்னர் .
இவர்கள் தேடி தோண்டிய தங்க புதையல் சிக்கவில்லை .ஆனால் தங்கம் தேடிய தங்க கொழுந்துகள் வசமாக பொலிசாரிடம் சிக்கின .
புலிகள் தங்கம் தேடியவர்கள் கைது
வடக்கு பகுதியை தமது ஆளுகைக்குள் வைத்து ஆட்சி புரிந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் , சுற்றிவளைக்க பட்ட பொழுது ,அவர்கள் தமது தங்கம் போன்றவற்றை குழி தோண்டி புதைத்து வைத்தனர் .
அவ்வாறு புலிகள் புதைத்து வைத்த தங்கம், சிலாவத்துறை பகுதியில் உள்ளதாக பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,அந்த தங்க குழி தோண்ட பட்டுள்ளது .
சிலாவத்துறை பொலிஸ் நிலையதின் அருகில் இவை உள்ளதாக தெரிவிக்க பட்டு தோண்ட பட்ட பொழுதும், அங்கு அவை காணப்படவில்லை .
அதனை அடுத்து புலிகள் தங்க தேடிய போலீஸ் ,அதிகாரி உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
புலிகளை தேடும் சிங்களவர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பொழுதும் ,தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய தங்கம் ,பணம் என்பனவற்றை சிங்கள மக்களும் ,சிங்கள படைத்துறை தேடி வருவது அம்பலமாகியுள்ளது .
சிலாவத்துறை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து ,அதனை தோண்டிய இலங்கை அரச கடற்படை சிப்பாய் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிடட மூவர் சிக்கியதில் இருந்து ,சிங்களவர்களும் இப்பொழுது புலிகளை தேட ஆரம்பித்துள்ளது புரிகிறது .
வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம் .பல வாகனகள் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பேரவலம் .
வவுனியா பட்டானிச்சூர் அரச பாடசாலை அருகே ,மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியாகியுள்ளார் .
வவுனியாவில் பெரும் வாகன விபத்து
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதி கொண்டதில் , வாலிபர் பலியாகியும் சிலர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர் .
அவர்களில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் ,அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்ற பட்டார் .
இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்
சமீப காலங்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகள் அலட்சிய இன்மையே இவ்வாறான மிக பெரும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு ,காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வீதி விதிமுறைகளை பின்பற்றாது ,வாகன ஓட்டிகள் செல்வதும் ,பாதை சாரிகள் உள்ளிட்டவர்களும் இவ்விதம் ,கண்மூடித்தமாக வீதியை திடீரென கடப்பதாலும் ,இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
இலங்கையில் இன்றைய பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ,சஜித் பிரேமதாசா மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள் விடயம் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசையால் காட்சிகள் ,இப்பொழுது எதிர் காட்சிகளை அல்லது பிரதான காட்சிகளை பந்தாட , குற்ற சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர் .
ஆள துடிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்கள் ,ஆளும் ரணில் ஆட்சியில் ,தமது தொகுதிகளுக்கு ஒதுக்க பட்ட நிதியை பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது கட்சி தலைமையின் முடிவு இன்றி நிதியை பெற்றுள்ளது ,கட்சிமீறல் நடவடிக்கை என குற்றம் சுமத்த பட்டுள்ளது .
வெளிவரும் ஊழல் மோசடிகள்
மக்களை தேடி வந்து ஒட்டு வாங்க துடிக்கும் காட்சிகள் தற்போது , எதிரிகளின் ஊழல் மோசடி கையில் எடுத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மறுத்து ,தமது அரசியலில் ஈடுபடும், இந்த குழுக்கள் தற்போது ,குழுவாத அரசியல் வீசி வருகின்றனர் .
அரசியல் புயலில் சிக்கிய ரணில்
அரசியல் புயலில் சிக்கிய ரணில்
இலங்கையில் அரசியல் புயலில் சிக்கிய ரணில் விக்கிரமசிங்க ,ரணில் வெளிநாட்டு செலவை காண்பிக்க பாரளுமன்றம் கேள்வி .
ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மீது பாராளுமன்றம் முக்கிய கேள்வியை கேட்டுள்ளது .
ரணில் வெளிநாட்டு செலவை காட்டு பாராளுமன்றம்
ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சி காலத்தில் பயணம் செய்த வெளிநாடுகள் ,சந்தித்த பிரமுகர்கள் ,அதனால் மேற்கொள்ள பட்ட நடவடிக்கைகள் ,அதற்கு ஏற்பட்ட செலவுகளை காட்டும் படி பாரளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது .
களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த கேள்வி மசோதாவை சமர்ப்பித்துள்ளார் .
இதன் அடிப்படையில் நாளை பாரளுமன்றில் ரணில் வெளிநாட்டு பயணம் மற்றும் அதன் செலவு தொடர்பாக விவாதிக்க படவுள்ளன .
தேர்தல் வேளையில் சிக்கிய ரணில்
தேர்தல் இடம்பெறவுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த கோரிக்கைகள் விடுக்க பட்டுள்ளது .
இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு அரசியலில் வைக்க பட்ட முதலாவது பெரும் வேட்டு என கருத படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கையை ரணில் விக்கிரமசிங்காவே நிமிர்த்தினார் என்கின்ற பேச்சு இருக்கிறது .
இவ்வாறான சிக்கல் மிகுந்த கால பகுதியில் மக்கள் கொந்தளிப்பு மற்றும் ,அரசியல் மக்கள் கொந்தளிப்பை தனித்தது தந்திரமாக ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழிநடத்தி செல்ல முடிந்தது என்ற வாதம் முன் வைக்க பட்டுள்ளது .
அவ்வாறான நிலையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயண செலவுகள் ,அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன்கள் தொடரபாக கேட்க பட்டுள்ளது .
இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே என படுகிறது .
Featured
கடை பூட்டு குடிகாரர் அவதி
கடை பூட்டு குடிகாரர் அவதி
இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .
மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .
மதுபான கடைகள் அடித்து பூட்டு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .
இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .
நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பல மில்லியன் வருமானம் இழப்பு
சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது
அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .
இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .
வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .
அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .
செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்
செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்
செருப்பு விலை பத்தாயிரம் விலையை கேட்டு ஓட்டம் பிடித்த சீனா தம்பதிகள் .இலங்கையில் நடக்கும் மோசடி ,வெளியான வீடியோ .
இலங்கைக்கு உல்லாச பயணம் வருகை தந்த சீனா நாட்டை சேர்ந்த தம்பதிகள் ,கொழும்பு பெற்றா பகுதியில் உள்ள கடை ஒன்றில், செருப்பு ,பாட்டா வாங்க செல்கின்றனர் .
அப்பொழுது அவரிகளிடன் செருப்பு விலையை கேட்கின்றனர் .ஆசையோடு ஒரு செருப்பு வாங்கி கிட்டு போகலாம் என எண்ணியவர்களுக்கு .
கொழும்பு பெட்டா கடைகளில் உள்ளவர்கள் மோசடியாளர்கள் ,சூத்து மாத்து காரர்கள் என்பது ,அந்த கடைக்காரர் காட்டிய செருப்பு விலையின் மூலம் தெரிய வந்தது .
வெளிநாட்டவரை குறி வைத்து பணம் கறக்கும் கும்பல்
இலங்கை வரும் வெளி நாட்டவர்கள் பலர் இவ்வாறு ,இலங்கையில் உள்ள பல கடைக்காரர்களினால் ,ஏமாற்ற படுவதும் அவை காணொளியாக வெளியாகி ,இலங்கை புகழை ,சீர் கெடுத்துள்ளது .
youtuber வீடியோ பிடித்து கொண்டு உள்ளார்கள் என தெரிந்தும் ,இவ்வாறு ,தாமே புத்திசாலிகள் என இவ்விதம் விலைகளை அதிகமாக கூறி ,மோசடி முறையில் பணத்தை கறக்க நினைப்பது அபத்தமானது .
மிக மகிழ்வாக அன்பான அந்த சீனத்தவர்கள் பேசி கொள்கின்றனர் .பிரதர் என ,.சகோதரரே என சகோதரத்துவத்தோடு அழைக்கும் பொழுது ,இவ்விதம் நடந்து கொள்வது தவறான விடயமாகும் .
மோசடியாளர்களினால் வீழ்ச்சி உறும் இலங்கை உல்லாசப் பயணத்துறை
உல்லாச பயணிகளிடம் இவ்வாறு மோசடி முறையில் அதிக பணம் அறவிடும் நடவடிக்கையால் ,இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் ஒருவித அச்சம் காணப்படுகிறது .
அவர்கள் தெருக்கடைகளுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் .அந்த காணொளிகள் கீழே எழுத படும் கருத்துக்கள் அதனை பறை சாற்றுகின்றன .
உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்க ,இலங்கை பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து இதனை கட்டு படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .
பாட்டா வாங்க வந்து செருப்பை கைவிட்டு ,தப்பினால் காணும் என ஓட்டம் பிடித்த தம்பதிகளை பிடித்து அவர்களது ,கமரா காட்சிகளை அழிக்கும் படி அந்த கும்பல் மிரட்டியுள்ளது .
எங்கே செல்கிறது இலங்கை ..? உல்லாச பயணிகளுக்கு பாதுகாப்பு இது தானா ..?

















































